Tamil Bayan Points

ஆலிவ் எண்ணெய் அருள் நிறைந்ததா?

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on November 10, 2020 by

ஆலிவ் எண்ணெய் அருள் நிறைந்ததா?

سنن الترمذى (7 / 259)

1774 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ  قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ وَكَانَ عَبْدُ الرَّزَّاقِ يَضْطَرِبُ فِى رِوَايَةِ هَذَا الْحَدِيثِ فَرُبَّمَا ذَكَرَ فِيهِ عَنْ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَرُبَّمَا رَوَاهُ عَلَى الشَّكِّ فَقَالَ أَحْسَبُهُ عَنْ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَرُبَّمَا قَالَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مُرْسَلاً.

ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுங்கள், அதை பூசிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள் நிறைந்த மரத்திலிருந்து வருவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்: திர்மிதீ (1774)

இந்தக் கருத்து உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஉஸைத் அல்அன்சாரி (ரலி) ஆகியோர் வழியாக நபிகளார் சொன்னதாக இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்திகள் அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் சரியானதா என்பதைப் பார்ப்போம்.

உமர் (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள செய்தி:

உமர் (ரலி) வழியாக இப்னுமாஜா (3310), பஸ்ஸார் (275), ஹாகிம் (7142), பைஹகீ ஷுஅபுல் ஈமான் (5539) உட்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர் (ரலி) அவர்கள் வழியாக வரும் அனைத்து செய்திகளும் அப்துர்ரஸ்ஸாக் வழியாகவே இடம்பெற்றுள்ளது.

அப்துர்ரஸ்ஸாக், இந்தச் செய்தியை சில நேரங்களில் நபித்தோழர் வழியாக நபிகளார் சொன்னதாகவும் சில நேரங்களில் நபித்தோழரை விட்டுவிட்டு (முர்ஸலாக) நபிகளார் சொன்னதாகவும் அறிவித்துள்ளார்.

علل الحديث لابن أبي حاتم – (2 / 15)

1520- وسمِعتُ أبِي يقُولُ : روى عبدُ الرّزّاقِ ، عن مَعْمَرٍ ، عن زيدِ بنِ أسلم.عن أبِيهِ ، عن عُمر ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم : كُلُوا الزّيت ، وائتدِمُوا بِهِ. حدّث مرّة ، عن زيدِ بنِ أسلم ، عن أبِيهِ ، أنَّ النّبِيّ صلى الله عليه وسلم هكذا رواهُ دهرًا.ثُمّ قال بعد زيدِ بنِ أسلم ، عن أبِيهِ : أحسبُهُ عن عُمر ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ثُمّ لم يمُت حتّى جعلهُ : عن زيدِ بنِ أسلم ، عن أبِيهِ ، عن عُمر ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم بِلا شكٍّ.

இந்தச் செய்தியை பல வருடங்களாக அப்துர்ரஸ்ஸாக், நபித்தோழர் வழியாக இல்லாமல் நபிகளார் அறிவித்ததாகவே (முர்ஸலாக) அறிவித்து வந்தார். பின்னர் உமர் (ரலி) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்ததாக நான் எண்ணுகிறேன் என்று (சந்தேகமாக) அறிவித்தார். பின்னர் அவர் மரணமடையும் வரை உமர் (ரலி) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்ததாக சந்தேகம் இல்லாமல் அறிவித்தார் என்று இப்னு அபீ ஹாத்திம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல்: இலலுல் ஹதீஸ், பாகம்: 2, பக்கம்: 15

அப்துர்ரஸ்ஸாக் கடைசி காலத்தில் முளை குழப்பத்திற்கு ஆளானார் என்பதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

تقريب التهذيب – (2 / 354)

4064- عبدالرزاق ابن همام ابن نافع الحميري مولاهم أبو بكر الصنعاني ثقة حافظ مصنف شهير عمي في آخر عمره فتغير وكان يتشيع من التاسعة مات سنة إحدى عشرة وله خمس وثمانون ع

அப்துர்ரஸ்ஸாக் கடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனார்; மூளையும் குழம்பிவிட்டது.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 354

நபித்தோழர் வழியாக நபிகளார் கூறியதாக இடம்பெறும் செய்தியை அப்துர்ரஸ்ஸாக் கடைசி காலத்தில் தான் அறிவித்துள்ளார். அதற்கு முன்னர் வரை முர்ஸலாக நபித்தோழர் இல்லாமல்தான் அறிவித்துள்ளார். எனவே கடைசிக் காலத்தில் அவர் அறிவித்த செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக அமையாது.

علل الترمذي الكبير – (2 / 210)

357 – حدثنا يحيى بن موسى ، حدثنا عبد الرزاق ، قال : أخبرنا معمر ، عن زيد بن أسلم ، عن أبيه ، عن عمر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « ائتدموا (1) بالزيت وادهنوا (2) به فإنه يخرج من شجرة مباركة  سألت محمدا عن هذا الحديث فقال : هو حديث مرسل قلت له : رواه أحد عن زيد بن أسلم غير معمر ؟ قال : لا أعلمه

இந்தச் செய்தியைப் பற்றி புகாரி அவர்களிடம் திர்மிதீ அவர்கள் கேட்ட போது, ‘இது நபித்தோழர் விடுபட்ட முர்ஸலான செய்தி’ என்று குறிப்பிட்டார்கள் என திர்மிதீ அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

நூல்: இலலுல் கபீர், பாகம்: 2, பக்கம்: 210

تاريخ ابن معين – رواية الدوري – (3 / 142)

 595 سمعت يحيى يقول حدث معمر عن زيد بن أسلم عن أبيه قال قال رسول الله صلى الله عليه و سلم كلوا الزيت وادهنوا به ليس هو بشيء إنما هو عن زيد مرسلا

ஆலிவ் எண்ணெய் தொடர்பாக வரும் செய்தி முர்ஸான செய்தி என்று இப்னு மயீன் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தாரீக் இப்மயீன், பாகம்: 3, பக்கம்: 142

எனவே நபித்தோழர் இல்லாமல் வரும் இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதைப் பல அறிஞர்களின் கூற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்தி:

سنن ابن ماجه ت الأرنؤوط – (4 / 434)

3320 – حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ ابْنُ سَعِيدٍ، عَنْ جَدِّهِ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: “كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ، فَإِنَّهُ مُبَارَكٌ”

ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுங்கள், அதை பூசிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள் நிறைந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: இப்னுமாஜா (3320)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தி ஹாகிம் (3505) நூலிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் ஸயீத் என்பவர் இடம்பெறுகிறார். இவரை ஏராளமான அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.

تهذيب التهذيب ـ محقق – (5 / 209)

.قال أبو طالب عن أحمد منكر الحديث متروك الحديث وكذا قال عمرو بن علي  وقال الدارمي عن ابن معين ليس بشئ وقال محمد بن عثمان بن أبي شيبة عن يحيى لا يكتب حديثه وقال أبو زرعة ضعيف الحديث وقال النسائي ليس بثقة

ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர், விடப்பட்டவர் என்று அஹ்மத் மற்றும் அம்ர் பின் அலீ ஆகியோர் கூறியுள்ளனர். மதிப்பற்றவர் என்றும் இவருடைய ஹதீஸ்களைப் பதிவு செய்யப்படாது என்றும் யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஸுர்ஆ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், நஸாயீ அவர்கள் நம்பகமானவர் இல்லை என்றும் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:5, பக்கம்: 209

எனவே அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக பதிவு செய்யப்பட்ட அறிவிப்பாளர் வரிசையுள்ள செய்தியும் பலவீனமானதாகும்.

அபூஉஸைத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி:

سنن النسائي الكبرى – (4 / 163)

 6702 – أخبرنا محمد بن بشار قال ثنا عبد الرحمن قال ثنا سفيان عن عبد الله بن عيسى قال حدثني عطاء رجل كان يكون بالساحل عن أبي أسيد عن النبي صلى الله عليه و سلم قال : كلوا الزيت وادهنوا به فإنه من شجرة مباركة

ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுங்கள், அதை பூசிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள் நிறைந்த மரத்திலிருந்து வருவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி),

நூல்: ஸுனுல் குப்ரா -நஸாயீ (1774)

இதே செய்தி அஹ்மத் (15474), தப்ரானீ (15940), ஷுஅபுல் ஈமான் – பைஹகீ (5538) உட்பட பல நூல்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியில் இடம் பெறும் அதா அஷ்ஷாமீ என்பவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب ـ محقق – (7 / 197)

قال البخاري لم يقم حديثه وذكره العقيلى في الضعفاء.

இவருடைய செய்திகள் தகுதி வாய்ந்தவை இல்லை என்று புகாரி அவர்கள் கூறியுள்ளார்கள். உகைலீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:7, பக்கம்: 197

ஆலிவ் எண்ணெய் தொடர்பாக சிறப்பித்து வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.

ஆயினும் ஆலிவ் மரம் பாக்கியம் நிறைந்த மரம் என்று (திருக்குர்ஆன்:24:35.) வசனம் கூறுகிறது.

மருத்துவ ரீதியில் அதில் குணம் உண்டு என்றோ அல்லது மருந்தாகப் பயன்படுத்தலாம் என்றோ உறுதியான செய்திகள் இருந்தால் அதன் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்ளலாம்.