Category: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

u590

20) மற்ற நபிமார்களின் பிராத்தனை

நூஹ் நபி நூஹ், தமது இறைவனை அழைத்து, “என் இறைவனே! எனது மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவன். உனது வாக்குறுதி உண்மையானது. நீயே தீர்ப்பளிப்போரில் தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார். மிகச் சிறந்து (அல்குர்ஆன்: 11:45) ➚ மூஸா நபி “என் இறைவனே! என்னையும் எனது சகோதர்ரையும் மன்னிப்பாயாக! உன்னுடைய அருளில் எங்களை நுழையச் செய்வாயாக! நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன்: 7:151) ➚ அய்யூப் நபி அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) “எனக்குத் துன்பம் […]

del – 11) மன்னிப்பை வேண்டுதல்

  وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمِ “எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” (அல்குர்ஆன்: 2:128) ➚ وَاغْفِرْ لَنَا எங்கள் இறைவனே! எங்களை மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 60:5) ➚ உலகில் வாழும் பாவம் எல்லா மனிதர்களும் செய்யக்கூடியவர்கள்தான். பாவமே செய்யாத எந்த மனிதனும் உலகில் இல்லை. நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்களிடமும் தவறுகள் குறைவாக நிகழலாம். சிறிய தவறுகள் நிகழலாம். ஆனால் அவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்று […]

del – 10) வேண்டாம் சிலைவழிபாடு

  وَاحْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ“ “என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35) ➚ இந்தப் பிரார்த்தனை ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதுடன், அல்லாஹ்வின் தனித்தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு நபியாகவே இருந்தாலும் தானாக நேர்வழியை நோக்கிப் பயணிக்கமுடியாது, அதற்கு அல்லாஹ்வின் உதவிதான் அவசியமானது என்பதைக் கற்றுத் தருகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்னவெனில் இப்ராஹீம் நபியைப் பொறுத்தவரை அவர்கள் […]

del – 09) வணக்கத்தை ஏற்றுக் கொள்ள…

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது. “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.) (அல்குர்ஆன்: 2:127) ➚ இப்ராஹீம் நபியிடமும். நபியிடமும் கஃபாவைக் இஸ்மாயில் காட்டுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதற்கு இணங்க அவர்கள் அவற்றைக் கட்டினார்கள். அந்தப் பணியை செம்மையாகச் செய்து முடித்த பின் அவ்விருவரும் ‘நாங்கள் செய்த இந்தப் பணியை ஏற்றுக்கொள்வாயாக’ என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு […]

del – 08) வணக்கசாலியாக ஆக்கக் கோரி..

  رَبِّا اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்களாக ஆக்கிவைப்பாயாக! (அல்குர்ஆன்: 14:40) ➚ நபி வணக்கத்தில் ஒருபோதும் குறைவைக்க மாட்டார். இப்ராஹீம் நபியும் அவ்வாறுதான் அனைத்திலும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். நம்மைப்போன்று இல்லாமல் மாபெரும் வணக்கசாலியாக இருந்தும் இப்ராஹீம் நபியவர்கள் நாம் தான் வணக்கத்தை வழமையாகச் செய்து வருகிறோமே! இதற்காக அல்லாஹ்விடம் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிடாமல் நாம் […]

del – 07) வணக்கத்திற்கு வழிகாட்ட…

  وَأَرِنَا مَنَاسِكَنَا எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 2:128) ➚ அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றாலும் நாம் நினைத்த வகையில் அல்லாஹ்வை வணங்கிவிட முடியாது. அவனை எப்படி வணங்கவேண்டும் என அவன்தான் நமக்குக் கற்றுத்தர வேண்டும். நாமாக எதையும் வணக்கம் என்று செய்திட முடியாது. அவ்வாறு நாமாக ஒன்றை வணக்கம் என்ற பெயரில் நன்மையை எதிர்பார்த்துச் செய்தாலும் அவை வணக்கமாக ஏற்றுக்கொள்ளவும் படாது, அதற்கு நன்மையும் வழங்கப்படாது. மாறாக அவை நம்மை […]

del – 05) பிள்ளையை வேண்டி

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ “என்இறைவனே! எனக்கு வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இப்ராஹீம் இறைஞ்சினார்.) (அல்குர்ஆன்: 37:100) ➚ உலகில் ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றுதான் பிள்ளை பாக்கியமாகும். வாழ்க்கையின் அர்த்தமாக பிள்ளை பாக்கியத்தைத் தான் மனிதார்கள் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கை நம்மோடு முடிவடையாமல், வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருப்பதற்கும், நமது வாழ்வின் ஒரு திருப்புமுனையாக இருப்பதற்கும் முக்கியக் காரணம் பிள்ளைப் பாக்கியம்தான். ஒருவனுக்குப் பிள்ளை இல்லையெனில் அவர் தன் வாழ்வையே […]

del – 04) ஞானத்தை வேண்டுதல்

رَبِّ هَبْ لِي حُكْمًا என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 26:83) ➚ இப்ராஹீம் நபி தன் தந்தையிடம் அழைப்புப் பணி செய்யும்போது உங்களுக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது என்றுதான் பிரச்சாரத்தையே துவங்குகிறார்கள். “என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி (ஞானம்) என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்” (அல்குர்ஆன்: 19:43) ➚ அம்மக்களில் அனைவரை விடவும் ஞானம் கொடுக்கப்பட்டவர்களாக இப்ராஹீம் நபியே இருந்தார்கள். இருப்பினும் […]

del – 03) அபய பூமி

رَبِّا جْعَلْ هُذَا الْبَلَدَ آمِنًا   “என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக!” இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35) ➚ رَبِّ اجْعَلْ هُذَا بَلَدًا آمِنً “என் இறைவனே! (மக்கா எனும்) இந்த ஊரைப் பாதுகாப்புத்தலமாக ஆக்குவாயாக! என்று அவர் (இப்ராஹீம்) கூறினார். (அல்குர்ஆன்: 2:126) ➚ இப்ராஹீம் நபி தனது மனைவியையும்.” மகனையும் மக்காவிலே தனியாக விட்டு வருகிறார்கள். பின்னர் அல்லாஹ்வின் அருளால் மக்கா என்பது மக்கள் வாழும் […]

del – 01) முன்னுரை

மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் பிரார்த்தனை என்பதும் மிக முக்கியமான ஓர் அருட்கொடையாகும். தனது எண்ணற்ற கோரிக்கைகளையும், தேவைகளையும் மனிதன் பிரார்த்தனையின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. பிரார்த்தனையால் நமது உள்ளம் ஆசுவாசமடைகிறது. நமது மனக் குமுறல்களையும் இறைவனிடம் கொட்டித் தீர்க்க முடிகிறது. எல்லா இறைத்தூதர்களும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களின்போது அவர்கள் முதலில் எடுத்துக் கொண்ட ஆயுதமும் அருமருந்தும் இந்தப் பிரார்த்தனையே! இறைத்தூதர்களின் பிரார்த்தனையில் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை மிகவும் பிரசித்தி பெற்றதும், அற்புதமானதும், அழகிய படிப்பினையுடையதுமாகும். […]