Author: Mukthiyaar Basha

மறுமை வாழ்வு மீது நம்பிக்கை

முன்னுரை மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையையும் உள்ளத்தில் பதிய வைக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஓர் அறிவார்ந்த அறிவியல் வாதத்தை வைத்தது. பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது அது செழித்து வளர்கிறது. இதை உயிர்ப்பிப்பவன் […]

யார் இந்த நபித்தோழர்?-8

1) நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராக இருந்தார் (புகாரி: 3730) 2) நபி (ஸல்) அவர்கள் இவரை ஒரு படைக்கு தளபதியாக நபிகளார் அனுப்பியுள்ளார்கள். (புகாரி: 3730) 3) இவருடைய தந்தையையும் ஒரு போருக்கு படைத்தளபதியாக நபியவர்கள் அனுப்பியிருந்தார்கள்.    (புகாரி: 3730) 4) மஹ்ஸமீ கோத்திரத்தில் ஒரு பெண் திருடியதால் அவருக்கு தண்டனையைக் குறைக்க இவருடைய பரிந்துரை கேட்கப்பட்டது. (புகாரி: 4304) 5) நபி (ஸல்) அவர்கள் இவரைக் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக்கொண்டு […]

யார் இந்த நபித்தோழர்?-7

1 தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இனிய குரல் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரி: 5048) 2 இவர்களுடைய மகனுக்கு நபிகளார் இப்ராஹீம் என்று பெயர் சூட்டினார்கள்.(புகாரி: 5467) 3 இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன் என இவர்களின் குலத்தை குறிப்பிட்டு நபிகளார் கூறினார்கள் (புகாரி: 2486) 4 இவருடைய குலத்தவர்கள் தங்களிடம் உணவு குறைந்து விட்டால் அனைவரும் தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் சேகரித்து தங்களுக்குள் சமமாக பங்கிட்டுக் […]

யார் இந்த நபித்தோழர்?-6

1 நால்வரில் ஒருவரிடம் அல்குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியோரில் இவரும் ஒருவர். (புகாரி: 3758) 2 இவர் நபியவர்களுடன் தொழுது விட்டு தன்னுடையை சமுகத்தாரிடம் சென்று இமாமாக தொழுகை நடத்துவார்கள் (புகாரி: 700, 701) 3 இவரை நபியவர்கள் யமனுக்கு ஆளுனராக அனுப்பினார்கள் (புகாரி: 1458) 4 வேதம் கொடுக்கப்பட்டவர்களை ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைக்கும் பணியை செய்தவர்கள். (புகாரி: 1458) 5 உபை பின் கஅப் (ரலி) அவர்களைப் பற்றி பனுஸலமா கூட்டத்தாரில் ஒருவர் குறை […]

யார் இந்த நபித்தோழர்?-5

1. நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாதி என்று சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்                 (திர்மிதி: 3680) 2. உஹதுப்போரில் வீரமரணம் அடைந்த முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் நிலையை நினைவு கூறிய நபித்தோழர். (புகாரி: 1275) 3. அல்லாஹ்வின் தூதரின் மகன் மரணித்த போது நபியவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று வினவிய நபித்தோழர். (புகாரி: 1303) 4.உமர் (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அடுத்த இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்களில் […]

யார் இந்த நபித்தோழர்?-4

1 . நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மைகளைப் பற்றி வினவிய போது தீமையில் இருந்து தப்பிக்கொள்ள தீமையைப் பற்றி வினவியவர் (புகாரி: 3606) 2 . உஹதுப் போரில் இவர்களின் முன்னிலையிலேயே இவர்களின் தந்தை கொல்லப்பட்டார்கள். (புகாரி: 3290) 3 . உஸ்மான் (ரலி) அவர்களிடம் அல்குர்ஆனை மக்கள் பலவாறாக ஒதுகின்றனர். இதற்கு மாற்று வழி காணுவது பற்றி முறையிட்டவர். (புகாரி: 4987) 4. நபியவர்களின் மரணத்துக்கு பிறகு நடக்க இருக்கிற சோதனைகளைப் பற்றி நன்கு […]

யார் இந்த நபித்தோழர்-3

1. நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்று சபதம் எடுத்தவர். (புகாரி: 4418) 2. இவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது என்று கூறினார்கள் (புகாரி: 2757) 3. இவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்: 5346) 4. பொய்யான காரணம் எதையும் சொல்லி […]

யார் இந்த நபித்தோழர்-2

1 சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர், (திர்மிதி: 3748) 2 இந்த நபித்தோழர் முஹாஜிர்களைச் சேர்ந்தவராவார் (புகாரி: 4061) 3 உஹுதுப்போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்த முஹாஜிர்களில் இவரும் ஒருவர் (புகாரி: 4061) 4 உஹுதுப்போரில் இவருடைய கை துண்டிக்கப்பட்டது. (புகாரி: 4063) 5 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டபோது அவர் நபிகளாரிடம் வந்தபோது எழுந்து சென்று கைகொடுத்து வாழ்த்துத் சொன்னவர்களில் இவரும் ஒருவர் (புகாரி: 4418) […]

யார் இந்த நபித்தோழர்-1

1 ) பனூ ஜதீமா குலத்தாரிடம் இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக இவரை நபிகளார் அனுப்பி வைத்தார்கள் ? (புகாரி: 7189) 2 ) மூத்தா போரில் இவர் தலைமை ஏற்றபோது தான் அல்லாஹ் வெற்றி தந்தான் ? (புகாரி: 1246) 3 ) நபிகளார் முன்னிலையில் உடும்புக் கறியை சாப்பிட்டவர் ? (புகாரி: 5400) 4 ) நபிகளாரின் மனைவி மைமூனா ( ரலி ) , இவர்களின் சிறிய தாயார் ? (புகாரி: 5391) 5 ) […]

11) ஜிஹாதின் பெயரால் ஐயாயிரம் முஸ்லிம்கள் படுகொலை

ஆயிஷா (ரலி) படைக்குள் சதிகாரர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதாகக் கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் 900 குதிரைப் படையுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட படை, பஸரா செல்லும் வழியில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் மேலும் படையைத் திரட்டிக் கொண்டு, கணிசமான வலிமையுடன் பஸராவை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில், “மர்ருழ் ழஹ்ரான்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஃபாத்திமா பள்ளத்தாக்கை அடைந்ததும், ஆயிஷா நாயகியின் படையில் சேர்ந்து கொண்டு வந்த சயீத் இப்னுல் […]

10) அன்னையாரின் சபதம்

அலீ (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நான்காவது கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. அவர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. பெருமானாரின் மனைவிமார்களான உம்முல் முஃமினீன்களிடமிருந்தும், பல மூத்த நபித்தோழர்களிடமிருந்தும் எதிர்ப்புகளையும் கண்டனக் கனைகளையும் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் காரணம் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை தான். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியும் அவர்களின் படுகொலையும் எப்படி ஜிஹாத் என்ற பெயரில் நடத்தப்பட்டதோ, அதே […]

09) அலீ (ரலி) சந்தித்த சவால்கள்

முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் எந்தளவுக்கு எச்சரிக்கை செய்தார்கள் என்பதையும், அந்த எச்சரிக்கைக்கு மாற்றமாக முஸ்லிம் உம்மத் ஜிஹாதைத் தவறாக விளங்கி செயல்பட்டதால் உஸ்மான்(ரலி) அவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் விரிவாக சென்ற இதழில் பார்த்தோம். ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இஸ்லாமிய வரலாறு சந்தித்த இரத்தக் கறை படிந்த அத்தியாயங்களின் தொடரில் அலீ (ரலி) அவர்களின் ஆட்சியின் போது நடந்த துயர நிகழ்வுகளும் அமைந்துள்ளன. அலீ […]

08) ஜிஹாதின் பெயரால் நடந்த உஸ்மான் (ரலி) கொலை! அதிர்ச்சி வரலாறு

“ஜிஹாத்’ என்ற சொல்லின் விளக்கத்தையும், ஜிஹாத் (கிதால்) உட்பட இறைவன் நமக்கு விதியாக்கிய எந்தக் கடமையையும் நாம் விரும்பியவாறு செய்ய முடியாது; அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வகுத்துத் தந்த விதிமுறைகளின் படியே நிறைவேற்ற வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் இது வரை பார்த்தோம். ஜிஹாத் (கிதால் – ஆயுதப் போர்) பற்றி முழுமையான ஆய்வு செய்யாமல் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டதால் இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்டுள்ள துயரச் சம்பவங்கள் பற்றியும், அதிலிருந்து […]

07) ஜிஹாதின் அடிப்படை

“ஜிஹாத்” என்றால் என்ன? என்னென்ன நற்செயல்கள் எல்லாம் “ஜிஹாத்’ என்ற வட்டத்திற்குள் வருகிறது என்பதையும் நடைமுறையில் ஜிஹாத் என்றாலே ஆயுதந்தாங்கிப் போரிடுவது மட்டும் தான் என்று விளங்கி வைத்திருப்பது தவறு என்பதையும் இதுவரை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பார்த்தோம். ஜிஹாதின் முக்கிய ஓர் அங்கமான “கிதால்’ (ஆயுதம் ஏந்திப் போரிடுதல்) பற்றி இனி விரிவாக நாம் பார்ப்போம். முஸ்லிம்கள் ஆயுதமேந்திப் போரிடுவதை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் திருமறைக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு சென்ற தொடரில் நாம் […]

06) ஜிஹாதும் கிதாலும்

“ஜிஹாத்’ என்றாலே முஸ்-ம் அல்லாதவர்களை முஸ்-ம்கள் அழிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தை என்ற தவறான கருத்து இன்று உலகம் முழுவதும் நிலவி வருகின்றது. இன்னும் சொல்லப் போனால் தங்களை முஸ்-ம்கள் என்று சொல்-க் கொள்வோர் சிலர் கூட இந்தக் கருத்தைத் தான் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தவறான கருத்து நிலவுவதற்கு மிக முக்கிய காரணம் மேற்கத்திய ஏதேச்சதிகார சக்திகளின் ஊதுகுழலாய் விளங்கக் கூடிய தகவல் தொடர்பு சாதனங்களும், முஸ்-ம்களிடம் ஜிஹாதைப் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமையும் தான். இந்தத் தவறான […]

05) செல்வத்தால் போரிடுதல்

இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது, மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவது, நீதிக்காக (நாவினால்) குரல் கொடுப்பது ஆகிய நற்செயல்கள் அனைத்தும் “ஜிஹாத்’ என்பதை ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களின் மூலம் சென்ற தலைப்பில் நாம் பார்த்தோம். இவை அல்லாமல் நேரடியாகக் களப் போரில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வதும், அந்த யுத்தத்திற்குத் தேவையான தளவாடங்களுக்காக தங்களிடமுள்ள செல்வங்களைச் செலவிடுவதும் “ஜிஹாத்’ (அறப்போர்) தான் என்பதை விளக்கும் ஒரு சில வசனங்களை […]

04) நீதிக்குக் குரல் கொடுப்போம்

“ஜிஹாத்’ என்பதற்கு உழைத்தல் – பாடுபடுதல், வற்புறுத்துதல் – கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி ஆகிய அர்த்தங்கள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் சான்றுகளுடன் இதுவரை பார்த்தோம். மேலும் என்னென்ன நற்செயல்களுக்கு “ஜிஹாத்’ என்ற வார்த்தை பொருந்தும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். ஹஜ் செய்வதும் ஜிஹாத் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சிறந்த, அழகிய ஜிஹாத் […]

03) ஜிஹாத் பொருள் விளக்கம்

“ஜிஹாத்’ என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்பது மட்டும் பொருளல்ல! அது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை என்பதைப் பார்த்து வருகின்றோம். ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி, அழைப்புப் பணி ஆகிய பொருள்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களைக்  கண்டோம். அழைப்புப் பணி செய்வதும் “ஜிஹாத்’ தான் என்பதை வ-யுறுத்தும் மேலும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! […]

02) ஜிஹாதின் அர்த்தங்கள்

“ஜிஹாத்’ என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல் என்ற பொருளும், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருளும் உள்ளது என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களை சென்ற இதழில் கண்டோம். மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய வசனங்களைக் காண்போம். உறுதி ஜிஹாத் என்பதற்கு உறுதி என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அது சம்பந்தமான வசனங்களைக் காண்போம். “நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே’ என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா? என்று நம்பிக்கை கொண்டோர் […]

01) முன்னுரை

ஜிஹாத் – இந்த சொல்லைக் கேட்டாலே ஒரு சாரார் வெறுப்பின் உச்சத்திற்குச் செல்வதையும் மற்றொரு சாரார் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, தங்களையும் தங்கள் சமுதாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் காண முடிகின்றது. ஜிஹாதைப் பற்றி மேற்கண்ட இரு சாராரும் கொண்டுள்ள கருத்துக்கள் சரியானவை தாமா? இறுதி வேதமான திருமறைக் குர்ஆனும் இறுதித் தூதராகிய பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையும் ஜிஹாத் சம்பந்தமாக என்ன விளக்கமளிக்கின்றன? ஓர் உண்மை முஸ்-ம் ஜிஹாத் […]

நட்பு ஓர் இஸ்லாமியப் பார்வை

  முன்னுரை மனிதனுடைய இயற்கையான இயல்பு ஒருவரோடு ஒருவர் நட்பு வாஞ்கைகொண்டு பழகுவதாகுவே அமைந்துள்ளது. மனிதன் எப்போதும் தன் உள்ளக்கிடக்கினைக் கொட்டித் தீர்த்திட ஒரு துணையையும் தனக்கு ஆபத்தில் துணை நிற்க ஒரு நண்பனையும் தேடிய வண்ணமே இருக்கின்றான். மனிதனுக்கும், வனங்களில் வாழும் விலங்குகளுக்கும் இடையில் முக்கியமான வேறுபாடுடையதாக, பகுத்துக் காட்டும் பிரிகோடாக அன்பு அமைந்துள்ளது.அன்பு, இரக்கம், நட்பு, பாசம், நேசம் என்பன இஸ்லாமிய வாழ்வின் அடிப்படைகளுள் மிக முக்கியமானவையாக அமைந்து காணப்படுகின்றன. இஸ்லாமிய இலட்சிய சமுதாய […]

நிச்சயிக்கப்பட்ட மரணம்!

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் […]

அல்லாஹ்வை நம்புவது எப்படி?

அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் அவன் தான் என்று நம்புகிறோம். ஆனால் இந்த நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்கறதா? என்று பார்த்தால் நாம் எந்த அளவு அல்லாஹ்வை நம்ப வேண்டுமோ அந்த அளவுக்கு யாரும் அவனை […]

08) ஸிஹ்ர் ஒரு விளக்கம்

மூஸா நபி அவர்கள் அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திய வாசகம் ஸிஹ்ர் என்பது தான். அதாவது இவர் செய்வது உண்மை அல்ல ஸிஹ்ர் அதாவது பித்தலாட்டம் என்று அவர்கள் கூறினார்கள். நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக அவர்களது சமூகம் சொன்ன பதிலையே நபி ஈஸாவின் சமூகமும் அவருக்குச் சொன்னது. “மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் […]

தீய நண்பன்

கெட்ட தோழன் நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிடுவான். அபூமூசா (ர-லி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி […]

07) பொறாமையால் ஏற்படும் தீங்குகள்

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்ற இறுதி வசனத்தின் விளக்கத்தைக் காண்போம். ஒரு மனிதனிடமிருந்து நமக்குக் கேடு வருவதாக இருந்தால், பொறாமையினால்தான் கேடு வரும். நமக்கு எவன் கேடுசெய்தாலும் கண்டிப்பாக அதில் பொறாமை இருக்கும். அதனால்தான் தெரிந்தவர்களுக்குக் கேடுசெய்கிறார்கள். தெரியாதவர்களுக்கு மத்தியில் எந்தக் கேடும் நடப்பதில்லை. நீங்கள் யார்? என்று எனக்குத் தெரியாவிட்டால் நான் யார்? என்று உங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எனக்கு எந்தக் கேடும் செய்ய […]

06) முடிச்சுகளில் ஊதும் பெண்கள் ஏன்றால் யார்?

அடுத்ததாக, ஸிஹ்ர் – சூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்து விடுகிற குற்றமாகும். “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள […]

05) ஹாரூத் மாரூத் மலக்கா?

நாம் திருக்குர்ஆனில் உள்ள சின்னஞ்சிறிய அத்தியாயங்களுக்கு விரிவுரையைப் பார்த்து வருகிறோம். அந்தத் தொடரில் நபியவர்களுக்கு யூதர்களால் சூனியம் வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்தி, குர்ஆனிலுள்ள பல்வேறு வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதாலும், அது சம்பந்தமாக அறிவிக்கப்படுகிற செய்திகளில் பல்வேறு முரண்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாலும் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி சரியானதாக இல்லை. ஒரு மனிதரை சூனியம் செய்து அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்பது தான் இதுவரை நாம் பார்த்ததின் சாராம்சம். இதன் தொடர்ச்சியாக, சூனியம் சம்பந்தமாக திருக்குர்ஆனின் 2 […]

04) நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதா

சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள் : “சூனியம் என்பது கற்பனை அல்ல; மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம். பைத்தியமாக ஆக்கலாம்” என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தமது கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களைத் தங்களின் கருத்தை […]

03) ஸிஹ்ர் என்றால் என்ன?

மூஸா நபி அவர்கள் அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திய வாசகம் ஸிஹ்ர் என்பது தான். அதாவது இவர் செய்வது உண்மை அல்ல ஸிஹ்ர் அதாவது பித்தலாட்டம் என்று அவர்கள் கூறினார்கள். நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக அவர்களது சமூகம் சொன்ன பதிலையே நபி ஈஸாவின் சமூகமும் அவருக்குச் சொன்னது. “மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் […]

02) சூனியமா? தந்திரமா?

وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்த வசனத்தின் விளக்கத்திற்குச் செல்வதற்கு முன்னால் ஸிஹ்ர்-சூனியம் சம்பந்தமாக அக்குவேறாக ஆணிவேராக பார்ப்பது மிகவும் நல்லது. இனிவரும் காலங்களில் இந்த வசனத்தைத் தவறாக விளங்கிவிடாத அளவுக்கு நாம் சூனியத்தை விரிவாக அலசவேண்டும். இந்த வசனத்தை யார் யார் எப்படி எப்படியெல்லாம் தவறாக விளங்கியும் விளக்கியும் உள்ளனர் என்பதையெல்லாம் தெளிவாக தெரிந்து கொள்வதின் மூலம் நமது ஈமானுக்கு […]

01) முன்னுரை

113 வது அத்தியாயத்தின் பெயர் ஃபலக் (அதிகாலை) என்பதாகும். இந்த அத்தியாயத்தின் மூலம் மனிதன் இறைவனிடம் எவ்வாறு பாதுகாப்புத் தேடவேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தருகிறான். முதலில் இந்த அத்தியாயத்தின் நேரடியான பொருளைப் பார்ப்போம். قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5) அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் […]

பூனையை விற்பனை செய்யலாமா?

முன்னுரை மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற பல செல்லப் பிராணிகள் இன்று வீடுகளில் வைத்து வளர்க்கப்படுகின்ற அடிப்படையில் பூனைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றது. பூனையால் வீட்டில் இருக்கும் எலி போன்ற தீங்கு தருகின்றவற்றைக் கொல்வது போன்ற சில பலன்களும் ஏற்படுகிறது. பொதுவாக நாட்டு ரகப் பூனைகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் பல வகை ஃபேன்சி ரகப் பூனைகளும் இன்று மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றது. பூனையை வளர்ப்பது தடையில்லை மார்க்க அடிப்படையில் பூனைகளை வளர்ப்பது தடையில்லை. என்றாலும், அவற்றை வளர்க்கும்போது கொடுமைப்படுத்தாமல், சரியான […]

மவ்லித் ஓத ஆதாரம் உள்ளதா?

இப்னு ஹஜர் அல்ஹைதமியின் புனைசுருட்டுகள்! ரபியுல் அவ்வல்மாதம் வந்துவிட்டாலே நபிப் புகழ் பாடுகிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரே துலாத்தட்டில் நிகர்செய்யும் இழிவணக்கங்கள் முஸ்லிம்கள் சிலரால் வழிபடப்பட்டு வருவதை நாம் அறிவோம். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இந்த மவ்லித் பாடல்களுக்கு மார்க்க சாயம் பூச முடியவில்லை என்றதும் இப்னு ஹஜர் அல்ஹைதமி என்பவர் எழுதிய “அந்நிஃமதுல் குப்ரா அலல் ஆலம்” எனும் நூலிலிருந்து நபித்தோழர்கள் பெயரிலும், ஏனைய இமாம்களின் பெயரிலும் […]

04) கடவுளை மறுப்பவன் மூடன்

பகுத்தறிவு என்றால் ஐந்து புலன்களால் அறியக் கூடிய செய்திகளைச் சிந்தித்து அதன் மூலம் ஒரு விஷயம் சரியா தவறா? உண்மையா பொய்யா? என்பதைத் தீர்மானிப்பதாகும். அந்த அடிப்படையில் இறைவன் இருக்கின்றானா? என்பதை அறிய இவ்வுலகின் மற்ற அம்சங்களை நாம் சிந்திக்க வேண்டும். இப்போது கம்ப்யூட்டரை எடுத்துக் கொள்வோம். இதை நாம் பார்க்கிறோம். இதில் வேலை செய்கின்றோம். இதன் ஆற்றலைப் பார்த்து வியக்கின்றோம். இதை ஒருவர் கண்டுபிடித்தார் என்று சொன்னதால் அதை நாம் நம்புகின்றோம். இதைக் கண்டுபிடித்தவனின் அறிவுத் […]

03) கடவுளைக் கண்டவருண்டா?

அகில உலகத்துக்கும் ஓர் இறைவன் இருக்கின்றான். அவன் ஒரே ஒருவன் தான் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை! இந்த ஓரிறைக் கொள்கையை நாம் சொல்லும் போது சிலர், கடவுள் என்று ஒருவன் இல்லை, கடவுள் இருக்கின்றான் என்பதைப் பகுத்தறிவு உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிடுவதை நாம் பார்க்கிறோம். கடவுள் இல்லை என்ற இந்தத் தத்துவத்திற்குப் பெயர் நாத்திகம்! பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் இவர்கள், கடவுள் இல்லை என்று நிரூபிக்க சில […]

02) மன்னிக்க முடியாத குற்றம்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற இறைக்கட்டளையின் அடிப்படையில் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகவாதிகளின் வாதங்களுக்குப் பதில் சொல்லத் தெரிய வேண்டும். இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கையின் முதல் அம்சம். அடுத்தபடியாக கடவுள் என்றால் அது ஒரே ஒருவன் மட்டும் தான் இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏன் இரண்டு கடவுள்கள் அல்லது பல கடவுள்கள் இருக்க முடியாது? குல தெய்வம் என்று குடும்பத்துக்கு […]

01) முன்னுரை

முஸ்லிம்களின் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. சுமார் 20 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இந்த 20 கோடி பேரில் எத்தனை பேர் இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொண்டவர்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் ஒரு சதவிகிதம் கூட இருக்காது. பெரும்பாலும் வாரிசு முறையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே உள்ளோம். இந்தியாவை உதாரணத்திற்குக் கூறினாலும் உலகம் முழுவதும் இதே நிலைதான். இன்று நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்றால் உலகிலுள்ள அனைத்து மதங்களையும் […]

இறுதி மூச்சுவரை ஏகத்துவம்

அல்குர்ஆனில் இறைவன், முன்னர் வாழ்ந்த பல்வேறு நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற விஷயங்களையும் சொல்லிக் காட்டுகிறான். இவ்வாறு முந்தைய நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ் கூறுவதன் நோக்கம் அதிலருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்; நம்முடைய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் அவர்களைப் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியை குர்ஆனில் யூசுப் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் விரிவாக சொல்லிக் காட்டி […]

அசுத்ததை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள்

இன்றைய உலகம் அறிவியல் முன்னேற்றத்திற்கு பஞ்ச மில்லாமலும், அதே நேரத்தில் பலவிதமான நோய்க ளுக்கும் பஞ்சமில்லாமல் மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு நோய் பிரபலிமாய் கொண்டே வருகிறது. ஒரு வருடத்தில் சார்ஸ் இன்னொரு வருடத்தில் பறவைக் காய்ச்சல் இப்பொழுது பன்றிக் காய்ச்சல் என்று அச்சுறுத்திவருகிறது. அதிலும் குறிப்பாக உலக அளவில் தூய்மையில் முதலிடத்தை பிடிக் கும் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் இந்நோ யின் பிறப்பிடமாக உள்ளன. அந்நாடுகளிலிருந்துதான் பிற நாடுகளுக்கு அந்நோய்களும் விமானங்கள் கப்பல்கள் வழியாக […]

வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான்!

நபி (ஸல்) அவர்கள் (அகழ் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கி புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், ” இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான். ஆகவே அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி!” என்று (பாடிய வண்ணம்) […]

அழிவுகளுக்குக் காரணம்

முன்னுரை தற்காலத்தில் நம்பிக்கை மோசடி பெருகி விட்டதால் பூகம்பங்களும் சுனாமிகளும் பெருகி விட்டன. மனிதர்கள் செய்யும் பாவச் செயல்களால் இது போன்ற மாற்றங்கள் பல இடங்களில் இடைவிடாது தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அழிவுகளில் எல்லாம் மிகப் பெரிய அழிவு, அதற்குப் பின்னால் எந்த உயிரினமும் ஜீவிக்க முடியாத நிலையை உருவாக்கும் அழிவு இறுதி நாளாகும். இக்காலத்தில் வாழ்பவர்கள் படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட கொடிய நாள் வருவதற்கு அடையாளம் அமானிதங்கள் பாழ்படுத்தப்படுவது தான். இது […]

சொர்க்கத்தை கடமையாக்கும் செயல்கள்

இஸ்லாத்தின் முக்கியமான அடிப்படை, மறுமை வாழ்க்கையை நம்புவதாகும். மேலும் அந்த வாழ்க்கையில் சொர்க்கம் என்ற பூஞ்சோலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்து, நரகம் என்ற கொடுமையான வாழ்க்கையிலிருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இவ்வுலகத்தில் மேற்கொள்வதாகும். மறுமையில் சொர்க்கத்தில் கிடைக்கும் மாபெரும் பாக்கியத்திற்கு நிகராக இவ்வுலகத்தில் எந்தப் பாக்கியமும் கிடையாது. அங்கு ஓர் அடி இடம் கிடைத்தால் கூட இவ்வுலகத்தின் அனைத்து இன்பத்தை விடவும் மிகப் பெரியதாக இருக்கும். சொர்க்கத்தின் இன்பத்தை விளக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: […]

அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்

எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத் தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம். தனது தேவைக்கு மிஞ்சிய செல்வம் படைத்தவர்கள், தனக்குக் கீழுள்ள கஷ்டப்படும் ஏழைகளுக்குக் […]

அழகிய கடனும் அர்ஸின் நிழலும்

முன்னுரை வியாபாரம் செய்வதற்காக இன்று நாடார் சமுதாயத்தில் பொருள் கடன் கொடுத்து உதவுகின்றார்கள். அதல பாதாளத்தில் கிடப்பவனுக்கு பொருளாதாரம் எனும் மலை உச்சியில் இருப்பவர்கள் கடன் எனும் கயிறு கொடுத்து, கை கொடுத்து உதவுகின்றார்கள். உலகையே குறிக்கோளாகக் கொண்ட அந்தச் சமுதாயம் இந்த நல்ல காரியத்தைச் செய்கின்றது. ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்ட இந்தச் சமுதாயம் இதைக் கண்டு கொள்ளவேயில்லை. இஸ்லாமிய மார்க்கம் ஐந்து நேரத் தொழுகையின் மூலம் கூட்டுத் தொழுகையைத் தந்து சமுதாயத்தின் உறுப்பினர்கள் படும் […]

பாழாக்கப்படும் ஃபஜ்ர் தொழுகை

முன்னுரை தொழுகை என்பது இஸ்லாத்தின் தூண் என்று போற்றப்படும் ஒரு சிறப்புமிக்க வணக்கம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். இதையும் தாண்டி தொழுகை, இறைவனுக்கு மிகவும் விருப்பமானதாகும். இறைவனிடத்தில் மிக நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். மறுமை நாளில் முதன் முதலாய் இறைவன் நம்மிடம் விசாரிப்பது இந்த தொழுகையைப் பற்றிதான். இதற்கான பதில் சரியாய் அமைந்து விடுமாயின் பின்னுள்ள அனைத்து கேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலை கொடுத்து வெற்றிக்கனியை எட்டிப்பறித்து விடுவோம். மாறாக, தொழுகையின் கேள்விக்கு சரியான பதில் நம்மிடத்தில் […]

மார்க்கமா? உறவா?

முன்னுரை சத்தியமார்க்கமான இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள், அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்கள் மட்டுமே. இவ்விரண்டுக்கு எதிரான எந்தவொரு கருத்துக்கும், இஸ்லாத்துக்கும் இம்மியளவுகூட சம்பந்தமில்லை. இதையறிந்து மற்ற வழிகேடான வலுவற்ற ஆதாரங்களை உதறித்தள்ளிவிட்டு, இந்த இரண்டு உண்மையான ஆதாரங்களை ஏற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வளர்பிறைபோல வளர்ந்துகொண்டே இருக்கின்றது. இருப்பினும், இவர்களில் பலர் தங்களுடைய பெற்றோர்கள், வாழ்க்கை துணைவியர், குழந்தைகள், உடன்பிறந்தவர்கள், சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்கள் போன்றோர் நடைமுறைப்படுத்துகின்ற மார்க்கத்திற்கு முரண்பாடான காரியங்களில் பங்கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் […]

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது நமக்குள்ள கடமைகள்

முன்னுரை மனிதனைப் படைத்தப் பிறகு, அவன் மனம்போனப் போக்கிலே வாழ்ந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடாமல் அவனுக்கு முழுமையான வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தருவதற்காக, அல்லாஹ் தொடர்ச்சியாகப் பல தூதர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினான். அவர்களின் வரிசையில் இரட்சகனின் கிருபையால் நம்மை நிராகரிப்பெனும் காரிருள் பாதையிலிருந்து மீட்டெடுத்து, ஒளிமிக்க நேர்வழியில் அழைத்துச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள். (முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.(அல்குர்ஆன்:) ➚ குறிப்பிட்ட இனம், மதம், மொழி, குலம் மற்றும் கோத்திரம் சார்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, உலகமக்கள் […]

முயற்சித் திருவினையாக்கும்

முன்னுரை இன்பங்களும் துன்பங்களும் இரண்டறக்கலந்த கலவை தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் பருவமாற்றங்களைப் போல இடையிடையே எட்டிப்பார்க்கின்ற எதிர்ப்புகள், பிரச்சனைகள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்ள இயலாமல் மக்களில் பலர், தங்களுடைய இலட்சிய இலக்கை விட்டும் பாதியிலேயே புறமுதுகிட்டு ஓடிவிடுகின்றார்கள். அரிதாக சிலர் பல்வேறான மாற்றுமுயற்சிகள், கடும் உழைப்புகள் மூலம் துயரங்கள் தூக்கிப்போடுகின்ற முட்டுக்கட்டைகளை உடைத்தெறிந்துவிட்டு, தங்களது இலட்சிய எல்லையை திட்டமிட்டப்படி எட்டிப்பிடிப்பதைப் பார்க்கின்றோம். இத்தகையவர்கள் அனைத்து துறைகளிலும் இருக்கின்றார்கள். உதாரணமாக அறிவியல் அறிஞர்கள், ஆய்வுகளில் ஈடுபடுகின்றபோது தங்களைத் […]

நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகள்

அல் குர்ஆனும், ஆதாரப்பூர்வமான செய்திகளும் நபி (ஸல்) அவர்களுக்கு மகத்தான சிறப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் அல்லாஹ் தஆலா மற்ற நபிக்கோ, மனிதர்களுக்கோ கொடுக்காத சிறப்புகளை அவர்களுக்கு வழங்கியிருக்கிறான். நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகளை பொருத்த வரை இரண்டு வகையாக பிரிக்கலாம். நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது. இந்த சிறப்புகள் மற்ற இறைத்தூதர்களுக்கு உரியது கிடையாது. இந்த உம்மத்திற்கு விதிக்கப்பட்ட சட்டங்களில் நபிகளாருக்கும் மட்டும் குறிப்பானது. இதில் சில சட்டங்களில் நபிமார்களும் […]

Next Page »