Author: Mukthiyaar Basha

மரணமும் மறுமையும் -16

மரணத்திற்கு முன் செய்ய மறந்தவை கப்ரில் நல்ல நிலையை அடைவதற்கு ஏராளமான நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கடந்த உரையிலே பார்த்தோம். ஆனால் நாம் எவ்வளவு கவனமாக பல நற்காரியங்களை செய்தாலும் நம்மையும் அறியாமல் சில தீமைகள் சில பாவங்கள் நமக்கு மிகப்பெரும் சோதனையாக வந்து அமைந்து விடும். எனவே அதில் இருந்து ஒரு மனிதனை பாதுகாத்துக் கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் நமக்கு சில வழிமுறைகளை கற்றுத் தருகிறார்கள் மிகப்பெரிய அளவிலே நன்மைகளை செய்ய முடியாவிட்டாலும், நபி […]

மரணமும் மறுமையும் -15

கப்ரில் நல்லவர்களின் நிலை-2 இருள் அகற்றப்பட்டு ஒளி பாய்ச்சப்படும் பொதுவாக மண்ணறைகளில் இருள் சூழ்ந்திருக்கும். நல்லவர்களின் மண்ணறைகளில் இருள் அகற்றப்பட்டு தேவையான ஒளி கொடுக்கப்படும். எனவே நல்லவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வைக் கழிப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த ‘பெண்’ அல்லது ‘இளைஞர்’ ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘அவர் இறந்து விட்டார்’ என மக்கள் […]

மரணமும் மறுமையும் -14

கப்ரில் நல்லவர்களின் நிலை-1 சந்தோஷமான செய்தி கூறப்படும் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். மரணம் எப்போதும் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வாறு வருவதற்கு முன் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மரணத்தருவாயில் இருந்து நடக்கும் நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் மிக அழகிய முறையில் விளக்கியுள்ளார்கள். நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் […]

மரணமும் மறுமையும் -13

தீயவா்களின் கப்ர் வாழ்க்கை-3 மண்ணறை தண்டனைக்கான காரணங்கள் உயிருடன் இருக்கும் போது செய்த பாவங்களுக்காக மண்ணறையில் தண்டனை தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பாவமான காரியங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாவங்களை மன்னித்து அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் முடிந்த அளவு பாவமான காரியங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் புரிந்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டிட வேண்டும். உலகில் புரிந்த குற்றங்களுக்கு மண்ணறையில் வேதனை தரப்படுவதாக […]

மரணமும் மறுமையும் -12

தீயவா்களின் கப்ர் வாழ்க்கை 2 நரகம் காட்டப்பட்டு அச்சுறுத்தப்படுவான் மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் அவனுடைய கண்ணிற்கு முன்னால் நரகம் கொண்டு வந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். அவன் செல்லவிருக்கும் நரகத்தைப் பார்த்து பயந்து கொண்டே நிம்மதியின்றி மண்ணறை வாழ்கையை அனுபவிப்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ’உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், […]

மரணமும் மறுமையும் -11

தீயவர்களின் கப்ர் வாழ்க்கை-1  கப்ர் வேதனை இந்த சமுதாயத்திற்கும் உண்டு அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு “யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம்: 5504) دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي امْرَأَةٌ مِنَ الْيَهُودِ، وَهِيَ تَقُولُ […]

மரணமும் மறுமையும் -10

மரண வீட்டில், கப்ரில் நடக்கும் கூத்துக்கள்! இன்னாலில்லாஹ் என்று கூறுதல்  ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்  என்பது இதன் பொருள். ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் […]

மரணமும் மறுமையும் -09

மரண நேரமும் மவுத் சோறும் கண்கள் நிலைகுத்தும் ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் ‎காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட ‎வேண்டும்.‎ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ فَأَغْمَضَهُ ثُمَّ قَالَ « إِنَّ الرُّوحَ ‏إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ ». فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ فَقَالَ « لاَ تَدْعُوا عَلَى […]

மரணமும் மறுமையும் -08

இறுதி நேரம் – மரணத் தருவாய் இறுதி நேரத்தில் நம் சிந்தனை, செயல்பாடுகள், எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. இறுதி நேர சிந்தனையே முக்கியம் يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும் போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்’’ என்று கூறியதை நான் கேட்டேன். அறி: ஜாபிர் (ரலி),(முஸ்லிம்: 5518) இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا […]

மரணமும் மறுமையும் – 07

மரண வேளையில் சைத்தானின் ஊசலாட்டம் இறைவனுக்கு இணை வைக்கும் படி தூண்டுவான். மனிதனை நரகத்திற்கு கொண்டு செல்வதற்கு இறுதி வாய்ப்பாக இருக்கிற மரண நேரத்தை சைத்தான் தன்னால் முடிந்தவரை பயன்படுத்துவான். அதில் சிக்கி ஏமார்ந்து நம்முடைய மறுமை வாழ்க்கையை நாம் நாசமாக்கி விடக்கூடாது. இறைதூதர் முன்னிலையிலேயே இவ்வாறு நடந்துள்ளது! أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ […]

மரணமும் மறுமையும் -06

(பல்வகை மரணங்கள்) தவணை வந்து விட்டால் ‎அவகாசம் இல்லை وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ‌ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு ‎வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். ‎பிந்தவும் மாட்டார்கள்.‎ (அல்குர்ஆன்: 7:34) ➚‎ وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் ‎அவகாசம் அளிக்க […]

del-மரணமும் மறுமையும் – 05

(அல்லாஹ்வே நித்திய ஜீவன், நபியின் மரணம்) அல்லாஹ்வே நித்திய ஜீவன் எவ்வளவு தற்காப்பு மேற்கொண்டாலும், கவனமாக இருந்தாலும், மரணம் நிகழ்கிறது. மரணத்தை எதிர்கொள்ளாத எவரும் இல்லை. அல்லாஹ் மடடுமே நித்திய ஜீவன். اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُؕ‏ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (அல்குர்ஆன்: 3:2) اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ لَهٗ مَا فِى […]

மரணமும் மறுமையும் – 04

மவுத்தை மறந்த மனிதன் மவுத்தை உள்ளத்தால் ஏற்று செயலால் மறுக்கும் மனிதன் உலகில் எந்த விசயத்திலும் கருத்து வேறுபாடுகள், இரு வேறு கருத்துக்கள் இருக்கும். ஆனால் மரணம் நிகழும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. மரணத்தை நம் உள்ளத்தால் அனைவரும் ஒத்துக் கொண்டாலும் நம் செயல்பாடுகள் மரணம் இருக்கிறது என்று எண்ணக்கூடியவருடைய செயல்பாடுகள் போன்று இல்லை. உலகத்தைப் பற்றிய மோகமும் ஆசையும் இருக்கலாம் தவறில்லை. ஆனால் அது நம்முடைய மறுமையை, நமக்கு மரணம் வரும் […]

மரணமும் மறுமையும் – 03

உலகின் இன்பங்கள் நிரந்தரமானது இல்லை உலக வாழ்க்கை அற்பமானது இவ்வுலக வாழ்க்கையில் 24 மணி நேரமும் மறுமைக்கான தயாரிப்புகளையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று மார்க்கம் நமக்கு கட்டளையிடவில்லை, இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதை அல்லாஹ்வோ, அவன் தூதரோ தடை செய்யவில்லை என்பதனையும் கடந்த உரையிலே பார்த்தோம். அதே நேரம், எல்லை மீறி இவ்வுலக இன்பத்திலே அதிகமான நேரத்தையும், பொருளாதாரத்தையும், நம் முயற்சிகளை செலவிட்டால், அது ஒரு மனிதனின் மறுமை வாழக்கையை கேள்விக்குறியாக ஆக்கிவிடும், என்பதில் எந்த சந்தேகமும் […]

மரணமும் மறுமையும் – 02

இம்மை மறுமைக்கே இந்த உலகம் இவ்வுலகம் மறுமைக்கு மட்டும் உரியதா? மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கைக்காக இந்த உலகில் நல்லறங்களை செய்ய வேண்டும் என்று போதிக்கும் இஸ்லாம் மார்க்கம், அதற்காக 24 மணிநேரமும் மறுமைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு கட்டளையிடவில்லை. மார்க்கம் கடமையாக்கிய செயல்களை செய்து முடித்த பிறகு ஒருவர் தனது நேரத்தை மார்க்கம் தடுக்காத எந்த வகையிலும் செலவழிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. நாள் முழுவதும் மறுமை சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் தான் […]

மரணமும் மறுமையும் – 01

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த தொடர் உரையில்… மரணமும் மறுமையும் என்ற இந்த தொடர் உரையில் மரணத்தை பற்றிய சிந்தனையின் அவசியம் மரண நேரத்தில் மனிதனின் நிலை மரண நேரத்தில் சைத்தானின் ஊசலாட்டம் மரண நேரத்தில் செய்ய வேண்டிய தவிர்க்க வேண்டிய செயல்கள் அதற்குபின் கப்ரில் நடக்கும் விஷயங்கள் […]

9) இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு

இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகமான இமாம்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்த ஒரு துறை உண்டு என்றால் அது ஹதீஸ் துறைதான். அந்த அளவுக்கு அத்துறை அந்த இமாம்களின் வாழ்நாள் சேவையைத் தன்பால் ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதை (பிறருக்கு) எடுத்துரையுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது தான். (புகாரி: 3461) அதற்காகத் தான் நபித்தோழர்கள் முதல் ஹதீஸ்களை நூல்களில் பதிவு செய்த புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்கள் காலம் […]

8) கணிணி மென்பொருள் வரை…ஹதீஸ்துறை கண்ட வளர்ச்சி

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்று நாம் குர்ஆனை மனனம் செய்தவரை  ஹாபிழ் என்று அழைக்கின்றோம். ஆனால் அன்று ஹாஃபிழ் என்று அழைக்கப்பட்டவர் குர்ஆனை மட்டுமின்றி இலட்சக்கனக்கான ஹதீஸ்கள், அந்த ஹதீஸ்களை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்கள், அவர்களது குறை நிறைகள் போன்ற அனைத்தையும் மனனம் செய்திருந்தார்கள். அந்த அளவுக்கு அபார மனனத்தன்மையை அன்றைய […]

7) ஹதீஸ் கலை

கருத்தைக் கவனித்து ஹதீஸ்கள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படும் என்பதை ஹதீஸ்கலை அறிஞர்கள் பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவை பற்றிய விளக்கங்களைக் காண்போம். ஷாத் ஹதீஸ் கலையில் “ஷாத்” என்ற ஒரு விதியிருக்கிறது. அதாவது, ஒரு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி, அவரைவிட நம்பகமான  ஒரு அறிவிப்பாளரோ அல்லது பலரோ அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அந்தச் செய்தி ஷாத் எனப்படும். நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட நம்பகத்தன்மையில் சற்று வலுவான ஒருவருக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ மாற்றமாக […]

6 ) நாஸிஹ் – மன்ஸூஹ் அறிவதன் முக்கியத்துவம்

நாஸிஹ் மன்ஸூஹ் பற்றி அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனென்றால், இதை ஒருவர் சரியான முறையில் அறியவில்லையென்றால் ஏராளமான மார்க்கச் சட்டங்களை அவர் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். மது பற்றிய மன்ஸூஹான வசனத்தை மாத்திரம் ஒருவர் படித்தால் மது ஹலாலானது என்ற அபத்தமான முடிவை எடுதுது விடுவார். மன்ஸூஹான மாற்றப்பட்ட சட்டங்களை ஓரிரு நபித்தோழர்கள் கூட அறியாமல் இருந்தார்கள் என்பதைச் சில ஹதீஸ்களின் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம். இதற்கு இப்னு மஸ்வூத்(ரலி) […]

5) நாஸிஹ், மன்ஸூஹ்

நாஸிஹ், மன்ஸூஹ் ; புதிய சட்டம் – பழைய சட்டம் இறைவன் மனிதர்களைப் படைத்து வெறுமனே விட்டுவிடாமல் அவர்கள் இந்த உலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்குரிய வாழ்வியல் சட்டங்களை அளித்துள்ளான். அவ்வாறு சட்டங்களை அளிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பின்னர் அவன் அதை மாற்றி விடுவான்.  அதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் கூறுகிறான்: ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்குச் […]

4) ஹதீஸ்களின் வகைகள்

அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது) கபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி) முதவாதிர் (அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும் பலர் ஒருமித்து அறிவிப்பது) ஒரு செய்தியை ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். தாபியீன்களிலும் ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். தபவுத் தாபியீன்களிலும் அதேபோன்று பலர் அறிவிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஏராளமானவர்கள் அறிவித்துள்ளார்கள் எனில் இத்தகைய செய்திகளை ஹதீஸ் கலையில் முதவாதிர் என்று சொல்லப்படும். இந்தத் தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் குறைவாகவே உள்ளன. உதாரணம்: […]

3) ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு

இஸ்லாத்தின் அடிப்படை வஹீ என்னும் இறைச்செய்தி ஆகும். இறைச் செய்திகள் என்பது திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகத்தின் மார்க்கம் தொடர்பான வழிகாட்டுதல்கள் மட்டுமே! திருமறைக் குர்ஆன், நபியின் வழிகாட்டுதல்கள் இரண்டுமே இறைச் செய்தி என்றாலும் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மட்டுமே எழுதுமாறு கட்டளையிட்டார்கள். நபியவர்களின் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாலும் அவற்றை எழுதுமாறு வலியுறுத்தவில்லை. இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் […]

2) அமலுக்கு வந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்

ஹதீஸ் என்ற பெயரில் யாரும் எதையும் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய், இந்தச் செய்தி எந்த நூலில் வருகின்றது? எந்த பாகத்தில் வருகின்றது? ஹதீஸ் எண் என்ன? அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் மக்கள் கேள்வி கேக்கும் நிலை தவ்ஹீத் புரட்சியினால் உருவானது. இந்த ஹதீஸ் புரட்சிக்கு வித்திட்டது தவ்ஹீது ஜமாஅத் தான் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். அமலுக்கு வந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்! தவ்ஹீத் […]

1) முன்னுரை

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எத்தனையோ பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிரிகள் சாட்டியிருக்கின்றனர். அந்த வரிசையில் இதுவும் ஒன்றுதான் என்றாலும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஹதீஸ் பற்றிய உறுதியான நிலைபாடு உண்டு! பிடிமானம் உண்டு! அதைச் சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற கடமை இருக்கின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை அல்லாஹ்வின் வஹீயாகவே நம்புகின்றது! ஏனென்றால் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான். அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியே தவிர வேறில்லை. […]

3) பித்அத் பற்றிய முன்னறிவிப்புகள்

பித்அத்கள் இந்த சமுதாயத்தில் தோன்றும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டுதான் சென்றார்கள். அதுப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் நபிகள் நாயகத்திற்கு முந்தைய நிலையைப் பற்றி அறிந்துக் கொள்வது சற்றுப் பொருத்தமாக இருக்கும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முன்னால் பல நபிமார்கள் இந்த உலகில் இறைத்தூதர்களாக இறைவனால் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொருவரும் மரணித்த பிறகு அடுத்த ஒவ்வொரு சமுதயாத்திற்கும் ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் என்று அடுத்தடுத்து தூதர்கள் கால இடைவெளிவிட்டு வந்துக் கொண்டேயிருந்தனர். ஒவ்வொரு இறைத்தூதருக்கும் இடைப்பட்ட […]

2) இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம்!

தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோர், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவே தவிர நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அதுபற்றி அவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். பொய்யர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன்: 39:3) ➚ இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்கு சொந்தமான மார்க்கம் என்று இறைவன் இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான். அதற்கான பொருள் என்ன? […]

01) முன்னுரை

பித்அத் ஓர் வழிகேடு ஷிர்க்கை பற்றி இருக்கும் விழிப்புணர்வு பித்அத்கள் விஷயத்தில் மக்களிடம் அதிகம் இல்லாமல் இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது வளர்ந்து திருமணமாகி பின்பு இறந்து அடக்கம் செய்யப்பட்டு ஓராண்டு கழிந்து ஒவ்வொரு வருடமும் என்று பித்அத் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் மரணித்தாலும் நிற்காமல் ஏராளம் ஏராளமாக மக்களால் செய்யப்படுகிறது. இத்தகைய பித்அத் என்றால் என்ன? என்ற தெளிவை ஏற்படுத்துவதே இந்த புத்தகத்தின் நோக்கம். அல்லாஹ் நம் நோக்கத்தை நிறைவேற்றுவானாக! பித்அத் என்பதின் அர்த்தம் என்ன? பித்அத் […]

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அழகிய முன்மாதிரி قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. (அல்குர்ஆன்: 60:4) ➚ சோதனைகள் அனைத்தையும் வென்றவர் وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ […]

09) கணவாயின் ஷைத்தான்

கணவாயின் ஷைத்தான் பராஉ இப்னு மஃரூர் (ரலி) நபி ஸல் அவர்கள் கையைப் பற்றி , “சத்திய மார்க்கத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களை நாங்கள் பாதுகாப்பது போன்றே உங்களையும் நிச்சயம் பாதுகாப்போம். அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் வாக்குறுதியும் ஒப்பந்தமும் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் போரின் மைந்தர்கள்! கவச ஆடை அணிந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக போர் செய்து பழக்கப் பட்டவர்கள்! பராஃ (ரலி) யின் வார்த்தைகள் முரசாய் முழங்கின. […]

வெறுக்கப்பட்ட குணங்கள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன் கெட்ட எண்ணங்கள் يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ(12) سورة الحجرات […]

இடையூறு அளிப்பதிலிருந்து விலகுவோம்

இடையூறு அளிப்பதிலிருந்து விலகுவோம் முன்னுரை மனித வாழ்வில் இடையூறு என்பது ஏதோ ஒரு வடிவில் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களாக இருக்கக்கூடிய நாம் பிறருக்கு இடையூறு அளிப்பதையும், இடையூறு அளிக்கும் விஷயங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. அவ்வாறு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய ஏராளமான விஷயங்களில் சிலவற்றை இந்த உரையில் கான்போம். சாட்சி சொல்பவர்களுக்கு இடையூறு அளிக்காதீர் وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ […]

இறைநம்பிக்கையாளின் தன்மைகள்

கட்டடத்தைப் போன்றவர்கள் حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ – رواه البخاري நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். […]

மறுமை நாளில் அல்லாஹ் பார்க்காத பேசாத மனிதர்கள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை இந்த பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களை செய்கிறான், அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வை பயந்து நல்லவனாக வாழ்வதற்காக அவனது பாவங்களுக்கு தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளானர். இவ்வாறு மனிதன் செய்யும் பாவங்களில் […]

இஸ்லாத்தின் எதிரிகள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நயவஞ்சகர்கள் (நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும்போது “நீர் அல்லாஹ்வின் தூதரே என்று உறுதி கூறுகிறோம்’’ என்று கூறுகின்றனர். நீர் அவனுடைய தூதர் என்பதை அல்லாஹ் அறிவான். ‘நயவஞ்சகர்கள் பொய்யர்களே’ என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் […]

இஸ்லாமியப் போர்கள்

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பத்ருப் போரில் இறையுதவி நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்’’ என்று உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன்: 8:9) ➚ உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், […]

del – பெண் புத்தி பின் புத்தியா?

பெண் புத்தி பின் புத்தியா? பெண்களை இழிவு படுத்தும் வண்ணம் உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்கள் என்று கூறி பல்வேறு விதங்களில் இட்டுக் கட்டப்பட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில செய்திகளையும், அவை தொடர்பான விமர்சனங்களையும், உண்மையான மார்க்க விளக்கத்தையும் நாம் கண்டு வருகிறோம். அந்த வரிசையில் உள்ளது தான் பின் வரக்கூடிய செய்திகளாகும். பெண்களிடம் ஆலோசனை செய்யுங்கள். (ஆனால்) அதற்கு மாற்றமாக நடந்து கொள்ளுங்கள்.  நூல்: கஷ்ஃபுல் கஃபா பாகம்: 2 பக்கம் 4 இவ்வாறு நபி (ஸல்) […]

வாருங்கள் பரக்கத்தைப் பெறுவோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் யாருக்காவது அதிகமான செல்வத்தை வழங்கி விட்டால் அவனுக்கு பரகத் கிடைத்துவிட்டது என்று நம்மில் அதிகமானவர்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்; அதிகமான செல்வத்தை வழங்கினால் அது பரகத்தாக ஆகிவிடாது. பரகத் என்றால் ஒரு குறிப்பிட்ட […]

நன்மையையும் தீமையையும் தீர்மானிப்பது நம் கையிலே

நாம் வாழுகின்ற இந்த உலகத்திலே ஒரு மனிதனுக்கு பல விதமான சோதனைகள் வந்தடையும். அதில் நன்மையான காரியம் நடந்தாலும் தீமை நடந்தாலும் அது விதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாக இருந்தாலும் ஒரு தீமையான விஷயத்தை சந்தோஷமாக ஒரு நல்லதாக மாற்றக்கூடிய அதிகாரத்தை அல்லாஹ் நம் கரத்திலே வழங்கியுள்ளான். இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் […]

அழைப்புப்பணியின் அவசியம்

முன்னுரை அகிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் ஏக நாயன் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட ஓரே மார்க்கம் புனித இஸ்லாமிய மார்க்கம் ஒன்று  தான். முதல் மனிதரும் தூதருமான ஆதம் (அலை) தொடங்கி இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை இந்த பூமியில் மக்களை அழைத்தது இந்த சத்திய மார்க்கத்தை நோக்கித் தான். எல்லா இறைத்தூதர்களின் பிரதான பணியாக இந்த ஏகத்துவத்தின் பக்கம் மக்களை அழைக்கும் அழைப்புப்பணியே இருந்தது என்பதை இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான். ‘என்னைத் […]

விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”

உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது. இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன. முத்தமிடுவோர் தினம், நிர்வாணமாக இருப்போர் தினம், இறுகக் கட்டியணைப்போர் தினம், ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம், பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு […]

del-வந்த வழியில் திரும்பியோர்

மனிதனை இவ்வுலகில் படைத்து, பரிபாலனம் செய்து வரும் இறைவன் இஸ்லாம் என்ற இனிய மார்க்கத்தை மனிதர்களின் நேர்வழிக்காக வழங்கி அதன் படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றான். அந்த வகையில் யார் எல்லாம் இறைவனின் வார்த்தைகளையும், நபியவர்களின் வழிகாட்டல்களையும் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்கள் தான் வெற்றிபெற்றவர்கள் என்று இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றான். புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் இந்த மார்க்கம் யாரையும் நிர்பந்தம் செய்யும் வழிகாட்டல் அல்ல. மாறாக யார் மறுமையில் வெற்றி […]

முன்மாதிரி முஸ்லிம் இல்லம்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்மாதிரி முஸ்லிம் இல்லம் ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை […]

வறுமை ஒரு வரப்பிரசாதம்

”ஏழ்மை, வறுமை” போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால்  மிகவும் வெறுக்கப்படுகிறது. அனைவரும் நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழவேண்டும், நமக்கு எந்த சோதனைகளும் ஏற்படவே கூடாது என்றுதான் அனைவரும்  நினைக்கின்றனர். இன்றைக்கு உலகில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை அதிகமாக செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில்தான் செய்யப்படுகின்றன. இலஞ்ச லாவண்யங்களை வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கம் நீதிக்குப் புறம்பாக நடப்பதற்குக் காரணமும் நமக்கு வறுமை வந்து விடக்கூடாது, செல்வச் செழிப்பை பெருக்கிக் […]

18) ஷீஆக்களின் மறுபிரவேசம்

தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்), அலி (ரழி), பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது, அலி (ரழி) ஆவார்.’ (அய்யாஷி தப்ஸீர் பாகம்- 1  பக்கம்:128 நூருஸ்ஸகலைன் பாகம் – 1  பக்கம்: 238) இதில், நபியை விட அலியை உயர்த்துகின்றனர். ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில் ‘நபி (ஸல்) […]

17) ஷியாக்கள் குறித்து இந்த இணைய தளத்தில் உள்ள இதர விஷயங்கள்

ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. இது பற்றிக் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கூறினார்கள் என்று புகாரி, முஸ்லிமில் ஹதீஸ் உள்ளது. எனவே தான் ஆயிஷா (ரலி) அவர்களை வெறுக்கிறோம் என்று கூறுகின்றனர். இது பற்றி விளக்கவும். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான். நபி (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) ஸைனப் பின் ஜஹ்ஷ் […]

16) இறந்தவர் உயிர் திரும்புவாரா?

தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர்க்கும் இடையேயுள்ள விவகாரம் வாய்க்கால் வரப்பு தகராறல்ல! சொத்து பத்துத் தகராறல்ல! கொடுக்கல் வாங்கல் அல்ல! சுருக்கமாகச் சொன்னால் சொந்த விவகாரங்கள் அல்ல! பின்னர் என்ன? இறந்தவர்கள் திரும்ப வருவர்; மாண்டவர் மறு உயிர் பெற்று மீண்டு வருவர் என்று அவர்கள் நம்புகின்றனர். நாம் அதை மறுக்கிறோம். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இவ்வாறு நம்புவது இணை வைப்பு, இறை மறுப்பு என்று அடித்துச் சொல்கிறோம். இந்தக் கழிவுகெட்டக் கசடுக் கொள்கையின் […]

15) யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!

இரட்டை வேடம் போடும் உலமாக்கள் அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர். இதைக் கடந்த இதழில் பார்த்தோம். இந்த ஷியாக்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர். ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் ஷியாக்கள் கொண்டுள்ள அதே கொள்கையைத் தான் […]

14) மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்

ஷியாக்களின் நூலான அல்அன்வாருன் நுஃமானியா என்ற நூலில் இடம் பெற்ற இரண்டு செய்திகளைக் குறிப்பிட் டிருந்தோம். இந்த இரண்டு செய்திகளிலும், அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதுடன் நிற்காமல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அலீயை மிக அதிகமாக உயர்த்துகின்றனர் ஷியாக்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலீ (ரலி) அவர் களைப் பாராட்டுகின்ற விதம், வர்ணிக்கின்ற வர்ணனைகள் அனைத் தும், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்று பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளன. அது […]

13) ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்

ஓங்கிய வாள்! தாங்கிய ஜிப்ரீல்! கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண் வலியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நான் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நான் மாலை நேரம் வந்த […]

Next Page » « Previous Page