
இஸ்லாத்தை மக்கள் முன்னிலையில் முழங்கக்கூடிய உரிமை அனைவருக்குமானதாகும். யாரோ ஒருவர் இன்னொருவருக்கு சத்தியத்தை தெளிவுப்படுத்தியதன் விளைவு தான் இன்று இஸ்லாம் பட்டித்தொட்டியெங்கும் படர்ந்துக்கிடக்கிறது. இத்தகைய மகத்துவமான பணியை ஆண்களுக்கு மட்டும் குறிப்பாக்குவது முறையன்று. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தைக் கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். இவர்களுக்குத்தான் அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன். (அல்குர்ஆன்: 9:71) ➚ […]