21) நரக வேதனையிலிருந்து விடுபட
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبَّنَا ٱصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
ரப்பன-sஸ்ரிFப் oஅன்னா oஅdhதாப ஜhஹன்னம், இன்ன oஅdhதாபhஹா கான ghகராமா.
பொருள்: எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 25:65)➚
(அர்ரஹ்மானின் அடியார்கள் கேட்கும் பிரார்த்தனை)
رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ
ரப்பனாa இன்னக மன் துdத்khகிலின் நார Fபqகdத் அkhக்zஸைதhஹ், வமா லிள்ளாலிமீன மின் அன்sஸார்.
பொருள்: எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவுபடுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவி யாளரும் இல்லை. (அல்குர்ஆன்: 3:192)➚