மரணமும் மறுமையும் – 10 (மரண வீட்டில், கப்ரில் நடக்கும் கூத்துக்கள்!)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்
இன்னாலில்லாஹ் என்று கூறுதல்

 ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது

ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்  என்பது இதன் பொருள்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது  நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 2:155,156,157)

மேற்கண்ட சொற்களை மரணத்தின் போது மட்டுமின்றி நமக்கு ஏற்படும் எத்தகைய துன்பத்தின் போதும் கூறுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவரின் இழப்பு நம்மைப் பாதிக்கும் என்றால் பிரார்த்தனையையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.

صحيح مسلم 2165 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – أَخْبَرَنِى سَعْدُ بْنُ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ عَنِ ابْنِ سَفِينَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ مَا أَمَرَهُ اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِى فِى مُصِيبَتِى وَأَخْلِفْ لِى خَيْرًا مِنْهَا. إِلاَّ أَخْلَفَ اللَّهُ لَهُ خَيْرًا مِنْهَا ». قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ أَىُّ الْمُسْلِمِينَ خَيْرٌ مِنْ أَبِى سَلَمَةَ أَوَّلُ بَيْتٍ هَاجَرَ إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. ثُمَّ إِنِّى قُلْتُهَا فَأَخْلَفَ اللَّهُ لِى رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم-. قَالَتْ أَرْسَلَ إِلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- حَاطِبَ بْنَ أَبِى بَلْتَعَةَ يَخْطُبُنِى لَهُ فَقُلْتُ إِنَّ لِى بِنْتًا وَأَنَا غَيُورٌ. فَقَالَ « أَمَّا ابْنَتُهَا فَنَدْعُو اللَّهَ أَنْ يُغْنِيَهَا عَنْهَا وَأَدْعُو اللَّهَ أَنْ يَذْهَبَ بِالْغَيْرَةِ ».

ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது இறைவன் கட்டளையிட்டவாறு  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்  எனக் கூறிவிட்டு அல்லாஹும்ம மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தி வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா (இறைவா! எனது இத்துன்பத்துக்காக நீ கூலி தருவாயாக! இதை விடச் சிறந்ததை எனக்குப் பகரமாகத் தருவாயாக!) என்று கூறினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் அவருக்குப் பகரமாக்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் என் கணவர் அபூ ஸலமா இறந்த போது  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த குடும்பத்தவரான அபூ ஸலமாவை விட சிறந்த முஸ்லிம் வேறு யார் இருப்பார்?  என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். என் கணவருக்குப் பகரமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குத் தந்தான்.

அறி: உம்மு ஸலமா (ரலி)

(முஸ்லிம்: 1525, 1526),

இறந்தவரின் வீட்டுக்கு அல்லது நோயாளியைச் சந்திக்கச் செல்பவர் நல்லதையே கூற வேண்டும். ஒரு நோயாளியை நாம் சந்திக்கச் சென்றால் அவர் பிழைப்பது அரிது என்ற நிலையில் இருந்தாலும், அவருக்கு நல்லதைத் தான் கூற வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தருவான் என்பன போன்ற சொற்களைத் தான் கூற வேண்டும்.

இது போல் தான் மரணித்தவர் வீட்டுக்குச் சென்றாலும் அவரது உறவினர்களிடம் நல்லதையே கூற வேண்டும்.

صحيح مسلم 2168 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ أَوِ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ ». قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سَلَمَةَ قَدْ مَاتَ قَالَ « قُولِى اللَّهُمَّ اغْفِرْ لِى وَلَهُ وَأَعْقِبْنِى مِنْهُ عُقْبَى حَسَنَةً ». قَالَتْ فَقُلْتُ فَأَعْقَبَنِى اللَّهُ مَنْ هُوَ خَيْرٌ لِى مِنْهُ مُحَمَّدًا -صلى الله عليه وسلم-.

நீங்கள் நோயாளியையோ, மரணித்தவரையோ காணச் சென்றால் நல்லதையே கூறுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுவதற்கு வானவர்கள் ஆமீன் கூறுகின்றனர்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: உம்மு ஸலமா (ரலி)

(முஸ்லிம்: 1527)

இழப்பை தாங்க முடியாமல், தவறான வார்தைகள் பேசிவிடுதல்

ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு உயர்ந்த செயலாக இதை இறைவன் மதிப்பிடுகிறான்.

‘மூமின்களின் காரியங்கள் வியப்பாக உள்ளன. அவரது அனைத்துக் காரியங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றன. மூமினைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படால் நன்றி செலுத்துகிறார். எனவே அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்கிறார். எனவே அதுவும் அவருக்கு நன்மையாகி விடுகிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: ஸுஹைப் (ரலி)

(முஸ்லிம்: 5318)

பாவமன்னிப்பு தேடுதல்

மரணச் செய்தி நம்மிடம் கூறப்பட்டால் ‘அவரை அல்லாஹ் மன்னிக்கட்டுமாக!’ என்று அவருக்காக உடனே துஆச் செய்ய வேண்டும்.

அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’ என்று கூறினார்கள்.

அறி: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 1328)

ஸைத் (ரலி), ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோரின் மரணச் செய்தியை மக்களுக்கு நபிகள் நாயகம் அறிவித்த போது ‘அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’ எனக் கூறியுள்ளனர்.

(அஹ்மத்: 21509)

 இந்த நேரத்தில் மரண வீட்டில் நடக்கும் நில அனாச்சாரங்களை நாம் சொல்லத் தான் வேண்டியுள்ளது. இவைகள் மீண்டும் மீண்டும் மக்களிடையே சொன்னால் தான், இந்த பித்அத்கள் ஒழியும்.

 

மய்யித்தை பார்க்கும் போது கூறவேண்டியவை

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடிவிட்டார்கள். பிறகு, “உயிர் கைப்பற்றப்படும்போது பார்வை அதைப் பின்தொடர்கிறது” என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் “ஆமீன்” கூறுகின்றனர்” என்று கூறினார்கள்.

اللهُمَّ اغْفِرْ لِأَبِي سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ

மேலும், “இறைவா! அபூசலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

(முஸ்லிம்: 1678) .

இந்த துஆவில் அபூஸலமாவை மன்னிப்பாயாக என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். மய்யித்தின் பெயர் தெரிந்தால் அவரின் பெயரைக் குறிப்பிட்டு இவ்வாறு துஆ செய்யலாம். தெரியாவிட்டால் ஆண் மய்யித்திற்கு அல்லாஹும் மஃக்ஃபிர் லஹூ என்றும், பெண் மய்யித்திற்கு அல்லாஹும் மஃக்ஃபிர்லஹா என்றும் கூறி துஆ செய்யலாம்.

யாஸீன் ஓதுவது, கத்தம் ஓதுவது

மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. திருக்குர்ஆனின் 36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்தை அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

حدَّثنا محمدُ بن العلاءِ ومحمد بن مكيٍّ المروزيُّ -المعنى- قالا حدَّثنا ابنُ المبارَك، عن سليمانَ التيمىِّ، عن أبي عثمانَ -وليس بالنَّهْديِّ- عن أبيهِ عن مَعْقِلِ بن يَسارٍ، قال: قال رسول -صلَّى الله عليه وسلم-: “اقرؤوا {يس} على موتاكُم”

உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறி: மஃகில் பின் யஸார் (ரலி)

நூல்கள்: அபூ தாவூத் 2714,(இப்னு மாஜா: 1438),(அஹ்மத்: 19416, 19427)(ஹாகிம்: 1)/753

மேற்கண்ட ஹதீஸ்களில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யார் என்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் எந்த ஹதீஸாக இருந்தாலும் அதை அறிவிப்பவருக்கு வரலாறு இருக்க வேண்டும். அவரது நினைவாற்றல், நாணயம் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இருவரும் யார் என்றே தெரியாததால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அபூ உஸ்மான் என்பவர் தனது தனது தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் மஃகில் பின் யஸார் வழியாக நேரடியாக அறிவிக்கும் சில ஹதீஸ்கள் உள்ளன.

صحيح بن حبان 3002 – أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوا عَلَى مَوْتَاكُمْ يس».

இப்னு ஹிப்பான் மற்றும் சில நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது

அபூ உஸ்மான் என்பவர் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இவை அனைத்துமே பலவீனமாக உள்ளதால் இறந்தவர்களுக்கு அருகில் அல்லது இறந்தவரின் நன்மைக்காக யாஸீன் ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.

யாஸீன் என்பது 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயம். மற்ற அத்தியாயங்களை நமது நன்மைக்காக நாம் ஓதுவது போல யாஸீனையும் நமது நன்மைக்காக ஓதலாம். ஆனால், இறந்தவரின் நன்மைக்காக இதை ஓதக் கூடாது.

பா(த்)திஹா, பகரா அத்தியாயம் ஓதுதல்

 المعجم الكبير للطبراني 13438 – حَدَّثَنَا أَبُو شُعَيْبٍ الْحَرَّانِيُّ , حَدَّثَنَا يَحْيَى بن عَبْدِ اللَّهِ الْبَابْلُتِّيُّ , حَدَّثَنَا أَيُّوبُ بن نَهِيكٍ , قَالَ: سَمِعْتُ عَطَاءَ بن أَبِي رَبَاحٍ , يَقُولُ: سَمِعْتُ ابْنَ عُمَرَ , يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقُولُ:إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلا تَحْبِسُوهُ , وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ , وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ , وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ.

இறந்தவரின் தலைமாட்டில் அல்ஹம்து சூராவையும், கால்மாட்டில் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களையும் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.

நூல்: தப்ரானியின் அல்கபீர்

இதை அறிவிக்கும் அய்யூப் பின் நஹீக் என்பவரும், யஹ்யா பின் அப்துல்லாஹ் என்பவரும் பலவீனமானவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

– حدثنا عبد الله حدثني أبي ثنا عارم ثنا معتمر عن أبيه عن رجل عن أبيه عن معقل بن يسار ان رسول الله صلى الله عليه و سلم قال  البقرة سنام القرآن وذروته نزل مع كل آية منها ثمانون ملكا واستخرجت { الله لا إله الا هو الحي القيوم } من تحت العرش فوصلت بها أو فوصلت بسورة البقرة ويس قلب القرآن لا يقرؤها رجل يريد الله تبارك وتعالى والدار الآخرة الا غفر له واقرءوها على موتاكم

تعليق شعيب الأرنؤوط  إسناده ضعيف لجهالة الرجل وأبيه

யாஸீன் (அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவர் மன்னிக்கப்பட்டவராவார். நீங்கள் உங்களில் மரண வேளை நெருங்குபவர்களிடம் அதை ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மஅகில் பின் யஸார் (ரலி)

நூல்: அஹ்மத்

வேறு பல நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து ஹதீஸ்களிலும் மஅகில் பின் யஸார் (ரலி) கூறியதாக அபூ உஸ்மான் என்பாரின் தந்தை இந்த ஹதீஸை அறிவிக்கிறார். அவர் கூறியதாக அபூ உஸ்மான் அறிவிக்கிறார்.

அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

وأسنده صاحب “الفردوس” من طريق مروان بن سالم وهو ضعيف، عن صفوان بن عمرو، عن شريح، عن أبي الدرداء وأبي ذر، قالا قال رسول الله صلى الله عليه وسلم: “ما من ميت يموت فيقرأ عنده يس إلا هون الله عز وجل عليه”.

மரணமடையும் எவரது முன்னிலையில் யாஸீன் ஓதப்பட்டாலும் அல்லாஹ் அவருக்கு வேதனையை இலேசாக்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), அபூதர் (ரலி)

நூல்: முஸ்னத் பிர்தவ்ஸ்

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றிருக்கும் சாலிம் பின் மர்வான் பலவீனமானவராவார்.

மரண வேளை நெருங்கியவர் முன்னிலையில் யாஸீன் ஓத வேண்டும் என்று வருகின்ற எந்த ஹதீஸுமே சரியான ஹதீஸ் கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொண்டு இது போன்ற காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.

இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதினால் அதன் நன்மை அவருக்குச் சென்றடையும் என்று நம் சமுதாயத்தில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு கத்தம் என்று சொல்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிப்பட்ட ஒரு வணக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லை.

மரணித்தவரின் மறுமை நன்மைக்காக நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும்.

இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள், இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் தமிழக முஸ்லிம்களில் பலர் செய்து வருகின்றனர்.

மார்க்கம் என்ற பெயரில் நாம் எதைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாமல் நம்மைப் போன்ற மனிதர்கள் தங்களின் சுயநலனுக்காகவோ, அல்லது அறியாமை காரணமாகவோ உருவாக்கியவை இஸ்லாமாக ஆகாது.

صحيح مسلم 4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நமது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 3243)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: ஆயிஷா (ரலி)

நூல்கள்:(புகாரி: 2697),(முஸ்லிம்: 3242)

سنن النسائي  – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»،

(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும் அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

அறி: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(நஸாயீ: 1560)

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.

இரண்டு ரக்அத் தொழுகையில் மற்றொரு ரக்அத்தை அதிகமாக்குவது நன்மையின் தோற்றத்தில் இருந்தாலும் அதை நாம் சரி காண மாட்டோம்.

இச்சடங்குகள் மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவற்றை முதலில் செய்பவர்களாக இருந்திருப்பார்கள்.

நபியவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் அவர்களுடைய மனைவி கதீஜா (ரலி) அவர்கள் மரணித்தார்கள். நபியவர்களின் மகள் ஸைனப் (ரலி) மரணித்தார்கள். நபியவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்தார்கள். இவர்களில் யாருக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதி அதன் நன்மையை அனுப்பி வைக்கவில்லை.

மேலும் நபியவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் மரணித்தனர். இவர்களுக்காக நபியவர்களோ, மற்ற நபித்தோழர்களோ இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. இது இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வணக்கமாக இருந்தால் கண்டிப்பாக இதை நபியவர்கள் செய்திருப்பார்கள். எனவே இது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பித்அத் ஆகும்.

மக்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக போலி ஆலிம்கள் இந்த பித்அத்தை உருவாக்கினார்கள். எனவே இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் ஒருபோதும் குர்ஆனை ஓதி அதன் நன்மையைச் சேர்ப்பிக்க இயலாது.

பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து இறந்தவர்களுக்கு உதவுவோம்.

மவுத் சோறு, சிக்கன் கிரேவி

இவ்வளவு பிரச்சனைகளும், பிரம்மாண்டமான நிகழ்வுகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போது, அந்த ஆத்மாவிற்கு பாவமன்னிப்பு தேடுவது, அவர் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுவது போன்ற விஷயங்களை செய்வதை விட்டுவிட்டு, மவுத் சோறு, சிக்கன் கிரேவி சமைத்து, உப்பு இல்லை, மிளகு இல்லை, காரம் குறைவு என்று வீண் பேச்சு பேசி, மிக முக்கியமான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை என்னவென்று சொல்வது?

ஒருவர் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினர் சோகத்திலும், கவலையிலும் இருப்பார்கள். அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இறந்த அன்றோ, மறு நாளோ தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதாபிமானமில்லாமல் அக்குடும்பத்தினரின் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

இறந்தவரின் வீட்டுக்கு நாம் சென்றால் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்து எடுத்துச் சென்று நாம் தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் தமக்காக அவர்கள் உணவு சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்.

ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணம்

ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு ‘ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்’ என்று கூறினார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)

நூல்கள்:(அபூதாவூத்: 2725),(அஹ்மத்: 1660), திர்மிதி 919, இப்னுமாஜா 1599

இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது.

ஜனாஸா என்று பெயர் மாற்றம்!

உலகில் மாபெரும் சாம்ராஜ்யமாக வாழந்திருந்தாலும், இறுதியில், அப்பா, அம்மா, மாமா, மாமி, அண்ணண், அப்துல் ஜப்பார், ஜப்பார் பாய், தலைப்பா கட்டு என்று விதவிதமாக கண்ணியமாக அழைக்கப்பட்டவர்கள் இறுதியில் ஜனாஸா என்று பெயர் சூட்டப்பட்டு, மய்யித் – ஜனாஸா என்ற நிலைக்கு மாறிவிடுகிறார். கையில் இருக்கும் கழுத்தில் இருக்கும் அனைத்து நகைகளையும் கழட்டிவிட்டு சாதாரண வெள்ளைத் துணியை கஃபன் ஆடையை அணிவித்து, ”ஜனாஸாவை தூக்குங்கள் மையத்தை எடுங்கள் மையத்தை திருப்புங்கள், அதன் காலைப் பிடியுங்கள் அதன் தலையை தூக்குங்கள்” என்று, மய்யித், ஜனாஸா, அது, இது என்ற நிலைக்கு மாறிவிடுவோம்.

என் வீடு, பணம், சொத்து இனி எனக்கல்ல!

ஒரு மனிதனிடத்தில் கோடிக்கணக்கில் பணமும் பெரிய வீடும் காரும்  இருக்கிறது என்றால் இவை அனைத்தும் இவனுக்கு உரியதா? என்று பார்த்தால் கிடையாது. இவன் எதை உண்டானோ, இன்னும் எதை உடுத்தினானோ, இன்னும் எதை தர்மம் செய்தானோ அவை தான் ஒரு மனிதனின் செல்வம். வேறு எதுவும் இவனுக்கு சொந்தம் கிடையாது.

தனது வாழ்க்கை முழுவதையும் செலவழித்து கட்டி உருவாக்கிய வீடு இனி எனக்கு அல்ல. என் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்து சேமித்து வைத்த பணமும் தங்கமும் வெள்ளியும் இனி எனக்கு இல்லை. நான் வாங்கிய வாகனம் இனி எனக்கு இல்லை. எனது பொருட்கள் எதுவுமே இனி எனக்கு இல்லை. நான் சேமித்து வைத்து அமலைத் தவிர. நபியவர்கள் கூறுவதை பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், “மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது” என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்த போது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி)

(முஸ்லிம்: 5665)

சுமந்து செல்லும் போது ஜனாஸாவின் கூப்பாடு

ஜனாஸாவைத் தோளில் சுமந்து விட்டால் ஆடி அசைந்து நடக்காமல் வேகவேகமாகக் கொண்டு செல்ல வேண்டும்.

‘ஜனாஸாவை விரைவாகக் கொண்டு செல்லுங்கள். அது நல்லவரின் உடலாக இருந்தால் நல்லதை நோக்கிக் கொண்டு சென்றவராவீர்கள். அது கெட்டவரின் உடலாக இருந்தால் கெட்டதை (சீக்கிரம்) தோளிலிருந்து இறக்கியவர்களாவீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 1315)

இதில் நாம் எந்த வகை? என்று சிந்தித்துப் பாருங்கள்

‘ஜனாஸா (கட்டிலில்) வைக்கப்பட்டு ஆண்கள் அதைத் தோளில் தூக்கி விட்டால் அது நல்லவரின் உடலாக இருந்தால் சீக்கிரம் கொண்டு போங்கள்’ என்று அது கூறும். அது கெட்டவரின் உடலாக இருந்தால் அய்யஹோ! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?’ என்று கேட்கும். அந்த சப்தத்தை மனிதன் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் செவியுற்றால் மூர்ச்சையாவான் (மயங்கி விழுந்து விடுவான்)’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூ ஸயீத் (ரலி)

(புகாரி: 1314, 1316, 1380)

அதன் ஒலத்தை மனிதன் செவியுற்றால், மூர்ச்சையாவான் (மயங்கி விழுந்து விடுவான்) என்ற வார்த்தை சிந்திக்கத்தக்கது.

மேற்கண்ட இரண்டு வகையில், நாம் எந்த வகை? என்று சிந்தித்துப் பாருங்கள். இன்று இல்லாவிட்டாலும் நாளை இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் அடையத்தானே போகிறோம்.

அந்த நாளில், நம் நம் நிலை எப்படி இருக்கும் என்பதனை சிந்தித்து நம் அமல்களை சரிபடுத்திக் கொண்டு இந்த உலகத்தில் வாழ வேண்டாமா?

தொழுகையை சரி செய்தோமா?

லுஹர் தொழுகைக்காக ஒரு 15 நிமிடம் செலவு செய்வது அவ்வளவு சிரமமான காரியமா?‌ சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஒதுக்க தானே செய்கிறோம். ஐவேளைத் தொழுகையை கணக்கிட்டால் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒன்னேகால் மணி நேரம் வரும். இதை சரியாக செய்து என் இறைவன் என்னை எப்போது அழைத்தாலும் மகிழ்ச்சியோடு நான் அவனது அழைப்பை ஏற்றுக் கொள்வேன் என்று நிம்மதியாக வாழ்வதை விட்டுவிட்டு, ஒவ்வொரு நாளும் “இப்போது மரணம் வந்து விடுமோ மாட்டிக் கொள்வேனோ” என்று பயந்து பயந்து செத்து வாழும் வாழ்க்கை நமக்கு தேவையா?

சிந்தித்து நம் அமல்களை சரி செய்து கொள்வோம். மீதி உள்ள தகவல்களை இன்ஷா அல்லாஹ் நாளை பார்ப்போம்.