Author: Basha

05) நிர்வாக திறன் நிறைந்தவர்

நிர்வாகத் திறன் நிறைந்தவர் ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருக்க வேண்டும்.பொருளாதாரம் தேசத்தின் முதுகெலும்பாகும். நாடும் நாட்டு மக்களும் முன்னேற, பொருளாதாரம் இன்றியமையாதது. உள்நாட்டு மொத்த உற்பத்தியை அதிகப்படுத்துவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் நாட்டின் வளத்தைப் பெருக்கும். உள்நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமான பாதையில் வழிநடத்துபவரே சிறந்த ஆட்சியாளர். நாட்டின் வளத்தின் மீது அக்கறை இல்லாமல் வெளிநாட்டின் இறக்குமதியை நம்பிப் பிழைப்பது நாட்டை அடைமானம் வைப்பதற்குச் சமம். இந்த நிலையில்தான் […]

04) வர்க்க பேதங்களை ஒழித்து கட்டியவர்

வர்க்க பேதங்களை ஒழித்துக் கட்டியவர் ஒன்றே குலம்! அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரக் களத்தின் போது, அனைத்து மதத்தவர்களின், ஜாதிக்காரர்களின், பலதரப்பட்ட மொழி இன மக்களின், பல நிறத்தவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக ‘ஒன்றே குலம்’ என்ற வெற்றுக் கோஷத்தை எழுப்புவார்கள். ஆனால் தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு தன் ஜாதியை, மதத்தை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமாக நடப்பவர்களாகவும் மற்றவர்களுக்கு அநியாயம் செய்பவர்களாகவும் நாடெங்கிலும் அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நேர் முரணாக நபிகள் நாயகம் (ஸல்) […]

03) ஆட்சி தலைவர் நபிகள் நாயகம்

நல்ல தலைவன் என்பவன் எந்த வித பேதமும் இல்லாமல், யாரையும் சாராமல் நடுநிலையுடன் நியாயமான தீர்வு வழங்குபவனாக இருக்க வேண்டும். திறமையுடன் செயல்படுதல், அன்பால், அரவணைப்பால் பிறரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல், ஒருமுறை முடிவெடுத்து செயல்படத் தொடங்கிவிட்டால் சற்றும் தயக்கம் காட்டாமல், முயற்சியிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடன் செயல்படுதல், எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பய உணர்ச்சியுமில்லாமல் நடந்து கொள்ளுதல், வெற்றி என்றாலும் சரி, தோல்வி என்றாலும் சரி, அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் போன்ற பண்புகள் கொண்டவராக ஒரு தலைவர் […]

02) நபிகளாரின் வாழ்க்கை குறிப்பு

நபிகளாரின் வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : முஹம்மது பிறப்பு : கி.பி. 570ஊர் : சவுதி அரேபியாவில் உள்ள மக்கா. குலம் : மிக உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குறைஷிக் குலத்தில் பிறந்தார். குலப் பெருமையை ஒழித்தார்கள். நிறம் : அழகிய சிவந்த நிறம் கொண்டவர்கள். நிறவெறியை ஒழித்தார்கள். மொழி : தலைசிறந்த மொழியாகக் கருதப்பட்ட அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மொழிவெறியை ஒழித்தார்கள். கல்வி : பள்ளி சென்று படிக்கவில்லை. கல்லூரி, பல்கலைக் கழகங்கள் சென்று […]

04) நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே. (முஸ்லிம்: 4575) ➚ நபி (ஸல்) அவர்களின் பரம்பரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் “கினானா’வைத் தேர்ந்தெடுத்தான்; “கினானா’வின் வழித்தோன்றல்களில் குறைஷியைரத் தேர்ந்தெடுத்தான்; […]

03) அரபியர்களின் அறியாமை பழக்கங்கள் மற்றும் வழிபாடுகள்

அரபியர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றி வந்தார்கள். பின்பு காலம் செல்ல செல்ல இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை மறக்க ஆரம்பித்தார்கள். நபியவர்கள் பிறப்பதற்கு முன் அரபியர்களிடத்தில் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்து காணப்பட்டன. சிலைகளை வழிபட்டனர் அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்கள் மற்றும் கால்நைடகளில் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். “இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது” என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங்களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். […]

02) முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு தவ்ராத், இன்ஜீல் உள்ளிட்ட முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை பற்றி முன்னரே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முஹம்மது என்றொரு தூதர் வருவார் என்றும் அவர் மகத்தான சில நற்குணம் கொண்டவராக இருப்பார் என்றும் அதிலே குறிப்பிடப்பட்டுள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையே […]

10) செல்வமும் இறை நம்பிக்கையும்

பரக்கத் என்ற அதிசயத்தைப் பற்றியும், அதைப் பெறுவதற்கான வழிகளையும் அதற்கான பிரார்த்தனைகளையும் குறிப்பிட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரக்கத்தை வேண்டி பல இடங்களில் பிரார்த்தனை செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம், அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபி (ஸல்) அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து “எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், […]

09) அருள் வளம்

பரக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள் இறைவனிடமிருந்து கிடைக்கப்பெறும் மறைமுக அருளான பரக்கத்தை அடைவதற்கான வழிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருடைய உணவு இருவருக்கு போதுமானது. இன்னும் இருவருடைய உணவு நான்கு நபர்களுக்கு போதுமானது. அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (முஸ்லிம்: 3837, 3836) ➚ பரக்கத் என்பது நம்முடைய லாஜிக்கிற்கு அப்பாற்பட்டது. அதாவது ஒருவருக்குத் தேவையான உணவைப் போட்டு அதிலேயே இரண்டு பேர் உண்ணலாம் என்று சென்னால் இது சாதாரணமாக நடக்காத காரியம் […]

08) பேராசை

முதியவர்களும் செல்வத்தை விரும்புவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி: 6420, 6421) ➚ பேராசை ஏன்றால் என்ன? நம்மீது உள்ள அனைத்துக் கடமைகளையும் பின் தள்ளிவிட்டு, செல்வம் ஒன்று மட்டும் தான் நோக்கம் என்று சென்றால் அது தான் போராசை. எதிர் காலத்தைக் […]

செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே!

“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர்(ரலி) (புகாரி: 1) ➚ இந்தச் செய்தி புகாரி, முஸ்லிம் உட்பட ஏராளமான புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸ் நூற்களில் முதல் செய்தி […]

இஸ்லாத்தின் பார்வையில் என்கவுண்டர்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை மக்களை நெறிப்படுத்துவதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் உலக நாடுகளில் பல வகையான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக, பல லட்சம் குற்றவாளிகளைத் தண்டித்த இந்தச் சட்டங்கள், அவ்வப்போது காலாவதி ஆவதும், திருத்தப்படுவதும் தொடர் கதையாய் நீண்டு கொண்டே போகிறது. பெரும்பாலான தண்டனைகள் மக்களின் கூட்டு மனசாட்சியை மையப்படுத்தியே […]

சோதனைகளை சகித்துக் கொள்வோம்

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமிய மார்க்கத்தைத் தன்னளவில் கடைப்பிடிப்பதற்குக் கூட இயலாத கால சூழலை நபிகள் பெருமகனாரும் அவர்களது தோழர்களும் மக்காவில் எதிர்கொண்டனர். உயிர் வாழவே இயலாத சூழல் உருவானது. எதை இழந்தாலும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் இழந்து விடக் கூடாது எனும் உயரிய போதனையை தம் தோழர்களுக்கு செய்து வந்த நபி (ஸல்) அவர்கள், எத்தகைய சோதனைகளின் போதும் பொறுமையை இழந்து விடாமலும், அதே நேரம் அந்தத் துன்பங்களை ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வதில் […]

எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை உலகத்தில் கோடிக்கணக்கான மக்களால் பலதரப்பட்ட மதங்கள், சித்தாந்தங்கள், கொள்கை – கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் எந்த மதத்தில் தங்களை அங்கம் வகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்களோ, ஆசைப்படுகின்றார்களோ, அந்த மதத்தில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை சுலபான முறையில் […]

08) உஸாமா பின் ஜைத் (ரலி)

1) நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராக இருந்தார் (புகாரி: 3730) ➚ 2) நபி (ஸல்) அவர்கள் இவரை ஒரு படைக்கு தளபதியாக நபிகளார் அனுப்பியுள்ளார்கள். (புகாரி: 3730) ➚ 3) இவருடைய தந்தையையும் ஒரு போருக்கு படைத்தளபதியாக நபியவர்கள் அனுப்பியிருந்தார்கள்.    (புகாரி: 3730) ➚ 4) மஹ்ஸமீ கோத்திரத்தில் ஒரு பெண் திருடியதால் அவருக்கு தண்டனையைக் குறைக்க இவருடைய பரிந்துரை கேட்கப்பட்டது. (புகாரி: 4304) ➚ 5) நபி (ஸல்) அவர்கள் இவரைக் […]

07) அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) 

1) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இனிய குரல் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.  (புகாரி: 5048) ➚ 2) இவர்களுடைய மகனுக்கு நபிகளார் இப்ராஹீம் என்று பெயர் சூட்டினார்கள்.  (புகாரி: 5467) ➚ 3) இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன் என இவர்களின் குலத்தை குறிப்பிட்டு நபிகளார் கூறினார்கள்.   (புகாரி: 2486) ➚ 4) இவருடைய குலத்தவர்கள் தங்களிடம் உணவு குறைந்து விட்டால் அனைவரும் தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் […]

06) முஆத்பின்ஜபல் (ரலி)

1) நால்வரில் ஒருவரிடம் அல்குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியோரில் இவரும் ஒருவர்.   (புகாரி: 3758) ➚ 2) இவர் நபியவர்களுடன் தொழுது விட்டு தன்னுடையை சமுகத்தாரிடம் சென்று இமாமாக தொழுகை நடத்துவார்கள்.   (புகாரி: 700, 701) ➚ 3) இவரை நபியவர்கள் யமனுக்கு ஆளுனராக அனுப்பினார்கள்.   (புகாரி: 1458) ➚ 4) வேதம் கொடுக்கப்பட்டவர்களை ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைக்கும் பணியை செய்தவர்கள்.   (புகாரி: 1458) ➚ 5) உபை பின் கஅப் (ரலி) அவர்களைப் பற்றி […]

05) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

1. நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாதி என்று சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.   (திர்மிதி: 3680) 2. உஹதுப்போரில் வீரமரணம் அடைந்த முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் நிலையை நினைவு கூறிய நபித்தோழர்.   (புகாரி: 1275) ➚ 3. அல்லாஹ்வின் தூதரின் மகன் மரணித்த போது நபியவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று வினவிய நபித்தோழர்.   (புகாரி: 1303) ➚ 4.உமர் (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அடுத்த இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்களில் இவருடைய பெயரையும் கூறினார்கள்.   (புகாரி: 1392) […]

04) ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

1 . நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மைகளைப் பற்றி வினவிய போது தீமையில் இருந்து தப்பிக்கொள்ள தீமையைப் பற்றி வினவியவர்.   (புகாரி: 3606) ➚ 2 . உஹதுப் போரில் இவர்களின் முன்னிலையிலேயே இவர்களின் தந்தை கொல்லப்பட்டார்கள்.   (புகாரி: 3290) ➚ 3 . உஸ்மான் (ரலி) அவர்களிடம் அல்குர்ஆனை மக்கள் பலவாறாக ஒதுகின்றனர். இதற்கு மாற்று வழி காணுவது பற்றி முறையிட்டவர்.   (புகாரி: 4987) ➚ 4. நபியவர்களின் மரணத்துக்கு பிறகு நடக்க இருக்கிற […]

03) கஅப் இப்னு மாலிக் (ரலி)

1. நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்று சபதம் எடுத்தவர்.   (புகாரி: 4418) ➚ 2. இவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது என்று கூறினார்கள்.   (புகாரி: 2757) ➚ 3. இவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறியுள்ளார்கள்.  (முஸ்லிம்: 5346) ➚ 4. பொய்யான […]

02) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)

1) சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர், (திர்மீதி: 3748) 2) இந்த நபித்தோழர் முஹாஜிர்களைச் சேர்ந்தவராவார்.  (புகாரி: 4061) ➚ 3) உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்த முஹாஜிர்களில் இவரும் ஒருவர்    (புகாரி: 4061) ➚ 4) உஹுதுப்போரில் இவருடைய கை துண்டிக்கப்பட்டது.   (புகாரி: 4063) ➚ 5) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டபோது அவர் நபிகளாரிடம் வந்தபோது எழுந்து சென்று கைகொடுத்து […]

01) காலித் பின் வலீத் (ரலி)

1 ) பனூ ஜதீமா குலத்தாரிடம் இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக இவரை நபிகளார் அனுப்பி வைத்தார்கள்? (புகாரி: 7189) ➚ 2 ) மூத்தா போரில் இவர் தலைமை ஏற்றபோது தான் அல்லாஹ் வெற்றி தந்தான்?  (புகாரி: 1246) ➚ 3 ) நபிகளார் முன்னிலையில் உடும்புக் கறியை சாப்பிட்டவர்?  (புகாரி: 5400) ➚ 4 ) நபிகளாரின் மனைவி மைமூனா ( ரலி ) , இவர்களின் சிறிய தாயார்?  (புகாரி: 5391) ➚ 5 ) […]

அழிவுகளுக்குக் காரணம்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் வாழும் இவ்வுலகில், பூகம்பம் , சுனாமி, நிலநடுக்கம், புயல், வெள்ளப் பெருக்கு, வறட்சி, நிலச்சரிவு, என்று இயற்க்கை சீற்றங்கள் மூலம் பெரும் அழிவு ஏற்படுகிறது.  மனிதர்கள் செய்யும் பாவச் செயல்களால் இது போன்ற மாற்றங்கள் பல இடங்களில் இடைவிடாது தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே […]

ஒழிக்கப்படவேண்டிய ஒடுக்கத்து புதன்!

இஸ்லாத்தின் தனித்துவமே அது மூடநம்பிக்கைகளை விட்டு விலக்கல் பெற்றிருப்பதுதான்.அத்தகைய மாண்பையும் மதிப்பையும் மாசுப் படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது முஸ்லிம்களின் சில நம்பிக்கை. மாற்றார்களின் பண்பாட்டிற்கு அச்சுப் பிசகாமல் ஒத்துப்போகிறது இந்த நம்பிக்கை. பிற மதத்தவர்களின் அனுஷ்டானங்களை இஸ்லாமிய போர்வையில் செயல்படுத்தி வருவது, அங்குலம் அளவிற்கு கூட ஏற்க முடியாததாகும். அப்படி சகித்துக்கொள்ள முடியாத மூடநம்பிக்கைகளுள் ஒன்று தான் ஸஃபர் மாத பீடையும், அம்மாதத்தின் ஒடுக்கத்துபுதனில் அரங்கேற்றப்படும் அனாச்சாரமான அனுஷ்டானங்களுமாகும். விவாகம்,வைபவம்,வியாபாரம் போன்ற எந்த நற்காரியங்களும் இம்மாதத்தில் துவங்கப்படாது. […]

கட்டணமில்லாத கடவுள் தரிசனம்

கையில் ஓர் ஈட்டி! வாயை விட்டு வெளியே தொங்கும் இரத்தச் சிவப்பு நாக்கு! கழுத்தில் ஒரு கருநாகப் பாம்பு! இது காவு கேட்கும் கடவுள் என்று பார்ப்பவர்கள் பயப்படும் வண்ணம் கடவுள் சிலைகளின் தோற்றம் அமைந்திருக்கின்றது. அதற்கேற்ப கடவுளுக்காக அவர்கள் உயிர்ப் பிராணிகளைப் பலி கொடுக்கின்றனர். உணவுப் பண்டங்களையும் படைக்கின்றனர். கடவுள் தரிசனம் என்றாலே பூஜை, புனஸ்காரம் செய்வதற்குக் கையில் பூ வாங்கிச் செல்ல வேண்டும்; பழம், பத்தி, சாம்பிராணி வாங்க வேண்டும்; சுடர் விளக்கேற்ற எண்ணெய் வாங்க வேண்டும்; சூடம் வாங்க வேண்டும். இத்தனையும் […]

கடவுளைக் காக்கும் காவல்துறை

அவர்களின் கடவுள்களிடம் சென்று சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார். பின்னர் அவற்றிடம் (நெருங்கிச்) சென்று பலமாக அடித்தார். அவர்கள் அவரை நோக்கி விரைந்து வந்தனர். நீங்கள் செதுக்கிக் கொண்டதை வணங்குகிறீர்களா? அல்லாஹ்வே உங்களையும், நீங்கள் செய்தவற்றையும் படைத்தான் என்றார். (அல்குர்ஆன்: 37:91-95)➚ இந்தச் சிலைகளுக்குக் கடுகளவும் ஆற்றல் இல்லை. சாப்பிடக் கூட சக்தியில்லை. தன்னைத் தாக்குகின்றவனைத் தடுக்கவும், சப்தம் போடவும் சக்தியில்லாத இந்தச் சிலைகளை வணங்கலாமா? என்ற […]

அவரும் அவளை நாடினார்

சூரத்துல் யூசுஃப் என்ற 12வது அத்தியாயத்தின் 24வது வசனத்திற்குப் பொருள் செய்வதில் அறிஞர்களுக்கு மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யூசுப் (அலை) அவர்கள் ஒரு மன்னருடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். மன்னருடைய மனைவி யூசுஃப் நபியவர்களின் அழகில் மயங்கி அவரை தவறான பாதைக்கு வற்புறுத்துகின்றார். இதைப் பற்றி இறைவன் 24வது வசனத்தில் குறிப்பிடுகின்றான். இவ்வசனத்திற்கு ஒரு சாரார் பின்வருமாறு பொருள் செய்கின்றனர். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் […]

மறுவுலக நம்பிக்கை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையையும் உள்ளத்தில் பதிய வைக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஓர் அறிவார்ந்த அறிவியல் […]

இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல1

இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல! சமத்துவ வாதம் சகோதரத்துவ வாதம். இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மை இல்லாத மார்க்கம், இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம். இப்படி வகை வகையான பழிச் சொற்களால் இஸ்லாம் வறுத்தெடுக்கப்படுகின்றது. இஸ்லாத்தைத் தவிர உலகத்தில் எந்த ஒரு மதமும் தனக்கு முன் இப்படிப்பட்ட அடைமொழிகளையும் அவப்பெயர்களையும் சுமந்திருக்காது. அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது களங்கம் சுமத்தப்படுகின்றது. எங்காவது வெடிகுண்டு வெடித்து விட்டால் போதும்! உடனே […]

நபிகளார் எப்போது பிறந்தார்கள்?

இறைவனின் இறுதித் தூதுவராக அரபுலகத்தில் வருகை தந்து, மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி, அழகிய வாழ்க்கை முறையை இவ்வுலகத்திற்குத் தந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறப்பு தொடர்பாகப் பல மாறுபட்ட கருத்துக்கள் நபிமொழி மற்றும் வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தவொரு தனிநபரின் பிறப்பு, இறப்பு அடிப்படையில் எந்தச் சிறப்பும் இல்லை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். நபி (ஸல்) அவர்களின் பிறப்பை மையமாக வைத்து, மார்க்கத்திற்கு முரணான வகையில் மீலாது விழா கொண்டாடும் […]

ஷைத்தான் பெயரால் பித்தலாட்டங்கள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதனுக்கு ஷைத்தானால் சில இடைஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.  مَا مِنْ بَنِي آدَمَ مَوْلُودٌ إِلاَّ يَمَسُّهُ الشَّيْطَانُ حِينَ يُولَدُ فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ غَيْرَ مَرْيَمَ وَابْنِهَا “ஆதமின் […]

வறுமை என்பதும் சோதனையே

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். வறுமை சிறப்பிற்குரியது, வறுமை, கஷ்டம் ஏற்பட்டால் அதனை சோதனை என்று விளங்காமல் இறைவன் நம்மை தண்டித்து விட்டான் என்று என்ணும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இறைவன் நம் துஆவையெல்லாம் ஏற்கமாட்டான். இது முஸீபத்து என்று எண்ணி கவலைப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தை […]

« Previous Page