Tamil Bayan Points

கட்டாய சேமிப்பை தவறாக முதலீடு செய்தால்?

கேள்வி-பதில்: வியாபாரம்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

கட்டாய சேமிப்பை தவறாக முதலீடு செய்தால்?

நம்முடைய பணத்தை நாம் ஒருவரிடம் ஒப்படைத்திருக்கும் போது நம்மிடம் கேட்காமல் அவர் தொழிலில் பயன்படுத்தினால் அதில் நமக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. ஒருவரிடம் அமானிதமாக நாம் கொடுத்து வைத்திருக்கும் பணத்தை நமக்குச் சொல்லாமலே எடுத்து ஹராமான தொழிலில் அவர் பயன்படுத்தினால் அதனால் நமக்கு குற்றம் வராது. அதில் நாம் பங்காளியாக மாட்டோம்.

நீங்கள் சொல்லும் இந்த நிலை அதைவிட இலேசானதாகும். ஏனெனில் உங்களால் அந்தப் பணத்தைக் கொடுக்காமல் இருக்க முடியாது என்று சட்டம் உள்ளதால் நிர்பந்தமான நிலையாக உள்ளது.

உங்கள் பணத்தை அவர்கள் தொழிலில் முதலீடு செய்துள்ளதாக சொன்னாலும் அதில் அவர்கள் உங்களைப் பங்காளியாக ஆக்கவில்லை. பங்காளியாக ஆக்கியிருந்தால் அதில் நட்டம் ஏற்படும் போது அதை உங்கள் மீது சுமத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் நீங்கள் கொடுத்த பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைத்து விடுவதால் அந்த்த் தொழில் நீங்கள் நீங்கள் பங்காளிகள் அல்ல என்பது உறுதியாகிறது.

எனவே நீங்கள் தாரளமாக அந்தச் சேமிப்புப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் கூடுதலாக தருவது வட்டி என்ற அடிப்படையில் இருந்தால் கூடுதலாகத் தருவதை மட்டும் மறுத்து விட வேண்டும். பணமதிப்பைக் கருத்தில் கொண்டு அல்லது பல காலம் உழைத்துக் கொடுத்த்தைக் கவனத்தில் கொண்டு ஊக்கப்படுத்தும் வகையில் கொடுத்தால் கூடுதலாகத் தருவதையும் பெற்றுக் கொள்ளலாம்.