Category: முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு

u425

09) கணவாயின் ஷைத்தான்

கணவாயின் ஷைத்தான் பராஉ இப்னு மஃரூர் (ரலி) நபி ஸல் அவர்கள் கையைப் பற்றி , “சத்திய மார்க்கத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களை நாங்கள் பாதுகாப்பது போன்றே உங்களையும் நிச்சயம் பாதுகாப்போம். அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் வாக்குறுதியும் ஒப்பந்தமும் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் போரின் மைந்தர்கள்! கவச ஆடை அணிந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக போர் செய்து பழக்கப் பட்டவர்கள்! பராஃ (ரலி) யின் வார்த்தைகள் முரசாய் முழங்கின. […]

08) இவர் சரியாகத்தான் சொன்னார்

முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-8 “இவர் சரியாகத்தான் சொன்னார்!” அன்று காலை, நபியவர்கள் மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவர்கள் முகத்தில் கவலை இழையோடியது. “மக்கள் தன்னை பொய்யராக்கி விடுவார்களோ?” என்று நபியவர்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், அபு ஜஹ்லின் வருகை அதனை உறுதிப்படுத்தியது. “என்ன?? ஏதேனும் புது செய்தி உண்டா?” அபு ஜஹ்லின் கேள்வியில் கிண்டல் தொனித்தது. “இன்று இரவு நான் அழைத்து செல்லப்பட்டேன்““எங்கே? ““பைத்துல் முகத்தஸ்” “அப்போது  இங்கே  எப்படி எங்களுடன் இருக்கிறீர்?”“ஆம்” […]

07) இன்னா செய்தவருக்கும் இரக்கம்

இன்னா செய்தவருக்கும் இரக்கம் தாயிப் நகர தலைவர்களிடமும் மக்களிடமும் இஸ்லாத்தை நபியவர்கள் எடுத்து சொன்னார்கள். தாயிப் நகர தலைவன் நபியவர்களை அவமானப்படுத்தி விரட்டியடித்தான். நபியவர்கள் மனமுடைந்து போனார்கள். உண்மையை ஏற்பது  உலகத்திற்கு கசப்பாகத்தானே இருக்கிறது ! அதை பற்றி நபியவர்கள் சொல்வதை கேளுங்கள்: “…ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ எனுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே […]

06) வழி பிறந்தது

வழி பிறந்தது நபியவர்கள் தன் தோழர்களுக்காக கவலைப்பட்டார்கள். மக்காவாசிகளின் இந்த அராஜகங்கள் தொடர்வது நபியவர்களுக்கு கவலையளித்தது. தன் தோழர்களின் காயங்களுக்கு நபியவர்கள் ஆறுதலளித்தார்கள். இந்த குரைஷிகளை எவ்வாறு தான் நிறுத்துவது.?தன்னை தாக்குவதை நபியவர்கள் சகித்தார்கள். ஒரு முறை கஃபா பகுதியில் இறைவனை வணங்கும் போது நபியின் கழுத்தில் ஒட்டகத்தின் மலக்குடலை கொண்டு வந்து போட்டான் உக்பா என்ற அறிவிலி. தன் மகள் பாத்திமா (ரலி ) வந்து அதை  அப்புறப்படுத்தும் வரை நபியவர்களால் எழ முடியவில்லை, பகைவர்களை […]

05) பதறவைத்த பிரச்சாரம்

பதறவைத்த பிரச்சாரம் குரைஷிகள் கடும் ஆத்திரம் கொண்டனர். முஹம்மதின் பிரச்சாரம்  இவர்களை என்ன செய்துவிடப்போகிறது? அப்படியென்ன அடிநாதத்தை பெயர்த்தெடுக்கிற பிரச்சாரத்தை செய்துவிட்டார்? ஒரு தெய்வ வழிபாட்டால் குரைஷிகளுக்கு என்ன நஷ்டம்? இதை தெரிந்து கொண்டால் தான் அவர்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வந்தது என்று புரியும். கஃபாவிலும் அதைச்சுற்றிலும் ஏராளமான சிலைகள் வழிபடப்பட்டு வந்தன என்பதை நாம் கடந்த தொடரில் கண்டோம்.. அந்த சிலைகள் தான் இவர்களது மூலதனம். சிலைகள் இருந்தால் தான் அங்கு பல மக்கள் […]

04) குன்றின் மீது ஒரு குரல் 

குன்றின் மீது ஒரு குரல்  இறைவன் பணித்த தூதுப்பணியை நபியவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். முதன் முதலில் இஸ்லாத்தை தழுவும் பாக்கியம் கதீஜா(ரலி) அவர்களுக்கு தான் கிட்டியது. பிறகு நபியவர்களின் நெருங்கிய தோழர் அபுபக்கர்(ரலி) ..பிறகு ஒரு சில நெருங்கிய நண்பர்கள் முஸ்லிமாயினர். நபியவர்களின் குணம் தெரிந்த அவர்களால் அவரை நிராகரிக்க முடியவில்லை,  ஏற்றுக்கொண்டார்கள். ‘முஸ்லிம்’ என்றால் இறைவனுக்கு கட்டுபட்டவர் என்று பொருள். விஷயம் பரவியது,பிரமுகர்கள் பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறதாமே? இத்தனை நாட்கள் […]

03) இறைவனின் தூதரா?

இறைவனின் தூதரா? திடீரென்று வந்து ஒருவர் “படி ” என்றதும் நபியவர்கள் குழப்பமடைந்தார்கள். நான் படிக்கத்தெரிந்தவன் இல்லை என்றார்கள். மீண்டும் அவர் படி என கூற நபியவர்கள் மீண்டும் அதே பதிலை கூறினார்கள். வந்தவர் நபியவர்களை இறுக்க அணைத்து திருமறையின் 96வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வரிகளை கற்று தருகிறார். அதாவது…” اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏ (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌‏ “அலக்” […]

02) பிறந்ததும் , வளர்ந்ததும்

பிறந்ததும் , வளர்ந்ததும் குழந்தை பிறந்ததும் அனைவரும் கொண்டாடினர். பாட்டனாருக்கு பெரும் சந்தோஷம், பெரியப்பா சித்தப்பாக்களுக்கு அதை விட சந்தோஷம் தந்தை இல்லா குறையை போக்கும் விதமாக நன்றாகவே பார்த்துக்கொண்டனர். முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆறுவயதானபோது அவரது தாயார் ஆமினாவும் மரணித்து விட்டார். அநாதையான அந்த குழந்தை பாட்டனாரிடம் வளர்ந்தது, ரொம்ப செல்லமாக வளர்ததார் தாத்தா அப்துல் முத்தலிப். குழந்தையை வளர்ப்பது அவருக்கு இன்பமாகவே இருந்தது. சிறுது காலம் கடந்தது ..தாத்தாவும் இறந்துவிட்டார். பின் முஹம்மது(ஸல்) அவர்கள் அவரது […]

01) மாநகரம் மக்கா 

மாநகரம் மக்கா  அரேபிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் மக்கா என்னும் வணிக நகரம். பாலைவனமாய் இருந்தாலும், இடையில் ஒரு பாரம்பரிய கட்டிடத்தை(கஅபாவை) தாங்கிநிற்கும் ஒரு பண்டைய கால நகரம் அது.. அந்த கட்டிடம் முழுவதையும் ஏறக்குறைய முன்னூற்றைம்பது சிலைகள் ஆக்கிரமித்திருந்தன.. தினம் தினம் வழிபாடு செய்யப்பட்டு திருவிழா கொண்டாட ஆண்டு முழுவதும் அந்நகரம் திருவிழா கோலம் தான். ஒரு நாள் திருவிழா என்றாலே நம்மூர் களைகட்டும்..அங்கு சொல்ல வேண்டியதே இல்லை..எப்போதும் கூட்டம் தான். புதுப்புது சிலைகளுக்கு புதுபுது […]