Category: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

u370-3

17) முடிவுரை

v4  அஹ்மத் தீதாத் கூறுகின்றார்: என்னுடைய இளமைப் பருவத்தில் தென்னாப்பிரிக்காவின் ஆடம்ஸ் மிஷனில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கிறித்தவ பாதிரி மாணவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட நேர்ந்தது. மனித குல மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்று அப்போதிருந்து எனக்கு ஊட்டப்பட்டது. ஏசுவின் சிலுவை மரணம் தான் தங்களது விமோசனம் என்று அதிகமான கிறித்தவ இளைஞர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் கண்டேன். அதை நம்பாதவர்கள் நரகவாதிகள் என்று அறிந்தேன். எளிதில் ஈர்ப்புக்குள்ளாகும் இளைஞனாக […]

16) தொகுப்புரை

v4இதுவரை எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களும் ஏசு இறக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இங்கு இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து சிறு குறிப்புகள் அடங்கிய ஒரு தொகுப்பை இங்கே அளிக்கிறோம். இறப்பதற்கு ஏசு காட்டிய தயக்கம் யூதர்களை அடக்குவதற்காக அவர் போர் வியூகம் வகுத்தார். காரணம், தாம் உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். கடவுளின் உதவி கேட்டுப் பிரார்த்தனை கடுமையான கதறல், கண்ணீர் மூலம் தன்னை உயிருடன் காக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை புரிந்தார். […]

15)ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 13

v4யோனாவின் அற்புதம் நான் உயிர்த்தெழுந்து வருவேன் என்று ஏசு முன்னறிவிப்புச் செய்ததாக பைபிள் பிரச்சாரகர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். பைபிள் என்றழைக்கப்படும் இந்நூல்கள் ஏசுவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின், நூறாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டவை. ஏசுவின் வாழ்நாளில் எந்த நூலும் எழுதப்படவில்லை. இவ்வாறு எழுதுமாறு ஏசு யாருக்கும் உத்தரவிடவுமில்லை. சிலுவை குறித்த முன்னறிவிப்புக்களைப் பற்றி, மாற்கு நூலின் விளக்கவுரையில் டேய்லர் என்பார், “முடிந்த காரியங்களுக்கு முன்னறிவிப்புக்களை பைபிள் எழுத்தாளர்கள் கட்டி விட்டிருக்கிறார்கள்” என்று அழகாகக் குறிப்பிடுகின்றார். யூதர்கள் மோசேக்கு கணக்கற்ற இடையூறுகளைக் […]

14) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 12

v4ஆவியல்ல! மனிதர் தான்! தனது சீடர்களுக்கு ஏசு முறையாக முகமன் கூறிய பின்னர் பின்வருமாறு கூறுகின்றார்: “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். லூக்கா 24:38-40 ஏசு இதன் மூலம் தெரிவிப்பது […]

13) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 11

v4பயந்து நடுங்கிய சீடர்கள் எம்மாவுவைச் சேர்ந்த இருவரும் ஜெருஸலத்திற்கு வருகையளிக்கின்றனர். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும் போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். லூக்கா 24:33-35 இங்கே லூக்கா சொல்கின்ற 11 பேர் என்ற கணக்கு தவறான கணக்காகும். […]

12) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 10

v4நம்ப மறுக்கும் சீடர்கள் மரியா அந்தத் தகவலை சீடர்களிடம் சொன்ன போது அவர்கள் நம்ப மறுக்கின்றனர். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்ட போது அவர்கள் நம்பவில்லை. மாற்கு 16:11 கல்லறையிலிருந்து கிளம்பிய ஏசு எம்மாவு என்ற ஊரை நோக்கிச் செல்கின்றார். அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து […]

11) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 9

v4யூதர்களின் சந்தேகம் இப்போது ஏசு, கல்லறையில் வைக்கப்பட்டு விட்டார். கல்லறை என்றதும் ஆறடி நீளம், இரண்டடி அகலம் என்று கற்பனை செய்ய வேண்டாம். அது பெரிய காற்றோட்டமான அறை என்று சொல்லலாம். “கிறிஸ்து இறந்த அந்த நாள்’ என்ற நூலில் ஏசுவின் கல்லறை 5 அடி அகலம், 7 அடி ஆழம், குறுக்கு வாட்டக் கம்புகள் கொண்ட அறை என்று ஜிம் பிஷப் என்பவர் குறிப்பிடுகின்றார். குடிசை வாழ் மக்களுக்கு இது போன்ற இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சியாக […]

10) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 8

v4வியப்புக்குள்ளாகும் பிலாத்து கடவுள் அந்தரங்கமான, மறைமுகமான வழியில் செயலாற்றுபவர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் படைவீரர்களின் உள்ளங்களில் ஏசு இறந்து விட்டார் என்ற எண்ணத்தைப் போட்டது! படை வீரர்கள் சிலருக்கு இப்படி ஓர் எண்ணத்தைப் போட்ட அதே கடவுள், இன்னொரு படைவீரரை ஏசுவின் விலாப்புறத்தில் ஈட்டியால் குத்தும்படி தூண்டுகிறார். அவ்வாறு குத்தியவுடனே தண்ணீரும் ரத்தமும் வடிந்தன. இது ஏசுவின் உயிரைக் காப்பாற்றும் வகையில் அமைந்தது. இவ்வாறு இரத்தம் வெளியேறுவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மறுபடியும் சீராவதற்கு […]

09) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 7

v4யூதர்களை விரட்டிய இறைவன் இறைவன் ஏற்படுத்திய இன்னொரு ஏற்பாடு, அணு அணுவாக மரணத்தை ஏசு சுவைக்கும் காட்சியைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று யூதர்கள் காத்திருந்தனர். அதற்கான அவகாசத்தையும் அரியதொரு வாய்ப்பையும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் கடவுள் அவர்களது எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டு விட்டார். அந்த யூதக் கூட்டத்தை விரட்டியடிப்பதற்காகப் பலத்த ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டைக் கடவுள் செய்திருந்தார். நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மத்தேயு 27:45 அதே […]

08) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 6

v4உறுதிப்படுத்தப்படாத மரணம் கழுமரத்தில் ஏற்றப்பட்ட ஏசுவின் கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை. அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. சங்கீதம் 34:20 செத்த பிணத்தின் கால் எலும்புகள் உடைக்கப்பட்டால் என்ன? உடைக்கப்படாவிட்டால் என்ன? கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை என்றால் அதனால் ஏற்படும் பயன் உயிருள்ளவருக்குத் தானே! இறந்தவருக்கு அல்லது ஆவியாக மாறியவருக்கு எந்தப் பயனும் கிடையாது. இந்த அழுத்தமான வாதத்தின்படி ஏசு உயிருடன் தான் இருக்கிறார் என்பதையே இது உறுதிப்படுத்துகின்றது. ஏசுவின் கால் எலும்புகளை […]

07) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 5

v4ஒப்புக் கொள்ளப்பட்ட பிரார்த்தனை தன்னை இந்த இக்கட்டிலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் காக்க வேண்டி இறைவனிடம் ஏசு பிரார்த்தனை புரிந்ததைக் கண்டோம். அதை இங்கு மீண்டும் நினைவு கூர்வோம். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார். மத்தேயு 26:39 மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் […]

06) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 4

v4இறக்கும் முன்பே சிலுவையிறக்கம் அரசியல் எதிரிகள், கொலைகாரர்கள், புரட்சியாளர்களைக் களைந்தெடுப்பதற்குப் பல்வேறு விதத்தில் மரண தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. கல்லால் எறிந்து கொல்தல், கூர்மையான பொருட்கள் மூலம் கொல்தல், நீரில் மூழ்கடித்தல் போன்ற முறைகளில் சமூக விரோதிகள் கொல்லப்பட்டு வந்தனர். ஆனால் இந்த முறைகளில் சமூக விரோதிகள் வெகு சீக்கிரமே மரணத்தைத் தழுவி விடுகின்றனர். சாவை, சன்னம் சன்னமாக அனுபவிப்பதில்லை. அணு அணுவாக வேதனையை அனுபவிப்பதில்லை. சாவை, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உதயமானது தான் […]

05) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 3

v4வழக்கு விசாரணை சீடர்கள் எப்போதும் ஏசுவையும் அவரது பணியையும் தவறாகவே விளங்கி வைத்திருந்தனர். யூதர்களின் அரசராக அவரைப் பிரகடனப்படுத்துமாறு கேட்டனர். வானத்திலிருந்து தீயை இறக்குமாறு வேண்டினர். கடவுளின் ஆட்சியில் அவனது வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமருமாறு அவரிடம் கோரினர். கடவுளைத் தங்கள் கண் முன்னால் நேரடியாகக் காட்ட வேண்டும் என்று முறையிட்டனர். அவரது திட்டத்திற்குப் பொருந்தாத எதையும், எல்லாவற்றையும் அவரிடம் கேட்டு அவரையும் செய்ய வைத்து, தாங்களும் அவ்வாறு செய்தனர். இப்படித் தான் அவர்கள் கடைசி வரை செயல்பட்டனர். […]

04) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 2

v4ஏசுவின் பிரார்த்தனை இப்போது ஏசுவின் பிரார்த்தனையைக் கேளுங்கள். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார். அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையது தான்; […]

03) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 1

v4போர் வீரர் ஏசு ஆரம்பம் முதல் கடைசி வரை யூதர்கள் ஏசுவை அங்கீகரிக்கவே இல்லை. அவரை அவர்கள் மறுத்தே வந்தனர். அவரை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர். ஆனால் அவர் மீது யூதர்களால் மரண தண்டனை விதிக்க முடியாது. காரணம், ஆட்சியதிகாரம் அன்றைய ரோமானியப் பேரரசிடம் தான் இருந்தது. யூதர்களிடம் கோவில் நிர்வாகம் மட்டுமே இருந்தது. அதே சமயம், தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ரோமானியப் பேரரசை வழிக்குக் கொண்டு வரும் செல்வாக்கை யூதர்கள் பெற்றிருந்தனர். […]

02) ஏசு மரணிக்கவில்லை பைபிளின் வாக்குமூலம்

v4அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் கணக்கியல் நிபுணருமான மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர், THE 100 “அந்த நூறு பேர்’ என்ற நூலை வெளியிட்டிருந்தார். கிறித்தவரான அவர், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நூறு பேர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலிடம் கொடுத்திருந்தார். இரண்டாவது இடத்தை நியூட்டனுக்கும் மூன்றாவது இடத்தை ஏசுவுக்கும் ஆறாவது இடத்தை பவுலுக்கும் கொடுத்திருந்தார். உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1000 மில்லியன். கிறித்தவர்களின் எண்ணிக்கை 1200 மில்லியன். 200 மில்லியன் அதிகம். […]

01) முன்னுரை

v4மனித குல பாவ மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்ற அறிவுக்கு ஒவ்வாத ஒரு கொள்கையை “பவுல்’ என்பவர் கிறித்தவத்தில் புகுத்தி விட்டார். அந்தப் படுமோசமான கொள்கையில் மொத்தக் கிறித்தவர்களும் வீழ்ந்து கிடக்கிறார்கள். தாங்கள் தவறில் வீழ்ந்து கிடப்பது மட்டுமின்றி முஸ்லிம்களையும் அந்தப் பாழுங்கிணற்றில் தள்ளுவதற்காகக் கிறித்தவ அழைப்பாளர்கள் அன்றாடம் ஒரு படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற படையெடுப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் பாதிக்கப்பட்டவர் தான் டாக்டர் அஹ்மத் தீதாத் […]