Author: Mukthiyaar Basha

06) அனுமதிக்கப்பட்ட உணவுகள்

அனைத்தும் அனுமதியே உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை எவை? என்பதற்கு தனியாக எந்த பட்டியலும் இல்லை அவ்வாறு பட்டியலிட நினைத்தால் அதைப் படித்து பின்பற்றுவது சாத்தியமும் இல்லை ஏனெனில் அவற்றின் எண்ணிக்கை மில்லியன் ட்ரல்லியன்களைத் தாண்டும் அதே நேரத்தில் தடுக்கப்பட்டவற்றின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு .எனவே தடுக்கப்பட்ட்தை அறிந்து கொண்டால் மீதியுள்ள அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையே என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்   (அல்குர்ஆன்: 2:29)➚ தடுக்கப்பட்டவை தவிர உலகில் உள்ள ஏனைய அனைத்தும் […]

05) தடுக்கப்பட்டவையும் அதன் கேடுகளும்

தடுக்கப்பட்டவை கெட்டவையே மனிதனின் உடல், உயிர், அறிவார்ந்த நம்பிக்கை, மானம் மரியாதை என வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் மனிதனுக்குத் தீங்கு தருவதைத் தான் இறைவன் தடைசெய்துள்ளான். இதைப் பற்றி இறைவன் கூறும் போது… எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை இந்த நபியை அவர்கள் பின்பற்றுகின்றனர் தங்களிடம் உள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிளும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்.இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை வி ட்டும் அவர்களை தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். அசுத்தமானவைகளை […]

09) அல்‌அகபா உடன்படிக்கை

நபி (ஸல்‌) அவர்கள்‌ மக்காவில்‌ இஸ்லாத்தை எடுத்துச்‌ சொன்ன போது அவர்களுக்கு மிகவும்‌ உதவியாக இருந்தவர்‌ அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப்‌. இவர்‌ தனது இறுதிக்‌ காலம்‌ வரை இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொள்ளவில்லை. அபூதாலிபின்‌ மரணத்திற்கு பிறகு நபி (ஸல்‌) அவர்கள்‌ தாயிப்‌ நகரம்‌ சென்று பிரச்சாரப்‌ பணிக்கு ஆதரவு கோரினார்கள்‌. ஆனால்‌ அங்கு ஆதரவு கிடைக்கவில்லை. இருப்பினும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மனம்‌ தளர்ந்து விடவில்லை. வெளியூர்களிலிருந்து மக்காவிற்கு வரும்‌ பயணக்‌ குழுக்களைச்‌ சந்தித்துப்‌ பிரச்சாரம்‌ […]

12) சகோதரத்துவம்‌ ஏற்படுத்துதல்‌

நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவிற்கு வந்தவுடன்‌ சொத்து, சுகம்‌ அனைத்தையும்‌ இழந்து ஹிஜ்ரத்‌ செய்த முஹாஜிர்களுக்கும்‌ , அவர்களுக்கு அடைக்கலம்‌ கொடுத்த அன்சாரிகளுக்கும்‌ மத்தியில்‌ சகோதரத்துவம்‌ ஏற்படுத்தினார்கள்‌. அன்சாரிகளில்‌ ஒருவர்‌ மரணித்து விட்டால்‌ முஹாஜிர்களில்‌ ஒருவரே அவருடைய சொத்திற்கு வாரிசாகும்‌ அளவிற்கு இந்தச்‌ சகோதரத்துவ ஒப்பந்தம்‌ வலிமையாக இருந்தது. பிறகு அல்லாஹ்‌ இந்தச்‌ சட்டத்தை மாற்றினான்‌. இரத்த பந்தமுடையோர்‌ ஒருவர்‌ மற்றவருக்கு அல்லாஹ்வின்‌ வேதத்தில்‌ உள்ளபடி நெருக்கமானவர்கள்‌. அல்லாஹ்‌ ஒவ்வொரு பொருளையும்‌ அறிந்தவன்‌. (அல்குர்‌ஆன்‌ 8 : […]

07) பகிரங்க பிரச்சாரம்

அதை தொடர்ந்து தம் சமுதாய மக்கள் அனைவர்களையும் அழைத்து பகிரங்க பிரச்சாரத்தில் ஈடுபடலானார்கள். இது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும்                       (அல்குர்ஆன்: 26:214)➚ இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் […]

05) பிறப்பு மற்றும் வளர்ப்பு

பிறப்பு நபி(ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் திங்கட்கிழமை கி.பி 571 ல் சவூதி அரேபியா நாட்டில், மக்கா என்ற ஊரில் பிறந்தார்கள். (நூல் பிதாயா வன்நிகாயா,(முஸ்லிம்: 2153) ➚ நபி(ஸல்) அவர்கள் பிறந்த தேதி எதுவென்று குறிப்பிட்டு சொல்வதில் பல தகவல்கள் உள்ளன. அவற்றில் 12 ஆம் தேதியில் பிறந்தார்கள் என்பதே வரலாற்று ஆசிரியர்களிடம் பிரபல்யமான கருத்தாகும். பெயர் : நபி(ஸல்) அவர்களின் இயற்பெயர், முஹம்மத். இத்துடன் மேலும் நான்கு பெயர்களும் அவர்களுக்கு உண்டு. அவை […]

01) முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால். அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள் அண்ணல் நபி அவர்கள், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை திருமறைக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தொகுக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் உலகில் நபி புலவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு தொடர்பாக பல நூற்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பொய்யான தகவ ல்களும் கலந்திருக்கின்றன. ஆதாரமில்லாத பல செய்திகள் ஊடுருவி உள்ளன. எனவே இது போன்ற […]

14) உஹுத்‌ யுத்தம்‌

பத்ரு யுத்தத்தில்‌ மிகப்‌ பெரும்‌ பாதிப்பிற்கு உள்‌ளாகியிருந்த குரைஷிகள் முஸ்லிம்களை எப்படியாவது பழிக்குப் பழிவாங்க வேண்டும்‌ என்று வெறிகொண்டிருந்தனர்‌. முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய போரை  நடத்த வேண்டும்‌ என்று ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில்‌ இறங்கினர்‌. உஹதுப்‌ போர்‌ தொடர்பாக நபி கண்ட கனவு உஹதுப்‌ போருக்கு முன்பாக நபியவர்கள்‌ ஒரு கனவினைக்‌ கண்டார்கள்‌. அதில்‌ வாள்‌ ஒன்றை அசைக்க அதன்‌ முனை உடைவது போன்றும்‌, மற்றொரு முறை அசைக்கும்‌ போது அது முன்பிருந்தபடியே ஒட்டிக்‌ கொள்வது […]

13) பத்ருப்‌ போர்‌

பத்ர்‌ என்பது மக்காவுக்கும்‌ மதினாவிற்க்கும்‌ இடையே உள்ள ஒரு இடமாகும்‌ முஸ்லிம்களுக்கும்‌ காபிர்களுக்கும்‌ இடையே போர்‌ நடந்தது எனவே இப்போருக்கு பத்ரு போர்‌ என்று பெயர்‌ வந்தது இப்போர்‌ ஹிஜிரி இரண்டாம்‌ ஆம்‌ ஆண்டில்‌ ரமலான்‌ மாதம்‌ 17 ம்‌ நாள்‌ நடந்தது. போருக்குரிய காரணம்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மக்காவாசிகளின்‌ வியாபாரக்‌ கூட்டத்தை பிடிப்பதற்காக பல்வேறு வகையான படைப்பிரிவுகளை அனுப்பினார்கள்‌ என்பதை நாம்‌ முன்னர்‌ கண்டோம்‌. இந்நிலையில்‌ மக்காவாசிகளின்‌ வியாபாரக்‌ கூட்டம்‌ அபூ சுஃப்யான்‌ என்பவரின்‌ […]

11) மதீனா பிரவேசம்‌

உறவினர்களுக்குத்‌ தகவல்‌ கொடுத்தல்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ குபாவில்‌ பதினான்கு நாட்கள்‌ தங்கிய பிறகு மதீனாவிலிருந்த தனது உறவினர்களான பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள்‌. அவர்கள்‌ வாட்களைத்‌ தொங்கவிட்டபடி வந்து நபி (ஸல்‌) அவர்களிடமும்‌ அபூபக்ர்‌ ரலி) அவர்களிடமும்‌ ஸலாம்‌ கூறினார்கள்‌. பிறகு, “நீங்கள்‌ இருவரும்‌ அச்சம்‌ தீர்ந்தவர்‌ வும்‌ அதிகாரம்‌ படைத்தவர்‌ வும்‌ பயணம்‌ செய்யலாம்‌” என்று பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தினர்‌ கூறினார்கள்‌. அதன்‌ பிறகு அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமது வாகனத்தில்‌ […]

04) உணவுப் பாத்திரங்கள்

தங்கம் வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பிடுதல் தங்கம்  மற்றும் வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பதையும் அதில் சாப்பிடுவதையும் விட்டு நபி ( ஸல் ) அவர்கள் எங்களை தடுத்தார்கள். அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் அல்யமான் ( ரழி ) நூல் : (புகாரி: 5837, 5633) ➚  (முஸ்லிம்: 3846, 3839) ➚ (இப்னு மாஜா: 3405, 3580) ➚ (அஹ்மத்: 22182, 22225, 22340) ➚ யார் தங்கம் வெள்ளிப் பாத்திரத்தில் அருந்துகிறாரோ அவர் தன் வயிற்றில் […]

03) குடிப்பதின் ஒழுங்குகள்

நின்று கொண்டு குடித்தல் நின்று கொண்டு அருந்துவது சம்பந்தமாக அருந்தலாம் என்றும் அருந்தக் கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் கிடைக்கின்றன் . இரண்டையும் இணைத்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும் . நின்று கொண்டு அருந்துவதை நபி ( ஸல் ) அவர்கள் தடை செய்தார்கள் . அறிவிப்பவர் : அனஸ் ( ரழி ) நூல்கள் : (முஸ்லிம்: 3771, 3772) ➚ (திர்மிதீ: 1800) ➚ (அபூதாவூத்: 3229) ➚ (இப்னு மாஜா: […]

02) சாப்பிடுவதின் ஒழுங்குகள்

தூய்மையானதை சாப்பிடுதல் : தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை ? என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் . தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவீராக ! (அல்குர்ஆன்: 5:4)➚ நான் உங்களுக்கு வழங்கியவற்றில் . தூய்மையானதை உண்ணுங்கள் ! இங்கே வரம்பு மீறாதீர்கள் ! ( வரம்பு மீறினால் ) எனது கோபம் உங்கள் மீது இறங்கும் . எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான் . (அல்குர் ஆன் 20:81➚) கீழ்காணும் […]

10) ஹிஜ்ரத் பயணம்

மக்காவில்‌ இணைவைப்பாளர்களால்‌ எண்ணற்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ அங்கிருந்து, தனது சொந்த ஊரை விட்டு, மதீனாவிற்கு நாடூ துறந்து சென்ற நிகழ்ச்சியான ஹிஜ்ரத்‌ தான்‌ இஸ்லாமிய வரலாற்றில்‌ ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கூறலாம்‌. வரலாற்று முக்கியத்துவம்‌ வாய்ந்த அந்த ஹிஜ்ரத்தைப்‌ பற்றி இங்கு சுருக்கமாகக்‌ காண்போம்‌. அபீசீனிய ஹிஜ்ரத்‌ மக்கத்து முஷ்ரிக்குகளின்‌ தொல்லைகளால்‌ நபித்‌ தோழர்கள்‌ மக்காவைத்‌ துறந்து வேறு நாடுகளுக்குச்‌ செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நபி (ஸல்‌) […]

08) மிஃராஜ்‌ எனும்‌ விண்ணுலகம்‌ பயணம்‌

நபியவர்களின்‌ அழைப்பு பணி ஒருபுறம்‌, எதிரிகளால்‌ முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள்‌, தொல்லைகள்‌ மறுபுறம்‌. இந்நிலையில்தான்‌ நபியவர்கள்‌ மிஃரான்‌ எனும்‌ விண்ணுலகப்‌ பயணம்‌ மேற்கொண்டார்கள்‌. மஸ்ஜிதுல்‌ ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப்‌ பாக்கியம்‌ மிக்கதாக நாம்‌ ஆக்கிய மஸ்ஜிதுல்‌ அக்ஸா வரை தனது சான்றுகளைக்‌ காட்டுவதற்காக ஓர்‌ இரவில்‌ தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச்‌ சென்றவன்‌ தூயவன்‌. அவன்‌ செவியுறுபவன்‌; பார்ப்பவன்‌. (அல்குர்‌ஆன்‌ 17:1➚) ஜிப்ரீல்‌ வருகை – வீட்டு முகடு திறக்கப்படுதல்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: “நான்‌ […]

13) ஏன் இந்த எளிய வாழ்க்கை….

ஏன் இந்த எளிய வாழ்க்கை? நபி (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது. மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது. அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த […]

14) தொழுகையில் நடைபெறும் பித்அத்கள்

ஒரு முஸ்லிமிற்கு தொழுகை மிக அவசியமானதாகும். நம்பிக்கை கொண்டோருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது. (அல்குர்ஆன்: 04:103)➚ அந்தத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டுமென நபியவர்கள் நமக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹூவைரிஸ் நூல்: (புகாரி: 631) ➚ ஆனால் இன்றைய இஸ்லாமியர்கள் நபியவர்கள் காட்டித் தந்த தொழுகை முறைக்கு மாற்றமாக தங்களின் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்கின்றனர். […]

06) நபித்துவத்தின் துவக்கம்

நபி(ஸல்) அவர்கள் இறைச்செய்தி வருவதற்கு முன்பே ஏகத்துவ அடிப்படையிலேயே தம் வாழ்வை அமைத்திருந்தார்கள். சிலை வணக்கம் செய்பவர்களாக இருந்ததில்லை. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத பிராணிகளை சாப்பிடமாட்டாட்டார்கள் (புகாரி: 3826) ➚ நபி (ஸல்) அவர்கள் நாற்பது வயதை அடைந்த போது இறைவனின் புறத்திலிருந்து செய்திகள் வருவதற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. சில அற்புத நிகழ்ச்சிகளும் வெளிப்பட்டது. ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கிறார்கள் : நான் மக்காவில் ஓரு கல்லை பார்க்கிறேன். அது என் […]

05) அனுமதிக்கப்பட்டவை

மருத்துவக் காப்பீடு மருத்துவக் காப்பீடு நிறுவனத்தில் சேர விரும்புபவர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி குறிப்பிட்ட காலத்துக்கு உறுப்பினராக இருப்பார். உதாரணமாக ஒருவருடத்துக்கு 4000 ஆயிரம் ரூபாய் ஒருவர் செலுத்துகிறார். இந்தத் தொகையை உறுப்பினரின் வயது உடல் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிறுவனே முடிவு செய்யும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான தொகையை நிர்ணயிக்கமாட்டார்கள். இந்த ஒருவருடத்துக்குள் இவருக்கு நோய்கள் ஏதாவது ஏற்பட்டால் இந்த நிறுவனம் அவருக்கு இலவசமாக மருத்துவம் செய்யும். அவர்கள் செலுத்திய தொகையை விட அதிகமாக […]

04) தடைசெய்யப்பட்டவை

நாணய மாற்றுதல் ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணயமாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதல் என இது இரு வகைகளில் அமைந்துள்ளன. ஒரே வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதலில் கூடுதல் குறைவு இல்லாமல் சமமான மதிப்பில் மாற்றிக் கொள்ள வேண்டும். பத்து கிராம் தங்கக் காசைக் கொடுத்து பத்து ஒரு கிராம் தங்கக் காசுகள் வாங்கலாம். விற்கலாம். பதினொரு அல்லது ஒன்பது காசுகள் என்ற வகையில் மாற்றினால் அது ஹராமாகும். அது போல் ஒரு நாட்டின் […]

13) திருமணத்தில் நடைபெறும் பித்அத்கள்

திருமணத்தில் நடைபெறும் பித்அத்கள் மனித வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வு திருமணம். அத்திருமணம் குறித்த முழுமையான வழிகாட்டுதல்கள் இஸ்லாத்தில் உண்டு. மணத் துணைகளை தேர்வு செய்தல், மணமக்களின் தகுதி, மணமக்களின் சம்மதம், மஹ்ர் முடிவு செய்தல், எளிமையான திருமணம், வலிமா என்று இவை போன்ற அனைத்து திருமண சட்டங்களையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது. அகிலத்துக்கு அருட்கொடையாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருமணம் குறித்த அழகிய வழிமுறைகளை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அதை விட்டு விட்டு […]

12) குர்ஆனின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நிவாரணமும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், அருளும் உங்களிடம் வந்து விட்டது. (அல்குர்ஆன்: 10:57)➚ உன்னத குர்ஆனின் உண்மைச் சிறப்பை உணராத முஸ்லிம்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக கருணை இறைவனால் காருண்ய நபிக்கு அருளப்பட்ட வேதமே திருமறைக் குர்ஆன் ஆகும். உலகம் நெடுகிலும் கோடான கோடி மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வேதம் குர்ஆன் ஆகும். அவ்வேதம் திக்கற்று நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். மனக்குழப்பத்திற்கு மகத்தான […]

11) அன்றாட வாழ்வில் அரங்கேறும் பித்அத்கள்

உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள். அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள். அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள். குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன்: 07:03)➚ கனியிருப்பக் காய் கவரும் முஸ்லிம்கள்: இஸ்லாம் முஸ்லிம்களுக்கான ஒட்டு மொத்த வாழ்க்கைத் திட்டம். மார்க்க அடிப்படையில் நாம் செய்ய வேண்டிய ஒவ்வொரு காரியங்களைப் பற்றியும் இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது. இறை வேத்திலும், இறைத்தூதர் போதத்திலும் விளக்கப்படாத சட்டங்களே இல்லை எனலாம். அதை உள்ளது உள்ளபடி பின்பற்றி விட்டால் உலகோருக்கு […]

10) நோன்பின் பெயரால் அரங்கேற்றப்படும் பித்அத்கள்

இறைநம்பிக்கை கொண்டோரே உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் குறிப்பிட்ட நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன்:)➚ நோன்பின் பெயரால் அரங்கேற்றப்படும் பித்அத்கள் இஸ்லாமிய வணக்கங்களில் நோன்பு மிக முக்கியமானதாகும். ரமலான் மாதத்தில் கடமையாக்கப்பட்ட நோன்பு மற்றும் பல சுன்னத்தான நோன்புகளும் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய நோன்பை நோற்பதன் மூலமாக ஒரு முஸ்லிமிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இறையச்சம் பெறுதல் இறைநம்பிக்கை கொண்டோரே உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு […]

09) துஆக்களின் பெயரால் அரங்கேற்றப்படும் பித்அத்கள்

(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும்போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக எனக்கே கட்டுப்பட்டு, என்னையே நம்பட்டும் (என்று நான் கூறுவதைத் தெரிவிப்பீராக!) (அல்குர்ஆன்: 2:186)➚ இஸ்லாமிய வணக்கங்களில் மிகவும் முக்கியமானதும், இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்கும் உரிய வணக்கம் பிரார்த்தனை (துஆ) ஆகும். ஒரு இஸ்லாமியன் தன் வாழ்வில் ஒவ்வொரு சூழலிலும் கேட்க வேண்டிய துஆக்கள் பற்றியும் அவற்றின் ஒழுங்குகள் பற்றியும் […]

08) திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

உமது மனதிற்குள் பணிவுடனும், அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமின்றியும் உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் நினைவு கூர்வீராக. அலட்சியும் செய்வோறுள் ஒருவராக ஆகிவிடாதீர். (அல்குர்ஆன்: 7:205)➚ மனிதனையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காக அன்றி படைக்க வில்லை. என்று இறைவன் கூறுகிறான். எனவே இஸ்லாமியர்களுக்கு இறையச்சத்தை ஏற்படுத்தக் கூடிய, அதிகமதிகம் நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய வணக்கங்களை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதில் ஒன்று தான் திக்ருகள். காலையில் எழுந்தவுடன் ஓதும் திக்ருகள், இரவில் படுக்கச் செல்லும் போது ஓதும் […]

07) ஜனாஸாவின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் ஒரு குறிப்பிட்ட வாழ்நாளை ஏற்படுத்தியுள்ளான். அவனது காலக்கெடு வந்து விட்டால் மனிதன் மரணத்தைத் தழுவுகின்றான். அவ்வாறு இறந்தவர்களை மார்க்க அடிப்படையில் எவ்வாறு நல்லடக்கம் செய்வது என்பது உள்ளிட்ட சட்டங்களை இஸ்லாம் தெளிவுபடுத்தியிருக்கின்றது. ஆனால் ஜனாஸாக்கள் தொடர்பாக மார்க்கத்தில் இல்லாத பல பித்அத்தான நடைமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும், பிற மதக்கலச்சாரங்களையும் இஸ்லாமியர்களில் சிலர் கடைபிடித்து வருகின்றனர். ஜனாஸாவின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள் : »இறந்தவரைக் குளிப்பாட்டும் போது நெற்றியில் சந்தனம் அல்லது நறுமண பொருட்களால் எழுதுதல். […]

03) விபரீதங்களும் தீர்வுகளும்

வட்டி என்றால் என்ன? வட்டி குறித்து நபி (ஸல்) அவர்கள் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்கள். இந்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஹலாலான தொழில் எது? ஹரமான தொழில் எது? என்பதை நம்மால் கண்டுகொள்ள முடியும். நபிமொழிகளை படிக்கும் போது வட்டி இரண்டு வகைப்படும் என்பதை அறியலாம். ஒரே இனத்தைச் சார்ந்த பொருட்களில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும் போது அந்த கொடுக்கல் வாங்கல் சம அளவில் இருக்க வேண்டும். கூடுதல் குறைவுடன் இருக்கக்கூடாது. உதாரணமாக மட்டமான இரண்டு கிலோ […]

02) வட்டிக்கு எதிரான எச்சரிக்கை

வட்டி வாங்குவது ஹராம் திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் வட்டியின் மூலம் சம்பாதித்து வந்தனர். இதை அல்லாஹ் தடைசெய்து வசனங்களை இறக்கினான். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக்  கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 2:275)➚ ஆயிஷா (ரலி) அவர்கள் […]

01) முன்னுரை

இஸ்லாம் மனித சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கின்ற காரியங்களை முற்றிலுமாக தடைசெய்யக்கூடிய அற்புதமான மார்க்கம். மனிதனை துன்புறுத்துகின்ற அனைத்து பாவங்களும் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் காரணமாக இருக்கின்றன. மனிதன் தன்னுடைய சுயநலத்தாலும் குறை மதியினாலும் இது போன்ற பாவங்களை துணிந்து செய்யக்கூடியவனாக இருக்கின்றான். இத்தகைய பாவங்களில் வட்டி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வட்டி மிகப்பெரிய பொருளதார சுரண்டலாகவும் மோசடியாகவும் இருப்பதால் இஸ்லாம் இதை முழுவதுமாக தடைசெய்துள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் இது சாதாரண வணிகம் என்று கூறி இதைத் […]

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்

இது தேர்தல் காலம் என்பதால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் வெற்று அறிவிப்பு என்று எண்ணிவிட வேண்டாம். இது அல்லாஹ்வின் வேதமும் தூதரும் கற்றுத் தருகின்ற ஓர் அழைப்பாளனின் அடிப்படைத் தகுதியாகும். இது அழைப்புப் பணியின் அடிப்படை விதியாகும். இந்த விதி ஏன்? எதற்கு? ஒருவர், தான் போதிக்கும் கொள்கைக்கு மாற்றமாக நடந்தால் அது அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் தடையாகவும் ஆகி விடும் என்பது தான் இதற்கான பதிலாகும். “புகை […]

33) திருக்குர்ஆன் வழங்கிய பொருளாதாரத் திட்டம்

மனிதர்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை ஏவுவதும், அவர்களுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுத் தடுப்பதும் திருக்குர்ஆன் செய்யும் பணிகளில் ஒன்றாகும். குர்ஆன் கூறும் பெரும்பாவங்களில் முதன்மையானது ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைக்கும் காரியம். அதன் பிறகு பெரும் பாவங்களின் பட்டியலில் முக்கியமாக இடம்பெறுவது வட்டியாகும். வட்டி என்பது, கொடுக்கல் வாங்கலின் போது கால இடைவெளி ஏற்படுவதால், கடனாகக் கொடுத்த தொகையை விடக் கூடுதலான தொகையை, கால இடைவெளிக்கு ஏற்ப நிர்ணயித்துப் பெற்றுக் கொள்வதாகும். இன்று ஏழை முதல் […]

44) குடும்பவியல் சட்டங்களின் சுருக்கம்

திருமணச் சட்டங்கள் உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் […]

43) தாம்பத்தியத்திற்குத் தடையா?

இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் போது பேண வேண்டிய ஒழுங்குகளையும், அது சம்பந்தமான விதிமுறைகள் என்னவென்பதையும் இந்தக் குடும்பவியல் தொடரில் தெரிந்து கொள்வது அவசியமாகும். பொதுவாக முஸ்லிம்களோ பிற சமூக மக்களோ இல்லறக் கடமைக்கென பல நிபந்தனைகளை அவர்களாகவே வகுத்து வைத்துள்ளனர். குடும்பத்தில் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நாட்களிலோ, நேரங்களிலோ அல்லது குறிப்பிட்ட மாதங்களிலோ இல்லறக் கடமையை நிறைவேற்றக் கூடாது என்று நம்புகின்றனர். இன்னும் பலர் நல்ல நேரம், கெட்ட நேரம் என்றும், […]

42) அனுமதிக்கப்பட்ட பொய்கள்

நபியவர்கள் இரவுத் தொழுகைக்காக எழுந்திருக்கும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் கண்விழித்தால் அவருடன் பேசிக் கொண்டிருப்பார்கள் என ஹதீஸ்களில் நாம் காண முடிகிறது. எனவே இது போன்று பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்பதும் கணவன் மனைவிக்குள்ள கடமை என்று விளங்குகிறது. வெறுமனே தாம்பத்யம் மட்டுமே இல்லறக் கடமை கிடையாது. மற்ற விஷயங்களிலும் மனைவிக்கு மகிழ்ச்சி அளிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) உட்கார்ந்து (இரவுத் […]

41) கொஞ்சி விளையாடி…

சம்பாதிக்கின்ற இடங்களில் ஆண்களுக்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களின் நிம்மதி குலைந்து விடுகிறது. வெளியில் பலவிதமான சூழ்நிலையில் உள்ள கணவன், வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாகலாம், மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் வெளியிட தாக்கம் குறைந்து மனது இலகுவாகிவிடும் என்று நினைத்து வந்தால், வந்தவுடனே சண்டையென்றால் வீட்டிலும் நிம்மதியை இழக்கிறான் ஒரு ஆண். இதனால் அவனது இரவுத் தூக்கம் கலைந்துவிடும். நியாயத்தைக் கூட பேசமுடியாத நிற்கதியான நிலையில் தள்ளப்படுகிற ஆண்களின் பரிதாபத்தைப் பார்க்கிறோம். நியாயத்தைப் பேசும்போது கூட, மனைவி […]

40) மாமியார் மருமகள் உறவு

இஸ்லாமிய குடும்பவியலில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்ல இணக்கமும், நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கம் அனுமதித்த வகையில் மனைவிமாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்கின்ற கடமை கணவன்மார்களுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோம். நபியவர்கள் தங்களது மனைவிமார்களை சந்தோஷப்படுத்தி, அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பதற்கு இன்னுமொரு சான்றைக் காணமுடிகிறது. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?’’ என்று நான் ஆயிஷா […]

39) வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்

குடும்பத்தில் பெண்கள் ஒரேயடியாக வேலை வேலை என்று இருந்தால் அதுவே மனச் சோர்வை ஏற்படுத்தக் கூடும். அவ்வப்போது ரிலாக்ஸாக வெளியிடங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வர வேண்டும். பூங்காவுக்குச் செல்வது, சில நேரங்களில் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது போன்ற விஷயங்களைச் சொல்லலாம். இவையெல்லாம் பெண்களின் மனதிற்கு சந்தோஷத்தையும் குடும்ப உறவில் மேலும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு நல்ல வாய்ப்பையும் பெற்றுத்தரும். மார்க்க வரம்புகளை மீறாத வகையில் கபடி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளைப் பார்க்கலாம்; பீச்சுக்குச் செல்லலாம். இதற்கு ஆண்களுக்கு […]

38) பெண்கள் விருந்து பரிமாறலாமா?

திருமணம் முடிக்கும் போது கணவர் பணக்காரராக இருப்பார். பிறகு வறுமையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். சில வீடுகளில் வேலை குறைவாக இருக்கும். சில வீடுகளில் வேலை அதிகமாக இருக்கலாம். அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மனைவி தன்னை மாற்றிக் கொண்டால்தான் தம்பதிகள் இருவரும் உளப்பூர்வமாக இருப்பதாக அர்த்தம் கொள்ளமுடியும். அதேபோன்று திருமணம் முடிக்கும் போது ஏழ்மையாக இருந்து, பின்னர் செல்வந்தராக கணவர் மாறினாலும் நமக்குத்தானே அவைகளும் கிடைக்கும் என்று பெண்கள் […]

37) கணவனின் குடும்பத்தாருக்குப் பணிவிடை செய்தல்

வீட்டைப் பொறுத்த வரை மொத்த வீட்டுக்கும் பெண்தான் பொறுப்பாளியாவாள். ஒரு மனைவி தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கு மட்டும் தான் பொறுப்பாளி என்று நினைக்கக் கூடாது. கணவரின் தாய், தந்தையரையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றும் சிலர் தவறாக விளங்கி வைத்து உள்ளனர். ஆனால் நபியவர்கள் காட்டித் தந்த மார்க்கத்தில் அப்படி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். […]

36) பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

குடும்ப வாழ்க்கையில் பெண்களை நிர்வாகம் செய்யும் ஆண்கள், அவர்களை சிறை வாழ்க்கையைப் போன்று நடத்தாமல் சில சுதந்திரங்களைக் கொடுத்துத் தான் நிர்வகிக்க வேண்டும். அதே நேரத்தில் பெண்கள் அந்த சுதந்திரத்தை மார்க்கம் அனுமதித்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர மார்க்கத்தின் எல்லையை மீறக் கூடாது. இந்த விஷயத்தில் வரம்பு மீறினால் சுவனத்தின் வாடை கூடக் கிடைக்காது என்பதை நினைத்து, இறைவனைப் பயந்து பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். நறுமணம் பூசிக் கொண்டு இரவில் செல்லத் தடை […]

35) பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல்

நிர்வாகத் தலைமைப் பொறுப்பும், பொருளாதாரப் பொறுப்பும் ஆண்களையே சார்ந்துள்ளது என்பதை இதுவரை குடும்பவியலில் பார்ததுள்ளோம். அடுத்ததாக இஸ்லாமியக் குடும்பவியலில் பெண்களின் முக்கிய பொறுப்புக்கள் குறித்து பார்க்க வேண்டும். பெண்கள் வீட்டில் எப்படியிருக்க வேண்டும்? வீட்டில் பொறுப்புக்கள் என்ன? வெளியில் எப்படி இருக்க வேண்டும்? அதேபோன்று மாமனார் மாமியாருக்கு வேலை பார்ப்பதைப் பாரமாக நினைப்பது சரியா? என்பன போன்ற பல விஷயங்களை இந்தத் தலைப்பின் கீழ் பார்க்கப் போகிறோம். பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல் பெண்கள் வெளியிடங்களில் மக்கள் பார்வையற்ற […]

34) விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா?

இஸ்லாம் கூறும் குடும்பவியலில், குடும்பத்தின் எல்லா செலவீனங்களும் ஆண்களின் மீதே சுமத்தப்படுகிறது என்பதையும் திருமண ஒப்பந்தத்திற்கு முன்னால் பெண்களுக்கு மஹ்ர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து நாம் எதையும் வாங்கக் கூடாது என்பதையும் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக, இன்றைய கால சூழ்நிலையில் சிலர் வரதட்சணையை நேரடியாகக் கேட்டுப் பெறாமல் அன்பளிப்பு என்ற பெயரில் மறைமுகமாக வாங்குவதற்கு முயற்சிப்பதைப் பார்க்கிறோம். மாப்பிள்ளை வீட்டார் எதையும் கேட்பதில்லை. பெண் வீட்டார் தானாகவே தருவதாக தனக்குள் […]

33) மஹர் ஒரு கட்டாயக் கடமை

மஹர் என்பது எந்த அளவுக்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நபியவர்கள் காலத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), “நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! […]

32) மஹர் கொடுத்து மணம் முடிப்போம்

அன்றைய அறியாமைக் காலத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்கத்து காஃபிர்கள்கூட மஹர் கொடுத்துத்தான் திருமணம் புரிந்துவந்தனர். இருப்பினும் பெண்களுக்கு மஹர் கொடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்கள். என்றாலும் இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஆண் சமூகம் செய்யும் கொடுமையளவுக்கு அன்றைய அறியாமைக் காலம் செய்யவில்லை. மாறாக, பெண்ணுக்கு மஹர் தொகையைக் கொடுக்காமல் இருப்பதற்காக, ஒரு ஆணின் சகோதரியை இன்னொரு ஆண் திருமணம் முடித்துக் கொண்டு, திருமணம் முடித்தவரின் சகோதரியை மைத்துனர் கட்டிக் கொள்வார். […]

31) பணம் மட்டும் தான் வரதட்சணையா?

வரதட்சணைக் கொடுமையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். வரதட்சணையால் பெண்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. வரதட்சணையின் காரணத்தால் ஆண்களின் திருமணம் தாமதமாகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால், தங்கைக்குத் திருமணம் முடித்த பிறகுதான் அண்ணனுக்குத் திருமணம் என்பதை மார்க்கக் கடமை போல் செய்வதைப் பார்க்கிறோம். பெண்ணுக்குத் திருமணம் முடிப்பதாக இருந்தால் அண்ணன் தம்பிகள்தான் வெளிநாடு சென்று உழைத்து அதில் வரும் காசு பணத்தை வைத்து தங்கை அல்லது […]

30) பெண்ணினத்தை அழிக்கும் வரதட்சணை

இந்தியாவில் இளம் பெண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. வெளியில் பெண்ணின் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தைச் சொன்னால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கேவலமாகிவிடும் என்பதால் அதிகமானவர்கள் பொய்க் காரணங்களைச் சொல்கின்றனர். இளம் பெண்கள் தற்கொலை செய்யும் போது, வயிற்று வலியினால் தற்கொலை செய்ததாகச் சொல்வார்கள். ஆனால் அது பொய்யாகத்தான் இருக்கும். வயிற்று வலி என்பது எய்ட்ஸ் போன்ற மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய் போன்றதல்ல! வயிற்று வலிக்கு தகுந்த வைத்தியம் செய்தால் சரியாகிவிடும். அதற்காக ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? தனது […]

29) பெண்களின் உரிமைகள்

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபியவர்களின் மனைவியாக வரு வதற்கு முன்னால் அபூஸலமாவின் மனைவியாக இருந்தார்கள். அபூஸலமாவின் மூலமாகச் சில குழந்தைகள் உம்மு ஸலமாவுக்கு இருந்தன. நபியவர்கள் குடும்பச் செலவிற்காக உம்மு ஸலமாவிற்குக் கொடுக்கும் தொகையில் தனது முன்னால் கணவர் அபூஸலமா மூலமாகப் பெற்றெடுத்த தனது பிள்ளைகளுக்குச் செலவு செய்தால் நன்மை கிடைக்குமா? என நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் கூலி கிடைக்கும் என்று சொன்னார்கள். தடையேதும் போடவில்லை. அப்படியெனில் கணவனிடமிருந்து மனைவிக்குக் கிடைத்த பொருளா […]

28) பெண்களின் பொறுப்புகள்

குடும்பத்திற்கு செலவு செய்வது ஆண்களுக்குத் தான் கடமை என்று ஆதாரங்களைப் படித்தவுடன் பெண்கள், கணவன் சம்பாதிக்கிற அனைத்தையும் கேட்டுவிடக் கூடாது. கேட்கவும் முடியாது. அதனை மார்க்கம் அனுமதிக்கவுமில்லை. குடும்பத்திற்குச் செலவு செய்வது என்றால் என்ன? என்பதை அல்லாஹ்வுடைய தூதர் விளக்கித்தான் சென்றுள்ளார்கள். முஆவியா அல்குரைஷி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்கும் போது, “நீ உண்ணும் போது அவளுக்கும் […]

27) குடும்பச் செலவுக்கும் கூலி உண்டு

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்களைப் பார்த்து வருகிறோம். பெண்கள் வேலைக்குச் செல்வதால் பெண்களுக்குப் பல்வேறு பாதிப்பு ஏற்படுவதுடன் ஆண்களின் வேலை பாதிப்பதாகவும் கள ஆய்வு சொல்கிறது. ஆண்களை மட்டும் வேலைக்குச் சேர்த்தால் போட்டி போட்டுக் கொண்டு வேலை நடக்கிறது. அதுவே பெண்களுடன் வேலை செய்யும் ஆண்கள், வேலை செய்வதில் காட்டும் அக்கறையை விட, தன்னுடன் வேலைக்கு வந்த பெண்களின் மீது காட்டும் அக்கறை அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது ஆண்களைத் திசை திருப்புகின்ற காரியமாக பெண் […]

Next Page » « Previous Page