Author: Mukthiyaar Basha

தவணை வியாபாரம் கூடுமா?

தவணை வியாபாரம் பற்றியும் நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது. ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது. அதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாகக் கொடுக்கலாம். அது போல் தனக்கு வேண்டியவர்களுக்கு லாபமே வைக்காமல் அசலுக்குக் கூட விற்கலாம். இதில் எந்தக் குற்றமும் இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு நாம் விற்கும் பொருளை நம்முடைய உறவினருக்கு 900 ரூபாய்க்குக் கொடுப்போம். அல்லது இலவசமாகக் கூட கொடுப்போம். இது தடுக்கப்பட்ட இரட்டை […]

இஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா?

நம் நாட்டில் உள்ள சில இஸ்லாமிய நிறுவனங்களும் அபுதாபி போன்ற சில முஸ்லிம் நாடுகளில் உள்ள வங்கிகளும் ஷரீஅத் பைனான்ஸ் என்ற பெயரில் தந்திரம் செய்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய வங்கி என்று தங்களைக் கூறிக் கொள்ளும் இந்த நிறுவனத்திடம் ஒருவர் கார் வாங்க பத்து லட்சம் ரூபாய் கடனாகக் கேட்டால் காரை நாங்களே வாங்கித் தருகிறோம் என்று சொல்வார்கள். பத்து லட்சம் ரூபாய்க்கு இவர் கேட்ட காரை வாங்கி இவரிடம் 11 லட்சத்துக்குக் கொடுப்பார்கள். […]

இன்சூரன்ஸ் – காப்பீடு- கூடுமா?

இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில் தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் தடுத்துள்ள வட்டி, மோசடி, ஏமாற்றுதல் போன்றவை இருந்தால் அது எந்த நவீன பிரச்சனையாக இருந்தாலும் அது தடுக்கப்பட்டதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அனுமதிக்கப்பட்டதாகும். பொத்தாம் பொதுவாக இன்ஷ்யூரன்ஸ் கூடாது என்று சிலர் மார்க்கத் தீர்ப்பு அளித்து வருகின்றனர். இது தவறாகும். […]

கடன் குறித்த சட்டங்கள்

கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. صحيح البخاري 2295 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ […]

பல் வகை வட்டிகள்

வட்டிக்கு அறவே அனுமதி இல்லை இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும். வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்றும் மேலும் வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் எனவும் அல்லாஹ் எச்சரிக்கிறான். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் […]

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா?

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா? என்ற கேள்விக்கு செய்யலாம்; அவர்கள் தரும் விருந்தையும் சாப்பிடலாம் என்று பதிலளித்திருந்தீர்கள். தனக்குக் குழந்தை பிறந்தால் அதன் மலத்தைத் தின்பதாக நேர்ச்சை செய்த ஒரு பெண், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது வட்டி வாங்குபவன் வீட்டு நிழலில் நின்று சாப்பிடு, உன் நேர்ச்சை நிறைவேறி விடும் என்று கூறியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இதற்கு உங்கள் பதில் மாற்றமாக உள்ளதே! மேலும், யூதர்களின் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விருந்துண்டதை உதாரணம் […]

கடன் கொடுப்போம்! பன்மடங்காகப் பெறுவோம்!

மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக வசதி உள்ளவர்களும், நடுத்தர மக்களும் தங்களால் இயன்ற பொருளாதாரத்தை அறப்பணிகளுக்கும், இல்லாதவர்களுக்கும் வாரி வழங்கி வருகின்றனர். ஆனாலும் சிரமப்படுவோர் கடன் கேட்டால் கடன் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். கொடுத்த கடன் திரும்ப வராவிட்டால் நட்டமாகிவிடுமே என்ற அச்சம் தான் கடன் கொடுக்கத் தடையாக அமைந்துள்ளது. ஆனால் தர்மம் செய்வதை விட கடன் கொடுப்பதில் மிக அதிகமான நன்மைகள் உண்டு என்ற இஸ்லாத்தின் போதனையை அதிகமான முஸ்லிம்கள் அறியவில்லை. நாம் ஒருவருக்கு அல்லது […]

வட்டியினால் மனிதனுக்கு நன்மை தானே ஏற்படுகிறது?

வட்டி கடன் மனித குலத்துக்கு நன்மை தராது என்று கூறியுள்ளீர்கள். ஆனால் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கினால் சில வருடங்களுக்குள் அதன் மதிப்பு பல மடங்காகி விடுகிறது. முறையாக தவணை செலுத்தினால் வீட்டுக் கடன் நமக்கு நன்மை தான் தருகிறது விளக்கம் தரவும். பதில்: வட்டிக்கு கடன் வாங்கி அதன் மூலம் வீடு வாங்கினால் அந்த வீட்டின் மதிப்பு அதிகமாவதால் அதில் நன்மை இருப்பதாக நீங்கள் வாதிடுவதில் எந்த உண்மையும் இல்லை. பத்து லட்சம் ரூபாய்க்கு […]

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால்..?

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய நண்பர் அவசரத் தேவைக்காக 4000 சவூதி ரியால் கடன் வாங்கினார். அன்றைய தினம் வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 91 ரியால்களாகும். நான்கு மாதம் கழித்து அவர் கடனைத் திருப்பித் தந்த போது வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 96 ரியால் என உயர்ந்து விட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் இந்திய ரூபாய் 2000. அதனால் என்னிடம் 4000 ரியால் […]

என்னுடைய ஜகாத் பணத்திலிருந்து என் தாயின் கடனை நான் அடைக்கலாமா?

பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். صحيح البخاري 1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ […]

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்

பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று தானே இஸ்லாத்தை ஏற்றோம் எங்களுக்கு அற்புதமான முறையில் இஸ்லாம் வழங்கிய சட்டதிட்டங்களை விட்டுவிட்டு பொது சிவில் சட்டம் என்ற சட்டத்தின் பக்கம் வாருங்கள் என்று எங்களுக்கு அழைப்பு விடுகின்றீர்களே! முஸ்லிம் பெண்களை இஸ்லாம் கொடுமைப்படுத்துகின்றது; அதனால் நாங்கள் போடும் சட்டத்தை நீங்கள் பின்பற்றுங்கள் என்று சொல்கின்றீர்களே! நாங்கள் என்ன அரபு நாட்டு இறக்குமதியா? இதே இந்தியாவில் பிறந்தவர்கள் தான்; எங்களது முப்பாட்டிமார்கள் எல்லாம் இந்து மதத்தில்தான் இருந்தார்கள். எந்த பொது […]

எழுத்தாளர் சுஜாதாவின் பார்வையில் குர்ஆன்

“திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம். அதில் என்ன தான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் […]

மரணத்துக்காக கவலையும் துக்கமும் கொள்ளுதல்

மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல் ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு உயர்ந்த செயலாக இதை இறைவன் மதிப்பிடுகிறான். ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே […]

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?

நான் லண்டனில் வசித்து வருகிறேன். இங்கு என்னால் முடிந்த வரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாமலும், என்னைக் குறை சொல்லிக் கொண்டும் இருகிறார்கள். மேலும் அவர்களை விட எனக்குச் சோதனை அதிகமாகவும் நெருக்கடி அதிகமாகவும் உள்ளன. சமயத்தில் எனக்கு அவர்களைப் போல் இருந்து விடலாம் போலும் தோன்றுகிறது. இந்நிலையில் நான் என்ன செய்வது? தயவு செய்து நல்ல விளக்கம் தரவும். எனக்காக துவா செய்யவும். பதில் : […]

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்?

உலக அளவில் முஸ்லிம்களைத் துன்பங்களும் துயரங்களும் பின் தொடர்வது எதனால்? முஸ்லிம்கள் மட்டும் துன்பப்படுவதாகக் கூறி முஸ்லிம்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஸ்லிமாக இருந்தாலே நம் நிலை இப்படித்தான் இருக்குமோ என்ற கருத்தை விதைக்கின்றனர். ஆனால் உலகில் எல்லா மக்களையும் தான் துன்பங்கள் தொடர்கின்றன. முஸ்லிம்களை விட அதிகத் துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவோரும் துன்பங்களை அனுபவிப்போரும் அதிகமாக உள்ளனர். எத்தனையோ நபிமார்கள் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அது போல் நல்ல மக்கள் இன்றும் […]

உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?

நான் ஒரு முறை பள்ளியில் உருவம் வரைந்த சட்டையை அணிந்து தொழுதேன். அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு உருவம் அணிந்து தொழக் கூடாது என்றார்கள். இதனைப் பற்றி விளக்கம் தரவும். உருவம் அணிந்த ஆடை அணிந்து தொழலாமா? தொழுகையில் அணியும் ஆடை நம்முடைய அல்லது மற்றவருடைய கவனத்தைத் திசை திருப்பும் வகையில் இருக்கக் கூடாது. صحيح البخاري 373 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا […]

ஆண்கள் வைரம் அணியலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை மட்டுமே ஆண்களுக்குத் தடை செய்துள்ளார்கள். 5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ […]

நகப்பாலிஷ் கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா?

நகப்பாலிஷுக்கும், ஹேர் டைக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது. அதன் காரணமாகவே இரண்டுக்கும் மாறுபட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன. தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் உடல் நனைய வேண்டும். நைல் பாலிஸ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே உள்ளது. அதாவது காய்ந்து போன பெயிண்ட் போல் ஆவதால் நகத்தில் தண்ணீர் படாது. எனவே நைல் பாலிஸ் இட்டவர்கள், உளூச் செய்யும் போதெல்லாம் […]

பட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா?

ஆண்கள் பட்டாடை அணிவதை மார்க்கம் தடை செய்துள்ளது. سنن الترمذي 1720 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «حُرِّمَ لِبَاسُ الحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ» […]

சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா?

ஏனைய மக்களால் புனிதப் பொருளாகக் கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ள பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது. 5952حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ رواه البخاري நபிகள் […]

தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்?

தொப்பி அணிவதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது பற்றி நமது இணையதளத்தில் விரிவாக பதில் தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒருவர் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் தொப்பி அணிந்தால் அதைத் தவறு என்று கூற முடியாது. தொப்பி அணியும் எவரையும் நாம் தடுப்பதில்லை. எனவே தான் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிகளில் நீங்கள் தொப்பி அணிந்து தொழுதால் அவர்கள் உங்களைத் தடுக்க மாட்டார்கள். இதே போன்று தொப்பி அணியாத ஒருவரை தொப்பி அணியுமாறு வற்புறுத்துவதும் கூடாது. ஒரு […]

நாகரீக உடை அணியுங்கள் ! தமிழக அரசு உத்தரவு

ஆசிரியைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு! நமது கலாச்சாரத்திற்கேற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குனரகம் திடீரென ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் எல்லாம் திறந்து ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்திருப்பது ஆசிரியைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஜூன் 29ம் தேதி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், அரசு […]

எந்த நிற ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன?

ஆடைகளின் நிறங்களைப் பொருத்தவரை ஆண்களுக்கு காவி நிறம் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து எல்லா நிறங்களிலும் ஆண்கள் ஆடை அணியலாம். பெண்களுக்கு காவி உட்பட எல்லா நிற ஆடைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த ஒரு நிற ஆடையும் தடுக்கப்படவில்லை. இதற்கான ஆதாரங்கள்: மஞ்சள் ஆடை صحيح البخاري 166 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ: لِعَبْدِ اللَّهِ […]

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா?

பள்ளிவாசலில் நோன்பு திறக்க தரும் உணவுகளை உண்ணலாமா? காரணம் வட்டி வாங்குபவர் கூட அதை வழங்கி இருக்கலாமே? இது விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற நூலில் இது குறித்து நாம் விரிவாக தக்க சான்றுகளுடனும், ஆதாரங்களுடனும் தெளிவுபடுத்தியுள்ளோம். அந்த நூலில் இது குறித்து எழுதியதைக் கீழே தருகிறோம். இரண்டு வகை ஹராம்கள் மார்க்கத்தில் ஹராமாக உள்ளவை இரண்டு வகைப்படும். 1 .அடிப்படையில் ஹராம் 2 புறக் காரணத்தால் ஹராம் பன்றி இறைச்சி, […]

வியாபாரத்தில் இலவசம் கூடுமா?

சோப்புக்கு ஷாம்பு இலவசம், கிரைப் வாட்டருக்கு தம்ளர் இலவசம் என்று பலவிதப் பொருட்களுக்கு இலவசம் என்று போட்டு விற்பனைக்கு வருகின்றன. இது போன்ற இலவசங்களை சில்லரைக் கடைக்காரர்கள் நுகர்வோருக்கு வழங்காமல் வைத்துக் கொள்வது பாவமான செயலா? இலவசம் என்று போட்டு வரும் பொருட்களில் சில்லரைக் கடைக்காரர்களுக்குக் கிடைக்க வேண்டிய இலாபத் தொகையைக் குறைத்து விடுகின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். பதில்: பொதுவாக இலவசம் என்று எதுவுமே கிடையாது. சோப்புக்கு ஷாம்பு இலவசம் என்றால், சோப்புக்கும் ஷாம்புக்கும் சேர்த்துத் […]

பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்கலாமா?

முஸ்லிமலாத எனது நண்பர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள். இது சரி தானா? என்று கேட்கிறார். பதில் : பள்ளிவாசல்களிலேயே சிறந்த பள்ளிவாசல் கஅபா ஆலயம் தான். சிதிலமடைந்த இந்த ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. புதுப்பித்தவர்கள் அனைவரும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் […]

முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா?

தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கும், அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை. குறிப்பிட்ட வகையினருக்கு மட்டும் தடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை; இரண்டாவது வகை. முழுமையாகத் தடை செய்யப்படாமல் ஒரு அளவுக்குத் தடை செய்யப்பட்ட இந்த வகைப் பொருட்களை முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் விற்கலாம். அன்பளிப்புச் செய்யலாம். பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை ஆண்கள் […]

பொன்னாடையும் ஒரு அன்பளிப்பு தானே?

அன்பளிப்புகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது பொன்னாடை போர்த்திக் கொள்வதை எந்த அடிப்படையில் கூடாது என்கிறீர்கள்? விளக்கம் தரவும். பதில்: மனிதனை மனிதன் துதிபாடுவதும் அன்பளிப்பும் ஒன்றாகாது. சாதாரண ஆடையைப் பொன் (தங்கம்) ஆடை என்று சொல்லி தங்க ஆடை போர்த்துவதற்கு தகுதியானவர் இந்தத் தலைவர் என்று சித்தரிக்கவே பொன்னாடை கலாச்சாரம். பொன் ஆடை அதாவது தங்க ஆடை என்று அதற்குப் பெயர் சூட்டியதில் இருந்து இதன் போலித் தன்மையை உணரலாம். இவனுக்கெல்லாம் பொன்னாடை போர்த்த வேண்டியுள்ளதே […]

அடகு வைத்தல் கூடுமா?

அடைமானம் வைப்பதும், வாங்குவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். இதில் சந்தேகம் எதுவுமில்லை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது நம்மை அவர் ஏமாற்றி விடாமலிருக்க நம்பிக்கைக்காக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். கொடுத்த கடனுக்கு உத்திரவாதமாகத் தான் அடைமானம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரிடம் ஒரு நகையை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தால், அந்த நகையை நாம் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை அடைமானமாகப் பெற்றாலும் இது தான் நிலை. வீட்டை அடைமானமாகப் […]

எதன் மூலம் தொழுகையை முடிக்க வேண்டும்?

தொழுகையை முடித்தல் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும்,இடது புறமும் கூற வேண்டும். 996 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، حَدَّثَنَا زَائِدَةُ ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ وَزِيَادُ بْنُ أَيُّوبَ ، قَالَا : حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ ح وَحَدَّثَنَا […]

அத்தஹிய்யாத் இருப்பில் ஓத வேண்டியவை என்ன ?

முதல் இருப்பில் ஓத வேண்டியவை முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا نَقُولُ: التَّحِيَّةُ فِي الصَّلاَةِ، وَنُسَمِّي، […]

தொழுகையில் அமரும் சரியான முறை எது?

அத்தஹிய்யாத்தில் அமரும் முறை பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உண்டா? அதில் எது சரியானது? பதில் : தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் அமரும் விதம் பற்றி இருவிதமாக ஹதீஸ்கள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தால் இடது காலின் மீது அமர்வார்கள் என்றும் ஹதீஸ்கள் உள்ளன. தம் இருப்பிடத்தை தரையில் வைப்பார்கள் என்றும் ஹதீஸ்கள் உள்ளன. பின்வரும் செய்திகள் அத்தஹிய்யாத்தில் இடது காலின் மீது அமர வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது. 827 حَدَّثَنَا عَبْدُ […]

அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா?

தொழுகையின் இருப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாது ஓதினார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? பதில் தெரிவிக்கவும்? பதில்: தொழுகையின் இருப்பில் அத்தஹிய்யாத்து ஓத வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். صحيح البخاري 1202 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ […]

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன?

இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது சேர்ந்தால் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதினால் போதுமா? அல்லது இறுதி ரக்அத்தில் ஓத வேண்டிய ஸலவாத், துஆக்களையும் சேர்த்து ஓத வேண்டுமா? தொழுகையில் இமாம் என்ன நிலையில் இருக்கின்றாரோ அதே நிலையைத் தான் நமது நிலையாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம். سنن أبي داود وحدثنا أصحابنا، قال: كان الرجلُ إذا جاء يسألُ فيُخبَرُ بما سُبِقَ من صلاته، وإنهم […]

மனைவியுடன் சேர்வதில்லை என்ற சத்தியத்திற்கு பரிகாரம்

மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி “‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்” என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வசனம் (அல்குர்ஆன்: 2:226)➚ அந்த வழக்கத்தைக் கண்டிப்பதுடன் அதற்கான பரிகாரத்தையும் கூறுகிறது. இவ்வாறு சத்தியம் செய்தவர் இதற்காக மனைவியைப் பிரியத் தேவையில்லை. நான்கு மாத அவகாசத்துக்குள் சத்தியத்தை முறித்து விட்டு மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். காலமெல்லாம் மனைவியுடன் சேர மாட்டேன் என்று ஒருவர் சத்தியம் செய்தாலும் அவருக்குரிய கெடு […]

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா?

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை என்று பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே? صحيح البخاري 179 – حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قُلْتُ أَرَأَيْتَ إِذَا جَامَعَ فَلَمْ يُمْنِ، قَالَ عُثْمَانُ «يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ […]

மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருக்கலாமா?

நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும். صحيح البخاري 1927 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: عَنْ شُعْبَةَ، عَنِ الحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»، وَقَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ […]

கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா?

கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் […]

பகுத்தறிவுக்கு எதிரான மார்க்கமா இஸ்லாம்?

இஸ்லாத்தின் சத்திய போதனைகளை எவ்வித சமரசமுமின்றி மக்கள் மத்தியில் எடுத்தியம்பி வருகின்றது.நமது இந்தப் பிரச்சாரத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட பலர் நம்மீது பல அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவ்வாறு நம்மீது சொல்லப்படும் அவதூறுகளில் முக்கியமான ஒன்றுதான், “இவர்கள் பகுத்தறிவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்; பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கிறோம் என்று சொல்லி இஸ்லாத்தை மறுக்கின்றனர்; திருக்குர்ஆனை இழிவுபடுத்துகின்றனர்” என்ற குற்றச்சாட்டாகும்.இவ்வாறு நம்மீது இந்த அவதூறை இவர்கள் சுமத்தக் காரணம் இஸ்லாத்தின் அடிப்படை அகீதா குறித்தும், திருக்குர்ஆனின் வழிகாட்டுதல் குறித்தும் இவர்கள் […]

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லாதவர்கள் எப்படி தொழுவது?

தொழுகையை துவக்கும் போது ஆரம்பமாக ஓதும் துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதன் பின்னர் அல்ஹம்து அத்தியாயமும் தெரிந்த அத்தியாயங்களும் ஓதவேண்டும். ஆனால் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உடணடியாக இவற்றைக் கற்று மனனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அது போல் சிறுவயதில் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ளாமல் மார்க்கத்தில் ஈடுபாடு இல்லாமல் காலத்தைக் கழித்தவர்கள் தாமதமாக மார்க்கத்தில் ஈடுபாடு கொள்வார்கள். அப்போது அவர்களாலும் ஓத முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற […]

தூயோனைப் போற்றிய துல்கர்னைன்

முக்காலத்தையும் அறிந்தவனாகிய அல்லாஹ், அல்குர்ஆனிலே கடந்த காலத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் கூறியுள்ளான். அதில், மக்களுக்குச் சத்தியத்தைத் தெளிவுபடுத்திய நபிமார்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல் இறைவனது தண்டனைக்கு ஆளானவர்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதிலே உறுதியாய் இருந்த நல்லடியார்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.இப்படியான வரலாற்று நாயகர்களுள் துல்கர்னைன் அவர்களும் ஒருவர். இவரைப் பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம். கேள்வியால் கிடைத்த வரலாறு: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

உறவை பேணுவோம்!

நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்ற நேர்எதிரான குணங்கள் உள்ளவனாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். நல்ல செயல்கள் செய்யக் கூடியவர்களை நற்பண்பாளர் என்று போற்றப்படுவதுண்டு. தீய செயல்களை செய்யக் கூடியவர்களை மோசமானவன் என்று தூற்றப்படுவதுண்டு.மனிதன் என்ற நிலையிலிருந்து ஒருவர் செய்யும் அனைத்துக் காரியங்களையும் நூறு சதவிகிதம் சரியாகச் செய்ய முடியாது. அதே போல் ஒருவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியான முடிவுகளாகவே அமையும் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆதமின் சந்ததிகள் தவறிழைக்கக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்.குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் […]

கடன் தள்ளுபடி !

மனிதனை இவ்வுலகில் படைத்த அல்லாஹ், அவர்களை செல்வந்தர்களாகவும் ஏழைகளாகவும், நடுத்தர வர்க்கத்தினராகவும் படைத்துள்ளான். இவ்வாறு படைத்த இறைவன் செல்வந்தர்களாக இருப்பவர்கள், ஏழைகளாக இருப்பவர்களுக்கு உதவுமாறும் கட்டளையிட்டுள்ளான். المُسْلِمُ أَخُو المُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ‘ […]

மதுவை ஒழிப்போம்!

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் நோய்களில் மதுவும் ஒன்று. மது அருந்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக இளைஞர்களிடம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.விழாக்காலங்களிலும் விஷேச நிகழ்ச்சிகளிலும் மது முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது. தற்போது முடிந்த தீபாவளி வியாபரம் நம்மை அதிர வைக்கிறது. 220 கோடி ரூபாய்க்கு இந்த வருட தீபாவளியில் மது விற்பனையாகியுள்ளது. போன வருடம் 100 கோடிக்கு விற்ற மதுக்கள், இந்த வருடம் 100 சதவீதத்தையும் எட்டியது குடிமக்களின் […]

நயவஞ்சகனின் அடையாளங்கள்!

آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ. நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 33) ➚ இன்னொரு அறிவிப்பில் இன்னும் சில விஷயங்களை சேர்த்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். أَرْبَعٌ […]

இருலகத்திலும் நன்மை அடைவோம்!

இந்தப் பரந்த உலகில் பல்வேறுபட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் அனைவரும் நிறத்தாலும் குணத்தாலும் மொழியாலும் பல விதமாக அமைந்துள்ளனர். இதில் பெரும்பான்மையான மக்கள், நம்மைப் படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதை நம்பி வாழ்கின்றனர்.மதங்களும் அதன் நம்பிக்கைகளும்கடவுளை நம்பும் மனிதர்கள் பல மதங்களை பின்பற்றி வாழ்கின்றனர். ஒரு கடவுள் கொள்கை உள்ளவர்கள், முக்கடவுள் கொள்கை உள்ளவர்கள், பல கடவுகள் கொள்கை உள்ளவர்கள் என்று பலவிதமான பல மதங்களை பின்பற்றி நடக்கின்றனர். இவ்வாறு பல விதமான கடவுள் கொள்கை […]

தூய்மையை வழியுறுத்தும் இஸ்லாம்!

கடந்த நவம்பர் 19ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலகக் கழிப்பறை தினமாக அறிவித்தது. இதன் மூலமாக மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காக இப்படி அறிவித்துள்ளது. உலக மகளிர் தினம், குழந்தைகள் தினம், முதியோர் தினம், நீரிழிவு தினம், இருதய நோய் தினம் என்றெல்லாம் அறிவிப்பதால், அனுஷ்டிப்பதால் மக்களிடம் மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால் இந்த நினைவு தினங்கள் அனுஷ்டிப்பதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன்பாடு கிடையாது. மாற்றம் என்பது மனதளவில் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் […]

பர்க்கத் பெரும் வழிகள்!

கோடான கோடி செல்வம் இருந்தாலும், இறைவன் அதில் பரக்கத்தை நீக்கி விட்டால் அந்த செல்வத்தைக் கொண்டு எதனையும் சாதிக்க இயலாது. மிகக் குறைவான செல்வம் இருந்தாலும் அதில் இறைவனது பரக்கத் இருந்தால் அது கோடி ரூபாய் செய்யும் வேலையை சுலபமாக செய்துவிடும். இதுவே மறைமுகமான அபிவிருத்தியாகும். விரலை சூப்புதல் முஸ்லிம்களில் சிலர் நவீன கலாச்சாரம் என்றபெயரில் ஹோட்டல்களில் சாப்பிடும்போது கைவிரல்களை சூப்பி சாப்பிடுவதில்லை. காரணம் பிறமதத்தவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று ஒன்றுக்கும் ஒவ்வாத […]

பயனுள்ள கல்வி கற்போம்!

இஸ்லாத்தின் பார்வையில், உயர்வு தாழ்வு இல்லை. எனினும், கல்வி கற்றோர் உயர்ந்தோர் என குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? அறிவுடையோரே படிப்பினை பெறுவர்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 39:9)➚ يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ உங்களில் இறைநம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் […]

ஒருவர் சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார்!

ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது. وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ஒருவர், பிறரது சுமையைச் சுமக்க மாட்டார். (அல்குர்ஆன்: 17:15)➚ இது தான் இறைவனின் நீதி. ஆனால் மனிதர்களிடம் இந்த நீதி பேணப்படுவதில்லை. பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம் என்ற பழமொழிக்கேற்ப குற்றம் புரிபவன் ஒருவன்; அக்குற்றத்தைச் சுமப்பவன் மற்றொருவன் என்ற நிலை சர்வ சாதாரணமாகி விட்டது.ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்காக […]

Next Page » « Previous Page