27) சீர்திருத்தத்தைத் தன்னிலிருந்து துவங்குதல்

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்சி

அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார் இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்) அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள் (முஸ்லிம்: 2137) ,(திர்மிதீ: 3012) ,(அபூதாவூத்: 1628, 2896) , இப்னுமாஜா 3046, 3065, இப்னு குஸைமா)

வட்டி ஒரு வன்கொடுமை

அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது.
நூல்கள் (முஸ்லிம்: 2137) ,(திர்மிதீ: 3012) ,(அபூதாவூத்: 1628, 2896) , இப்னுமாஜா 3046, 3065, இப்னு குஸைமா)

கடன்

இரவல் (திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதாகும் (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியே கடன் நிறைவேற்றப்பட வேண்டியது ஆகும். நூல்கள் (திர்மிதீ: 1186) ,(அபூதாவூத்: 2046) , இப்னுமாஜா 2396,(அஹ்மத்: 21263)

வாரிசுரிமைச் சட்டங்கள்

(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும் போது குழந்தை பிறக்கின்றதோ அவருக்கே அக்குழந்தை உரியது விபச்சாரம் செய்தவருக்கு இழப்பு தான். அவர்களின் விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது.

தன் தந்தை அல்லாதவரை தந்தை என்று குறிப்பிடுபவர். தன் எஜமான் அல்லாதவருடன் தன்னை இணைத்துக் கொள்பவர் ஆகியோர் மீது இறுதி நாள் வரை தொடரும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)(திர்மிதீ: 2046)
சொத்துரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது சொத்துரிமையை (பாகப்பிரிவினை சட்டத்தின் மூலம்) அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே சொத்துரிமை பெறுபவருக்கு இனி மரண சாசனம் இல்லை.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: (இப்னுமாஜா 2705)

ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார்

தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். தந்தை செய்யும் குற்றத்திற்கு மகன் பொறுப்பாளியாக மாட்டான் மகன் செய்யும் குற்றத்திற்குத் தந்தை பொறுப்பாளியாக மாட்டார்
நூல்கள் (திர்மிதீ: 2085, 3012) , இப்னுமாஜா 3659)

ஆட்சியாளருக்குக் கட்டுப்படுதல்
காது மூக்கறுந்த, கன்னங்கருத்த அடிமை உங்களுக்கு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டு, அவர் உங்களை அல்லாஹ்வுடைய வேதத்தின்படி வழிநடத்தினால் அவருக்குச் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள்.
நூல்கள்: (முஸ்லிம்: 3422) ,(திர்மிதீ: 1628)
கணவன் மனைவியின் கடமைகளும் உரிமைகளும்

பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். திருமணம் முடியுங்கள் என்ற அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள்.
நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும், உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும்.
நூல்: (முஸ்லிம்: 2137)

பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக இருக்கிறார்கள்). இல்லறத்தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள், காயமின்றி அடியுங்கள், அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள்.
நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமை உங்கள் மீது இருக்கின்றது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு உங்கள் மனைவியர் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள், நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து விடக் கூடாது: உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக்கூடாது.
அறிந்து கொள்ளுங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும், உணவிலும் தாராளமான முறையில் நடந்து கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யும் கடமையாகும்.
நூல்கள்: (திர்மிதீ: 1083, 3012) இப்னுமாஜா 1841)
“கணவனின் அனுமதியின்றி தன் கணவன் வீட்டில் எதையும் ஒரு பெண் செலவு செய்யக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘உணவும் அப்படித் தானா?” என்று கேட்கப்பட்ட போது, ‘அது தான் பொருட்களில் மிகச் சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) நூல்: (திர்மிதீ: 606)
நிறைவான முஃமின்

எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார்.
நூல்கள்: (பஸ்ஸார் 2435 தப்ரானீ 3444, பாகம்: 3, பக் 293)

மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் அபயம் அளிப்பவரே முஃமின் நூல்கள் (பஸ்ஸார் 2435(இப்னு ஹிப்பான்: 4862) , பாகம்:11, பக்.203)
குற்றங்களையும், தவறுகளையும் விட்டு ஒதுங்கிக் கொள்பவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார் நூல் (இப்னு ஹிப்பான்: 4862) பாகம்: 11, பக் 203)
அல்லாஹ்வுக்குக் கட்டுப் படுவதில் தனது உள்ளத்துடன் போராடியவரே தியாகி (ஷஹீத்) ஆவார். நூல்: (இப்னு ஹிப்பான்: 4852) பாகம்:11, பக்.203)
உங்களுடைய இறைவனை அஞ்சுங்கள். உங்கள் ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுங்கள் உங்கள் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பொருட்களில் ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் உடையவருக்குக் கட்டுப்படுங்கள் உங்களது இறைவனின் சுவனத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள்
நூல்கள்: (திர்மிதீ: 559) .(அஹ்மத்: 21140) ,(ஹாகிம்: 19) , பைஹகீ)
அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காதீர்கள்; அல்லாஹ் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள். திருடாதீர்கள். விபச்சாரம் செய்யாதீர்கள்.
நூல்கள் (அஹ்மத்: 18219) ,(ஹாகிம்: 8033) , பைஹகி 15620)
சிறுசிறு வணக்கங்களில் அலட்சியம்

உங்களுடைய பூமியில் தான் வணங்கப்படுவதை விட்டும் ஷைத்தான் நிராசையாகி விட்டான் ஆயினும் அதைத் தவிர நீங்கள் சாதாரணமாகக் கருதி (விட்டு) விடும் உங்கள் வணக்கங்களில் தான் வழிபடப்படுவதை அவன் பொருந்திக் கொண்டான் (எனவே சிறிய அமல்களை விட்டு விடாமல் கவனமாக இருங்கள்)
நூல்: (ஹாகிம்: 318) . பாகம் 1, பக் 171)

அறிந்து கொள்ளுங்கள் உங்களுடைய இந்த ஊர்களில் ஒரு போதும் தான் வணங்கப்பட மாட்டோம் என்று ஷைத்தான் நிராசையடைந்து விட்டான் எனினும் நீங்கள் கேவலமாகக் கருதும் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு உருவாகும். அதன் மூலம் அவன் திருப்தியடைவான்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் நூல்: (திர்மிதீ: 2085)
தஜ்ஜால் பற்றிய எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி அல்மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றிக் கூறத் தொடங்கினார்கள். நீண்ட நேரம் அவனைப் பற்றியே கூறினார்கள். அப்போது, “அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றி) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர்களும் எச்சரித்தனர். மேலும் (என் சமுதாயமாகிய) உங்களிடையே தான் அவன் இறுதிக் காலத்தில்) தோன்றுவான்.

அவனது (அடையாளத் தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும் நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்குத் தெரியாதவன் அல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இதை மூன்று முறை கூறினார்கள் உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். (தஜ்ஜால் எனும்) அவனோ வலது கண் குருடானவன் அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: (புகாரி: 4402)

குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றுதல்

உங்களிடம் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போதெல்லாம் வழி கெடவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்.நூல்: (முஸ்லிம்: 2137)

அழைப்புப் பணியின் அவசியம்

“இங்கு வருகை தந்திருப்பவர், வராதவருக்கு இந்தச் செய்தியை எடுத்துக் கூறி விட வேண்டும். ஏனெனில் வருகை தந்திருப்பவர். தன்னை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அந்தச் செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: (புகாரி: 67)