Category: இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு (கதை வடிவில்)

u580

10) காத்திருந்து கிடைத்த அருட்பேறு

ஆண்டுகள் உருண்டோடின. இரு மனைவிகள் இருந்தும் அவருக்கு பிள்ளைப் பேறு கிட்டாமலே இருந்தது . வயதோ முதிர்ந்து கொண்டு வந்தது. பிள்ளைக்கு ஆசைப்படாத மனிதரும் இந்த பூமியில் உண்டா என்ன?? அவரும் ஒரு பிள்ளைக்கு ஆசைப்பட்டார். “இறைவா! எனக்கு சாலிஹான நல்ல பிள்ளையைத் தா…” என்று பிரார்த்தனை செய்தார். இப்ராஹிமின் பிரார்த்தனைகளை இறைவன் தட்டியதில்லை. அவர் தந்தைக்கு பாவமன்னிப்பு கேட்டபோது தவிர . அனைவருக்கும் ஒரே நீதி தான் இறைவனிடம். தனக்கு மிகப் பிரியமான மனிதரான இப்ராஹிம் […]

09) ஒட்டும் இல்லை உறவும் இல்லை

ஹாஜரா (அலை) அவர்கள் வந்தவுடன் முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாக ஆனது. இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் அழைப்பு பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல ஒவ்வொருவராக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர். இஸ்லாம் என்பது, தன்னைப் படைத்த இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டுச் சரணடைதல் ஆகும். இறைவனல்லாத மற்ற பொருட்களை விட்டும் முற்றிலும் விலகி விடுதலும் ஆகும் . இறைவனின் நீதியான சட்டதிட்டங்களுக்கு மனிதகுலம் கீழ்படியும் போது சுரண்டல்களில் இருந்தும் அடிமைத்தளையில் இருந்தும் மக்கள் விடுதலை அடைகிறார்கள். இறை நம்பிக்கைகள் […]

08) கொடுங்கோல் மன்னனின் பரிசு

பொழுதுகள் வேகமாய்க் கழிந்தன. ஒவ்வொருவரிடமும் இறைவனையும் இறைச்சட்டங்களையும் எடுத்துச் சொல்லிக்கொண்டும், அநியாயமான விசயங்களை எதிர்த்து பேசியும், நன்மையான விசயங்களை கற்றுத் தந்தும் அவரது நாட்கள் நகர்ந்தன . அவருக்கு தகுந்தாற்ப் போன்றே அவரது வாழ்க்கை துணையும் அமையப் பெற்றார் . அவரது மனைவி பெயர் சாரா(அலை). அவரும் இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கைகளை முற்றாக ஏற்றுக்கொண்டவராக இருந்தார் . தன் கணவருக்கு முற்றும் கட்டுப்பட்டவராக , உறுதுணையாகத் திகழ்ந்த அற்புதமான பெண்மணி. பலகாலம் அந்த ஊரில் அவர்கள் […]

07) ஊர்ப் பஞ்சாயத்து

கோலாகலமாய் திருவிழா நடந்து முடிந்த மகிழ்ச்சியில் மக்கள் ஊர் திரும்பினர் . வேக வேகமாக தங்கள் தெய்வங்களின் வந்தார்கள் .. உள்ளே நுழைந்தவர்களுக்கு பேரதிர்ச்சி.., நொறுங்கி மண்ணோடு மண்ணாய்க் கிடந்தன. கண்டதும் பெரும் சலசலப்பு ஏற்ப்பட்டது . செய்தது யாராய் இருக்கும்? இப்ராஹீம் என்றொரு இளைஞன் இருக்கிறான் . அவன் தான் இன்று திருவிழாவிற்கு வரவில்லை . கூட்டத்தில் ஒரு குரல் கத்தியது. யார் அவன்? கூட்டி வாருங்கள்.. ஊர்த் தலைவர்கள் கூடினர். மக்கள் ஒன்று திரண்டனர். […]

06) இப்ராஹீம் நபியின் அஞ்சாத பிரச்சாரம்

திருவிழா ஒருமுறை அந்த ஊரில் திருவிழா நடைபெறும் நாள் வந்தது . எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் . ஊரை விட்டு கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, திருவிழா நடைபெறும் இடம் தயாராக இருந்தது . சாரை சாரையாக மக்கள் சென்று கொண்டிருந்தனர் . இப்ராஹீம்(அலை) போகிறவர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார். திருவிழாவிற்காக சென்று கொண்டிருந்த ஒருவர் இப்ராஹிமைக் கவனித்தார்; “ திருவிழாவிற்கு வரவில்லையா ?” என்றார். “ உடல் நலமில்லை “ என்றார் இப்ராஹீம்(அலை) . […]

05) அதிர்ந்தார் அரசர்

இறைவனை வணங்குவதும் , தொழுவதும் , சிந்திப்பதுமாய் அவரது வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. அவருக்கு இறைவனுடனான தொடர்பு கிட்டியது . இறைவனிடம் இருந்து அவருக்கு செய்திகள் வந்துகொண்டிருந்தன . இப்ராஹீம்(அலை) அவரது ஊருக்குள் மக்களிடம் தொடர்ந்து விவாதித்து கொண்டே இருப்பார் . இறைவனைப் பற்றி, அவன் ஆற்றல்கள் பற்றி , மக்களின் மூட நம்பிக்கை பற்றி , பலவாறாக மக்களிடம் உரையாடுவார். ஒரு நாள் அந்த நாட்டு அரசரிடம் சென்றார் . அங்கும் இவரது பிரச்சாரம் தொடர்ந்தது […]

04) இப்ராஹிம் நபியின் பிரச்சாரம்

எது என் இறைவன் ? வீட்டை விட்டு வெளியேறினாலும் அவர் ஊரை விட்டெல்லாம் வெளியேறவில்லை . ஊருக்குள் தான் நடமாடிக்கொண்டு இருந்தார் . அவர் மனம் நன்றியால் நிரம்பி இருந்தது . அதனால் தான் இறைவனை வைக்கும் இடத்தில் படைப்பினங்களை வைப்பதைப் பார்த்துக்கொண்டு அவரால் சும்மா இருக்க இயலவில்லை . தந்தை துரத்தி விடும் முன்னரும் கூட, அவர் அப்படித் தான் . ஊர்மக்களிடமும் தந்தையிடமும் , “எதை வணங்குகிறீர்கள் ?” என்று கேட்பார்; “இந்த பிரபஞ்சத்தைப் […]

03) தந்தையும், மகனும்

அந்த வீட்டுக்குள் இருந்து தான் அந்தக் குரல் கேட்டது . “தந்தையே !” “நீங்கள் பேசுவதை இது கேட்குமா ? “நீங்கள் செய்வதைப் பார்க்குமா ??” “எந்த பயனையாவது கொடுக்குமா ??” “பிறகு ஏன் இதைப் போய் வணங்கிக்கொண்டு இருக்கிறீர் ??!” அது ஒரு இளைஞனின் குரல்! ஒரு சிங்கத்தின் கர்ஜனையைப் போல அந்த குரல் ஒலித்தது. அந்த ஊரின் மதிப்புமிக்க ஒரு பெரியவரின் வீட்டில் தான் அந்த இளைஞர் இப்படி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார் . […]

02) இறைத்தோழர் இப்ராஹிம் (அலை )

அன்புள்ள குழந்தைகளே! அருமைச் செல்வங்களே ! அல்லாஹ்வைத் தெரியுமல்லவா உங்களுக்கு ? நம்மை எல்லாம் படைத்தவன்…..! இந்த பிரபஞ்சத்தின் பேரரசன்……..! அளவே இல்லாத அன்பாளன்……..! கருணையாளன்……..! நமக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கியவன்……! ஒவ்வொரு பொருளையும் கண்காணித்துக் கொண்டு இருப்பவன்….! சரி , அவனது தோழரைப் பற்றித் தெரியுமா ? யார் அவர் ? அவர் மட்டும் எப்படி இறைவனுக்கு தோழனாக ஆனார் ? இன்னொரு விசயமும் சொல்கிறேன் கேளுங்கள் ! அவர் இறைவனுக்கு தோழர் மட்டுமின்றி , […]

01) முன்னுரை

உலகில் முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் முன்மாதிரியாக இப்ராஹிம் அலை அவர்களை அல்லாஹ் தேர்வு செய்துள்ளான் . இப்ராஹிமின் மார்க்கம் தான் இஸ்லாம் என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடுகிறான் . இப்ராஹிம் (அலை) அவர்களை அறிந்து கொள்ளாமல், இஸ்லாத்தை முழுமையாக நம்மால் அறிய முடியாது . ஓரிறைக் கொள்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் புரிந்து கொள்ளவும் , அதைப் பிரச்சாரம் செய்வதை அறிந்து கொள்ளவும், இப்ராஹிம் (அலை) அவர்களைக் கற்பது அவசியம் ஆகிறது . […]