Category: பித்அத் ஓர் வழிகேடு

u468

06) பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவது பித்அத்தா?

v4இந்த கேள்வி மார்க்கம் பற்றிய அடிப்படை தெரியாததால் எழும் கேள்வியாகும். இதற்கான விடையறிய மார்க்கத்தின் அடிப்படையை அறிந்துக் கொள்ள வேண்டும். மார்க்கம் என்பது வஹியில் உள்ளவை மட்டுமே என்ற அடிப்படையை முன்னர் அறிந்தோம். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம் உலக பழக்க வழக்கங்களுக்கு மார்க்கம் ஒரு அனுமதியை நமக்கு தருகிறது. இதை பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் […]

05) பித்அத்கள் தோன்ற காரணமும், பித்அத்தின் விபரீதங்களும்

v4 இறை நேசமா? முன்னோர் பாசமா? மேலே குறிப்பிட்ட விஷயங்களையெல்லாம் நாம் கூறினால் சிலர், என்ன தான் இருந்தாலும் நமது முன்னோர்களுக்கு தெரியாதா? காலம் காலமாக செய்து வருவதை எப்படி விடுவது என்று கேட்பார்கள். இந்த கேள்விகள் சாதாரணமாக தெரியலாம். ஆனால் இது ஒருவரின் இறை நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் பாதகத்தை விளைவிக்கும். ஏனெனில், ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் அல்லாஹ்வையே அனைவரையும் விட அனைத்தையும் விட நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற […]

04) பித்அத்தான செயல்களை கண்டறியும் முறைகள்

v4இரண்டாம் வழி – முறையை மாற்றுதல் மார்க்கம் என்று செய்யப்படும் ஒரு காரியத்திற்கு மார்க்கத்தில் அடிப்படை ஆதாரமே இல்லையென்றால் அதை வைத்தே அது பித்அத் என்று அறிந்துக் கொள்ளலாம் என்பதை மேலே கண்டோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்ததற்கான காரணம், விதம், அளவு, காலம், இடம், வகை தெளிவுப்படுத்தப்பட்ட பிறகு இவற்றில் எந்த ஒன்றை நாம் மாற்றி அந்த காரணம் அல்லாத வேறு காரணத்திற்காகவோ அல்லது வேறு விதத்திலோ அல்லது வேறு அளவிலோ அல்லது […]

3) பித்அத் பற்றிய முன்னறிவிப்புகள்

v43) பித்அத் பற்றிய முன்னறிவிப்புகள் பித்அத்கள் இந்த சமுதாயத்தில் தோன்றும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டுதான் சென்றார்கள். அதுப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் நபிகள் நாயகத்திற்கு முந்தைய நிலையைப் பற்றி அறிந்துக் கொள்வது சற்றுப் பொருத்தமாக இருக்கும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முன்னால் பல நபிமார்கள் இந்த உலகில் இறைத்தூதர்களாக இறைவனால் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொருவரும் மரணித்த பிறகு அடுத்த ஒவ்வொரு சமுதயாத்திற்கும் ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் என்று அடுத்தடுத்து தூதர்கள் கால இடைவெளிவிட்டு வந்துக் கொண்டேயிருந்தனர். ஒவ்வொரு […]

2) இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம்!

v42) இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம்! தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோர், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவே தவிர நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அதுபற்றி அவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். பொய்யர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன்: 39:3) ➚ இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்கு சொந்தமான மார்க்கம் என்று இறைவன் […]

01) முன்னுரை

v4பித்அத் ஓர் வழிகேடு ஷிர்க்கை பற்றி இருக்கும் விழிப்புணர்வு பித்அத்கள் விஷயத்தில் மக்களிடம் அதிகம் இல்லாமல் இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது வளர்ந்து திருமணமாகி பின்பு இறந்து அடக்கம் செய்யப்பட்டு ஓராண்டு கழிந்து ஒவ்வொரு வருடமும் என்று பித்அத் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் மரணித்தாலும் நிற்காமல் ஏராளம் ஏராளமாக மக்களால் செய்யப்படுகிறது. இத்தகைய பித்அத் என்றால் என்ன? என்ற தெளிவை ஏற்படுத்துவதே இந்த புத்தகத்தின் நோக்கம். அல்லாஹ் நம் நோக்கத்தை நிறைவேற்றுவானாக! பித்அத் என்பதின் அர்த்தம் என்ன? பித்அத் […]