யூதர்களும் கிறித்தவர்களும் தத்தமது பங்கிற்கு, தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களில் திணிக்க வேண்டியதைத் திணித்தும், தணிக்கை செய்ய வேண்டியதைத் தணிக்கை செய்தும் கொண்டனர். ஆனால் அவர்களது அத்தனை திருகுதாளங்களையும் தில்லுமுல்லுகளையும் தாண்டி, அவர்களது கத்தரிக்கோல்களையும் கடந்து “அல்லாஹ்’ என்ற வார்த்தை பைபிளில் மட்டுமல்ல! அவர்களது அன்றாட ஜெபங்களிலும் பிரச்சாரத்திலும் பிரார்த்தனையிலும் ஆழமான, அழுத்தமான ஓர் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இப்போது அவர்களுக்கு முன்னால் இருப்பது இரண்டே இரண்டு வழிமுறைகள் தான். ஒன்று, அல்லாஹ் என்ற வார்த்தையை இவர்கள் தவிர்க்க வேண்டும். […]
Author: Mukthiyaar Basha
03) கொள்கை, கோட்பாடுகள்
உலகத்தின் மதம் தொடர்பான சொல்லியலில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய பாணியில், அவனுக்கே உரிய சொல் வழக்கில் வானம், பூமியின் ரட்சகனைக் குறிப்பதற்காக அழகிய பெயர்களை வழங்கியிருக்கிறார்கள். ஜுலு இனத்தின் கடவுள் கொள்கை தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற ஜுலு இன மக்கள் உடல் வலிமை மிக்கவர்கள்; போர்க் குணம் கொண்டவர்கள்; அறியாமைக் காலத்திலும் அல்லாஹ்வைத் தெரிந்து வைத்திருந்த குறைஷி சமுதாயத்தைப் போன்றவர்கள். அவர்கள் எல்லாம் வல்ல இறைவனுக்கு UMVELINQANGI என்ற பெயரை வழங்கியிருக்கிறார்கள். இந்த வார்த்தை அதனுடைய […]
02) அவன் பெயர் என்ன?
“அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக! (அல்குர்ஆன்: 17:110) ➚ பொதுக் கடவுள் கொள்கை அஹ்மத் தீதாத் கூறுகின்றார்: முஹம்மத் (ஸல்) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இயற்கையான அடுத்த வாரிசு என்ற தலைப்பின் கீழ் நான் ஆற்றிய உரைக்குப் பின்னால் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது […]
01) அல்லலூயாவின் அர்த்தம் என்ன?
இன்று உலகில் சுமார் 120 கோடி கிறித்தவர்கள் பைபிளை வேதமாக நம்பி அதன்படிச் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் நம்புகின்ற அந்த வேதம், இன்றைய நிலையில் அது உண்மையான இறை வேதமா என்று அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர். ஒரு நூலை வேதம் என்று நம்ப வேண்டுமென்றால், அது இறை வாக்கு என்று ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் அவ்வேதத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதக் கூடாது; முரண்படக்கூடாது. இது தான் வேதத்தின் முழு முதல் இலக்கணம். அது […]
05) இறைவனைக் காண முடியுமா?
இதுவரை, அல்லாஹ்வுக்கு முகம் இருக்கின்றது; கண்கள் இருக்கின்றன; காதுகள் இருக்கின்றன; கைகள் இருக்கின்றன; கால்கள் இருக்கின்றன; அதனால் ஏகனான அவனுக்கென்று திருவுருவம் இருக்கின்றது. அவன் தகுதிக்கேற்ப அர்ஷில் அமர்ந்திருக்கின்றான். அவன் ஒரு போதும் அடியானுடன் ஒன்றாக மாட்டான். அடியானும் அல்லாஹ்வுடன் கலக்க முடியாது போன்ற விபரங்களைப் பார்த்தோம். இத்தகைய தன்மைகளைக் கொண்ட அல்லாஹ்வை நாம் பார்க்க முடியுமா? எங்கு பார்க்கலாம்? நிச்சயமாக மறுமையில் தான் அவனைப் பார்க்க முடியும். இதை நாம் குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் […]
04) அர்ஷில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (அல்குர்ஆன்: 7:54) ➚ உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். […]
03) வல்லவன் வானத்தில் இருக்கிறான்
இப்படி ஓர் அழகிய உருவமிக்க அல்லாஹ் எங்கே இருக்கிறான்? வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதைப் அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன்: 67:16) ➚, 17 (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது […]
02) இறைவனின் திருவுருவம்
பொதுவாக எல்லா மொழிகளிலும் உறுப்புக்களைப் பற்றி பேசும் போது அது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் நேரடியான பொருள் அல்லாத வேறு கருத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு. “தலை வலிக்கிறது’ என்று கூறினால் “தலை’ என்ற வார்த்தை தலை என்ற நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம். ஆனால் தலைக்கனம் பிடித்தவன் என்று கூறும் போது கர்வம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம். பயன்படுத்தப்படும் இடத்தையும், அதனுடன் இணைத்துக் கூறப்படும் சொற்களையும் கவனத்தில் கொண்டு […]
01) முன்னுரை
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்; உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர். இது நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகள் தமிழக முஸ்லிம்களின் கடவுள் கொள்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள், “அல்லாஹ்வுக்கு உருவமில்லை’ என்ற நம்பிக்கையில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கிறார்கள். அரபி மதரஸாக்களில் படிக்கின்ற ஆலிம்களிடமும் இந்தச் சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை. அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று இந்த ஆலிம்களும் முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருப்பதால், “அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது’ என்பதற்குக் குர்ஆன் ஹதீஸில் […]
09) பைபிளில் ஐம்பதாயிரம் பிழைகள்
ஓர் இளைஞர் பைபிளை, அதில் தவறே இருக்காது என்று எண்ணி வாங்கினார். ஒருநாள் “லுக்’ என்ற பழைய மாத இதழைப் பார்த்துக் கொண்டிருக்கையில், “பைபிளைப் பற்றிய உண்மை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அவரது பார்வையில் பட்டது. “புராட்டஸ்டண்ட், கத்தோலிக்கர்கள் படிக்கின்ற புதிய ஏற்பாட்டின் இரண்டு மொழியாக்கங்களில் குறைந்தது 20,000 பிழைகள் உள்ளன என்று 1720ஆம் ஆண்டு வாக்கில் ஓர் ஆங்கில அதிகாரக் குழுமம் மதிப்பிட்டுள்ளது. புது மாணவர்கள் சுமார் 50,000 பிழைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்” […]
08) அல்லாஹ்வின் பெயரை நீக்கிய ஆசிரியர் குழு
Scofield Reference Bible – ஸ்காஃபீல்ட் பைபிள் விபரக் குறிப்பு! இந்த பைபிளில் ELAH என்ற வார்த்தையை ALAH அதாவது ஒரு ALLAH என்பதில் ஒரு L-ஐ நீக்கி விட்டு வாசிப்பது என்று அதன் ஆசிரியர் குழு முடிவு செய்கின்றது. இந்த ஆசிரியர் குழு எட்டு பேர்களைக் கொண்டது. இக்குழுவின் தலைவர் ரெவரென்ட் சி.ஐ. ஸ்காஃபீல்ட் டி.டி. ஆவார். “கடவுளின் பெயர் அல்லாஹ் என்று இவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அதை அப்படியே வாசிப்பதை விட்டு விட்டு […]
07) ஆங்கிலத்தில் வரும் அக்கார்டிங் டூ
சாதாரண ஆங்கிலம் படித்தவர்களுக்குக் கூட According Toஎன்றால் என்ன என்று புரியும். பத்திரிகைகளில் பத்திக்குப் பத்தி இந்த வார்த்தை இடம் பெறும். நமது நிருபர் அளித்த தகவலின்படி, முதல்வரின் உதவியாளர் தெரிவித்தபடி, கல்வி இயக்குனரின் அறிவிப்புப்படி என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. சேலத்தில் நடைபெற்ற கலவரத்தில் 10 பேர் பலி என்று மாவட்ட ஆட்சித் தலைவரை மேற்கோள் காட்டி, பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தால் நாம் என்ன விளங்கிக் கொள்வோம்? தனக்குக் கிடைத்த தகவலை, தனக்கு வந்த […]
06) தடுமாறும் தலைமுறைப் பட்டியல்
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அழிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16 பைபிளின் இந்த வசனத்தின்படி, ஏசு கடவுள் பெற்ற பிள்ளை! ஒரு பக்கம் ஏசுவைக் கடவுளின் குமாரர் என்று சொல்லி விட்டு, மறுபக்கம் ஜோசப்பின் குமாரர் என்று குறிப்பிடுகின்றனர். ஏசு தான் கடவுளின் ஒரே பிள்ளை ஆயிற்றே! அவருக்கு ஏன் ஜோசப் என்ற தந்தை? தலைமுறை? என்று […]
05) நகைப்பிற்குரிய வாக்குமூலம்
“இன்றைக்கு நாம் படிக்கும் இந்த பைபிள் பற்பல பிரதி எடுப்பவர்களின் கைவண்ணமாகும். அவர்கள் பல்வேறு எடுத்துக் காட்டுகளில் தங்கள் மொழி பெயர்ப்புப் பணியை மிகத் துல்லியமாகச் செய்திருக்கிறார்கள். ஆனால் பிரதி எடுப்பவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்!” அருளப்பட்ட இறைச் செய்தியின் மூலத்திலிருந்து நகல் எடுக்கும் போது மனிதத் தன்மை உள்ளே நுழைந்து விடுகின்றது. இன்று வரை மூல மொழியில் உள்ள ஆயிரக்கணக்கான நகல்கள் சரியான பிரதிகள் அல்ல! இதன் விளைவு இரண்டு பிரதிகளில் ஒன்றுடன் ஒன்று ஒத்ததாக […]
04) இறை வேதத்தின் நோக்கங்கள்
வேதம் என்று சொல்கின்ற போது அதற்கென்று சில நோக்கங்கள் இருக்க வேண்டும் என்று பைபிள் கூறுகின்றது. அந்த நோக்கங்கள் என்ன? மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. திமாத்தியூ 3:16 ஒரு கொள்கையைப் போதிக்க வேண்டும். தவறுக்காக நம்மைக் கண்டிக்க வேண்டும். நம்மைத் திருத்த வேண்டும். நமக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டும். இதைத் தாண்டி வேறு நோக்கங்கள் இல்லை என்று சொல்லி விடலாம். பைபிள் […]
03) பைபிளைப் பற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு
கத்தோலிக்கராக இருக்கட்டும்! அல்லது புராட்டஸ்டன்ட்டாக இருக்கட்டும். நம்மிடம் வருகின்ற கிறித்தவ அழைப்பாளர் முதலில் முடிவு செய்து விட்டுத் தான் வருவார். அந்த முடிவு என்ன? நாம் அழைக்கும் இந்த நபர் பைபிளை இறுதி வேதமாகக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார் என்பது தான் அந்த முடிவு! வரக் கூடிய அவர்களிடம் நாம் செய்ய வேண்டிய பணி, ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும் பைபிள் வசனங்களை அவர்களிடம் எடுத்துக் காட்ட வேண்டும். அல்லது பைபிள் வசனங்களுக்கு அவர்கள் கூறும் விளக்கங்களை எதிர்த்து […]
02) முரண்பாடுகளின் மொத்த உருவமே பைபிள்
ஒரு வேதம் மனிதச் சொல்லா? அல்லது புனிதச் சொல்லா என்பதற்குரிய மிகத் துல்லியமான அளவுகோலை(அல்குர்ஆன்: 4:82) ➚வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டு விட்டான். அந்த அடிப்படையில் பைபிள் இறை வேதமா என்று பரிசீலனைக்கு உட்படுத்திப் பார்ப்போம். முரண்பாடு: 1 கணக்கெடுக்கச் சொன்னது யார்? கடவுளா? ஷைத்தானா? 1 மீண்டும் இஸ்ரயேல் மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், “புறப்பட்டுப் போய், இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்” என்று தூண்டிவிட்டார். 2 அரசர் […]
01) முன்னுரை
ஒரு வேதம் என்றால் அதற்கென்று சில அடிப்படை இலக்கணங்கள் இருக்க வேண்டும்; வரையறைகளை அது கொண்டிருக்க வேண்டும். அவை என்ன? அதில் முரண்பாடு இருக்கக் கூடாது. அது கூறும் முன்னறிவிப்புக்கள் பொய்க்கக் கூடாது; மெய்க்க வேண்டும். தான் ஒரு இறைவேதம் என்பதற்கான சான்றுகளை, அற்புதங்களை அது தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். அந்த வேதம் கூறும் கருத்துக்கள் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரண்படக் கூடாது. இது போன்ற அடிப்படை இலக்கணங்களுக்கு உட்படவில்லை என்றால் அது புனித வேதமல்ல! மனித […]
அல்குர்ஆன் விடுக்கும் அறைகூவல்
இதோ ரமளான் மாதம் வந்து விட்டது. இந்த ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறங்கியது. அந்த மாதத்தில் இறங்கியதால் தன்னை நம்பிய மக்களை இந்தத் திருக்குர்ஆன் நோன்பு நோற்கச் சொல்கிறது. அதிகாலை 4 மணியிலிருந்து அந்தி மாலை 6 மணி வரை உணவு சாப்பிடாமல், தண்ணீர் அருந்தாமல், கணவன் மனைவியர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருக்கச் செய்கின்றது. இதன் மூலம் அது அவர்களுக்கு உணர்த்துகின்ற பாடம் என்ன? தாகம் ஏற்படுகின்றது; ஆனால் ஒரு முஸ்லிம் தண்ணீர் அருந்துவதில்லை. பசிக்கின்றது; […]
இறைநம்பிக்கை ஏற்படுத்தும் மாற்றங்கள்
சட்டத்தின் கண்கள் சாட்சிகள் எல்லாவற்றையும் சட்டத்தின் மூலம் சாதித்து விடலாம் என்று இஸ்லாம் நம்பவில்லை. ஏனெனில் சட்டத்திற்கென்று சில குறைபாடுகள் உள்ளன. சட்டத்திற்குச் சாட்சிகள் என்ற இரு கண்கள் தேவை! சாட்சிகள் இல்லாமல் சட்டம் செயல்படாது. அதனால் இஸ்லாம் மனிதர்களின் உள்ளத்தைத் தான் முதலில் சரி செய்கின்றது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கின்றார்கள். உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் […]
உலக அமைதிக்கு ஒரே வழி இஸ்லாம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத் தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு […]
குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருள்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையைப் படித்தவர்களும், படிக்காத பாமரர்களும் அறிந்தே […]
டி.வி.யை மூடுங்கள்! திருக்குர்ஆனைத் திறங்கள்!
ஒரு அன்னியப் பெண்ணை, அவள் அரைகுறை ஆடையுடன் இருக்கும் நிலையில் நேரில் பார்ப்பது எப்படிக் கூடாதோ அதுபோன்று தான் டி.வி.யில் பார்ப்பதும் கூடாது. ஆனால் இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கும் நமது சமுதாய மக்கள், அதில் வரும் அரை நிர்வாணப் பெண்களை அல்ல! முழு நிர்வாணப் பெண்களைப் பார்த்து ரசிக்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் போல் கண்களால், காதுகளால் விபச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இன உறுப்பு தான் அந்த […]
தொற்று நோய்கள் பார்வையும் பாதுகாப்பும்
காட்டுத் தீயை விட அதைப் பரப்பும் காற்றை விட மிக வேகமாகப் பரவி வருகின்ற காய்ச்சல்கள் தான் பன்றிக் காய்ச்சல் பறவைக் காய்ச்சல்கள். இதற்குப் பலர் பலியாகி வருகின்றனர். தமிழகத்தில் சிக்குன் குனியா டெங்கு ஃபுளு போன்ற காய்ச்சல்களும் ஒரு விதமான மர்மக் காய்ச்சலும் பரவி வருகின்றது. தொற்று நோய் – இஸ்லாமியப் பார்வை தொற்று நோயில் ஒரு முஸ்லிமின் பார்வை எப்படியிருக்க வேண்டும்? பறவைக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் […]
இஸ்லாம் சமூக நலன் காக்கும் சுமூக மார்க்கம்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் என்றாலே அது ஒரு பயங்கரவாத மார்க்கம்; அது ஒரு தீவிர மார்க்கம் என்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தான் ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. ஆனால் இஸ்லாம், மனித சமூகத்தின் நலன் காக்கும் ஒரு சுமூக மார்க்கமாகும். மனிதன் ஒரு சமூகப் பிராணி! நீர் […]
17) முடிவுரை
அஹ்மத் தீதாத் கூறுகின்றார்: என்னுடைய இளமைப் பருவத்தில் தென்னாப்பிரிக்காவின் ஆடம்ஸ் மிஷனில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கிறித்தவ பாதிரி மாணவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட நேர்ந்தது. மனித குல மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்று அப்போதிருந்து எனக்கு ஊட்டப்பட்டது. ஏசுவின் சிலுவை மரணம் தான் தங்களது விமோசனம் என்று அதிகமான கிறித்தவ இளைஞர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் கண்டேன். அதை நம்பாதவர்கள் நரகவாதிகள் என்று அறிந்தேன். எளிதில் ஈர்ப்புக்குள்ளாகும் இளைஞனாக […]
16) தொகுப்புரை
இதுவரை எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களும் ஏசு இறக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இங்கு இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து சிறு குறிப்புகள் அடங்கிய ஒரு தொகுப்பை இங்கே அளிக்கிறோம். இறப்பதற்கு ஏசு காட்டிய தயக்கம் யூதர்களை அடக்குவதற்காக அவர் போர் வியூகம் வகுத்தார். காரணம், தாம் உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். கடவுளின் உதவி கேட்டுப் பிரார்த்தனை கடுமையான கதறல், கண்ணீர் மூலம் தன்னை உயிருடன் காக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை புரிந்தார். […]
15)ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 13
யோனாவின் அற்புதம் நான் உயிர்த்தெழுந்து வருவேன் என்று ஏசு முன்னறிவிப்புச் செய்ததாக பைபிள் பிரச்சாரகர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். பைபிள் என்றழைக்கப்படும் இந்நூல்கள் ஏசுவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின், நூறாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டவை. ஏசுவின் வாழ்நாளில் எந்த நூலும் எழுதப்படவில்லை. இவ்வாறு எழுதுமாறு ஏசு யாருக்கும் உத்தரவிடவுமில்லை. சிலுவை குறித்த முன்னறிவிப்புக்களைப் பற்றி, மாற்கு நூலின் விளக்கவுரையில் டேய்லர் என்பார், “முடிந்த காரியங்களுக்கு முன்னறிவிப்புக்களை பைபிள் எழுத்தாளர்கள் கட்டி விட்டிருக்கிறார்கள்” என்று அழகாகக் குறிப்பிடுகின்றார். யூதர்கள் மோசேக்கு கணக்கற்ற இடையூறுகளைக் […]
14) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 12
ஆவியல்ல! மனிதர் தான்! தனது சீடர்களுக்கு ஏசு முறையாக முகமன் கூறிய பின்னர் பின்வருமாறு கூறுகின்றார்: “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். லூக்கா 24:38-40 ஏசு இதன் மூலம் தெரிவிப்பது […]
13) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 11
பயந்து நடுங்கிய சீடர்கள் எம்மாவுவைச் சேர்ந்த இருவரும் ஜெருஸலத்திற்கு வருகையளிக்கின்றனர். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும் போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். லூக்கா 24:33-35 இங்கே லூக்கா சொல்கின்ற 11 பேர் என்ற கணக்கு தவறான கணக்காகும். […]
12) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 10
நம்ப மறுக்கும் சீடர்கள் மரியா அந்தத் தகவலை சீடர்களிடம் சொன்ன போது அவர்கள் நம்ப மறுக்கின்றனர். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்ட போது அவர்கள் நம்பவில்லை. மாற்கு 16:11 கல்லறையிலிருந்து கிளம்பிய ஏசு எம்மாவு என்ற ஊரை நோக்கிச் செல்கின்றார். அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து […]
11) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 9
யூதர்களின் சந்தேகம் இப்போது ஏசு, கல்லறையில் வைக்கப்பட்டு விட்டார். கல்லறை என்றதும் ஆறடி நீளம், இரண்டடி அகலம் என்று கற்பனை செய்ய வேண்டாம். அது பெரிய காற்றோட்டமான அறை என்று சொல்லலாம். “கிறிஸ்து இறந்த அந்த நாள்’ என்ற நூலில் ஏசுவின் கல்லறை 5 அடி அகலம், 7 அடி ஆழம், குறுக்கு வாட்டக் கம்புகள் கொண்ட அறை என்று ஜிம் பிஷப் என்பவர் குறிப்பிடுகின்றார். குடிசை வாழ் மக்களுக்கு இது போன்ற இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சியாக […]
10) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 8
வியப்புக்குள்ளாகும் பிலாத்து கடவுள் அந்தரங்கமான, மறைமுகமான வழியில் செயலாற்றுபவர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் படைவீரர்களின் உள்ளங்களில் ஏசு இறந்து விட்டார் என்ற எண்ணத்தைப் போட்டது! படை வீரர்கள் சிலருக்கு இப்படி ஓர் எண்ணத்தைப் போட்ட அதே கடவுள், இன்னொரு படைவீரரை ஏசுவின் விலாப்புறத்தில் ஈட்டியால் குத்தும்படி தூண்டுகிறார். அவ்வாறு குத்தியவுடனே தண்ணீரும் ரத்தமும் வடிந்தன. இது ஏசுவின் உயிரைக் காப்பாற்றும் வகையில் அமைந்தது. இவ்வாறு இரத்தம் வெளியேறுவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மறுபடியும் சீராவதற்கு […]
09) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 7
யூதர்களை விரட்டிய இறைவன் இறைவன் ஏற்படுத்திய இன்னொரு ஏற்பாடு, அணு அணுவாக மரணத்தை ஏசு சுவைக்கும் காட்சியைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று யூதர்கள் காத்திருந்தனர். அதற்கான அவகாசத்தையும் அரியதொரு வாய்ப்பையும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் கடவுள் அவர்களது எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டு விட்டார். அந்த யூதக் கூட்டத்தை விரட்டியடிப்பதற்காகப் பலத்த ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டைக் கடவுள் செய்திருந்தார். நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மத்தேயு 27:45 அதே […]
08) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 6
உறுதிப்படுத்தப்படாத மரணம் கழுமரத்தில் ஏற்றப்பட்ட ஏசுவின் கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை. அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. சங்கீதம் 34:20 செத்த பிணத்தின் கால் எலும்புகள் உடைக்கப்பட்டால் என்ன? உடைக்கப்படாவிட்டால் என்ன? கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை என்றால் அதனால் ஏற்படும் பயன் உயிருள்ளவருக்குத் தானே! இறந்தவருக்கு அல்லது ஆவியாக மாறியவருக்கு எந்தப் பயனும் கிடையாது. இந்த அழுத்தமான வாதத்தின்படி ஏசு உயிருடன் தான் இருக்கிறார் என்பதையே இது உறுதிப்படுத்துகின்றது. ஏசுவின் கால் எலும்புகளை […]
07) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 5
ஒப்புக் கொள்ளப்பட்ட பிரார்த்தனை தன்னை இந்த இக்கட்டிலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் காக்க வேண்டி இறைவனிடம் ஏசு பிரார்த்தனை புரிந்ததைக் கண்டோம். அதை இங்கு மீண்டும் நினைவு கூர்வோம். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார். மத்தேயு 26:39 மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் […]
06) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 4
இறக்கும் முன்பே சிலுவையிறக்கம் அரசியல் எதிரிகள், கொலைகாரர்கள், புரட்சியாளர்களைக் களைந்தெடுப்பதற்குப் பல்வேறு விதத்தில் மரண தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. கல்லால் எறிந்து கொல்தல், கூர்மையான பொருட்கள் மூலம் கொல்தல், நீரில் மூழ்கடித்தல் போன்ற முறைகளில் சமூக விரோதிகள் கொல்லப்பட்டு வந்தனர். ஆனால் இந்த முறைகளில் சமூக விரோதிகள் வெகு சீக்கிரமே மரணத்தைத் தழுவி விடுகின்றனர். சாவை, சன்னம் சன்னமாக அனுபவிப்பதில்லை. அணு அணுவாக வேதனையை அனுபவிப்பதில்லை. சாவை, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உதயமானது தான் […]
05) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 3
வழக்கு விசாரணை சீடர்கள் எப்போதும் ஏசுவையும் அவரது பணியையும் தவறாகவே விளங்கி வைத்திருந்தனர். யூதர்களின் அரசராக அவரைப் பிரகடனப்படுத்துமாறு கேட்டனர். வானத்திலிருந்து தீயை இறக்குமாறு வேண்டினர். கடவுளின் ஆட்சியில் அவனது வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமருமாறு அவரிடம் கோரினர். கடவுளைத் தங்கள் கண் முன்னால் நேரடியாகக் காட்ட வேண்டும் என்று முறையிட்டனர். அவரது திட்டத்திற்குப் பொருந்தாத எதையும், எல்லாவற்றையும் அவரிடம் கேட்டு அவரையும் செய்ய வைத்து, தாங்களும் அவ்வாறு செய்தனர். இப்படித் தான் அவர்கள் கடைசி வரை செயல்பட்டனர். […]
04) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 2
ஏசுவின் பிரார்த்தனை இப்போது ஏசுவின் பிரார்த்தனையைக் கேளுங்கள். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார். அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையது தான்; […]
03) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 1
போர் வீரர் ஏசு ஆரம்பம் முதல் கடைசி வரை யூதர்கள் ஏசுவை அங்கீகரிக்கவே இல்லை. அவரை அவர்கள் மறுத்தே வந்தனர். அவரை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர். ஆனால் அவர் மீது யூதர்களால் மரண தண்டனை விதிக்க முடியாது. காரணம், ஆட்சியதிகாரம் அன்றைய ரோமானியப் பேரரசிடம் தான் இருந்தது. யூதர்களிடம் கோவில் நிர்வாகம் மட்டுமே இருந்தது. அதே சமயம், தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ரோமானியப் பேரரசை வழிக்குக் கொண்டு வரும் செல்வாக்கை யூதர்கள் பெற்றிருந்தனர். […]
02) ஏசு மரணிக்கவில்லை பைபிளின் வாக்குமூலம்
அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் கணக்கியல் நிபுணருமான மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர், THE 100 “அந்த நூறு பேர்’ என்ற நூலை வெளியிட்டிருந்தார். கிறித்தவரான அவர், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நூறு பேர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலிடம் கொடுத்திருந்தார். இரண்டாவது இடத்தை நியூட்டனுக்கும் மூன்றாவது இடத்தை ஏசுவுக்கும் ஆறாவது இடத்தை பவுலுக்கும் கொடுத்திருந்தார். உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1000 மில்லியன். கிறித்தவர்களின் எண்ணிக்கை 1200 மில்லியன். 200 மில்லியன் அதிகம். […]
01) முன்னுரை
மனித குல பாவ மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்ற அறிவுக்கு ஒவ்வாத ஒரு கொள்கையை “பவுல்’ என்பவர் கிறித்தவத்தில் புகுத்தி விட்டார். அந்தப் படுமோசமான கொள்கையில் மொத்தக் கிறித்தவர்களும் வீழ்ந்து கிடக்கிறார்கள். தாங்கள் தவறில் வீழ்ந்து கிடப்பது மட்டுமின்றி முஸ்லிம்களையும் அந்தப் பாழுங்கிணற்றில் தள்ளுவதற்காகக் கிறித்தவ அழைப்பாளர்கள் அன்றாடம் ஒரு படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற படையெடுப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் பாதிக்கப்பட்டவர் தான் டாக்டர் அஹ்மத் தீதாத் […]
மார்க்கம் மாறாது
புனித மிக்க ரமளான் மாதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆன் வேதத்தை அருளி அதன் மூலம் இந்த மார்க்கத்தை நிறைவடையச் செய்து விட்டான். நிறைவான மார்க்கத்தில் யாரும் இனி எதையும் எப்போதும் சேர்க்கவும் முடியாது; நீக்கவும் முடியாது. மாற்றவோ, திருத்தவோ, திணிக்கவோ முடியாது. இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.(அல்குர்ஆன்: 5:3) ➚ […]
புடம் போடும் புறக்கணிப்புகள்
மீலாது விழா புறக்கணிப்பு! மவ்லிது விழா புறக்கணிப்பு! திருமண விழா புறக்கணிப்பு! நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு! பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு! கத்னா விழா புறக்கணிப்பு! இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு! இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு! இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு! புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் […]
கட்டுப்பாடு காத்த கஅப் பின் மாலிக்
அண்மையில் நம்முடைய ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட சிலர், ஒரு பாட்டைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்த பாக்கரை இப்படி அநியாயமாகத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பது தான் அந்தப் பாட்டு! இதற்குரிய விளக்கத்தை தியாகமா? துரோகமா? என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம். இங்கே நாம் காணப் போவது கஅப் பின் மாலிக் அவர்களின் வரலாறு! இது முழுக்க முழுக்க புகாரியில் இடம்பெறும் ஹதீஸாகும். நபித்துவம் பெற்ற முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் மாபெரும் […]
இவர்கள் முஸ்லிம்களா?
ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம் ஹுதைபிய்யா ஆகும். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளின் தலைவர் ஸுஹைல் பின் அம்ருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கையெழுத்தாகவுள்ள அந்த ஒப்பந்தத்தின் இரு நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானவை. 1. இந்த ஆண்டு உம்ரா செய்யக் […]
குருதி கொடுப்போம்
நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, “எனது தாயாயர் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்‘ என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், “உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?’ என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் […]
பாடம் 3-நான்கு குறியீடுகள்
அ) மெய்யெழுத்தின் குறியீடு கீழ்க்கானும் அரபு எழுத்துக்களை வாசிக்கும் போது அதில் போடப்பட்டுள்ள குறியீடுகளைக் கவனித்து அதற்கேற்ப வாசிக்க வேண்டும். உதாரணமாக எழுத்தின் மேலே ـْ அரை வட்டம் போன்ற குறியீடு இருந்தால் அந்த எழுத்தை தமிழ் மெய்யெழுத்து போல் வாசிக்க வேண்டும். இந்தக் குறியீடு ஸுக்கூன் எனப்படும். நூன் மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று نْ இருந்தால் (ன்) என்று வாசிக்க வேண்டும்.. தா மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று تْ இருந்தால் (த்) என்று வாசிக்க வேண்டும். ஆ) அகரக் குறியீடு எழுத்தின் மேலே சற்றே சாய்ந்தது போன்ற குறியீடு அகரக் குறியீடு எனப்படும். அரபு மொழியில் இது ஃபதஹ் என்றும் உருது […]
பாடம் 2 – வரிசை மாற்றி அமைக்கப்பட்ட எழுத்துக்கள்
கீழுள்ள எழுத்துக்கள் அகர வரிசைப்படி இல்லாமல் வரிசை மாற்றித் தரப்பட்டுள்ளது. எழுத்துக்களைச் சரியான முறையில் கண்டறிவதற்கு இந்தப் பயிற்சி அவசியம்.
பாடம் 1 – அரபு எழுத்துக்களும் அதன் பெயர்களும்
முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை அரபு மொழியில் உள்ள எழுத்துக்கள். அரபு எழுத்துக்கள் மொத்தம் 29 ஆகும். ஆனால் குர்ஆனைக் கற்றுத் தரும் அனைத்து புத்தகத்திலும் 30 எழுத்தாக போட்டிருப்பார்கள். லாம் என்பது ஒரு எழுத்து, அலிஃப் என்பது ஒரு எழுத்து. இந்த இரண்டு எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து லாம்அலிஃப் என 30 வது எழுத்தாக சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் லாம் அலிஃப் என்பது ஒரு எழுத்தே கிடையாது.