Category: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

u553

31) நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள்

நபியே! (முஹம்மதேர் உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டிரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள் உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு மணமுடிக்க நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் […]

30) நபிகள் நாயகம் அவர்களின் கடைசி வார்த்தை

நபி (ஸல்) அவர்களின் பார்வை (அவர்களுடைய மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள் “மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)” என்று (மூன்று முறை சொன்னார்கள். (புகாரி: 3669) ➚ இது தான் நபியவர்கள் பேசிய கடைசி வார்த்தையாக அமைந்தது. கலிமா சொன்ன நிலையில் மரணம் இறுதியில் ஏகத்துவ கலிமாவை முன்மொழிந்தவராக அண்ணலார் மரணம் அடைந்தார்கள்.நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக்கொண்டு, வணக்கத் திற்குரியவன் அல்லாஹ்வைத் […]

29) முக்கிய அறிவுரைகள் – இறுதி எச்சரிக்கைகள்

மரணத்தின் விளிம்பில் நோய்வாய்ப்பட்டு இருந்த போதிலும் சமுதாய நலன் பற்றியும் தாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியுமே சிந்தித்தார்கள் அப்போதும் தூதுப் பணிக்கு நபிகள் நாயகம் ஓய்வு கொடுக்கவில்லை போர்த்திக் கொண்டிருப்பவரே எழுந்து எச்சரிக்கை செய்வீராக என்று நபித்துவத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் சொன்ன கட்டளையை ஏற்று பிரச்சாரப் பணியில் எழுந்து நிற்க ஆரம்பித்தவர்கள் தம் மரணம் வரையிலும் ஓய்வு பெறவில்லை. அந்நேரத்தில் மக்களுக்கு பல அரிய, முக்கியமான போதனைகளை நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். அவைகளை ஒவ்வொன்றாக காண்போம். […]

28) நபிகளாரின் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாய கட்டமைப்பு, மார்க்க போதனைகளை எடுத்தரைத்தல் ஆகியவற்றை செம்மையாக நிறைவேற்றியிருந்தார்கள். அதன் பிறகு தனது மரண காலத்தை நபிகள் நாயகம் நெருங்கினார்கள். ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு நபிகளாரின் மரணமே அது பற்றிய வரலாற்று தகவல்களை காண்போம். நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல், செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன, தனது […]

27) சீர்திருத்தத்தைத் தன்னிலிருந்து துவங்குதல்

குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்சி அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார் இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது […]

26) இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை

அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன் எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (அல்குர்ஆன்: 5:3)➚ வசனம் அருளப்பட்டது. ‘ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன் ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது. அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் […]

25) ஹஜ்ஜத்துல் விதா இறுதி ஹஜ் – ஹிஜிரி 10

“இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி: 3554) ➚ ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி: 4998) ➚ அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது ஓர் […]

24) அபூபக்கர் (ரலி) அவர்களின் ஹஜ் – ஹிஜிரி 9

தபூக் போரை அடுத்து ஹிஜ்ரி 9ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வு அபூபக்கர் (ரலி) அவர்களின் ஹஜ்ஜாகும். முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜின் கிரியைகளை கற்றுத்தரும் வகையில் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை ஹஜ்ஜூக்காக மக்கா அனுப்பினார்கள். அதன் பிறகு இணைவைப்பாளர்களுடான ஒப்பந்தத்தை முறித்து கொள்ளும் படி இறைவன் வசனம் அருளவே அதை தெரிவிக்க மதீனாவிலிருந்து அலீ இப்னு அபூதாலிபை நபி (ஸல்) மக்கா அனுப்பி வைத்தார்கள். புறப்பட்ட அலீ (ரழி) அர்ஜ் என்ற இடத்தில் அபூபக்ரை சந்திக்கிறார்கள். […]

23) தபூக் போர் – ஹிஜ்ரி 9

போருக்கான காரணம் ஹஜ்ரி 8 ல் நடைபெற்ற மக்கா வெற்றிக்கு பிறகு மக்கள் கூட்டம், கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வரத்துவங்கினார்கள். எனினும் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரும் தொல்லை அளிக்கும் அரசாக ரோமானிய அரசு இருந்தது. அப்போதைக்கு அது பேரரசாகவும் திகழ்ந்தது. இஸ்லாத்தின் வளர்ச்சி பிடிக்காத ரோமானிய பேரரசு, கஸ்ஸான் கோத்திரத்தார் உள்ளிட்ட இன்னும் சிலரையும் ஒன்று திரட்டி முஸ்லிம்களுடன் போர் செய்ய தயாரானார்கள். இந்த தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய வரவே அவர்களை எதிர் கொள்ள […]

22) ஹுனைன் யுத்தம் – ஹிஜிரி 8 துல்கஅதா

ஹுனைன் என்பது ‘தில் மஜாஸ்’ என்ற ஊரின் அண்மையில் உள்ள பள்ளத்தாக்காகும். இங்கிருந்து அரஃபா வழியாக ஏறக்குறைய பத்து மைல் தொலைவில் தான் மக்கா இருக்கிறது. மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாகும். இதனைக் கண்ணுற்ற அக்கம் பக்கத்திலுள்ளோர் திடுக்கிட்டனர். அவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாததால் பெரும்பாலான மக்கள் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். எனினும், கர்வமும் வம்பும் முரட்டுக் குணமும் கொண்ட சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர். இவர்களில் ஹவாஸின், கத்ஃபான், ஸகீஃப் […]

21) மக்கா வெற்றி – ஹிஜிரி 8

மக்காவை நோக்கி படையெடுக்க காரணம் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு மதீனா முஸ்லிம்களுக்கும் மக்கத்து காஃபிர்களுக்கும் இடையே நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பனூபக்ர் என்னும் குலத்தார் மக்கத்துக் காஃபிர்களுடனும் பனூ குஸாஆ முஸ்லிம்களுடனும் இணைந்து கொண்டனர். இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன் விரோதம் இருந்தது. இச்சமயத்தில் மக்கத்துக் காஃபிர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீறி தங்களின் குழுவிலுள்ள பனூபக்ர் குலத்தாருக்கு, பனூ குஸாஆ குலத்தாருக்கு எதிராக ஆயுத உதவி செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களை தாக்கவும் செய்தனர். உடனடியாக பனூ குஸாஆ […]

20) முஃதா யுத்தம் ஹிஜிரி 8

நபி (ஸல்) அவர்களின் காவத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர் இதுவேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது ஒரு தொடக்கமாக அமைந்தது இப்போர் ஹிஜ்ரி ஜுமாதா அல்லா,கி.பி 12 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெற்றது. முஃதா என்பது ஷாம் நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஓர் ஊர் இங்கிருந்து பைத்துல் முகத்தஸ் இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரத்தில் உள்ளது. (ஃபத்ஹூல் பாரி) யுத்தத்திற்கான காரணம் நபி (ஸல்) அவர்கள் புஸ்ராவின் […]

19) தாதுர் ரிகா போர் (ஹிஜிரி 7)

நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த நாடோடி வம்பர்களான அரபிகள் சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது. திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாலை வனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ, இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ சற்றுச் சிரமமாகவே இருந்தது எனவே அவர்கள் மீது போர்தொடுப்பதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப் பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் […]

18) கைபர் போர் ஹிஜ்ரி 7. முஹர்ரம்!

கைபர் என்ற ஊர் மதீனாவிலிருந்து வடக்கில் 30 மைல் தொலைவில் கோட்டைகளும் விவசாய நிலங்களும் அதிகம் உள்ள பெரும் நகரமாக முற்காலத்தில் விளங்கியது. ஆனால் இன்று அது ஒரு கிராமமாக உள்ளது. அங்குள்ள காற்றும் நீரும் உடல் நலத்திற்குச் சற்றும் ஒவ்வாததாக உள்ளது போருக்கான காரணம் மூன்று பெரிய எதிரிகளில் மிகப் பெரிய மற்றும் அதிகப் பலம் வாய்ந்த எதிரியான குறைஷிகள் விஷயத்தில் ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கைக்குப் பின் நபியவர்கள் நிம்மதி அடைந்து விட்டார்கள். எனவே மற்ற […]

17) ஹூதைபியா உடன் படிக்கை (ஹிஜிரி 6, துல்கஅதா)

இஸ்லாமிய வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சமாதான ஒப்பந்தம் தான் மக்கா வெற்றிக்கு வழிகோலியது பலர் இஸ்லாத்தைத் தழுவிடக் காரணமானது. இறை நிராகரிப்பாளர்கள் இறைவனுடைய மார்க்கத்தை அழித்தொழிக்க எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களை நிறைவேற்றினாலும் இறைவன் தன்னுடைய சத்திய மார்க்கத்தை மேலோங்கச் செய்தே தீருவான் என்பதற்கு ‘ஹுதைபிய்யா என்ற இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சி மிகப் பெரும் சான்றாக விளங்குகிறது. “ஹுதைபிய்யா என்பது ஒரு கிணற்றினுடைய பெயராகும். […]

16) அன்னை ஆயிஷாவின் மீது அவதூறு

பனூ முஸ்தலிக் யுத்தத்தில் இருந்து திரும்பும் வேளையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கழுத்து மாலை தொலைந்தது தொடர்பாகவும் அப்போதுதான் தயம்மும் தொடர்பான வசனங்கள் அருளப்பட்டன என்பது பற்றியும் நாம் முன்னர் குறிப்பிட்டோம் இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது நயவஞ்சகர்கள் அவதூறைப் பரப்பினார்கள். அது பற்றி விரிவான தகவல்களைக் காண்போம். அன்னை ஆயிஷாவின் அவதூறு பரப்புவதற்கு தலைமை வகித்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்ற நயவஞ்சகன்தான் இந்த […]

15) உஹது மற்றும் அஹ்சாப் யுத்தத்திற்கு மத்தியில் நடைபெற்ற நிகழ்வுகள்

பிஃரு மஊனா சம்பவம் மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் முஸ்லிம்களின் மீது எந்த அளவிற்கு பகைமையும் குரோதமும் கொண்டிருந்தார் என்பதற்கு பிஃரு மஊனா சம்பவம் ஒரு சான்றாகும். யூதர்கள் வஞ்சக வலை விரித்து முஸ்லிம்களில் 11 பேரை அநியாயமாக கொலை செய்தனர். நபியவர்கள் யூதர்களுடன் போர் தொடுப்பதற்கும் இது காரணமாக அமைந்தது. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்தகவான் உலப்பா பர் விஹ்யா ஆகிய குலத்தார் சிலர் வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு […]

09) அல்‌அகபா உடன்படிக்கை

நபி (ஸல்‌) அவர்கள்‌ மக்காவில்‌ இஸ்லாத்தை எடுத்துச்‌ சொன்ன போது அவர்களுக்கு மிகவும்‌ உதவியாக இருந்தவர்‌ அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப்‌. இவர்‌ தனது இறுதிக்‌ காலம்‌ வரை இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொள்ளவில்லை. அபூதாலிபின்‌ மரணத்திற்கு பிறகு நபி (ஸல்‌) அவர்கள்‌ தாயிப்‌ நகரம்‌ சென்று பிரச்சாரப்‌ பணிக்கு ஆதரவு கோரினார்கள்‌. ஆனால்‌ அங்கு ஆதரவு கிடைக்கவில்லை. இருப்பினும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மனம்‌ தளர்ந்து விடவில்லை. வெளியூர்களிலிருந்து மக்காவிற்கு வரும்‌ பயணக்‌ குழுக்களைச்‌ சந்தித்துப்‌ பிரச்சாரம்‌ […]

12) சகோதரத்துவம்‌ ஏற்படுத்துதல்‌

நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவிற்கு வந்தவுடன்‌ சொத்து, சுகம்‌ அனைத்தையும்‌ இழந்து ஹிஜ்ரத்‌ செய்த முஹாஜிர்களுக்கும்‌ , அவர்களுக்கு அடைக்கலம்‌ கொடுத்த அன்சாரிகளுக்கும்‌ மத்தியில்‌ சகோதரத்துவம்‌ ஏற்படுத்தினார்கள்‌. அன்சாரிகளில்‌ ஒருவர்‌ மரணித்து விட்டால்‌ முஹாஜிர்களில்‌ ஒருவரே அவருடைய சொத்திற்கு வாரிசாகும்‌ அளவிற்கு இந்தச்‌ சகோதரத்துவ ஒப்பந்தம்‌ வலிமையாக இருந்தது. பிறகு அல்லாஹ்‌ இந்தச்‌ சட்டத்தை மாற்றினான்‌. இரத்த பந்தமுடையோர்‌ ஒருவர்‌ மற்றவருக்கு அல்லாஹ்வின்‌ வேதத்தில்‌ உள்ளபடி நெருக்கமானவர்கள்‌. அல்லாஹ்‌ ஒவ்வொரு பொருளையும்‌ அறிந்தவன்‌. (அல்குர்‌ஆன்‌ 8 : […]

07) பகிரங்க பிரச்சாரம்

அதை தொடர்ந்து தம் சமுதாய மக்கள் அனைவர்களையும் அழைத்து பகிரங்க பிரச்சாரத்தில் ஈடுபடலானார்கள். இது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (அல்குர்ஆன்: 26:214)➚ இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்கள் (பெயர் சொல்லி-) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத […]

05) பிறப்பு மற்றும் வளர்ப்பு

பிறப்பு நபி(ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் திங்கட்கிழமை கி.பி 571 ல் சவூதி அரேபியா நாட்டில், மக்கா என்ற ஊரில் பிறந்தார்கள். (நூல் பிதாயா வன்நிகாயா,(முஸ்லிம்: 2153) ➚ நபி(ஸல்) அவர்கள் பிறந்த தேதி எதுவென்று குறிப்பிட்டு சொல்வதில் பல தகவல்கள் உள்ளன. அவற்றில் 12 ஆம் தேதியில் பிறந்தார்கள் என்பதே வரலாற்று ஆசிரியர்களிடம் பிரபல்யமான கருத்தாகும். பெயர் : நபி(ஸல்) அவர்களின் இயற்பெயர், முஹம்மத். இத்துடன் மேலும் நான்கு பெயர்களும் அவர்களுக்கு உண்டு. அவை […]

01) முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால். அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள் அண்ணல் நபி அவர்கள், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை திருமறைக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தொகுக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் உலகில் நபி புலவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு தொடர்பாக பல நூற்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பொய்யான தகவ ல்களும் கலந்திருக்கின்றன. ஆதாரமில்லாத பல செய்திகள் ஊடுருவி உள்ளன. எனவே இது போன்ற […]

14) உஹுத்‌ யுத்தம்‌

பத்ரு யுத்தத்தில்‌ மிகப்‌ பெரும்‌ பாதிப்பிற்கு உள்‌ளாகியிருந்த குரைஷிகள் முஸ்லிம்களை எப்படியாவது பழிக்குப் பழிவாங்க வேண்டும்‌ என்று வெறிகொண்டிருந்தனர்‌. முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய போரை நடத்த வேண்டும்‌ என்று ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில்‌ இறங்கினர்‌. உஹதுப்‌ போர்‌ தொடர்பாக நபி கண்ட கனவு உஹதுப்‌ போருக்கு முன்பாக நபியவர்கள்‌ ஒரு கனவினைக்‌ கண்டார்கள்‌. அதில்‌ வாள்‌ ஒன்றை அசைக்க அதன்‌ முனை உடைவது போன்றும்‌, மற்றொரு முறை அசைக்கும்‌ போது அது முன்பிருந்தபடியே ஒட்டிக்‌ கொள்வது […]

13) பத்ருப்‌ போர்‌

பத்ர்‌ என்பது மக்காவுக்கும்‌ மதினாவிற்க்கும்‌ இடையே உள்ள ஒரு இடமாகும்‌ முஸ்லிம்களுக்கும்‌ காபிர்களுக்கும்‌ இடையே போர்‌ நடந்தது எனவே இப்போருக்கு பத்ரு போர்‌ என்று பெயர்‌ வந்தது இப்போர்‌ ஹிஜிரி இரண்டாம்‌ ஆம்‌ ஆண்டில்‌ ரமலான்‌ மாதம்‌ 17 ம்‌ நாள்‌ நடந்தது. போருக்குரிய காரணம்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மக்காவாசிகளின்‌ வியாபாரக்‌ கூட்டத்தை பிடிப்பதற்காக பல்வேறு வகையான படைப்பிரிவுகளை அனுப்பினார்கள்‌ என்பதை நாம்‌ முன்னர்‌ கண்டோம்‌. இந்நிலையில்‌ மக்காவாசிகளின்‌ வியாபாரக்‌ கூட்டம்‌ அபூ சுஃப்யான்‌ என்பவரின்‌ […]

11) மதீனா பிரவேசம்‌

உறவினர்களுக்குத்‌ தகவல்‌ கொடுத்தல்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ குபாவில்‌ பதினான்கு நாட்கள்‌ தங்கிய பிறகு மதீனாவிலிருந்த தனது உறவினர்களான பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள்‌. அவர்கள்‌ வாட்களைத்‌ தொங்கவிட்டபடி வந்து நபி (ஸல்‌) அவர்களிடமும்‌ அபூபக்ர்‌ ரலி) அவர்களிடமும்‌ ஸலாம்‌ கூறினார்கள்‌. பிறகு, “நீங்கள்‌ இருவரும்‌ அச்சம்‌ தீர்ந்தவர்‌ வும்‌ அதிகாரம்‌ படைத்தவர்‌ வும்‌ பயணம்‌ செய்யலாம்‌” என்று பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தினர்‌ கூறினார்கள்‌. அதன்‌ பிறகு அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமது வாகனத்தில்‌ […]

10) ஹிஜ்ரத் பயணம்

மக்காவில்‌ இணைவைப்பாளர்களால்‌ எண்ணற்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ அங்கிருந்து, தனது சொந்த ஊரை விட்டு, மதீனாவிற்கு நாடூ துறந்து சென்ற நிகழ்ச்சியான ஹிஜ்ரத்‌ தான்‌ இஸ்லாமிய வரலாற்றில்‌ ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கூறலாம்‌. வரலாற்று முக்கியத்துவம்‌ வாய்ந்த அந்த ஹிஜ்ரத்தைப்‌ பற்றி இங்கு சுருக்கமாகக்‌ காண்போம்‌. அபீசீனிய ஹிஜ்ரத்‌ மக்கத்து முஷ்ரிக்குகளின்‌ தொல்லைகளால்‌ நபித்‌ தோழர்கள்‌ மக்காவைத்‌ துறந்து வேறு நாடுகளுக்குச்‌ செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நபி (ஸல்‌) […]

08) மிஃராஜ்‌ எனும்‌ விண்ணுலகம்‌ பயணம்‌

நபியவர்களின்‌ அழைப்பு பணி ஒருபுறம்‌, எதிரிகளால்‌ முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள்‌, தொல்லைகள்‌ மறுபுறம்‌. இந்நிலையில்தான்‌ நபியவர்கள்‌ மிஃரான்‌ எனும்‌ விண்ணுலகப்‌ பயணம்‌ மேற்கொண்டார்கள்‌. மஸ்ஜிதுல்‌ ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப்‌ பாக்கியம்‌ மிக்கதாக நாம்‌ ஆக்கிய மஸ்ஜிதுல்‌ அக்ஸா வரை தனது சான்றுகளைக்‌ காட்டுவதற்காக ஓர்‌ இரவில்‌ தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச்‌ சென்றவன்‌ தூயவன்‌. அவன்‌ செவியுறுபவன்‌; பார்ப்பவன்‌. (அல்குர்‌ஆன்‌ 17:1➚) ஜிப்ரீல்‌ வருகை – வீட்டு முகடு திறக்கப்படுதல்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: “நான்‌ […]

06) நபித்துவத்தின் துவக்கம்

நபி(ஸல்) அவர்கள் இறைச்செய்தி வருவதற்கு முன்பே ஏகத்துவ அடிப்படையிலேயே தம் வாழ்வை அமைத்திருந்தார்கள். சிலை வணக்கம் செய்பவர்களாக இருந்ததில்லை. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத பிராணிகளை சாப்பிடமாட்டாட்டார்கள் (புகாரி: 3826) ➚ நபி (ஸல்) அவர்கள் நாற்பது வயதை அடைந்த போது இறைவனின் புறத்திலிருந்து செய்திகள் வருவதற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. சில அற்புத நிகழ்ச்சிகளும் வெளிப்பட்டது. ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கிறார்கள் : நான் மக்காவில் ஓரு கல்லை பார்க்கிறேன். அது என் […]

04) நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே. (முஸ்லிம்: 4575) ➚ நபி (ஸல்) அவர்களின் பரம்பரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் “கினானா’வைத் தேர்ந்தெடுத்தான்; “கினானா’வின் வழித்தோன்றல்களில் குறைஷியைரத் தேர்ந்தெடுத்தான்; […]

03) அரபியர்களின் அறியாமை பழக்கங்கள் மற்றும் வழிபாடுகள்

அரபியர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றி வந்தார்கள். பின்பு காலம் செல்ல செல்ல இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை மறக்க ஆரம்பித்தார்கள். நபியவர்கள் பிறப்பதற்கு முன் அரபியர்களிடத்தில் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்து காணப்பட்டன. சிலைகளை வழிபட்டனர் அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்கள் மற்றும் கால்நைடகளில் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். “இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது” என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங்களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். […]

02) முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு தவ்ராத், இன்ஜீல் உள்ளிட்ட முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை பற்றி முன்னரே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முஹம்மது என்றொரு தூதர் வருவார் என்றும் அவர் மகத்தான சில நற்குணம் கொண்டவராக இருப்பார் என்றும் அதிலே குறிப்பிடப்பட்டுள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையே […]