Author: Mukthiyaar Basha

மறுவுலக நம்பிக்கை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையையும் உள்ளத்தில் பதிய வைக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஓர் அறிவார்ந்த அறிவியல் […]

சிறு துளி! பெரு வெள்ளம்!

சிறு துளி! பெரு வெள்ளம்! இஸ்லாமிய மார்க்கம் உலகில் உள்ள அனைத்து மார்க்கத்தை விடவும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற அழகிய மார்க்கமாகும். ஏனெனில் அது அகில உலகத்தையும் படைத்து ஆளுகின்ற அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கமாகும். அதில் மனித சக்திக்கு உட்பட்ட பல கடமைகளும், உபரியான வணக்கங்களும் உள்ளன. எந்த அளவிற்கென்றால் சின்னச் சின்ன செயல்களுக்கெல்லாம் அதிக நன்மையைப் பெற்றுத் தரும் காரியங்களும் உள்ளன. அதில் ஒன்று தான் கொடுக்கும் தன்மை, அதாவது தர்மம் செய்தல் ஆகும். இந்தத் தர்மத்தின் சிறப்பைப் […]

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே!

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே! இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர். இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். அதனால் தான் தங்களுக்கு ஏதேனும் […]

நரகம் – ஒரு நேர்முகம்

சித்திரையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் கால கட்டம் முடிந்தும் கோர வெப்பத்தின் கொடிய தாக்கம் இன்னும் ஓயவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்கி சுருண்டு விட்டனர். தற்போது தான் சற்று வெப்பம் தணிந்து காற்று வீசத் துவங்கியுள்ளது என்றாலும் அவ்வப்போது 106, 107 டிகிரி என்ற கணக்கில் கொளுத்திக் கொண்டு தான் இருக்கின்றது. இங்கு இப்படி என்றால் வட மாநிலங்களில் வெயிலின் வெப்பப் பசிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை முன்னூற்று ஐம்பதைத் தொட்டு விட்டது. […]

உலகம் பிறந்தது எதற்காக?

திருமறைக் குர்ஆனையும், திருநபி வழிமுறையையும் கொள்கையாகக் கொண்ட நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ தீமையான காரியங்கள், இணை வைப்புக் காரியங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவற்றில் பல தீமைகளில் சமுதாயம் தீமையெனத் தெரிந்தே மூழ்கி இருக்கிறது. இதற்கு உதாரணமாக வட்டி, வரதட்சணை, சூதாட்டம், மது பானங்கள், சினிமா போன்றவற்றைக் கூறலாம். ஆனால் தீமை என்றே உணரப்படாமல், நன்மை என்ற பெயரில் பல்வேறு இணை வைப்புக் காரியங்கள் தலை விரித்தாடுகின்றன. அவற்றில் ஒன்று தான் ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் ஊருக்கு ஊர், வட்டத்திற்கு வட்டம் ஓதப்படுகின்ற மவ்லிதுகள் ஆகும். […]

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான். இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது […]

இஸ்திஃக்ஃபார்

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

06) பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவது பித்அத்தா?

இந்த கேள்வி மார்க்கம் பற்றிய அடிப்படை தெரியாததால் எழும் கேள்வியாகும். இதற்கான விடையறிய மார்க்கத்தின் அடிப்படையை அறிந்துக் கொள்ள வேண்டும். மார்க்கம் என்பது வஹியில் உள்ளவை மட்டுமே என்ற அடிப்படையை முன்னர் அறிந்தோம். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம் உலக பழக்க வழக்கங்களுக்கு மார்க்கம் ஒரு அனுமதியை நமக்கு தருகிறது. இதை பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் […]

05) பித்அத்கள் தோன்ற காரணமும், பித்அத்தின் விபரீதங்களும்

  இறை நேசமா? முன்னோர் பாசமா? மேலே குறிப்பிட்ட விஷயங்களையெல்லாம் நாம் கூறினால் சிலர், என்ன தான் இருந்தாலும் நமது முன்னோர்களுக்கு தெரியாதா? காலம் காலமாக செய்து வருவதை எப்படி விடுவது என்று கேட்பார்கள். இந்த கேள்விகள் சாதாரணமாக தெரியலாம். ஆனால் இது ஒருவரின் இறை நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் பாதகத்தை விளைவிக்கும். ஏனெனில், ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் அல்லாஹ்வையே அனைவரையும் விட அனைத்தையும் விட நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற […]

04) பித்அத்தான செயல்களை கண்டறியும் முறைகள்

இரண்டாம் வழி – முறையை மாற்றுதல் மார்க்கம் என்று செய்யப்படும் ஒரு காரியத்திற்கு மார்க்கத்தில் அடிப்படை ஆதாரமே இல்லையென்றால் அதை வைத்தே அது பித்அத் என்று அறிந்துக் கொள்ளலாம் என்பதை மேலே கண்டோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்ததற்கான காரணம், விதம், அளவு, காலம், இடம், வகை தெளிவுப்படுத்தப்பட்ட பிறகு இவற்றில் எந்த ஒன்றை நாம் மாற்றி அந்த காரணம் அல்லாத வேறு காரணத்திற்காகவோ அல்லது வேறு விதத்திலோ அல்லது வேறு அளவிலோ அல்லது […]

ஒரு வேளை தொழுகையில் கிடைக்கும் பல நன்மைகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெற்றோர்களை பேணுதல், ரமலான் மாதத்தில் நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல், […]

மரணமும் மறுமையும் -30

சொர்க்கம்-2 சொர்க்கவாசிகளின் பானம், உணவு, ஆடை, இருப்பிடம் அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுடன் “மதாயின்” (இராக்) நகரில் இருந்தபோது, அவர்கள் பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். அப்போது அவர்களிடம் (மஜூசி மதத்தவரான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரத்தில் பானம் கொண்டுவந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்து விட்டு (அங்கிருந்தவர்களிடம்) பின்வருமாறு கூறினார்கள்: நான் (ஏன் அவர்மீது வீசியெறிந்தேன் என்பதற்கான காரணத்தை) உங்களிடம் தெரிவிக்கிறேன். நான் […]

மரணமும் மறுமையும் -29

சொர்க்கம்-1 சொர்க்கத்தின் பெயர்கள் சொர்க்கம் என்பது ஒரே படித்தரம் உடையதன்று. மாறாக, சொர்க்கத்தில் பல படித்தரங்கள் உள்ளன. அது போல, சொர்க்கத்திற்கு பல பெயர்களும் உள்ளது. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. (அல்குர்ஆன்: 18:107) ➚ பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:1-11) ➚ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை […]

மரணமும் மறுமையும் -28

நரகம்-2 முன்னரே செய்த உடன்படிக்கை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணையை ஏற்படுத்துகின்றனர்; அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு உணவு வளத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான். அறி: அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) (முஸ்லிம்: 5402) ஆனால் இது இந்த துன்யாவில் மட்டும் […]

மரணமும் மறுமையும் -27

நரகம்-1 விதிப்படியே நடக்கும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­­) நூல் : முஸ்லி­ம்: 5160 அனைவருக்கும் சொர்க்கம் , நரகம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு இஸ்லாம் கூறும் பதில், ஆம். அனைவருக்கும் சொர்க்கம் நரகம் முடிவு செய்யப்பட்டு விட்டது. இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் […]

மரணமும் மறுமையும் -26

(பரிந்துரை மற்றும் பாலம்) பரிந்துரை பயன் தருமா? மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அறவே பரிந்துரை கிடையாது. நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு. இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும் தவறாகும். (அல்குர்ஆன்: 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43, 74:48) ➚ ஆகிய வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை […]

மரணமும் மறுமையும் -25

(ஒவ்வொருவராக தீர்ப்பளிக்கப்படுதல்) வெளிப்படுத்தப்படும் ஏடு اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏ வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன்: 50:17-18) ➚ وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖ‌ؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا‏ ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது […]

மரணமும் மறுமையும் -24

(விசாரணையின் தொடர்ச்சி) சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள் அந்த நாளில் அனைத்து ஆட்சியும், அதிகாரமும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும். நினைத்ததை எல்லாம் அவனால் செய்ய முடியும். அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும், அனைத்து மனிதர்களும் தனக்கு வழங்கப்படும் நீதி உண்மையில் நீதிதான் என்று அறிந்து கொள்ளும் விதமாக அன்றைய தினம் விசாரணை இருக்கும். அதற்காக அல்லாஹ் சாட்சிகளை கொண்டு வருவான். நல்லவர்களுக்கு ஆதரவாகவும் கெட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சிகள் நிறைந்திருப்பது என்பது மறுமை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். […]

மரணமும் மறுமையும் -23

(விசாரணை ஆரம்பம்) உலகில் செய்தவற்றுக்கு மறுமையில் விசாரணை உண்டு وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். (அல்குர்ஆன்: 14:21) ➚ فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம். (அல்குர்ஆன்: 15:92-93) ➚ அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்: وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ ‘உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த […]

மரணமும் மறுமையும் -22

(ஹவ்ளுல் கவ்ஸர்) மறுமையின் கடுமையான வெயிலின், வெப்பத்தின், வியர்வையின் நடுவே இறைவனின் அர்ஷின் நிழலில்  சிலருக்கு அல்லாஹ் இடமளிப்பான் என்பதனை கடந்த உரையிலே பார்த்தாம். அது போன்ற இன்னொரு நிம்மதி ஹவ்லுல் கவ்ஸர் என்ற நீர்த்தடாகம். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான நாள் மறுமையில் ஒரு நாள் என்பது இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமாகும். تَعْرُجُ الْمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوْحُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍ‌ۚ‏  فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا‏ اِنَّهُمْ يَرَوْنَهٗ […]

மரணமும் மறுமையும் -21

(மஹ்ஷரில் மனிதர்களின் நிலை-2) மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் இறைவன் நிற்பார்கள். சூரியன் தலைக்கு அருகில் கொண்டு வரப்படும். கடுமையான வியர்வையில் மனிதர்கள் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பார்கள், மனிதர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் கொண்டு வரப்படுவார்கள், போன்ற தகவல்களை கடந்த உரையிலே பார்த்தோம். அதில் மீதம் உள்ள சில தகவல்களையும், சொர்க்கம் அல்லது நரகம் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், மஹ்ஷரில் சில கூட்டத்தாருக்கு வேதனை தரப்படும். அது தொடர்பான செய்திகளை இந்த உரையில் பார்ப்போம். பிறரது சொத்தை அபகரித்தவர் أَنَّ […]

மரணமும் மறுமையும் -20

(மஹ்ஷரில் மனிதர்களின் நிலை-1) கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம். ஒன்றுத் திரட்டப்படும் இடம் يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ‌ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள். (அல்குர்ஆன்: 14:48) ➚ உலக அழிவுக்குப் பிறகு […]

மரணமும் மறுமையும் -19

(உயிர்ப்பித்து எழுப்புதல்) உயிர்ப்பித்தலை ஈமான் கொள்ளுதல், மறுத்தல் ஒருவர் உயிர்ப்பித்தலை மறுத்தால் அவர் அல்லாஹ்வே இல்லை என்று கூறியதற்கு சமம். அல்லாஹ்வை பொய்ப்பிப்பதற்கு சமம். என்று அல்லாஹ் கூறுகிறான். قَالَ اللَّهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ فَقَوْلُهُ: لَنْ يُعِيدَنِي، كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الخَلْقِ بِأَهْوَنَ عَلَيَّ مِنْ إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ فَقَوْلُهُ: اتَّخَذَ […]

மரணமும் மறுமையும் -18

உலக அழிவு, ஸூர், கியாமத் நிகழ்வு மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் மரணிக்கச் செய்வதற்காக இறுதிநாளில் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி முதலாவது சூரை ஊதுவதற்கு கட்டளையிடுவான். முதலாவது சூர் ஊதப்படும் போது அல்லாஹ் படைத்த அனைத்தும் அழிந்துவிடும். அவன் நாடியவர்களை தவிர. உலகம் அழிக்கப்படும் இறுதி நேரம் எக்காளம் ஊதப்படுவதற்கு முன்னால் உள்ள, இறுதி நேரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். எந்த அளவுக்கு என்றால் ஒரு தாய், கடுமையான தூக்கத்தில் இருக்கும் இரவு நேரத்தில் தன் […]

மரணமும் மறுமையும் -17

உலக அழிவு மற்றும் கியாமத் நாள் இறுதி நாளையும் நம்பாவிட்டால் வெற்றி இல்லை இறை நம்பிக்கையின் 6 முக்கிய அம்சங்களில் மறுமை நாளை நம்புவதும் ஒன்று. ஒருவர் இவ்வுலகத்தில் அல்லாஹ்வை வணங்கி, தொழுது, நோன்பு வைத்து ஜகாத் கொடுத்து ஹஜ் செய்து ஏராளமான நன்மைகளை செய்து விட்டு நான், ”மறுமை நாளை நம்பவில்லை” என்று கூறினால் மறுமையிலே அவர் நஷ்டவாளியாக தான் இருப்பார். ஏனென்றால் அல்லாஹ் தனது திருமறையில் தன்னை நம்புவதற்கு அடுத்தபடியாக இறுதி நாளை நம்புவதை […]

மரணமும் மறுமையும் -16

மரணத்திற்கு முன் செய்ய மறந்தவை கப்ரில் நல்ல நிலையை அடைவதற்கு ஏராளமான நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கடந்த உரையிலே பார்த்தோம். ஆனால் நாம் எவ்வளவு கவனமாக பல நற்காரியங்களை செய்தாலும் நம்மையும் அறியாமல் சில தீமைகள் சில பாவங்கள் நமக்கு மிகப்பெரும் சோதனையாக வந்து அமைந்து விடும். எனவே அதில் இருந்து ஒரு மனிதனை பாதுகாத்துக் கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் நமக்கு சில வழிமுறைகளை கற்றுத் தருகிறார்கள் மிகப்பெரிய அளவிலே நன்மைகளை செய்ய முடியாவிட்டாலும், நபி […]

மரணமும் மறுமையும் -15

கப்ரில் நல்லவர்களின் நிலை-2 இருள் அகற்றப்பட்டு ஒளி பாய்ச்சப்படும் பொதுவாக மண்ணறைகளில் இருள் சூழ்ந்திருக்கும். நல்லவர்களின் மண்ணறைகளில் இருள் அகற்றப்பட்டு தேவையான ஒளி கொடுக்கப்படும். எனவே நல்லவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வைக் கழிப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த ‘பெண்’ அல்லது ‘இளைஞர்’ ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘அவர் இறந்து விட்டார்’ என மக்கள் […]

மரணமும் மறுமையும் -14

கப்ரில் நல்லவர்களின் நிலை-1 சந்தோஷமான செய்தி கூறப்படும் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். மரணம் எப்போதும் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வாறு வருவதற்கு முன் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மரணத்தருவாயில் இருந்து நடக்கும் நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் மிக அழகிய முறையில் விளக்கியுள்ளார்கள். நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் […]

மரணமும் மறுமையும் -13

தீயவா்களின் கப்ர் வாழ்க்கை-3 மண்ணறை தண்டனைக்கான காரணங்கள் உயிருடன் இருக்கும் போது செய்த பாவங்களுக்காக மண்ணறையில் தண்டனை தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பாவமான காரியங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாவங்களை மன்னித்து அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் முடிந்த அளவு பாவமான காரியங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் புரிந்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டிட வேண்டும். உலகில் புரிந்த குற்றங்களுக்கு மண்ணறையில் வேதனை தரப்படுவதாக […]

மரணமும் மறுமையும் -12

தீயவா்களின் கப்ர் வாழ்க்கை 2 நரகம் காட்டப்பட்டு அச்சுறுத்தப்படுவான் மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் அவனுடைய கண்ணிற்கு முன்னால் நரகம் கொண்டு வந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். அவன் செல்லவிருக்கும் நரகத்தைப் பார்த்து பயந்து கொண்டே நிம்மதியின்றி மண்ணறை வாழ்கையை அனுபவிப்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ’உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், […]

மரணமும் மறுமையும் -11

தீயவர்களின் கப்ர் வாழ்க்கை-1  கப்ர் வேதனை இந்த சமுதாயத்திற்கும் உண்டு அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு “யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம்: 5504) دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي امْرَأَةٌ مِنَ الْيَهُودِ، وَهِيَ تَقُولُ […]

மரணமும் மறுமையும் -10

மரண வீட்டில், கப்ரில் நடக்கும் கூத்துக்கள்! இன்னாலில்லாஹ் என்று கூறுதல்  ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்  என்பது இதன் பொருள். ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் […]

மரணமும் மறுமையும் -09

மரண நேரமும் மவுத் சோறும் கண்கள் நிலைகுத்தும் ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் ‎காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட ‎வேண்டும்.‎ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ فَأَغْمَضَهُ ثُمَّ قَالَ « إِنَّ الرُّوحَ ‏إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ ». فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ فَقَالَ « لاَ تَدْعُوا عَلَى […]

மரணமும் மறுமையும் -08

இறுதி நேரம் – மரணத் தருவாய் இறுதி நேரத்தில் நம் சிந்தனை, செயல்பாடுகள், எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. இறுதி நேர சிந்தனையே முக்கியம் يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும் போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்’’ என்று கூறியதை நான் கேட்டேன். அறி: ஜாபிர் (ரலி),(முஸ்லிம்: 5518) இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا […]

மரணமும் மறுமையும் – 07

மரண வேளையில் சைத்தானின் ஊசலாட்டம் இறைவனுக்கு இணை வைக்கும் படி தூண்டுவான். மனிதனை நரகத்திற்கு கொண்டு செல்வதற்கு இறுதி வாய்ப்பாக இருக்கிற மரண நேரத்தை சைத்தான் தன்னால் முடிந்தவரை பயன்படுத்துவான். அதில் சிக்கி ஏமார்ந்து நம்முடைய மறுமை வாழ்க்கையை நாம் நாசமாக்கி விடக்கூடாது. இறைதூதர் முன்னிலையிலேயே இவ்வாறு நடந்துள்ளது! أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ […]

மரணமும் மறுமையும் -06

(பல்வகை மரணங்கள்) தவணை வந்து விட்டால் ‎அவகாசம் இல்லை وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ‌ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு ‎வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். ‎பிந்தவும் மாட்டார்கள்.‎ (அல்குர்ஆன்: 7:34) ➚‎ وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் ‎அவகாசம் அளிக்க […]

மரணமும் மறுமையும் – 05

(அல்லாஹ்வே நித்திய ஜீவன், நபியின் மரணம்) அல்லாஹ்வே நித்திய ஜீவன் எவ்வளவு தற்காப்பு மேற்கொண்டாலும், கவனமாக இருந்தாலும், மரணம் நிகழ்கிறது. மரணத்தை எதிர்கொள்ளாத எவரும் இல்லை. அல்லாஹ் மடடுமே நித்திய ஜீவன். اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُؕ‏ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (அல்குர்ஆன்: 3:2) اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ لَهٗ مَا فِى […]

மரணமும் மறுமையும் – 04

மவுத்தை மறந்த மனிதன் மவுத்தை உள்ளத்தால் ஏற்று செயலால் மறுக்கும் மனிதன் உலகில் எந்த விசயத்திலும் கருத்து வேறுபாடுகள், இரு வேறு கருத்துக்கள் இருக்கும். ஆனால் மரணம் நிகழும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. மரணத்தை நம் உள்ளத்தால் அனைவரும் ஒத்துக் கொண்டாலும் நம் செயல்பாடுகள் மரணம் இருக்கிறது என்று எண்ணக்கூடியவருடைய செயல்பாடுகள் போன்று இல்லை. உலகத்தைப் பற்றிய மோகமும் ஆசையும் இருக்கலாம் தவறில்லை. ஆனால் அது நம்முடைய மறுமையை, நமக்கு மரணம் வரும் […]

மரணமும் மறுமையும் – 03

உலகின் இன்பங்கள் நிரந்தரமானது இல்லை உலக வாழ்க்கை அற்பமானது இவ்வுலக வாழ்க்கையில் 24 மணி நேரமும் மறுமைக்கான தயாரிப்புகளையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று மார்க்கம் நமக்கு கட்டளையிடவில்லை, இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதை அல்லாஹ்வோ, அவன் தூதரோ தடை செய்யவில்லை என்பதனையும் கடந்த உரையிலே பார்த்தோம். அதே நேரம், எல்லை மீறி இவ்வுலக இன்பத்திலே அதிகமான நேரத்தையும், பொருளாதாரத்தையும், நம் முயற்சிகளை செலவிட்டால், அது ஒரு மனிதனின் மறுமை வாழக்கையை கேள்விக்குறியாக ஆக்கிவிடும், என்பதில் எந்த சந்தேகமும் […]

மரணமும் மறுமையும் – 02

இம்மை மறுமைக்கே இந்த உலகம் இவ்வுலகம் மறுமைக்கு மட்டும் உரியதா? மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கைக்காக இந்த உலகில் நல்லறங்களை செய்ய வேண்டும் என்று போதிக்கும் இஸ்லாம் மார்க்கம், அதற்காக 24 மணிநேரமும் மறுமைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு கட்டளையிடவில்லை. மார்க்கம் கடமையாக்கிய செயல்களை செய்து முடித்த பிறகு ஒருவர் தனது நேரத்தை மார்க்கம் தடுக்காத எந்த வகையிலும் செலவழிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. நாள் முழுவதும் மறுமை சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் தான் […]

மரணமும் மறுமையும் – 01

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த தொடர் உரையில்… மரணமும் மறுமையும் என்ற இந்த தொடர் உரையில் மரணத்தை பற்றிய சிந்தனையின் அவசியம் மரண நேரத்தில் மனிதனின் நிலை மரண நேரத்தில் சைத்தானின் ஊசலாட்டம் மரண நேரத்தில் செய்ய வேண்டிய தவிர்க்க வேண்டிய செயல்கள் அதற்குபின் கப்ரில் நடக்கும் விஷயங்கள் […]

9) இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு

9) இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகமான இமாம்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்த ஒரு துறை உண்டு என்றால் அது ஹதீஸ் துறைதான். அந்த அளவுக்கு அத்துறை அந்த இமாம்களின் வாழ்நாள் சேவையைத் தன்பால் ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதை (பிறருக்கு) எடுத்துரையுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது தான். (புகாரி: 3461) அதற்காகத் தான் நபித்தோழர்கள் முதல் ஹதீஸ்களை நூல்களில் பதிவு செய்த புகாரி, […]

8) கணிணி மென்பொருள் வரை…ஹதீஸ்துறை கண்ட வளர்ச்சி

8) கணிணி மென்பொருள் வரை, ஹதீஸ்துறை கண்ட வளர்ச்சி இன்று நாம் குர்ஆனை மனனம் செய்தவரை  ஹாபிழ் என்று அழைக்கின்றோம். ஆனால் அன்று ஹாஃபிழ் என்று அழைக்கப்பட்டவர் குர்ஆனை மட்டுமின்றி இலட்சக்கனக்கான ஹதீஸ்கள், அந்த ஹதீஸ்களை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்கள், அவர்களது குறை நிறைகள் போன்ற அனைத்தையும் மனனம் செய்திருந்தார்கள். அந்த அளவுக்கு அபார மனனத்தன்மையை அன்றைய காலத்து முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அளித்திருந்தான். இதற்கு காரணம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் பிந்தைய தலைமுறைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! ஒருபக்கம் […]

7) ஹதீஸ்கலை

7) ஹதீஸ்கலை கருத்தைக் கவனித்து ஹதீஸ்கள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படும் என்பதை ஹதீஸ்கலை அறிஞர்கள் பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவை பற்றிய விளக்கங்களைக் காண்போம். ஷாத் ஹதீஸ் கலையில் “ஷாத்” என்ற ஒரு விதியிருக்கிறது. அதாவது, ஒரு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி, அவரைவிட நம்பகமான  ஒரு அறிவிப்பாளரோ அல்லது பலரோ அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அந்தச் செய்தி ஷாத் எனப்படும். நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட நம்பகத்தன்மையில் சற்று வலுவான ஒருவருக்கோ அல்லது ஒரு […]

6 ) நாஸிஹ் – மன்ஸூஹ் அறிவதன் முக்கியத்துவம்

நாஸிஹ் மன்ஸூஹ் பற்றி அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனென்றால், இதை ஒருவர் சரியான முறையில் அறியவில்லையென்றால் ஏராளமான மார்க்கச் சட்டங்களை அவர் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். மது பற்றிய மன்ஸூஹான வசனத்தை மாத்திரம் ஒருவர் படித்தால் மது ஹலாலானது என்ற அபத்தமான முடிவை எடுதுது விடுவார். மன்ஸூஹான மாற்றப்பட்ட சட்டங்களை ஓரிரு நபித்தோழர்கள் கூட அறியாமல் இருந்தார்கள் என்பதைச் சில ஹதீஸ்களின் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம். இதற்கு இப்னு மஸ்வூத்(ரலி) […]

5) நாஸிஹ், மன்ஸூஹ்

நாஸிஹ், மன்ஸூஹ் ; புதிய சட்டம் – பழைய சட்டம் இறைவன் மனிதர்களைப் படைத்து வெறுமனே விட்டுவிடாமல் அவர்கள் இந்த உலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்குரிய வாழ்வியல் சட்டங்களை அளித்துள்ளான். அவ்வாறு சட்டங்களை அளிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பின்னர் அவன் அதை மாற்றி விடுவான்.  அதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் கூறுகிறான்: ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்குச் […]

4) ஹதீஸ்களின் வகைகள்

அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது) கபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி) முதவாதிர் (அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும் பலர் ஒருமித்து அறிவிப்பது) ஒரு செய்தியை ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். தாபியீன்களிலும் ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். தபவுத் தாபியீன்களிலும் அதேபோன்று பலர் அறிவிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஏராளமானவர்கள் அறிவித்துள்ளார்கள் எனில் இத்தகைய செய்திகளை ஹதீஸ் கலையில் முதவாதிர் என்று சொல்லப்படும். இந்தத் தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் குறைவாகவே உள்ளன. உதாரணம்: […]

3) ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு

3) ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு இஸ்லாத்தின் அடிப்படை வஹீ என்னும் இறைச்செய்தி ஆகும். இறைச் செய்திகள் என்பது திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகத்தின் மார்க்கம் தொடர்பான வழிகாட்டுதல்கள் மட்டுமே! திருமறைக் குர்ஆன், நபியின் வழிகாட்டுதல்கள் இரண்டுமே இறைச் செய்தி என்றாலும் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மட்டுமே எழுதுமாறு கட்டளையிட்டார்கள். நபியவர்களின் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாலும் அவற்றை எழுதுமாறு வலியுறுத்தவில்லை. இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம். அபூசயீத் […]

2) அமலுக்கு வந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்

ஹதீஸ் என்ற பெயரில் யாரும் எதையும் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய், இந்தச் செய்தி எந்த நூலில் வருகின்றது? எந்த பாகத்தில் வருகின்றது? ஹதீஸ் எண் என்ன? அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் மக்கள் கேள்வி கேக்கும் நிலை தவ்ஹீத் புரட்சியினால் உருவானது. இந்த ஹதீஸ் புரட்சிக்கு வித்திட்டது தவ்ஹீது ஜமாஅத் தான் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். அமலுக்கு வந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்! தவ்ஹீத் […]

1) முன்னுரை

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எத்தனையோ பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிரிகள் சாட்டியிருக்கின்றனர். அந்த வரிசையில் இதுவும் ஒன்றுதான் என்றாலும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஹதீஸ் பற்றிய உறுதியான நிலைபாடு உண்டு! பிடிமானம் உண்டு! அதைச் சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற கடமை இருக்கின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை அல்லாஹ்வின் வஹீயாகவே நம்புகின்றது! ஏனென்றால் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான். அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியே தவிர வேறில்லை. […]

Next Page » « Previous Page