Category: இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

u314

26) இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா قال الغزالي: وفي خبر آخر: “من غش أمتي فعليه لعنة الله والملائكة والناس أجمعين، قيل يا رسول الله، وما غش أمتك، قال: أن يبتدع بدعة يحمل الناس عليها“. قال العراقي: أخرجه الدارقطني في الأفراد من حديث أنس بسند ضعيف جدا “எனது சமுதாயத்தில் யார் ஏமாற்றுகின்றாரோ அவர் மீது […]

25) இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

“(அடுத்தவர் பேச்சை) செவியுறு வதை விட (தான்) பேசுவதையே அதிகம் விரும்புவது ஆலிமின் குழப்பமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆத் (ரலி), இந்தச் செய்தியை முஆத் (ரலி)யே சொன்னதாகவும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் கஸ்ஸாலி தெரிவிக்கின்றார். இது இஹ்யாவில், கல்வியின் ஆபத்துகள், மறுமை, ஆலிம்கள் மற்றும் கெட்ட ஆலிம்களை விளக்குதல் என்ற ஆறாவது பாடத்தில் இடம் பெறுகின்றது. அபூ நயீம், இப்னுல் ஜவ்ஸி ஆகியோர் இந்த ஹதீஸை தங்களது மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட […]

24) இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

பொய்யான ஹதீஸ்: 6 “அல்லாஹ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மக்களிடம் கோபம் கொள்கின்ற வரையிலும், குர்ஆன் வசனங்களுக்குப் பல்வேறு விதமான விளக்கங்கள் இருக்கின்றன என்று புரிகின்ற வரையிலும் ஒர் அடியான் மார்க்கத்தை முழுமையாக விளங்கிய வனாக ஆவதில்லை” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை “கல்வியின் சிறப்பு’ என்ற பாடத்தில் கஸ்ஸாலி கொண்டு வந்துள்ளார். “மக்கள் அனைவரிடமும் கோபம் கொள்கின்ற வரை” என்ற கூடுதல் வார்த்தையுடன் இதே செய்தி பதிவாகியுள்ளது. “அவரிடத்தில் அவரை விடவும் […]

23) இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா இதுவரை பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யக்கூடாது என்று விரிவாகப் பார்த்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மூலம் ஏற்படுகின்ற பயங்கர விளைவுகள் பற்றியும் குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் பார்த்தோம். இந்த அடிப்படை விஷயத்திற்கு மாற்றமாக கஸ்ஸாலி தனது இஹ்யாவில் அள்ளிக் கொட்டி யிருக்கின்ற பொய்யான, இட்டுக் கட்டப்பட்ட, அறிவிப்பாளர் தொடரில்லாத சில ஹதீஸ்களைப் பார்ப்போம். பொய்யான ஹதீஸ் – 1 நான் […]

22) பலவீனமான ஹதீஸைப் பின்பற்றி அமல் செய்யலாமா?

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? என்ற தலைப்பிட்டு விட்டு, பலவீனமான ஹதீஸ் பற்றிய ஆய்வுக்குள் நூலாசிரியர் மக்ராவி சென்றதற்குக் காரணம், இஹ்யாவில் பலவீனமான ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அமல்களின் சிறப்பு பற்றிய ஹதீஸ்களைப் பொறுத்தவரை அது ஆதாரப்பூர்வமான செய்தியா? அல்லது பலவீனமான செய்தியா? என்று பார்க்கத் தேவையில்லை, அதைப் பின்பற்றி அமல் செய்யலாம் என்ற கருத்து ஆரம்ப காலம் முதல் பரவலாக இருந்து வருகின்றது. […]

21) பலவீனமான ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் முல்லாக்கள் அல்ல! முட்டாள்கள்!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பது, அவற்றின்படி அமல் செய்வது தொடர்பாக அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி, ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்ட கருத்துக்களைப் பற்றி மக்ராவி குறிப்பிட்ட விமர்சனத்தைக் கடந்த இதழில் கண்டோம். ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் நூலின் முன்னுரையை இங்கு வெளியிட விருந்த வேளையில், அல்ஜாமிவுஸ் ஸகீர் என்ற நூலில் இடம்பெற்ற அல்பானி அவர்களின் முன்னுரை கிடைத்தது. அந்த முன்னுரை, ஸஹீஹ் […]

20) ராபிளிய்யாவின் தகிய்யா கொள்கை

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா ராபிளிய்யாக்களின் மார்க்கம் “தகிய்யா’ ஆகும். அதாவது தங்களுடைய கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் போது தங்களது உண்மையான கொள்கையை மறைத்து விடுவார்கள். இவர்களது பிரச்சாரத்தை ஏற்று மக்கள் உள்ளே நுழைந்ததும் அப்போது தங்களது உண்மையான கொள்கையை வெளியிடுவார்கள். இதற்குப் பெயர் தான் தகிய்யா எனப்படுகின்றது. இவ்வாறு பொய் சொல்லி பிரச்சாரம் செய்வதை ராபிளிய்யாக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது நயவஞ்சகக் கொள்கையும் நாசக் கொள்கையுமாகும். […]

17) நபி மீது பொய்! நரகமே கூலி!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா பலவீனமான ஹதீஸ்கள், நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இஹ்யாவில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. நபி (ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் சொல்வதற்கு நரகமே கூலி என்பதை ஹதீஸ்களின் அடிப்படையில் கண்டோம். நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது இறை மறுப்பு என்றும், அதற்கு மரண தண்டனை கொடுத்தாலும் தவறில்லை என்றும் பல்வேறு அறிஞர்கள் கூறியுள்ளனர். அவற்றை இப்போது பார்ப்போம். நபி […]

15) அறிவிலிகள் கூறும் அகமிய ஞானம்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்கள், விஷயங்களின் ரகசியங்கள் அப்படியே காட்சியளிக்கும் போது தான் செவிவழிச் செய்தியான ஹதீஸை ஏற்பார்கள். இல்லையென்றால் அதை ஏற்க மாட்டார்கள். இப்படி ஒரு சாரார் இருப்பதாக கஸ்ஸாலி வாதிடுகின்றார். இந்த சாராரின் இத்தகைய சிந்தனை இறை மறுப்பாகும் என ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்ற கருத்தின் சுருக்கத்தைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். […]

19) ஸைபுத்தீன் ரஷாதி சரியான ராபிளியே!

ராபிளிய்யாக்கள் பற்றி ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிட்ட செய்தியைக் கடந்த இதழில் கண்டோம். அவர்கள் மேலும் கூறுவதாவது: எங்களுடைய மார்க்கம் தகிய்யா ஆகும். அதாவது தங்களது கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் போது, உண்மைக் கொள்கையை மறைத்துவிடுவது. அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்ததும் அப்போது உண்மையை வெளியிடுவதற்குப் பெயர் தான் தகிய்யா. இவ்வாறு பொய் சொல்வதை ராபிளிய்யாக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது நயவஞ்சகக் கொள்கை, நாசமான கொள்கையாகும். இந்த […]

18) வழிகெட்ட ராஃபிளிய்யாக்கள்

வழிகெட்ட ராஃபிளிய்யாக்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும், வரைமுறைகளையும் பற்றி இமாம் முஸ்லிம் அவர்கள் கூறிய செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம். பொய்யான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை இஸ்லாத்தில் புகுத்த வேண்டும் என்பது இஸ்லாமிய விரோதிகளின் மாபெரும் சதித் திட்டமாகும். இந்த சதித் திட்டத்திற்கு எதிராக இந்தச் சமுதாயத்தின் சத்திய ஆலிம்கள், உண்மையான நல்லடியார்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் அதன் ஆணிவேரைக் கண்டறிந்து அடையாளம் காட்டினார்கள். இந்த சதித் திட்டத்திற்கு எதிராக […]

16) அல்லாஹ்வை விட அபூயஸீத் சிறந்தவராம்?

கஸ்ஸாலியின் அறியாமை இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்த்து வருகிறோம். அதில் அறிஞர்கள் வழங்கிய அதிகமான மார்க்கத் தீர்ப்புகள், ஆன்மீகம், மறைமுக ஞானம் என்ற பெயரில் இஹ்யாவில் இடம்பெற்றுள்ள அபத்தங்கள் பற்றி அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களை நாம் பார்த்தோம். இப்போது, இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் என்பதற்கான அடுத்த காரணத்தைப் பார்ப்போம். இஹ்யாவில் அடங்கியிருக்கும் தீய நச்சுக் கருத்துக்கள் இஹ்யா உலூமித்தீன் (மார்க்க ஞானங்களை உயிரூட்டுதல்) என்ற இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் குர்ஆன், […]

14) இறைமறுப்பின் மறுபதிப்பே இஹ்யா

இஹ்யாவில் இடம் பெறுகின்ற கஸ்ஸாலியின் கருத்துக்களை தர்உத் தஆருள் என்று நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். அவர் குறிப்பிடுவதாவது: கஸ்ஸாலி வெளிப்படையான, அந்தரங்கமான ஞானத்தைப் பற்றியெல்லாம் தனது இஹ்யாவில் பேசுகின்றார். அப்போது அவர் கொள்கைச் சட்டங்கள் என்ற பாடத்தில் தெரிவிக்கின்ற ஒரு செய்தியை இப்போது நாம் பார்ப்போம். ஒரு சாரார் அல்லாஹ்வின் தன்மைகளிலும் பண்புகளிலும் மாற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். (உதாரணத்திற்கு, “அல்லாஹ்வின் கை என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும்’ […]

13) கிரேக்கத் தத்துவத்தில் இறங்கிய கஸ்ஸாலி

இஹ்யாவைப் பற்றி பல்வேறு மார்க்க அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த ஜூலை இதழில் ஹாபிழ் தஹபீ அவர்களின் விமர்சனத்தையும், விழிப்பூட்டும் எச்சரிக்கையையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியருல் அஃலாமின் நுபலாவில் குறிப்பிடுவதாவது: கஸ்ஸாலி பல்வேறு அறிஞர்களின் கண்டனத்திற்கும், கடிந்துரைக்கும் உள்ளானார். விதியைப் பற்றிய அவரது அறியாமைக் கருத்தும் கண்டனக் கணைகளுக்கு இலக்கானது. “விதியைப் பற்றி சில ரகசியங்கள் உண்டு. அதைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்பது […]

12) அல்லாஹ்வின் ஆற்றலுக்கு அணை போடும் கஸ்ஸாலி

அறிவுக்கடல் கஸ்ஸாலி என்று தமிழக ஆலிம்களில் பாராட்டப்படுகின்ற கஸ்ஸாலி ஷியா சிந்தனைவாதி என்பதைக் கடந்த இதழில் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் கண்டோம். இவர் அறிவுக்கடல் அல்ல! அறியாமைக் கடல் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளைப் பார்த்து இருக்கிறோம். மார்க்கம் என்ற பெயரில் அறியாமைக் களத்தில் நின்று இவர் ஆடிய ஆட்டம் சாதாரண ஆட்டமல்ல! சகிக்க முடியாத ஆட்டமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹீக்கு மாற்றாக, தவமிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தனி வஹீ உதிக்கும் என்ற இவரது கதையளப்பை […]

11) உமருக்குப் பதவி வெறியாம் உளறும் கஸ்ஸாலி

இஹ்யாவைப் பற்றி அறிஞர்களின் அடுக்கடுக்கான விமர்சனங்களையும் சாய்வு, சார்பு சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட அலாதியான அலசல்களையும் பார்த்து வருகிறோம். கனவில் கஸ்ஸாலியின் நூல்களைக் கண்டேன். அவரது நூல்களின் எழுத்துக்கள் படங்களாகக் காட்சியளித்தன என்று அபூநஸ்ர் அஹ்மத் பின் முஹம்மது பின் அப்துல்காதிர் என்பார் சத்தியமிட்டுக் கூறியதை நான் செவியுற்றேன் என அபூ ஆமிரில் அப்தரீ விமர்சனம் செய்துள்ளார். இதை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரில் தெரிவிக்கின்றார். கஸ்ஸாலியின் நூல்களுக்கு மதிப்பேற்றுவதற்காக மலிவான இந்தக் கனவுக் கதைகளை அடித்து […]

10) குர்ஆன் ஓதாதே! கூறுகிறார் கஸ்ஸாலி!

கஸ்ஸாலியின் இஹ்யாவைப் பற்றியும், அவரது நச்சுக் கருத்துக்களைப் பற்றிய அறிஞர்களின் மேற்கோள்கள் பற்றியும் பல்வேறு நூற்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை நாம் இதுவரை கண்டோம். “குர்ஆன் ஓதுவதிலும், ஹதீஸை எழுதுவதிலும் ஈடுபடக்கூடாது; ஏனென்றால் ஞானம் என்ற சட்டையை அணிவதை விட்டும் குர்ஆன், ஹதீஸின் ஈடுபாடு நம்மைத் தடுத்துவிடும்’ என்று கஸ்ஸாலி கூறியதாக காழி அப்துல்லாஹ் என்பார் கூறியதைக் கடந்த இதழ்களில் கண்டோம். அவர் கூறுகின்ற இந்தச் செய்தியை நேரடியாக இஹ்யாவிலிருந்து பார்ப்போம். யார் அல்லாஹ்வுக்காக ஆகி விட்டாரோ அவருக்காக […]

9) காதியானிகளின் ஆசான் கஸ்ஸாலி

இஹ்யாவை பல்வேறு இமாம்கள் விமர்சனம் செய்துள்ளனர். அந்த விமர்சனங்களை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரு அஃலாமின் நுபலா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். அந்த விமர்சனங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இமாம் மாலிக் அவர்கள் மக்களிடம் மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் போது, இதற்கு இதுதான் விளக்கம், இதற்கு இதுதான் கருத்து, இதைத் தாண்டி வேறு விளக்கமில்லை என்று சொல்லாமல் மிகப் பெரிய பேணுதலையும் பாதுகாப்பையும் மேற்கொண்டார்கள். இதை அவரது ஆதரவாளர்கள் நன்கு உணர்ந்து வைத்திருந்தார்கள். ஆனால் […]

8) பூமியின் பொய் களஞ்சியம் இஹ்யா

அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியர் அஃலாமின் நுபலா என்ற நூலில் எழுதியிருந்ததைக் கடந்த இதழில் கண்டோம். ஹாபிழ் தஹபீ அவர்களின் பிரம்மாண்டமான, பிரமாதமான இந்தக் குறிப்பு, முஸ்லிம்களின் மாபெரும் தலைவரான இப்னு தாஷிபீன் அவர்கள் சென்ற நேரிய பாதையை மிகத் தெளிவாக விளக்குகின்ற வரலாற்றுப் பதிவாகும். இறையியல், தத்துவவியல் மற்றும் சாபத்திற்கும் கோபத்திற்கும் இலக்கான சூபிஸக் கோட்பாடு போன்றவை எங்கிருந்து வந்தாலும் அந்த பித்அத் […]

7) மனிதனைக் கடவுளாக்கும் மடமைக் கொள்கை

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கஸ்ஸாலியின் “அல்மன்னூன் பிஹா அலா கைரி அஹ்லிஹா’ என்ற நூலை விமர்சனம் செய்யும் போது இப்னு தைமிய்யா அவர்கள் கூறுவதாவது: “தன் சக்திக்கு ஏற்ப மனிதன், இறைநிலைக்கு ஒப்பாவது தான் தத்துவவியல்” என்று சூபிகள் கூறுவது தான் இதுவரை நாம் கண்ட விஷயங்களிலேயே மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். உண்மை, தனித்தன்மை, செயல்பாடுகளில் அல்லாஹ்வுக்கு அடியானை ஒப்பாக்குகின்ற சூபிகளின் இந்த நிலைப்பாட்டில் ஒரு கூட்டம் அவர்களுடன் […]

6) அறியாமைக் கடல் கஸ்ஸாலி

அறியாமைக் கடல் கஸ்ஸாலி கஸ்ஸாலியின் ஆக்கங்களில் மண்டிக் கிடக்கின்ற வழிகேடுகள், அசத்தியக் கருத்துக்களை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் வண்டி வண்டியாக எடுத்து, அவற்றை அலசி ஆய்வு செய்திருக்கின்றார்கள். அவற்றின் சாராம்சக் கருத்துக்களை உங்களின் பார்வைக்குத் தருகின்றோம். தர்உ தஆருலில் அக்ல் வந்நக்ல் – அறிவுக்கும் இறைச்செய்திக்கும் இடையிலான மோதலைக் களைதல் என்ற தனது நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கஸ்ஸாலியின் மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலை விமர்சனம் செய்கின்றார்கள். மிஷ்காத்துல் அன்வார் […]

5) சூபிஸத்தின் சுய வரலாறு

சூபிஸத்தின் சுய வரலாறு சூபிஸத்தின் காலம் எப்போது துவங்கியது? முதல் மூன்று நூற்றாண்டுகளில் சூபிஸம் என்ற வார்த்தை பிரபலமாகவே இல்லை என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள். இப்னு தைமிய்யாவிற்கு முன்பு இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கல்தான் ஆகியோரும் கூறியுள்ளனர். உலக வாழ்க்கையில் நாட்டம் கொள்ளாமல் மறுமை வாழ்க்கையை மையமாகக் கொண்டு வணக்கத்தில் திளைத்த ஏழை எளியவர்களாக நபித்தோழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் சூபிகள் என்று அவர்களில் யாருக்கும் பட்டம் சூட்டப்படவில்லை. எனவே […]

4) சூபிஸம் – ஓர் ஆய்வு

சூபிஸம் – ஓர் ஆய்வு முன்னுரை சூபிஸம்… இது இஸ்லாத்தில் புகுந்துவிட்ட ஒரு புதிய கலாச்சாரமாகும். அதன் அடிப்படை நோக்கமே இஸ்லாமிய அமைப்பைத் தாக்கி, தகர்க்க வேண்டும்; அதன் ஒருங்கிணைப்பையும் ஒன்றிணைப்பையும் உருக்குலைக்க வேண்டும்; இஸ்லாமிய அமைப்பின் ஆளுமையை அடித்து நொறுக்க வேண்டும். முஸ்லிம்களை என்றும் எழ முடியாத ஏமாற்றுப் பேர்வழிகளாக்க வேண்டும். படைப்பு மற்றும் படைப்பினத்தின் இயற்கைத் தன்மைகளைத் தலைகீழாக மாற்றி விடவேண்டும். மனித அறிவு, சிந்தனைகளை முற்றிலும் மழுங்கடிக்க வேண்டும். நீண்ட நெடிய காலமாக, […]

3) இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 29:48)➚ ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் இந்த வசனத்திற்கு ஓர் அழகான விளக்கத்தை வழங்குகின்றார்கள். முஹம்மதே! இந்தக் குர்ஆனை உங்களுடைய சமுதாயத்திடம் சமர்ப்பிப்பதற்கு முன்னால் நீண்ட காலம் அவர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அப்போது எந்தவொரு நூலைப் படிக்கவும் எழுதவும் உங்களுக்குத் தெரியாது. இன்னும் […]

2) இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள்

“அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் உத்தரவின் பேரில் இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டிய உண்மைக் காரணங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூல் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி ஆவார். இவர் மொராக்கோ என்ற (மக்ரிப்) நாட்டைச் சேர்ந்த நவீன கால மார்க்க அறிஞராவார். அவர் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தைத் தான் ஏகத்துவத்தில் தந்துள்ளோம். இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனை […]

1) முன்னுரை

முன்னுரை: இமாம் கஸ்ஸாலி என்று அழைக்கப்படுகின்ற கஸ்ஸாலிக்கு உலக அளவில் ஒரு தாக்கமிருக்கின்றது. அது இந்திய அளவில் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. தமிழகத்தில் அவரது தாக்கம் எல்லை தாண்டி ஊடுறுவியிருக்கின்றது. “வானத்தின் ரட்சகனே! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்த அற்பனின் உள்ளத்தை ஒளிரச் செய்வாயாக!” என்று இங்குள்ள ஆலிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளிவாசல்களில் நடைபெறுகின்ற பாடசாலைகளில், மழலையர் பள்ளிக்கூடங்களில் பயில வருகின்ற பிஞ்சுகளின் நெஞ்சுகளில் இந்த நஞ்சை ஊற்றியும் […]