Tamil Bayan Points

காவி வெறியர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சனாவுல்லாஹ் ஷேக்!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 12, 2019 by

காவி வெறியர்களால்  பிறப்புறுப்பிலேயே அடித்துப் படுகொலை
செய்யப்பட்ட சனாவுல்லாஹ் ஷேக்!

மேற்கு வங்கத்தில்
காவி மிருகங்களின் அடுத்த அட்டூழியம்!

ஜார்க்கண்டில் தப்ரேஸ் அன்சாரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு சில நாட்களே ஆன நிலையில், மேற்கு வங்கத்தில் சனாவுல்லாஹ் ஷேக் என்ற 24 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவரை காவிபயங்கரவாதிகள் அடித்தே கொலை செய்துள்ளனர்.

கல்கத்தாவிலிருந்து 326 கி.மீ தூரத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் தான் காவி வெறிப்பிடித்த கும்பல் ஒன்று இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. சனாவுல்லாஹ் ஷேக் என்ற அந்த முஸ்லிம் இளைஞரை அடித்து படுகொலை செய்வதை அந்த மனித மிருகங்கள் வீடியோ எடுத்து அதை பரப்பி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த முஸ்லிம் இளைஞரின் பிறப்புறுப்பில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் அந்த காவி மிருகங்களிடமிருந்து போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயிர் இழந்தார்.

இரு சக்கர வாகனத்தை திருடியதால்தான் அடித்து துன்புறுத்தினோம் என அந்த காவி வெறியர்கள் வழக்கம் போல, அந்த முஸ்லிம் இளைஞர் மீது பழி சுமத்தியுள்ளனர்.

”எனது மகன் மீது  அபாண்டமாக பழி சுமத்தி, எனது மகனை அடித்தே  கொலை செய்துவிட்டனர்” என்று  அந்த இளைஞரின் தாயார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், எனது மகன் இரு சக்கர வாகனத்தை திருடியதாக சொல்வது உண்மையென்றால், திருட்டுப் போனதாகச் சொல்லப்படும் அந்த வாகனம் எங்கே? அல்லது அந்த வாகனம் மீட்கப்பட்டிருந்தால், மீடக்கப்பட்ட அந்த வாகனம் எங்கே?” என அந்த தாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சுகாதார பராமரிப்பு மையத்தில் என் மகன் நிர்வாணமாக கிடப்பதைக் கண்டேன். அவனது கண்கள் மற்றும் காதுகள் கொடூரமாக தாக்கப்பட்டிருந்தன. மேலும் என் மகனின் பிறப்புறுப்பில் தாக்குதல் நடத்தி கோரப்படுத்தி கொலை செய்து விட்டனர்;

சில நாட்களுக்கு முன்னர்தான் எனது கணவரை இழந்தேன்; இப்போது எனது மகனை படுகொலை செய்துவிட்டனர்; எனக்கு நீதி வேண்டும்” என அந்த தாய் கதறி அழுதுள்ளார்.

இந்த தாயின் கண்ணீர் காவி வெறியர்களை சும்மா விடாது.காவி வெறிக் கும்பல்களை          வைத்து முஸ்லிம்களை படுகொலை செய்யும் மோடியே! பொறுத்திரு… உனக்கும் ஒரு கும்பல் வரும்.

அது இறைவனின் வேதனையை  உனக்குக் கொண்டு வரும் வானவர்களின் படை அடங்கிய கும்பலாகவும் இருக்கலாம்.

இறைவா! இந்த அநியாயக்காரர்களின் மீது உனது பிடியை இறுக்குவாயாக!

Source:(05/07/2019)