Author: Mukthiyaar Basha

படைத்தவனின் பாதையை நோக்கிய பயணம்!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் வாழும் இந்த உலகில் பல கோடானகோடி மக்கள் வாழ்கிறார்கள். எல்லா மனிதர்களுமே ஒரே மார்க்கத்திலும், கொள்கையிலும், கோட்பாட்டிலும் இல்லை. ஒவ்வொரும் தனித்த சில கூட்டங்களாகவும், சில கொள்கையுடைவர்களாவும் பிரிந்து, பிளவுபட்டுக் கிடக்கின்றனர். இப்படி இருக்கிற சமூகத்தில் யாருக்கும் வழங்கப்படாத சிறப்புகள் நிறைந்த கண்ணியங்களைப் பெற்றுத் […]

படைத்தவனின் ஆற்றலுக்கு முன்னால் படுதோல்வி அடையும் மனிதன்

‘‘ஒரு மனிதனைப் பொறுத்தவரை சிறிய காலடிதான் இது. ஆனால், மனித குலத்தைப் பொறுத்தவரை இது பெரும் பாய்ச்சல்” இவை நிலவில் கால் வைத்தவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன வாசகங்கள். “செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கும்பட்சத்தில், இந்நூற்றாண்டு இறுதிக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வசிப்பதற்கான சூழலை ஏற்படுத்த முடியும்” இவை உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சொன்ன வாசகங்கள். சென்னையிலிருந்து நெல்லைக்கும், நெல்லையிலிருந்து சென்னைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் விடுவதைப் போல […]

புனிதம் காப்போம்

இந்த உலகில் இஸ்லாம் எனும் உன்னத மார்க்கத்தை ஏற்ற நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொர்க்கம் செல்வதற்குரிய காரணிகள் எதுவென எவற்றையெல்லாம் நமக்குச் சுட்டிக் கட்டினார்களோ அவற்றையெல்லாம் நம்மால் இயன்ற வரை நாம் செய்து வருகிறோம். காலையிலிருந்து மாலை வரை கால் கடுக்க நின்றோ, அல்லது வெயிலைப் பொருட்படுத்தாமல் இரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்தோ அல்லது ஏசி அறைக்குள் அமர்ந்தபடி எட்டு மணி நேரம் வேலை பார்த்தோ பொருளாதாரத்தைச் சம்பாதிப்பது ஒரு பொருட்டல்ல! அந்தப் பொருளாதாரத்தை […]

ரமலான் தந்த பாடம்: அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் முழுக்கத் தொடரட்டும்

அல்குர்ஆன் வாழும் வேதம் மட்டுமல்ல! அது ஆளும் வேதம் என்பதை ஒவ்வொரு ரமளானும் நிரூபித்துக் காட்டுகின்றது. நாம் பாராத புதுப் புது முகங்கள்! அதுவரை பள்ளி பக்கமே வாராதிருந்து இப்போது பள்ளியில் அடியெடுத்து வைத்த எத்தனையோ தோற்றங்கள்! ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது. இவ்வளவு சிறப்பும் எதனால்? அல்லாஹ் இம்மாதத்தில் குர்ஆனை இறக்கியருளியதால்!’ குர்ஆன் […]

கிலாஃபத் ஒரு பார்வை

முன்னுரை ஒவ்வொரு தனிமனிதனும் ஓட்டுமொந்த மனித குலமும் சிறந்து விளங்குவதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் இஸ்லாம் வழங்கி இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களான அல்குர்-ஆன் மற்றும் தபிமொழிகளைப் படிக்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றை அறியாத சரியாகப் புரித்து கொள்ளாத லெ முஸ்லிம்கள் தாங்களும் வழிகெடுவதோடு பிறரையும் வழிகெடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக கிலாஃபத் எனும் பெயரில் உலகில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடைமை என்றும் இஸ்லாமிய ஆட்சி […]

அன்பின் வேறுபாடு இம்மையும் மறுமையும்

இந்த உலகில் வாழும் நமக்கு நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால் நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையும். வசதிகளும் நிரந்தரமாக வழங்கப்பட்டதல்ல. அவை அனைத்தும் குறிப்பிட்ட காலம் வரைதான் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்குப் பூமியில் தங்குமிடமும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கை வசதியும் உண்டு.(அல்குர்ஆன்: 2:36) ➚ உறவு ஓர் அருட்கொடை நிரந்தரமில்லா இவ்வுலகில் குறிப்பிட்ட காலம் வரை நாம் வாழ்வதற்கு ஏராளமான அருட்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் உறவு என்னும் அருட்கொடை உண்மையிலேயே […]

இஸ்லாம் பரிபூரணமான மார்க்கம்

ஆன்மீக ரீதியாகயும், ஆன்மீகம் அல்லாத வகையிலும் உலகில் எண்ணற்ற கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் விட இஸ்லாமிய மார்க்கம் தனித்து விளங்குகிறது. இவ்வாறு ஏனைய வழிமுறைகளைக் காட்டிலும் இஸ்லாத்தை வேறுபடுத்திக் காட்டுகிற அம்சங்களில் முக்கியமான ஒன்று, அதனுடைய பரிபூரணமான தன்மை. இதோ இறைமறையில் இறைவன் குறிப்பிடுவதைப் பாருங்கள். இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருத்திக் கொண்டேன். (அல்குர்ஆன்: 5:3) ➚ இஸ்லாம் […]

சூழலைக் காக்கும் சுகாதாரப் பெருநாட்கள்

இஸ்லாத்தில் இரு பெருநாட்கள் உள்ளன. ஒன்று அண்மையில் நடந்த முடிந்த ஈதுல் ஃபித்ரு எனும் நோன்பு பெருநாள் எனும் சகைத் திருநாள். இன்னொன்று, இனி வரவிருக்கின்ற ஈதுல் அல்ஹா எனும் தியாகப் பெருநாள். இரண்டு பெருநாட்களும் தர்மத்தின் அடிப்படையில் அமைந்தவையாகும். நோன்புப் பெருநாளின்போது பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன்பு உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். இது நோன்பில் ஏற்பட்டிருக்கும் குறைகளைக் களைந்து விடுகின்றது என்று மார்க்கம் போதிக்கின்றது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் […]

ஈமானை அதிகரிக்கச் செய்யும் அதிசயங்கள்..!

இறைவனை மட்டும் வணங்கி வழிபடுகின்ற முஸ்லிம்களின் உள்ளங்கள் என்பது ஈமானால் நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக. இறைவன் தன்னுடைய புறத்திலிருந்து ஏராளமான அதிசயங்களையும் – மகத்தான அற்புதங்களையும் நிகழ்த்தி ஒவ்வொருவரின் ஈமானையும் உறுதிப்படுத்துகின்றான்.  இறைவனின் மீது அளப்பரிய நம்பிக்கையை வைத்து வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அவர்கள் எண்ணிப் பார்த்திராத வகையில், இறைவன் தன் புறத்திலிருந்து அறியாப்புற வகையில் பேருபகாரம் செய்கின்றான். முதலில் ஒரு அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபிமார்களுக்கு இறைவன் வழங்கிய பலதரப்பட்ட அற்புதங்கள் அதிசயங்கள் […]

வணக்க வழிபாடுகள் வணக்கத்திற்குரியவனுக்கே

இந்தத் தலைப்பைப் பார்ந்தவுடன், அல்லாஹ் அல்லாதவர்களை வழிபடும் இணைவைப்புக் காரியங்களைப் பற்றிய ஆக்கம் இது என நினைக்கலாம். ஆனால் அது தொடர்பாக தமது மாத இதழ்களிலும் நூல்களிலும் ஏராளமாக கட்டுரைகள் வந்துள்ளன. வணக்கத்திற்குரியவனுக்காக மட்டும் செய்யும். வணக்க வழிபாடுகளில் கலப்பு ஊடுருவி எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும், அதுவே நம்மை நரகில் கூடத் தள்ளிவிடும் என்பதையும் அறிவதற்கான ஒரு சிறிய ஆக்கம் தான் இது. வணக்க வழிபாடுகளில் நாம் கவனிக்கத் தவறிய பகுதியே இது என்பதை […]

எடையைக் கூட்டும் இனிய திக்ருகள்

பொதுவாக கொள்கைச் சகோதரர்களிடம் சிறிய சிறிய அமல்கள் செய்வதில் கவனமின்மை இருந்து வருகின்றது. ஆனால் சிறிய அமல்கள் பெரிய பலன்களைப் பெற்றுத் தரும் வகையில் அமைந்து விடுகின்றன. நாளை மறுமையில் ஒவ்வொருவரும் தமது அமல்களை எடை போடுகின்ற மீசான் என்னும் தராசைச் சந்தித்தே ஆக வேண்டும். இதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. தராசு உண்மையே! அந்நாளில் (நன்மை, தீமைகளை) எடை போடுதல் உண்மையாகும். யாருக்கு அவரது (நன்மையின்) எடைகள் கனத்து விட்டதோ அவர்களே வெற்றியாளர்கள். யாகுக்கு […]

ஒப்பீடுகளும், உவமைகளும்

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மார்க்கத்தை மக்களுக்கு விளக்கும்போது சில ஒப்பீடுகளையும் உவமைகளையும் கூறி விளக்குவார்கள். அந்த அற்புதமான உதாரணங்களில் சிலவற்றை இங்கு காண்போம். நல்ல அண்டை வீட்டுக்காரியும், தீய அண்டை வீட்டுக்காரியும் அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! 93 பெண் (கடமையானதைத் தொழுது தொழுகைகளையும்) அதிகமாகத் தொழுகிறாள். எனினும் அவன் தனது நாவினால் (அண்டை வீட்டாருக்கு தொல்லை கொடுக்கிறாள். (அவனது மறுமை நிலை என்ன)” என்று கேட்டார். […]

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்

இந்த உலகிலும், இதற்குப் பிறகுள்ள மறுமை வாழ்விலும் வெற்றி பெற வேண்டும் என்கிற சிறந்த நோக்கத்தோடு வாழும் முஃமின்களுக்கு மார்க்கத்தில் நிறைய கட்டளைகள், அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது தொடர்பாக மார்க்கத்தில் அதிகம் போதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாசு இப்போது சில செய்திகளை அறிந்து கொள்ள இருக்கிறோம். படைத்தவனின் கட்டளை அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஒப்புக் கொள்கிற நாம். அந்த நம்பிக்கையை உண்மைப்படுத்தும் வகையில் அந்த ஏக […]

del – நஃப்ஸைத் தூய்மைப் படுத்துவோம்!

உலகத்தில் மனிதர்களைப் படைத்திருக்கின்ற இறைவன், மனிதர்கள் தங்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவும். உள்ளங்களில் படிந்திருக்கின்ற அசுத்தங்களை நீக்குவதற்காகவும். நம்முடைய வாழ்க்கையில்நாம் செய்து வருகின்ற ஏராளமான பாவங்களிலிருந்து நம்மை நாமே பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும் ஏராளமான வாய்ப்புகளை மனிதர்களுக்கு வழங்குகின்றான். மனிதர்களின் வாழ்க்கையில் உடல் உறுப்புக்கள் ரீதியாக ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுகின்ற பொழுது, ஏதேனும் நோய் ஏற்படுகின்ற போது அவற்றைச் செய்வதற்காகவும்.குணப்படுத்துவதற்காகவும் மனிதன் பலவிதமான மேற்கொள்கின்றான். முயற்சிகளை நீண்ட நெடிய காலம் வாழ வேண்டும் என்பதற்காகத் தனக்கு ஏற்பட்டிருக்கின்ற நோய் […]

எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும்

உலகத்தில் கோடிக்கணக்கான மக்களால் பலதரப்பட்ட மதங்கள், சித்தாந்தங்கள், கொள்கை – கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் எந்த மதத்தில் தங்களை அங்கம் வகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்களோ, ஆசைப்படுகின்றார்களோ, அந்த மதத்தில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை சுலபான முறையில் தொடர்கிறார்கள். இஸ்லாம் அல்லாத வேறுவேறு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், வேறுவேறு சித்தாந்தத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும் ஏற்படுகின்ற சிரமம், பாதிப்பு, சோதனை என்பது மிகமிகக் குறைவு தான் என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். ஆனால் […]

07) பலவீனமான செய்திகள்

மண்ணறை வேதனை தொடர்பாக பலவீனமான செய்திகள் சிலவையும் இருக்கின்றன. மக்களை அச்சுறுத்தும் வகையில் அந்த செய்திகள் இருப்பதால் பலரும் அதை அறிவுரையாக எடுத்துக் கூறுகின்றனர். ஆதாரப்பூர்வமான செய்திகளை வைத்து மக்களுக்கு அறிவுரை சொன்னாலே போதுமானது. பலவீனமான செய்திகளை கொண்டு மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே கப்ர் வேதனை தொடர்பாக வந்துள்ள சில பலவீனமான செய்திகளை அறிந்து கொள்வோம். ஹதீஸ் 1: தீண்டும் பாம்பு எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் […]

06) மண்ணறை வாழ்க்கை வளமாக …

எந்தெந்த காரணங்களால் மண்ணறையில் வேதனை கிடைக்கின்றது என்பதை ஹதீஸ்களின் துணையுடன் கண்டோம். அவற்றை விட்டும் முற்றாக விலகி இருப்பதுடன் நம் மண்ணறை வாழ்க்கையை வளமாக்க வேண்டிய முயற்சிகளை அறிந்து, அதில் ஈடுபட வேண்டும். மண்ணறை வேதனையிலிருந்து தப்பித்து இன்பமான வாழ்வை மண்ணறையில் வாழ்வதற்குரிய வழிமுறைகளை அல்லாஹ்வின் தூதர் கற்றுந்தந்துள்ளார்கள். அவற்றை இனி காண்போம். நல்லறங்கள் மண்ணறை வேதனைக்கு புறம் பேசுதல், திருடுதல் போன்ற பாவங்கள் காரணமாக இருப்பதை போன்று மண்ணறையில் இன்பம் பெறுவதற்கு நல்லறங்கள் காரணமாக அமைந்து […]

05) மண்ணறையில் தண்டனைக்கான காரணங்கள்

மண்ணறையில் அளிக்கப்படும் கடுமையான வேதளைகளை அறிந்து கொண்ட முஸ்லிம் அவ்வேதனைக்கான காரணங்கள் என்ன என்பதையும் அறிந்து கொள்ள தீவிரம் காட்ட வேண்டும் நாம்தான் இறைநம்பிக்கையாளர்கள் ஆயிற்றே? நம்மை அல்லாஹ் தண்டிப்பாணி? என்ற மிதப்பான எண்ணம் ஒரு போதும் நம்மில் துளிர்விட அனுமதிக்க கூடாது உலகில் நாம் புரியும் பல்வேறு தீய செயல்கள் நம் மண்ணறை வேதளைக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இவற்றை ஒரு இறைநம்பிக்கையாளர் செய்தாலும் அவரும் மண்ணறையில் வேதனைக்கு உட்படுத்தப்படுவார் ஆகவே மண்ணறை வேதனைக்கான காரணங்கள் […]

04) நல்லோர்களின் நிலை

இதுவரை தீயவர்களின் மண்ணறை வாழ்க்கை எப்படி அமையும்? என்பது தொடர்பான தகவல்களை பார்த்தோம். அல்லாஹ் அத்தகையவர்களிலிருந்து நம்மை காப்பானாக என்ற பிரார்த்தனையுடன் இனி நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை எப்படி அமையும்? மண்ணறையில் அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய இன்பங்கள் என்ன என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அலசுவோம். வேதனையின்றி…… தீயோர்களின் மண்ணறை வாழ்வு எவ்வாறு அமையும் என்பது அவர்களின் உயிர் கைப்பற்றப்படும் முறையிலிருந்தே அவர் அறிந்து கொள்வதை போல நல்லோர்களின் மண்ணறை வாழ்வு நல்விதமாக அமையும் என்பதும் அவர்களின் உயிர் […]

03) தீயவர்களின் நிலை

உயிர் கைப்பற்றப்படும் போது இறைமறுப்பாளர்கள் படும் அவஸ்தையை திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது. (ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! (அல்குர்ஆன்: 8:50) ➚ அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்? அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதை அவர்கள் பின்பற்றியதும், அவனது திருப்தியை வெறுத்ததுமே இதற்குக் காரணம். எனவே அவர்களின் செயல்களை அவன் […]

02) மரண சிந்தனை

இறைவனை தவிர உள்ள அனைத்துமே குறிப்பிட்ட தவணையின் அடிப்படையிலேயே இயங்கி கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் அதற்குரிய தவணையை அடைந்ததும் மரணத்தை எய்துவிடுகின்றன. நமக்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. தவணை முடிந்ததும் மரணத்தை தழுவியே தீருவோம் என்ற மரண சிந்தனையை எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் மரணம் தான் நம்மை மண்ணறைக்கு அழைத்து செல்லும் கருவியாகும். இவ்வுலக வாழ்க்கையிலிருந்து பர்ஸக் வாழ்க்கைக்கு நம்மை அழைத்து செல்ல வரும் அழையா விருந்தாளியே மரணம். பல இறைமறை வசனங்களும் […]

01) முன்னுரை

பரபரப்பாக இயங்கும் தற்கால சூழ்நிலையில் மனிதர்கள் முக்கியமான பல விஷயங்களை மறந்து வாழ்கின்றனர். இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிய முஸ்லிம்கள் இவ்வுலக வாழ்க்கையின் பரபரப்பிலும், கவர்ச்சியிலும் சிக்கியவர்களாக. தாங்கள் ஏன் படைக்கப்பட்டோம் என்பதை கூட மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகம் நிலையானதல்ல என்றாவது ஒரு நாள் மரணித்து இவ்வுலகை விட்டும் நிரந்தரமாக பிரிந்து செல்வோம். மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு இத்தகைய இஸ்லாத்தின் போதனைகளை மறந்து இவ்வுலகமே நிலையான வாழ்க்கை என்பது […]

இத்தாவும் இல்லாத விதிமுறைகளும்

கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்தக் கால கட்டமே இத்தா எனப்படும். இத்தா என்பதற்கு காத்திருப்புக் காலம், கணித்தல், எண்ணுதல், காத்திருத்தல் என்று பல்வேறு பொருள்கள் உள்ளன. இதனை நாம் திருமறைக் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம் கணவனை இழந்த பெண்களின் இத்தாக் காலம் உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் […]

03) தந்தையும், மகனும்

அந்த வீட்டுக்குள் இருந்து தான் அந்தக் குரல் கேட்டது . “தந்தையே !” “நீங்கள் பேசுவதை இது கேட்குமா ? “நீங்கள் செய்வதைப் பார்க்குமா ??” “எந்த பயனையாவது கொடுக்குமா ??” “பிறகு ஏன் இதைப் போய் வணங்கிக்கொண்டு இருக்கிறீர் ??!” அது ஒரு இளைஞனின் குரல்! ஒரு சிங்கத்தின் கர்ஜனையைப் போல அந்த குரல் ஒலித்தது. அந்த ஊரின் மதிப்புமிக்க ஒரு பெரியவரின் வீட்டில் தான் அந்த இளைஞர் இப்படி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார் . […]

02) இறைத்தோழர் இப்ராஹிம் (அலை )

அன்புள்ள குழந்தைகளே! அருமைச் செல்வங்களே ! அல்லாஹ்வைத் தெரியுமல்லவா உங்களுக்கு ? நம்மை எல்லாம் படைத்தவன்…..! இந்த பிரபஞ்சத்தின் பேரரசன்……..! அளவே இல்லாத அன்பாளன்……..! கருணையாளன்……..! நமக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கியவன்……! ஒவ்வொரு பொருளையும் கண்காணித்துக் கொண்டு இருப்பவன்….! சரி , அவனது தோழரைப் பற்றித் தெரியுமா ? யார் அவர் ? அவர் மட்டும் எப்படி இறைவனுக்கு தோழனாக ஆனார் ? இன்னொரு விசயமும் சொல்கிறேன் கேளுங்கள் ! அவர் இறைவனுக்கு தோழர் மட்டுமின்றி , […]

01) முன்னுரை

உலகில் முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் முன்மாதிரியாக இப்ராஹிம் அலை அவர்களை அல்லாஹ் தேர்வு செய்துள்ளான் . இப்ராஹிமின் மார்க்கம் தான் இஸ்லாம் என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடுகிறான் . இப்ராஹிம் (அலை) அவர்களை அறிந்து கொள்ளாமல், இஸ்லாத்தை முழுமையாக நம்மால் அறிய முடியாது . ஓரிறைக் கொள்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் புரிந்து கொள்ளவும் , அதைப் பிரச்சாரம் செய்வதை அறிந்து கொள்ளவும், இப்ராஹிம் (அலை) அவர்களைக் கற்பது அவசியம் ஆகிறது . […]

மனிதனைப் பக்குவப்படுத்தும் மறுமை நம்பிக்கை

மறுமையை நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். மனிதர்களைச் சீர்திருத்த அனுப்பப்பட்ட அத்தனை இறைத்தூதர்களும் தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்தது போலவே மறுமை நம்பிக்கையையும் போதித்தார்கள். இவ்வுலகத்துடன் வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை. மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே அனைத்து மனிதர்களும் ஒன்று திரட்டப்பட்டு இறைவன் முன்னிலையில் நிறுத்தப்படுவார்கள். அவ்வுலகில் மனிதர்களின் செயல்களுக்குரிய கூலி வழங்கப்படும். நன்மை செய்தால் அதற்குரிய கூலியும், தீமை செய்தால் அதற்குரிய தண்டனையும் இறைவனால் வழங்கப்படும். எனவே அந்நாளை அஞ்சி வாழுங்கள் […]

சோதனையின்றி சொர்க்கமில்லை

ஆரம்ப கால கட்டத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடி, உதை ஊர் நீக்கம், அடக்கத்தலம் தர மறுப்பு எனப் பல்வேறு விதமான சோதனைகளை கொள்கைச் சகோதரர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனம்தான் ஆறுதலாக எடுத்துச் சொல்லப்பட்டது. “உங்களுக்கு முன்சென்றோருக்கு ஏற்பட்டதைப் போன்று உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என எண்ணிக் கொண்டீர்களா? அவர்களுக்கு வறுமையும் நோயும் ஏற்பட்டது. இறைத்தூதரும் அவருடனிருந்த நம்பிக்கை கொண்டோரும் “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று கூறும் அளவிற்கு உலுக்கப்பட்டார்கள். […]

18) நபிகள் நாயகத்திற்கு மட்டும் அனுமதி ஏன்?

முஸ்லிம்கள் அதிகபட்சமாக நான்கு திருமணங்கள் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. முஸ்லிம்கள் அவ்வாறு திருமணம் செய்து கொள்வது இல்லை என்றாலும் பல்வேறு அறிவுப்பூர்வமான காரணங்களின் அடிப்படையில் மார்க்கத்தில் அதற்கு அனுமதி உண்டு. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் செய்துள்ளார்களே? என்று கருதலாம். நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் செய்யலாம் என்பது எல்லோருக்குமான சட்டமல்ல. நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள பிரத்தியேகமானதாகும். நபிகள் நாயகத்திற்கு மட்டும் இதில் சலுகை ஏன்? என்று நினைக்கலாம். […]

17) வயது வரம்பு என்ன?

இதில் இன்னொரு விஷயத்தையும் சிந்திக்க வேண்டும். பெண்ணின் திருமண வயது இதுதான் என்று தீர்மானிப்பவர்களின் நிலையும் ஒரு தெளிவில்லாமலேயே உள்ளது. 18 வயதில் தான் பெண் திருமணம் செய்ய வேண்டும் என்றும் சிலரும் 21 வயது பெண்ணின் சரியான திருமண வயது என்று வேறு சிலரும் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் என்ன வரம்பை நிர்ணயித்தாலும் நிச்சயம் அது அனைவருக்குமான பொருத்தமான அளவுகோலாக இருக்கப் போவதில்லை. இந்தியாவை எடுத்துக் கொள்வோம். பல மொழி பேசும் மக்கள் கலந்து வாழும் […]

16) ஆயிஷா (ரலி)

திருமணத்தின் போது வயது 6 இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் போது வயது 9 திருமணத்தின் போது நபியின் வயது 50 நபிகள் நாயகம் திருமணம் செய்த பெண்களிலேயே ஆயிஷா (ரலி) அவர்கள் தான் மிகக்குறைந்த வயதுடையவராகவும் கன்னிப் பெண்ணாகவும் இருந்தார்கள். பெண்கள் மீதான ஆசை காரணம் இல்லை என்றால் சிறுவயது பெண்ணை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தத் திருமணத்திற்கும் இதுபோன்ற குற்றச்சாட்டைக் கூற முடியாது என்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. […]

15) மைமூனா (ரலி)

விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின் வயது 61 நபியுடன் வாழ்ந்த காலம் 3 வருடம் வாழ்க்கைத் துணையின்றி இருந்த மைமூனா (ரலி) அவர்களைப் பெண் பேசுவதற்காக ஜஅஃபர் பின் அபீதாலிப் அவர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். மைமூனா (ரலி) அவர்கள் பொறுப்பை தமது சகோதரி உம்முல் ஃபழ்ல் அவர்களின் கணவர் அப்பாஸ் (ரலி)யிடம் ஒப்படைத்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (ஃபத்ஹுல்பாரி […]

14) ஸஃபிய்யா (ரலி)

வயது 17 விதவைப்பெண்மணி திருமணத்தின் போது நபியின் வயது 61 நபியுடன் வாழ்ந்த காலம் 3 வருடம் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் யூதக் குடும்பத்தைச் சார்ந்த பனூ குரைளா என்ற கூட்டத்தின் தலைவியரில் ஒருவராவார். யூதக் குடும்பத்தில் இவர்களைத் தவிர வேறு எவரையும் நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. மதீனாவில் வாழ்ந்த யூதர்களில் பனூ குரைளா கூட்டத்தினர் தான் வலிமை வாய்ந்தவர்கள். இவர்களின் தலைவராகத் தான் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களின் தந்தை […]

13) ஜுவைரிய்யா (ரலி)

வயது 36 விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின்      வயது 60 நபியுடன் வாழ்ந்த காலம் சுமார் 4 வருடம் ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு முஸ்லிம்களின் பகைவர் கூட்டங்களில் ஒன்றான பனூ முஸ்தலக் கோத்திரத்தினருடன் போர் நடந்தது. இப்போரில் முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். எதிரிகளில் பெரும்பாலோர் கைது செய்யப்பட்டனர். கைதிகளில் ஒருவராகத் தான் ஜுவைரிய்யா (ரலி) இருந்தார்கள். இப்போரில் அவர்களின் கணவர் முஸாஃபிஉ என்பவர் கொல்லப்பட்டார். போரில் கிடைத்த கைதிகளை பங்கிடும் போது ஜூவைரிய்யா […]

12) உம்மு ஹபீபா (ரலி)

வயது 36 விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின் வயது 59 நபியுடன் வாழ்ந்த காலம் 4 வருடம் நபிகள் நாயகத்தின் ஆரம்ப கால மக்கா வாழ்க்கையில் அங்கிருந்த எதிரிகளின் தலைவர்களில் ஒருவர் அபூசுஃப்யான் ஆவார். அவரது மகள்தான் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். இவரது தந்தை அபூசுஃப்யான் இஸ்லாத்திற்கு எதிராக இருந்தபோதுதான் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். இஸ்லாத்தை ஏற்றபின் அபீஸீனியாவுக்கு நாடுதுறந்து சென்றார்கள். இவரது கணவர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் இஸ்லாத்தை […]

11) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)

வயது 35 விவாகரத்து செய்யப்பட்டவர் திருமணத்தின் போது நபியின் வயது 59 நபியுடன் வாழ்ந்த காலம் 5 வருடம் இவர் நபியின் மாமி மகளாவர். தனது மாமி மகளுக்கு தன்னுடைய வளர்ப்பு மகனை நபி ஸல் அவர்கள் திருமணம் முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் இல்லற வாழ்வு சுமூகமாக இல்லை. இருவரின் இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடு அதிகரித்த தால் திருமண வாழ்வு முறிந்தது. அதனால் வாழ்க்கை இழந்து நிற்கிற தனது மாமி மகளுக்கு தானே மறுவாழ்வு அளித்தார்கள். […]

10) உம்மு ஸலமா (ரலி)

வயது 58க்கு மேல் விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின் வயது  58 நபியுடன் வாழ்ந்த காலம் 6 வருடம் அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு அபூஸலமா (ரலி) முதல் கணவர் ஆவார். அவர் மூலம் ஜைனப், ஸலமா, உமர், துர்ரா என்ற நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். உம்மு ஸலமா (ரலி) அவர்களின் குணத்திற்கும் அழகிற்கும் ஏற்றவாறு அன்பு நிறைந்த கணவராக அபூஸலமா (ரலி) அவர்கள் அமைந்தார்கள். பிற்காலத்தில் அவர்களை நினைவு கூரும் வண்ணம் அபூஸலமா […]

09) ஜைனப் பின்த் குஸைமா (ரலி)

விதவைப் பெண்மணி  திருமணத்தின் போது நபியின்      வயது 56 நபியுடன் வாழ்ந்த காலம் 2 மாதம் அல்லது 2 வருடம் குஸைமா. ஹின்த் பின்த் அவ்ஃப் தம்பதியருக்கு அன்னை ஜைனப் அவர்கள் மகளாகப் பிறந்தார்கள். அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்த பிறகு ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு, உஹுத் போருக்குப் பின் அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

08) ஹஃப்ஸா (ரலி)

வயது 21 விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின்      வயது 56 நபியுடன் வாழ்ந்த காலம் 7 வருடம் நபி ஸல் அவர்களின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான உமர் ரலி அவர்களின் மகள் தான் ஹப்ஸா அவர்கள். அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு முதல் கணவராக இருந்த குனைஸ் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர்களில் ஒருவர். இவர்கள் இரண்டு முறை ஹிஜ்ரத் செய்தவர். முதலில் அபிஸீனியாவிற்கு ஆரம்பமாக ஹிஜ்ரத் செய்தவர்களில் இவரும் ஒருவர். […]

07) ஸவ்தா (ரலி)

வயது 55 விதவைப் பெண்மணி   திருமணத்தின் போது நபியின்     வயது 50 ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் இவர் ஒருவர். இஸ்லாத்தின் ஆரம்ப கால கட்டங்களில் எதிரிகளின் புறத்திலிருந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளானவர். குறைஷிகளின் கடும் எதிர்ப்பு. அளவிலாத் தொல்லைகள் இவற்றையெல்லாம் மீறி. அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும் அவர்களுடைய கணவர் ஸக்ரான் (ரலி) அவர்களும் உண்மை மார்க்கத்தை ஏற்றார்கள். இதனால் தம் இனத்தவரான அப்துஷ்ஷம்ஸ் கூட்டத்தினரின் கொடுமைகளுக்கு ஆளானார்கள். கொடுமைகள் எல்லை […]

06) நோக்கம்

ஒருவர் பல திருமணங்களை செய்துள்ளார் என்பதன் மூலம் மட்டுமே அவரை பெண்கள் மீது ஆசை கொண்ட சித்தரிப்பது முற்றிலும் தவறாகும். எந்த பின்புலத்தில் எத்தகைய புறச்சூழ்நிலையில் அந்த திருமணங்களை செய்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகத் தெரிவதைக் கொண்டு தீர்ப்பளிக்க கூடாது. காய்ச்சல் உள்ளவனின் நாவு உணவின் உண்மை சுவையறியாது. உண்ணும் உணவையெல்லாம் கசக்கும் என்றே தீர்ப்பளிப்பான். காமாலை என்பான். கண்ணுடையவன் காண்பதை எல்லாம் மஞ்சள் இது போல ஒருவரின் புறச்சூழ்நிலை மற்றும் நோக்கமறியாது கூறப்படும் […]

05) விமர்சனம் இல்லை

நபிகள் நாயகம் காலத்து மக்கள், முஹம்மது நபியவர்கள் சொன்ன கொள்கை பிரச்சாரத்துடன் முரண்பட்டு நின்றனர். அதன் விளைவால் எழுந்த வெறுப்பைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தினர். . நபிகள் நாயகம் இறைத்தூதர் அல்ல, அவர் வெறும் கவிஞரே என்று இகழ்ந்தனர். . அவர் புத்தி பேதலித்தவர் என்று சிலர் கூறினர். . அவருக்கு யாரோ சூனியம் வைத்து விட்டனர்; அதனால் தான் நமது முன்னோர்களின் கொள்கையை விட்டு விலகி நிற்கிறார் என்றனர். . யாரோ இவரை பின்னின்று இயக்குகின்றனர் […]

04) போர்கள்

அக்காலத்தில் போர்கள் அதிகம் நடைபெற்றதும் பலதார திருமணத்திற்குக் காரணமாக அமைந்தது. தற்காலத்தில் ஏவுகணையின் மூலமும் அணுகுண்டுகள் மூலமும் இரு நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது ஆண்கள் பெண்கள் என அனைவரும் அழிந்து போவார்கள். ஆனால் வாளேந்திப் போர் செய்த அக்காலத்தில் போரில் பங்கேற்கும் ஆண்களே மிகுதியாக மாண்டு போகும் நிலையிருந்தது. எனவே ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாகவும் பெண்களின் இறப்பு விகிதம் குறைவாகவும் இருந்தது. ஆண்களை விடப் பெண்கள் பல மடங்கு அதிகமாக இருக்கும் போது ஏனைய […]

03) ஒட்டுமொத்த மக்களின் கலாச்சாரம்

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அன்றைய காலத்தின் சாதாரண நடைமுறையாகும். நபிகள் நாயகம் மட்டுமே பல திருமணம் செய்தவர்களல்ல! அப்போதைய கால கட்டத்தில் பலரும் அதுபோன்று பல பெண்களை திருமணம் செய்தவர்கள் தாம். நபிகள் நாயகம் மட்டுமின்றி ஏனைய சாதாரண மக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்திருந்தனர். வஹ்புல் அஸதீ என்பவர் எட்டுப் பெண்களை மணந்திருந்தார். (அபூதாவூத்: 2243) கைலான் பின் ஸலமா என்பவர் பத்துப் பெண்களை மனைவியாகக் கொண்டிருந்தார். (அஹ்மத்: 4631) இஸ்லாத்தை […]

02) விமர்சனத்தின் அளவுகோல்

ஒருவரின் செயலை விமர்சிக்கும் முன் அவரின் காலத்திலுள்ள நடைமுறை என்ன என்ற தெளிவான பார்வையும் விருப்பு வெறுப்பற்ற சரியான மனநிலையும் இருத்தல் அவசியமாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த நபரல்ல. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் செயலை அக்காலத்திய சூழலைப் புறந்தள்ளிவிட்டு, தற்கால நடைமுறைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தால் அது நேர்மையாக இருக்காது. பழங்காலத்தில் கூழோ கஞ்சியோ குடித்து தான் வாழ்க்கையைக் கழித்தார்கள். அதுதான் அப்போது பிரதான […]

01) முன்னுரை

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம். இன்றைய தேதியில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த மார்க்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். நிற மொழி பேதமின்றி. ஏழை பணக்காரன் பாகுபாடின்றி இஸ்லாமின் பால் ஈர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மேலை நாடுகளின் பல முக்கிய நகரங்கள் கூட பள்ளிவாசல்களால் நிறைந்து திணறும் அளவுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வழியேதுமில்லையா? என விழிபிதுங்கி நிற்கும் எதிரிகள். இஸ்லாத்தின் மீது வெறுப்பை […]

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்!

உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பான வேதங்கள் என்று பலரும் பல வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். ஆனால் அந்த வேதங்களில் தவறுகளும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுவதை பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும். இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை […]

இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!

இம்மையில் ஏற்படும் பயன்கள் அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்”     (அல்குர்ஆன் 2:194, 9:36) இறையச்சமுடையவர்களுக்கு திருமறை நேர்வழி காட்டும்! “இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்” (அல்குர்ஆன்: 2:2) ➚ பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் எதிரிகளின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது! “நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக […]

13) முடிவுரை

இவ்வுலகில் மனிதனை சுற்றி ஏராளமான படைப்பினங்கள் இருக்கின்றன. விலங்குகள், பறவையினங்கள், கடல்வாழ் உயிரினங்கள், உயிரற்ற படைப்புகளான, காடு, மலை, கடல், ஆகாயம், சூரியன், சந்திரன், இன்ன பிற கோள்கள்.. என நம்மை மலைக்க வைக்கின்ற வியத்தகு படைப்புகள் ஏராளம் ஏராளம். ஆனால், உண்மையில் அவை அனைத்தையும் விட வியத்தகு படைப்பு மனித படைப்பு தான். காரணம், அவைகளிடத்தில் வழங்கப்படாத மகத்தான பொக்கிஷமான பகுத்தறிகின்ற திறன் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால், நாம் இவ்வுலகில் செய்கின்ற காரியங்கள், நடந்து […]

12) முஹம்மது நபிக்கு சிலையில்லை

சாதாரண அரசியல் கட்சித் தலைவரே ஒரு தொண்டனுக்கு “இதய தெய்வமாக” ஆகி விடுகின்ற இந்த காலகட்டத்தில், மேற்கூறப்பட்ட பெருமைகளுக்கும் வியத்தகு பண்புகளுக்கும் சொந்தக்காரராக திகழ்ந்து, ஒரு மிகப்பெரிய சித்தாந்தத்தையே உலகில் பிரச்சாரம் செய்து, கோடானு கோடியை தொடும் அளவிற்கு இன்றளவும் அவரை பின்பற்றக் கூடிய மக்களின் எண்ணிக்கை இருக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஒரு மனிதரை கடவுளாக வழிபட்டிருக்க எவ்வளவு காலம் பிடித்திருக்கும்?? இன்றளவும் முஸ்லிம்களில் நபிகள் நாயகத்தை கடவுள் என்று நம்பியவர் ஒருவராவது இருக்கிறாரா? அல்லது, மனிதர் […]

Next Page » « Previous Page