7) பெண்களுக்கு தனி பயான் செய்யலாமா?

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

பெண்களுக்கு மட்டும் தனியாக மார்க்க உரை நிகழ்ச்சி நடத்தலாம்.

 قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ، فَأَتَاهُنَّ وَمَعَهُ بِلاَلٌ نَاشِرَ ثَوْبِهِ، فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ

பெருநாள் உரை பெண்களுக்கு கேட்கவில்லை என்பதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார்கள்.

(புகாரி: 1449)

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ

சில பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஆண்கள் எங்களை மிகைத்து விருகின்றனர். எனவே பெண்களுக்காக ஒரு நாளை ஒதுக்குங்கள் என்று கோரினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாளை வாக்களித்து அந்த நாளில் உரை நிகழ்த்தினார்கள்.

(புகாரி: 101)

வீட்டில் பெருநாள் தொழுகை தொழும் போது

பெண்கள் உரை நிகழ்த்தலாமா?

அனைவரும் சேர்ந்து திடலில் தொழும் போது பெண்கள் உரை நிகழ்த்தும் தேவை ஏற்படாது. ஆனால் கொரோனா போன்ற காலத்தில் அனைவரும் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டால் வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பெருநாள் தொழுகை நடத்தும் நிலை ஏற்படும். அப்போது கணவருக்கு உரை நிகழ்த்தும் திறன் இல்லாமல் இருந்து மனைவிக்கு உரை நிகழ்த்த முடியும் என்றால் அப்போது மனைவி பெருநாள் உரை நிகழ்த்தலாம்.

உரை நிகழ்த்துதல் என்பது நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் நற்பணியாகும். இந்தப் பணியை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம்.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(திருக்குர்ஆன்: 9:71)

ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதால் அவர்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.