கேள்வி: பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போது வசதியில்லாத காரணத்தால் அகீகா கொடுக்கவில்லை. இப்போது கொடுக்கலாமா? அதற்கு நன்மை உண்டா? பதில்: மார்க்கத்தில் சில அமல்களைக் குறிப்பிட்ட காலத்தில் தான் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தால் அதை அந்தக் காலத்தில் தான் செய்ய வேண்டும். அதுவல்லாத நாட்களில் செய்யலாம் என்றால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமையான வணக்கங்களுக்கும் இது தான் சட்டமாகும். […]