Tamil Bayan Points

குண்டு வெடிப்பின் பிண்ணனியில்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on November 18, 2016 by Trichy Farook

2006 ஏப்ரல் 14: டெல்லி ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள்.

2006 ஜூலை 11: மும்பை விக்டோரியா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 180 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமுற்றனர்.

2006 செப்டம்பர் 8- மஹாராஷ்ட்ர மாநிலம் மலேகான் பள்ளிவாசலில்வெடிகுண்டு வெடித்ததில் 36 பேர் கொல்லப்பட்டனர். முதலில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

2007 பிப்ரவரி 19 – சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பில் 67 பேர் கொல்லப்பட்டனர். இச்செயலை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ செயல்டுத்தியதாக உளவு அமைப்புகள் கூறின. பின்னர் சங்பரிவார ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தொடர்பு அம்பலமானது.

2007 மே 18 ஹைதரபாத் மக்கா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது குண்டுவெடித்து 40 பேர் கொல்லப்பட்டனர். இதிலும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.சங்பரிவார தொடர்புகள் பின்னர் அம்பலமானது.

2007 அக்டோபர் 11 – அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

2008 செப்டம்பர் 29 – மலேகானில் உள்ள பிக்கு சவுக் என்ற இடத்தில் சைக்கிள் வெடிகுண்டு வெடித்து 10வயது குழ்ந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கூறப்பட்ட அனைத்து குண்டுவெடிப்புகளிலும் முதலில் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து பல ஆண்டுளாக சிறையில் அடைத்தது காவல்துறை. பின்னர் சங்பரிவார அமைப்பின் தொடர்பு அம்பலமாகிறது. தீவிரவாத தடுப்புப் படை (Anti Terrorism Squad (ATS)) தலைவர் ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரியின் முயற்சியினாலேயே சங்பரிவார ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத நடவடிக்கைகள் வெளி உலகத்திற்கு தெரியவந்தன. அந்த கர்கரேயை சங்பரிவார சக்திகள் திட்டமிட்டு கொலை செய்துவிட்டன.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பல் தான் மோடியை முன்னிறுத்தி பிரதமர் பதவியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

– ஏகத்துவம் இதழ்