Author: Mukthiyaar Basha

25) ஏமாற்று வியாபாரம்

பொதுவாகவே இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது எவரையும் ஏமாற்றாமல் இருப்பதாகும். பிறரை ஏமாற்றிச் சம்பாதிப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராமாகும். வியாபாரத்திலும் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சையும் திராட்சையும் இருந்தது. இதை மரத்தில் பிஞ்சாக இருக்கும் போதே, “கனியான உடன் வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி விலை பேசுவார்கள். இந்த வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஆனால் பிஞ்சை விற்பதையோ, விலை பேசுவதையோ நபி (ஸல்) தடுக்கவில்லை. மரத்தில் உள்ள […]

24) வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை

வணிகப் பேரத்தில் பொய் சத்தியம் ஒரு மனிதர் அவருடைய பொருளில் இல்லாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விற்றார். இதை அல்லாஹ் கண்டித்து ஒரு வசனத்தை இறக்கி வைத்தான். அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.  (அல்குர்ஆன்: 3:77)➚ ஒரு மனிதர் கடைவீதியில் […]

23) வியாபாரம்

நாம் இதுவரை பிறருடைய பொருள் ஹராம் என்பதைத் தெளிவாகப் பார்த்தோம். இனி வியாபாரத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரம் எது? தடுக்கப்பட்ட வியாபாரம் எது? என்பதைப் பார்க்கவிருக்கிறோம். ஏமாற்று வியாபாரம் ஏமாறுவதும், ஏமாற்றுவதும் கூடாது. அளவு நிறுவையில் மோசடி செய்வது கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! […]

22) அடைமானமும் அமானிதமும்

அடைமானம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் ஒரு யூத மனிதனிடம் அடைமானப் பொருள் கொடுத்து கொஞ்சம் கோதுமை வாங்கினார்கள். அதைத் திருப்பி வாங்காமலேயே மரணித்தார்கள் என்ற ஹதீஸை பார்க்கிறோம். அது வட்டிக்கு இல்லை. அடைமானப் பொருளுக்கும் வட்டிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அடைமானப் பொருள் ஒரு பொருளை வாங்கும் போது அதற்குப் பதிலாக ஒரு பொருளை கொடுப்பதே அடைமானமாகும் எனவே அடைமானம் வைத்து பொருளை வாங்கலாம் அல்லது அடைமானத்துக்கு பொருட்களை கொடுக்கலாம் என்பதை பின்வரக் கூடிய ஹதிஸ்கள் […]

21) கடனை தள்ளுபடி செய்வதன் சிறப்பு

அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்” என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்” என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற […]

20) கடன் தள்ளுபடி

கடன் கொடுத்தவர் ஒரு பாக்கியசாலி ஆவார். ஏனென்றால் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் மரணித்தால் கடன் கொடுத்தவருக்கு அல்லாஹ் அதற்கான கூலியைக் கொடுக்கின்றான். ஆனால் அதே சமயம், கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அல்லாஹ் நம்முடைய பாவத்தைத் தள்ளுபடி செய்கின்றான். “கடனை மன்னிக்க மாட்டேன்; மறுமையில் வந்து பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டால் மறுமையில் கிடைக்கும். அது குறைவாகத் தான் கிடைக்கும். ஆனால் கடனை மன்னித்துவிட்டால் அதைவிடப் பெரிய நன்மையை எதிர்பார்க்க முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

19) கடன் வாங்கியவர் கவனிக்க வேண்டியவை

இன்று சிலர் கடன் வாங்குகின்றார்கள். ஆனால் கொடுக்கின்ற தவணை வரும் போது கொடுக்க முடியாமல் பல பொய்கள் சொல்லியும் ஏமாற்றியும் விடுகின்றார்கள். இதற்கு நபி (ஸல்) அவர்கள் பல எளிதான வழிமுறைகளைச் சொல்லிக் காட்டுகிறார்கள். நாம் கடனை வாங்கும் போது, “நான் இந்தக் கடனை நிறைவேற்றுவேன்’ என்ற எண்ணம் முதலில் வேண்டும். பின்னால் அல்லாஹ் எனக்கு உதவி செய்வான் என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அல்லாஹ் அதனை நிறைவேற்றுவான். […]

18) கடன் பற்றிய சட்டங்கள்

கடன் விஷயத்தில் கடினப் போக்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் மரணம் அடைந்தால் நபியவர்கள் ஜனாஸா தொழுவிப்பது தான் வழக்கம். அப்படித் தொழ வைக்கும் போது முதலில் “இந்த ஜனாஸா ஏதாவது கடன்பட்டு உள்ளதா?’ என்று கேட்பார்கள். ஆம் என்று சொன்னால் அந்தக் கடனை அடைப்பதற்கு ஏதாவது விட்டுச் சென்று இருக்கிறாரா? என்று கேட்பார்கள். அதற்குத் தோழர்கள் ஆம் என்று சொன்னால் மட்டுமே அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழ வைப்பார்கள். இல்லையென்று சொன்னால் தமது […]

17) அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை

யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு உள்ளது (அல்(அல்குர்ஆன்: 51:19)➚ பொதுவாக நாம் வீதியில் செல்லும் போது ஒரு தோட்டத்தைப் பார்க்கின்றோம். அதிலிருந்து நாம் உண்ணலாம். எந்த வகையில் என்றால் அதில் ஒரு பங்கு வழிப்போக்கர்களுக்கு உரிமை இருக்கின்றது. மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில், இவ்வாறு மக்கள் எடுப்பதை அந்த நிலத்தின் உரிமையாளர் பொருட்படுத்தக்கூடாது பொதுவான மரத்தின் கிளையில் காய்த்துத் தொங்கும் கனிகளை எடுத்து உண்பதும் கூடும். அம்ர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்: தொங்கவிடப்பட்டிருக்கும் பேரிச்சை பழத்தை […]

16) அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

ஹராம், ஹலால் என்றால் என்ன? ஒரு பொருளைத் திரட்டுவதாக இருந்தால் ஹராமான வழியில் திரட்டக்கூடாது. பொருளைத் திரட்டுவது ஹலாலான அடிப்படையில் இருக்க வேண்டும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அனுமதித்த காரியம் ஹலால் ஆகும். ஒருவரின் பொருளை அவரது அனுமதியுடன் பெற்றுக் கொள்வதும் ஹலாலாகும். மற்றவரின் பொருள் நமக்கு ஹராம் ஆகும். அந்தப் பொருள் பணமாகவோ, பொருளாகவோ, நகையாகவோ, எதுவாக இருந்தாலும் சரியே. அது நமக்கு ஹலால் ஆகாது. பிறருடைய பொருள் நமக்கு எந்த அளவிற்கு ஹராம்? நபி […]

15) ஹலாலை ஹராமாக்கும் வீண் சந்தேகங்கள்

சந்தேகமானதை விட்டு விலக வேண்டிய அதே நேரத்தில் அல்லாஹ் ஹலாலாக்கியதை நாமாக ஹராமாக்கக் கூடாது. அவ்வாறு செய்வது குற்றம். நாம் ஒரு விஷயத்தை சந்தேகம் கொண்டால், சந்தேகம் கொள்வதற்குரிய முகாந்திரம் இருக்க வேண்டும். வீணாண சந்தேகத்தால் ஹலாலான விஷயங்களை ஹராமாக்கிவிடக் கூடாது “தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது” எனக் கூறுவீராக! அறிகிற […]

14) சந்தேகமானதை விட்டு விலகுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிட மானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் […]

13) பொருள் திரட்டும் வழிமுறை

நபிமார்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் நபிமார்கள் அல்லாஹ் தந்த அருட்கொடைகளைப் பெற்று அதற்கு நன்றி செலுத்தினார்கள். உலகிலேயே நாம் குறைவான அமல் செய்து ஒருவனை திருப்திப்படுத்த முடியும் என்றால் அது அல்லாஹ்வை மட்டும் தான். உதாரணத்திற்கு நாம் வயிறு நிறைய உண்ண வேண்டும் என்றால் நாம் அதற்காகக் கடுமையாக ஒருவனிடம் உழைக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவன் குறைந்த அமலிலேயே அவன் திருப்தி அடைகிறான் நாம் வயிறு நிறைய உண்டு விட்டு […]

12) நல்லவர்கள் கஷ்டப்படுவதும் தீயவர்கள் சுகமாக வாழ்வதும்

உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்று சொன்னால் இந்த உலகத்திலேயே நாம் பார்க்கலாம்; நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படுவார்கள். தீயவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கிறோம். நேர்மையாக, சரியான அடிப்பûயில் இருக்கக் கூடியவன் ஏழ்மையில் வாடுவான். லஞ்சம் வாங்கி மோசடி செய்து ஹராமான அடிப்படையில் வியாபாரம் செய்பவன் செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள். நேர்மையாக நடப்பவர்களும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். […]

11) செல்வமும் விதியும்

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், சிறுவனாக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள்: உனக்கு நான் சில சொற்களை கற்றுத் தருகிறேன். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணிக்கையாக இரு! அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணிக்கையாக இரு! அல்லாஹ்வை கண் முன்னே பார்ப்பாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் நீ கேள்! மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் நீ அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! சமுதாயம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து உனக்கு ஒரு நன்மை […]

07) போதுமென்ற மனம்

நம்மிடத்தில் செல்வங்கள் இருக்கும் போது அதை வைத்து நமது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ளலாம். ஆனால் பிறரைப் பார்த்து அவனை விட நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்பதற்காக பிறரிடம் யாசகம் கேட்கிறோம். இப்படி யாசகம் கேட்பதன் தீமைகளைக் கடந்த இதழில் கண்டோம். எனவே யாரிடமும் கையேந்தாமல் இருக்கின்ற செல்வத்தை வைத்து நமது உள்ளம் திருப்தி கொள்ள வேண்டும். நம்மிடம் போதுமென்ற மனம் இருக்க வேண்டும். “யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் யார் […]

05) நபியவர்களின் வறுமை

பொருளாதாரம், இறை நினைவை விட்டும் திசை திருப்பக் கூடியதாக ஆகி விடக் கூடாது என்பதைக்  கண்டோம். இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வறுமையான நிலையிலேயே தமது வாழ்நாளைக் கழித்துள்ளார்கள். நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட வறுமையைப் போன்று இன்று வரைக்கும் எவருக்கும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் வாழந்தார்கள். நபிகள் நாயகம் சிறு வயதில் தாய் தந்தையை இழந்த அனாதையாக இருந்தார்கள். அப்போது ஆடு மேய்த்து வாழ்க்கையை ஓட்டினார்கள். நபியாக ஆனதற்குப் பின் அவர்களை […]

04) செல்வந்தர்கள் கவனத்திற்கு…

இறை நினைவை திசை திருப்பக்கூடாது செல்வம் இருப்பதால் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்துவிடக் கூடாது. இன்று எத்தனையோ நபர்கள் பணம் வருவதற்கு முன் வணக்க வழிபாட்டில் ஈடுபாட்டுடன் இருந்தவர்கள், பணம் வந்தவுடன் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்துவிடுகிறார்கள். இந்த நிலை வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் இறை நினைவை விட்டும் திருப்பி விடாது என்று உறுதியாக நம்பினால் மட்டுமே காசு பணத்தை வைத்துக் கொள்ளலாம். நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் […]

03) பொருளாதாரம் ஒரு சோதனை

பொருளாதாரம் மனிதனுக்கு அவசியம் என்பதை இதுவரை நாம் பார்த்தோம். இதன் காரணமாக, சம்பாதிக்க வேணடும்; சொத்து செல்வங்களைச் சேர்க்க வேணடும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் வந்திருக்கும். இதை மட்டும் வைத்து கொண்டு பொருளாதாரத்தைத் திரட்டுதுவது தான் வாழ்க்கை என்று எண்ணிவிடக் கூடாது. பொருளாதாரம் பயங்கரமானது; அதைக் கையாள வேண்டிய விதத்தில் கையாள வேண்டும். இல்லாவிட்டால் இது சுவர்க்கத்துக்குப் பதிலாக நரகப் படுகுழிக்குக் கொண்டு செல்லும் என்பதைப் பற்றி எச்சரித்து, குர்ஆன் மற்றும் ஹதீஸில் அல்லாஹ்வும் அவனுடைய […]

02) பொருளாதாரம் ஆன்மீகத்திற்கு எதிரானதா?

உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள், பொருளாதாரத்தை ஆன்மீகத்திற்கு எதிராகவே சித்தரித்துக் காட்டுகின்றன. பொருளாதாரமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை; பொருட்செல்வம் உடையவன் ஆன்மீகவாதியாக முடியாது என்ற கருத்தைத் தான் முன்வைக்கின்றன. ஆனால் ஆன்மீகத்திற்குப் பொருட்செல்வம் ஒரு தடைக்கல் அல்ல என்று இஸ்லாம் கூறுகின்றது. பொருளைத் தேடுவதும், அதைச் சேமிப்பதும், நல்வழியில் செலவளிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை விட வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறலாம். வியாபாரத்தைத் தூண்டும் திருக்குர்ஆன் வசனங்கள் திருக்குர்ஆன் ஆன்மீகத்தைச் சொல்லித் தரக் கூடியது. இதில் அதிகமான இடங்களில் சம்பாதிக்கத் தூண்டக்கூடிய […]

01) முன்னுரை

பொருளியல் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் இது வியாபாரிகளுக்குரியது, வணிகர்களுக்குரியது, பணக்காரர்களுக்குரியது என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. இது ஏழைகள், கூலித் தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பொருளாதார ரீதியாக என்ன முடிவெடுக்க வேண்டும் என்று விளக்குவது தான் இந்தத் தலைப்பின் நோக்கம். உலகத்தில் பொருளாதாரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, சிலர் செல்வங்களைத் திரட்டுவதால், வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வதால் ஆன்மீக நிலையில் உயர்ந்த நிலையை அடைய முடியாதென்று நினைக்கின்றார்கள். இறைவனுடைய திருப்தியையும் அன்பையும் பெற […]

மாமியார் vs மருமகள்

முன்னுரை ஒரு குடும்பம் உருக்குலைந்து விடாமல் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றால் அந்தக் குடும்பத்தின் முக்கிய அங்கமாக இருக்கக் கூடிய பெண்கள், குறிப்பாக மாமியார் மருமகள் இருவருமே இணக்கமாக, ஒற்றுமையாக, பரஸ்பர உறவுடன் வாழ வேண்டும். இல்லையேல் அக்குடும்பம் சீரழிந்துவிடும். மாமியார், மருமகள் ஆகிய இருவருக்குமிடைய கருத்து வேறுபாடு, பிணக்கு, சரியான புரிந்துணர்வு இல்லாமை, நீயா நானா என்ற போட்டி, ஈகோ போன்ற காரணங்கள் இறுதியில் கொலை செய்யும் அளவுக்குத் தள்ளிவிடுகின்றது. மாமியார் – மருமகள் […]

இறைவா! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!!

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக என்று பிரார்தித்தவனாக ஆரம்பம்செய்கிறேன்.. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும், அடியாராகவும் இருக்கின்றார்கள் என்ற ஏகத்துவ முழக்கத்தோடு முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த உலகத்தில் இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தைப் பின்பற்றுபவர்கள், வேறு வேறு கொள்கை கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள், இன்ன பிற சித்தாந்தங்களின் […]

அவள் ஒரு நற்செய்தி!

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒரு பெண் இளம் பருவத்தை அடைகிற போது இனக்கவர்ச்சியினாலும் இளமைப்பருவத்தினாலும் பலராலும் விரும்பப்படுகிற நபராகிறாள். அதிலும் பொலிவான முகத்தோற்றம் அமைந்து விட்டால் ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு திருமணத்திற்காகப் பெண் கேட்பர். ஆனால் அந்தப் பெண், குழந்தையாகப் பிறந்த பொழுது இதே அளவில் அவள் […]

உரிமைகளை மீட்டெடுப்போம்

இஸ்லாமிய மார்க்கம், ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசும் மதம் அல்ல! இது சத்திய மார்க்கம். மனிதனுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் போதிக்கிற முழுமையான வாழ்க்கை நெறி. இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, அதாவது அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளைப் பற்றியும் இஸ்லாம் எடுத்துரைக்கிறது. அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். […]

11) ஜிஹாதின் பெயரால் ஐயாயிரம் முஸ்லிம்கள் படுகொலை

ஆயிஷா (ரலி) படைக்குள் சதிகாரர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதாகக் கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் 900 குதிரைப் படையுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட படை, பஸரா செல்லும் வழியில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் மேலும் படையைத் திரட்டிக் கொண்டு, கணிசமான வலிமையுடன் பஸராவை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில், “மர்ருழ் ழஹ்ரான்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஃபாத்திமா பள்ளத்தாக்கை அடைந்ததும், ஆயிஷா நாயகியின் படையில் சேர்ந்து கொண்டு வந்த சயீத் இப்னுல் […]

10) அன்னையாரின் சபதம்

அலீ (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நான்காவது கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. அவர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. பெருமானாரின் மனைவிமார்களான உம்முல் முஃமினீன்களிடமிருந்தும், பல மூத்த நபித்தோழர்களிடமிருந்தும் எதிர்ப்புகளையும் கண்டனக் கனைகளையும் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் காரணம் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை தான். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியும் அவர்களின் படுகொலையும் எப்படி ஜிஹாத் என்ற பெயரில் நடத்தப்பட்டதோ, அதே […]

09) அலீ (ரலி) சந்தித்த சவால்கள்

முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் எந்தளவுக்கு எச்சரிக்கை செய்தார்கள் என்பதையும், அந்த எச்சரிக்கைக்கு மாற்றமாக முஸ்லிம் உம்மத் ஜிஹாதைத் தவறாக விளங்கி செயல்பட்டதால் உஸ்மான்(ரலி) அவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் விரிவாக சென்ற இதழில் பார்த்தோம். ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இஸ்லாமிய வரலாறு சந்தித்த இரத்தக் கறை படிந்த அத்தியாயங்களின் தொடரில் அலீ (ரலி) அவர்களின் ஆட்சியின் போது நடந்த துயர நிகழ்வுகளும் அமைந்துள்ளன. அலீ […]

08) ஜிஹாதின் பெயரால் நடந்த உஸ்மான் (ரலி) கொலை! அதிர்ச்சி வரலாறு

“ஜிஹாத்’ என்ற சொல்லின் விளக்கத்தையும், ஜிஹாத் (கிதால்) உட்பட இறைவன் நமக்கு விதியாக்கிய எந்தக் கடமையையும் நாம் விரும்பியவாறு செய்ய முடியாது; அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வகுத்துத் தந்த விதிமுறைகளின் படியே நிறைவேற்ற வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் இது வரை பார்த்தோம். ஜிஹாத் (கிதால் – ஆயுதப் போர்) பற்றி முழுமையான ஆய்வு செய்யாமல் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டதால் இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்டுள்ள துயரச் சம்பவங்கள் பற்றியும், அதிலிருந்து […]

07) ஜிஹாதின் அடிப்படை

“ஜிஹாத்” என்றால் என்ன? என்னென்ன நற்செயல்கள் எல்லாம் “ஜிஹாத்’ என்ற வட்டத்திற்குள் வருகிறது என்பதையும் நடைமுறையில் ஜிஹாத் என்றாலே ஆயுதந்தாங்கிப் போரிடுவது மட்டும் தான் என்று விளங்கி வைத்திருப்பது தவறு என்பதையும் இதுவரை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பார்த்தோம். ஜிஹாதின் முக்கிய ஓர் அங்கமான “கிதால்’ (ஆயுதம் ஏந்திப் போரிடுதல்) பற்றி இனி விரிவாக நாம் பார்ப்போம். முஸ்லிம்கள் ஆயுதமேந்திப் போரிடுவதை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் திருமறைக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு சென்ற தொடரில் நாம் […]

06) ஜிஹாதும் கிதாலும்

“ஜிஹாத்’ என்றாலே முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்-ம்கள் அழிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தை என்ற தவறான கருத்து இன்று உலகம் முழுவதும் நிலவி வருகின்றது. இன்னும் சொல்லப் போனால் தங்களை முஸ்-ம்கள் என்று சொல்-க் கொள்வோர் சிலர் கூட இந்தக் கருத்தைத் தான் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தவறான கருத்து நிலவுவதற்கு மிக முக்கிய காரணம் மேற்கத்திய ஏதேச்சதிகார சக்திகளின் ஊதுகுழலாய் விளங்கக் கூடிய தகவல் தொடர்பு சாதனங்களும், முஸ்-ம்களிடம் ஜிஹாதைப் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமையும் தான். இந்தத் தவறான […]

05) செல்வத்தால் போரிடுதல்

இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது, மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவது, நீதிக்காக (நாவினால்) குரல் கொடுப்பது ஆகிய நற்செயல்கள் அனைத்தும் “ஜிஹாத்’ என்பதை ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களின் மூலம் சென்ற தலைப்பில் நாம் பார்த்தோம். இவை அல்லாமல் நேரடியாகக் களப் போரில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வதும், அந்த யுத்தத்திற்குத் தேவையான தளவாடங்களுக்காக தங்களிடமுள்ள செல்வங்களைச் செலவிடுவதும் “ஜிஹாத்’ (அறப்போர்) தான் என்பதை விளக்கும் ஒரு சில வசனங்களை […]

04) நீதிக்குக் குரல் கொடுப்போம்

“ஜிஹாத்’ என்பதற்கு உழைத்தல் – பாடுபடுதல், வற்புறுத்துதல் – கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி ஆகிய அர்த்தங்கள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் சான்றுகளுடன் இதுவரை பார்த்தோம். மேலும் என்னென்ன நற்செயல்களுக்கு “ஜிஹாத்’ என்ற வார்த்தை பொருந்தும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். ஹஜ் செய்வதும் ஜிஹாத் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சிறந்த, அழகிய ஜிஹாத் […]

03) ஜிஹாத் பொருள் விளக்கம்

“ஜிஹாத்’ என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்பது மட்டும் பொருளல்ல! அது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை என்பதைப் பார்த்து வருகின்றோம். ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி, அழைப்புப் பணி ஆகிய பொருள்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களைக்  கண்டோம். அழைப்புப் பணி செய்வதும் “ஜிஹாத்’ தான் என்பதை வ-யுறுத்தும் மேலும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! […]

02) ஜிஹாதின் அர்த்தங்கள்

“ஜிஹாத்’ என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல் என்ற பொருளும், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருளும் உள்ளது என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களை சென்ற இதழில் கண்டோம். மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய வசனங்களைக் காண்போம். உறுதி ஜிஹாத் என்பதற்கு உறுதி என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அது சம்பந்தமான வசனங்களைக் காண்போம். “நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே’ என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா? என்று நம்பிக்கை கொண்டோர் […]

01) முன்னுரை

ஜிஹாத் – இந்த சொல்லைக் கேட்டாலே ஒரு சாரார் வெறுப்பின் உச்சத்திற்குச் செல்வதையும் மற்றொரு சாரார் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, தங்களையும் தங்கள் சமுதாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் காண முடிகின்றது. ஜிஹாதைப் பற்றி மேற்கண்ட இரு சாராரும் கொண்டுள்ள கருத்துக்கள் சரியானவை தாமா? இறுதி வேதமான திருமறைக் குர்ஆனும் இறுதித் தூதராகிய பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையும் ஜிஹாத் சம்பந்தமாக என்ன விளக்கமளிக்கின்றன? ஓர் உண்மை முஸ்-ம் ஜிஹாத் […]

நட்பு ஓர் இஸ்லாமியப் பார்வை

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதனுடைய இயற்கையான இயல்பு ஒருவரோடு ஒருவர் நட்பு வாஞ்கைகொண்டு பழகுவதாகுவே அமைந்துள்ளது. மனிதன் எப்போதும் தன் உள்ளக்கிடக்கினைக் கொட்டித் தீர்த்திட ஒரு துணையையும் தனக்கு ஆபத்தில் துணை நிற்க ஒரு நண்பனையும் தேடிய வண்ணமே இருக்கின்றான். மனிதனுக்கும், வனங்களில் வாழும் விலங்குகளுக்கும் இடையில் முக்கியமான வேறுபாடுடையதாக, பகுத்துக் […]

நிச்சயிக்கப்பட்ட மரணம்!

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் […]

அல்லாஹ்வை நம்புவது எப்படி?

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் […]

ஜும்ஆ உரையின் நோக்கமும், முக்கியத்துவமும்

ஜும்ஆ தொழுகை மிகச் சரியாக அமைவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று ஜும்ஆ உரையாகும். நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஜும்ஆ உரையை விட்டது கிடையாது. அல்லாஹ் கூறுகிறான் : يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (9) فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ […]

தீய நண்பன்

கெட்ட தோழன் நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிடுவான். அபூமூசா (ர-லி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி […]

பூனையை விற்பனை செய்யலாமா?

முன்னுரை மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற பல செல்லப் பிராணிகள் இன்று வீடுகளில் வைத்து வளர்க்கப்படுகின்ற அடிப்படையில் பூனைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றது. பூனையால் வீட்டில் இருக்கும் எலி போன்ற தீங்கு தருகின்றவற்றைக் கொல்வது போன்ற சில பலன்களும் ஏற்படுகிறது. பொதுவாக நாட்டு ரகப் பூனைகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் பல வகை ஃபேன்சி ரகப் பூனைகளும் இன்று மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றது. பூனையை வளர்ப்பது தடையில்லை மார்க்க அடிப்படையில் பூனைகளை வளர்ப்பது தடையில்லை. என்றாலும், அவற்றை வளர்க்கும்போது கொடுமைப்படுத்தாமல், சரியான […]

மவ்லித் ஓத ஆதாரம் உள்ளதா?

இப்னு ஹஜர் அல்ஹைதமியின் புனைசுருட்டுகள்! ரபியுல் அவ்வல்மாதம் வந்துவிட்டாலே நபிப் புகழ் பாடுகிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரே துலாத்தட்டில் நிகர்செய்யும் இழிவணக்கங்கள் முஸ்லிம்கள் சிலரால் வழிபடப்பட்டு வருவதை நாம் அறிவோம். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இந்த மவ்லித் பாடல்களுக்கு மார்க்க சாயம் பூச முடியவில்லை என்றதும் இப்னு ஹஜர் அல்ஹைதமி என்பவர் எழுதிய “அந்நிஃமதுல் குப்ரா அலல் ஆலம்” எனும் நூலிலிருந்து நபித்தோழர்கள் பெயரிலும், ஏனைய இமாம்களின் பெயரிலும் […]

04) கடவுளை மறுப்பவன் மூடன்

பகுத்தறிவு என்றால் ஐந்து புலன்களால் அறியக் கூடிய செய்திகளைச் சிந்தித்து அதன் மூலம் ஒரு விஷயம் சரியா தவறா? உண்மையா பொய்யா? என்பதைத் தீர்மானிப்பதாகும். அந்த அடிப்படையில் இறைவன் இருக்கின்றானா? என்பதை அறிய இவ்வுலகின் மற்ற அம்சங்களை நாம் சிந்திக்க வேண்டும். இப்போது கம்ப்யூட்டரை எடுத்துக் கொள்வோம். இதை நாம் பார்க்கிறோம். இதில் வேலை செய்கின்றோம். இதன் ஆற்றலைப் பார்த்து வியக்கின்றோம். இதை ஒருவர் கண்டுபிடித்தார் என்று சொன்னதால் அதை நாம் நம்புகின்றோம். இதைக் கண்டுபிடித்தவனின் அறிவுத் […]

03) கடவுளைக் கண்டவருண்டா?

அகில உலகத்துக்கும் ஓர் இறைவன் இருக்கின்றான். அவன் ஒரே ஒருவன் தான் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை! இந்த ஓரிறைக் கொள்கையை நாம் சொல்லும் போது சிலர், கடவுள் என்று ஒருவன் இல்லை, கடவுள் இருக்கின்றான் என்பதைப் பகுத்தறிவு உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிடுவதை நாம் பார்க்கிறோம். கடவுள் இல்லை என்ற இந்தத் தத்துவத்திற்குப் பெயர் நாத்திகம்! பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் இவர்கள், கடவுள் இல்லை என்று நிரூபிக்க சில […]

02) மன்னிக்க முடியாத குற்றம்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற இறைக்கட்டளையின் அடிப்படையில் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகவாதிகளின் வாதங்களுக்குப் பதில் சொல்லத் தெரிய வேண்டும். இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கையின் முதல் அம்சம். அடுத்தபடியாக கடவுள் என்றால் அது ஒரே ஒருவன் மட்டும் தான் இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏன் இரண்டு கடவுள்கள் அல்லது பல கடவுள்கள் இருக்க முடியாது? குல தெய்வம் என்று குடும்பத்துக்கு […]

01) முன்னுரை

முஸ்லிம்களின் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. சுமார் 20 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இந்த 20 கோடி பேரில் எத்தனை பேர் இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொண்டவர்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் ஒரு சதவிகிதம் கூட இருக்காது. பெரும்பாலும் வாரிசு முறையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே உள்ளோம். இந்தியாவை உதாரணத்திற்குக் கூறினாலும் உலகம் முழுவதும் இதே நிலைதான். இன்று நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்றால் உலகிலுள்ள அனைத்து மதங்களையும் […]

இறுதி மூச்சுவரை ஏகத்துவம்

அல்குர்ஆனில் இறைவன், முன்னர் வாழ்ந்த பல்வேறு நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற விஷயங்களையும் சொல்லிக் காட்டுகிறான். இவ்வாறு முந்தைய நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ் கூறுவதன் நோக்கம் அதிலருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்; நம்முடைய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் அவர்களைப் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியை குர்ஆனில் யூசுப் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் விரிவாக சொல்லிக் காட்டி […]

அசுத்ததை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள்

இன்றைய உலகம் அறிவியல் முன்னேற்றத்திற்கு பஞ்ச மில்லாமலும், அதே நேரத்தில் பலவிதமான நோய்க ளுக்கும் பஞ்சமில்லாமல் மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு நோய் பிரபலிமாய் கொண்டே வருகிறது. ஒரு வருடத்தில் சார்ஸ் இன்னொரு வருடத்தில் பறவைக் காய்ச்சல் இப்பொழுது பன்றிக் காய்ச்சல் என்று அச்சுறுத்திவருகிறது. அதிலும் குறிப்பாக உலக அளவில் தூய்மையில் முதலிடத்தை பிடிக் கும் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் இந்நோ யின் பிறப்பிடமாக உள்ளன. அந்நாடுகளிலிருந்துதான் பிற நாடுகளுக்கு அந்நோய்களும் விமானங்கள் கப்பல்கள் வழியாக […]

வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான்!

நபி (ஸல்) அவர்கள் (அகழ் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கி புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், ” இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான். ஆகவே அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி!” என்று (பாடிய வண்ணம்) […]

Next Page » « Previous Page