அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனை அலசி ஆராய்ந்து, மக்களுக்கு மார்க்கத்தை அறிவுரைக்கும் ஆலிம்கள், முதலில் தங்களின் வாழ்வை வான்மறை அடிப்படையில் வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அதனைத் தொடர்ந்து, அந்த ஆலிம்களால் நிகழ்த்தப்படும் மார்க்க உரைகள் மனிதர்கள் வாழ்வில் எத்தகைய திருத்தத்தைத் தரவேண்டும் என்பதை இத்தொடரில் பார்ப்போம். எழுத்துக்கள் மூலம் ஏற்ப்படுத்திட முடியாத எழுச்சியைக் கூட பேச்சின் மூலம் பாய்ச்சிட முடியும். அரியனையைப் பிடிக்க அரசியல் பேசுபவர்களும், மதபோதகர்களும், […]