17) ஹூதைபியா உடன் படிக்கை (ஹிஜிரி 6, துல்கஅதா)

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

இஸ்லாமிய வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சமாதான ஒப்பந்தம் தான் மக்கா வெற்றிக்கு வழிகோலியது பலர் இஸ்லாத்தைத் தழுவிடக் காரணமானது.

இறை நிராகரிப்பாளர்கள் இறைவனுடைய மார்க்கத்தை அழித்தொழிக்க எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களை நிறைவேற்றினாலும் இறைவன் தன்னுடைய சத்திய மார்க்கத்தை மேலோங்கச் செய்தே தீருவான் என்பதற்கு ‘ஹுதைபிய்யா என்ற இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சி மிகப் பெரும் சான்றாக விளங்குகிறது.

“ஹுதைபிய்யா என்பது ஒரு கிணற்றினுடைய பெயராகும். நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இந்த இடத்தில் தங்கியிருந்ததால் இங்கு நடந்த நிகழ்ச்சிக்கு ‘ஹுதைபிய்யா என்ற பெயர் ஏற்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் 1400 நபித்தோழர்களுடன் ‘உம்ரா’ செய்யும் நோக்கத்தில் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். பலிப்பிராணியாக 70 ஒட்டகங்களையும் உடன் கொண்டு சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு புறப்பட்ட செய்தி கிடைத்ததும் முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்துவதற்காக குறைஷிகளின் குதிரைப் படையினர், காலித் பின் வலீத் (அப்போது இவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை; அவர்களின் தலைமையில் அல்ஃகமீம்’ எனும் இடத்தில் முகாமிட்டனர். இந்தச் செய்தியறிந்த நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பாதையை மாற்றி காலித் பின் வலீத் அவர்களுடைய படைக்குத் தெரியாதவாறு வேறு வழியில் சென்று மக்காவை நெருங்கினார்கள் முஸ்லிம்களுடைய உம்ரா பயணக் குழுவினர் எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் குறைஷிக் குதிரைப் படையினரின் தளபதியான காலித் பின் வலீத் முஸ்லிம்கள் வந்து விட்ட செய்தியை குறைஷிகளுக்குத் தெரிவிப்பதற்காக விரைந்து சென்றார்.

நபி (ஸல்) அவர்களின் வாக்குறுதி

நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் இறங்கக் கூடிய வழியிலுள்ள சிறிய மலைப் பகுதியை அடைந்ததும் அவர்களுடைய ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்து கொண்டது. மக்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்த போது யானையைத் தடுத்த இறைவனே இதையும் தடுத்து வைத்திருக்கிறான் என்று கூறினார்கள் பிறகு என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனிதத் தலங்களைக் கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் நான் அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பேன்” என்று கூறினார்கள்.
பிறகு நபியவர்கள் தம் ஒட்டகத்தை தட்டியெழுப்பினார்கள். அது உடனே குதித்தெழுந்தது. பிறகு நபியவர்கள் மக்களை விட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில் ஒரு கிணற்றின் அருகே முகாமிட்டார்கள்.

பைஅத்துர் ரின்வான் இறைதிருப்தி பெற்ற ஒப்பந்தம்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பயணத்தின் நோக்கத்தை குறைஷிகளுக்குத் தெரிவிப்பதற்காக ஒரு தூதுவரை அனுப்ப நாடினார்கள். எனவே உமர் (ரலி) அவர்களைத் தூதுவராக அனுப்புவதற்கு அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வேண்டிய (என்னுடைய குடும்பமாகிய பலூகஅப் குலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் மக்காவில் கிடையாது. எனவே உஸ்மானை நீங்கள் அனுப்புங்கள். அவருக்கு அங்கு உறவினர்கள் உள்ளனர். நீங்கள் நாடியதை அவர் செய்து விடுவார் என்று கூறினார்கள்
நபி (ஸல்) உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து குறைஷிகளிடம் தூது அனுப்பினார்கள்.

குறைஷிகளிடம் நாங்கள் போருக்காக வரவில்லை உம்ராவை நிறைவேற்றுவதற்காகத் தான் வந்துள்ளோம்” என்று அறிவிக்குமாறும், இன்னும் அவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்குமாறும் கூறினார்கள். மேலும் மக்காவிலுள்ள ஈமான் கொண்ட ஆண்களிடமும், பெண்களிடமும் மக்கா வெற்றியைப் பற்றியும் ஈமான் கொண்ட யாரும் அதனை மறைக்க வேண்டிய அவசியமில்லாத அளவிற்கு அங்கு இறைவனுடைய மார்க்கம் மேலோங்கும் என்ற நற்செய்தியையும் கூறுமாறு அனுப்பி வைத்தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கடிதத்துடன் குறைஷித் தலைவர்களை சென்று சந்தித்தார்கள். அவரை குறைஷிகள் தங்களிடத்தில் தடுத்து வைத்தனர். பிறகு தங்களுடைய பதிலைக் கூறி கடிதத்துடன் திருப்பி அனுப்பினர்.உஸ்மான் (ரலி) அவர்களின் வருகை தாமதமானதால் உஸ்மான் கொல்லப்பட்டதாக முஸ்லிம்களுக்கு மத்தியில் செய்தி பரவியது. நபி (ஸல்) அவர்கள். நாம் இவர்களை அழிக்காமல் இங்கிருந்து செல்லக் கூடாது” என்று கூறி விட்டு, தம்முடைய தோழர்களிடம் குறைஷிகளிடம் போர் புரிய வேண்டும் என்பதற்காக பைஅத் (உறுதிப் பிரமாணம்) எடுத்தார்கள்.

அனைத்து ஸஹாபாக்களும் மக்காவாசிகள் போர் தொடுத்தால் போரில் பின்வாங்க மாட்டோம். மரணத்தையே எதிர்கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமானாலும் நிலைகுலையாமல் இருப்போம் என்று உறுதிமொழி அளித்தனர். இது அங்கிருந்த ஒரு கருவேல முள் மரத்தடியில் நடந்தது
இந்த நிகழ்ச்சி தான் பைஅத்துர் ரிள்வான் (இறை திருப்தி பெற்ற உறுதிமொழி என வரலாற்றில் கூறப்படுகிறது. இதைப் பற்றி திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் அவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான் அவர்களுக்கு சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான். (அல்குர்ஆன்: 48:18)➚

உறுதிமொழி அளித்த ஸஹாபாக்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் பூமியில் இருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்” என சிறப்பித்துக் கூறினார்கள். (உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹஜ்ஜுக்குச் செல்லும் மக்கள் ஏதோ மரத்தைக் குறிப்பிட்டு இது தான் ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த மரம்” என்று கூறி அதற்குப் புனிதம் இருப்பதாகக் கருதி அதனைச் சுற்றி வணக்க வழிபாடுகள் செய்தனர் இதனை அறிந்த உமர் (ரலி) அவர்கள் அதனை வெட்டி விடுமாறு கட்டளையிட்டனர்).

சமாதானத் தூது

புதைல் பின் வரகா அல்குஸாயி என்பவர். தம் குஸாஆ குலத்தார் சிலருடன் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து முஹம்மத் அவர்களே கஅப் பின் லுஅய் மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் ஜீவ நதி அருகே முகாமிட்டுள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை சந்திக்காமல் தடுக்கப் போகிறார்கள்” என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் “நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை மாறாக நாங்கள் உம்ரா செய்வதற்காகத் தான் வந்திருக்கிறோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு கால கட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். அவர்கள் எனக்கும். மக்களுக்குமிடையே இஸ்லாமிய பிரச்சாரத்திற்குத் தடையாக இருக்க வேண்டாம் நான் வெற்றி பெற்று விட்டால் அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும் அவர்கள் இதற்கு மறுத்து விட்டால். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ். தன் திட்டத்தை நடத்தியே தீருவான்” என்று கூறினார்கள்.

நீங்கள் சொல்வதை அவர்களுக்கு எடுத்துரைப்பேன் எனக் கூறி விட்டு புதைல் பின் வரகா குறைஷிகளிடம் சென்று “நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம் அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்” என்று சொன்னார்.
அப்போது அங்கிருந்த அறிவிலிகள் அவரைக் குறித்து எங்களுக்கு எதனையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள் அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள் என்றும் கூறினர் புதைல் நபி (ஸல்) அவர்கள் கூறிய அனைத்து விஷயங்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

புதைல் கூறிய கருத்துகளைக் கேட்டவுடன் உர்வா பின் மஸ்வூத் அஸ்ஸகஃபீ என்பவர் எழுந்து குறைஷிக் குலத்தாருக்கு அவர் செய்த சேவைகளைக் குறிப்பிட்டு விட்டு, முஹம்மது உங்கள் முன் நல்லதொரு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். நீங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளுங்கள். என்னை அவரிடம் செல்ல விடுங்கள் என்று கூறினார். அவர்கள் அவருக்கு அனுமதியளித்தனர்.அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்ததும் நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே அவரிடமும் சொன்னார்கள் அப்போது உர்வா, “முஹம்மதே உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் சரியானதாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முள்ளால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தை வேரோடு அழித்தார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? போரில் வேறு விதமான முடிவு ஏற்பட்டு குறைஷிகள் வென்று விட்டாலும் (அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப் பட்டு விடுவார்கள் அல்லவா?) அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை உங்கள் தோழர்களிடம் பார்க்கிறேன். பல தரப்பட்ட மக்களைப் பார்க்கிறேன் போரில் உங்களை விட்டு விரண்டோடக் கூடிய கோழைத்தனமுடையவர்களாகவே இவர்களை நான் காண்கிறேன்” என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன் அபூபக்ர்(ரலி) அவரைக் கேவலமாகத் திட்டிவிட்டு “நாங்கள் இறைத்தூதரை விட்டு ஓடி விடுவோமா?” என்று கோபமாகக் கேட்டார்கள் அபூபக்ர்(ரலி) உர்வாவிற்கு உதவி செய்தவராக இருந்ததால் அவர் அபூபக்ருக்கு எதிராக எதையும் கூறவில்லை.

பிறகு உர்வா நபித்தோழர்களைக் கூர்ந்து பார்த்தார். அவர்களுடைய நற்பண்புகளையும், கட்டுப்பாட்டையும் சகோதரத்துவத்தையும் பார்த்து விட்டு, தன் சமூகத்தாரிடம் சென்று என் சமுதாயத்தாரே நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன் (ரோமாபுரி மன்னன்) சீசரிடமும் பாரசீக மன்னன்) இஸ்ராவிடமும் (அபீஷினிய மன்னன்) நஜ்ஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். ஆனால் முஹம்மதுடைய தோழர்களைப் போன்று நான் பார்த்ததில்லை” என ஸஹாபாக்களைப் பற்றி புகழ்ந்து கூறினார் பிறகு முஹம்மத் உங்கள் முன் உயரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

உர்வாவின் உரையைக் கேட்டவுடன் பனூ கினானா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக குறைஷிகளிடம் அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதியளித்தனர்.
அவர் நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்த போது நபி (ஸல்) இது இன்னார். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக ஒட்டகங்களை கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சார்ந்தவர். ஆகவே, இவரிடம் தியாக ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள் என்று சொன்னார்கள் உடனே அவரிடம் தியாக ஒட்டகம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. மக்கள் தல்பியா கூறியபடி அவரை வரவேற்றார்கள்.
அவர் இதைக் கண்டவுடன் சுப்ஹானல்லாஹ் இவர்களை இறையில்லத்திற்கு வர விடாமல் தடுப்பது சரியில்லையே” என்று (தமக்குள்) கூறிக் கொண்டார். அவர் தம் தோழர்களிடம் திரும்பிச் சென்று “தியாக ஒட்டகங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்க விடப்பட்டு, அவற்றிற்கு அடையாளமிடப்பட்டிருப்பதை

நான் கண்டேன். ஆகவே இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லை” என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்டவுடன் மிக்ரஸ் இப்னு ஹப்ஸ் என்பவன் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக குறைஷிகளிடம் அனுமதி கேட்டான் அவர்கள் அவனுக்கு அனுமதியளித்தனர். அவன் வந்த போது நபி (ஸல்) அவர்கள் இவன் மிக்ரஸ் என்பவன் இவன் ஒரு கெட்ட மனிதன் என்று கூறினார்கள். அவன் வந்தவுடன் நபி (ஸல்) அவர்களுடன் பேச ஆரம்பித்தான்
சுஹைல் இப்னு அமர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார் அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டது” என்று (சஹ்ல் என்றால் சுலபம் என்று பொருள். அதை குறிக்கும் வகையில்) கூறினார்கள் சுஹைல் வந்ததும் ஒரு ஏட்டைக் கொண்டு வாருங்கள் உங்களுக்கும். எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்” என்று கூறினார்.

உடன்படிக்கை

நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், பேரருளாளனும், கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்ற வாசகத்தை நபியவர்கள் சொன்னார்கள்.
சுஹைல், ரஹ்மான் (கருணையன்புடையோன்) என்றால் என்ன? என்று எனக்குத் தெரியாது ஆயினும் இறைவா! உன் திருப்பெயரால் என்று வழக்கம் போல் எழுதுங்கள் என்று கூறினார். அவர்கள் அல்லாஹ்வை ரஹ்மான் என்று அழைப்பதை மறுத்து வந்தனர்.

அப்போது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹிம் (அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று தான் இதை எழுதுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள். பிஸ்மிக்க அல்லாஹும்ம (இறைவா! உன் திருப்பெயரால்) என்றே எழுதுங்கள் என்று சொன்னார்கள்.பிறகு நபி (ஸல்) அவர்கள். இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்” என்று (எழுதுமாறு) சொன்னார்கள்.
உடனே சுஹைல் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வர விடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, ‘முஹம்மத் பின் அப்தில்லாஹ் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதுங்கள்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்வதாக நீங்கள் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்றாலும் உங்கள் விருப்பப்படி முஹம்மத் பின் அப்தில்லாஹ் என்றே எழுதுங்கள் என்று கூறி விட்டு அலீ (ரலி) அவர்களிடம் அதை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்கள். நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன் என்று கூறினார்கள் ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தமது கையால் அதை அழித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், குறைஷிகளுடன் தகராறு செய்யாமல் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய் விட்டதற்குக் காரணம் அவர்கள் ஆரம்பத்தில் அளித்த வாக்குறுதியே ஆகும். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தை எழுதினார்கள்.

ஒப்பந்த நிபந்தனைகள்
நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களுடன் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்தார்கள். அவையாவன:
1. நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களிடமிருந்து தம்மிடம் மதீனாவிற்கு வருபவரை, அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும் இணை வைப்பவர்கள், தங்களிடம் மக்காவிற்கு வரும் முஸ்லிம்களைத் திருப்பியனுப்ப மாட்டார்கள்.
2. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு உம்ரா செய்ய மக்காவினுள் நுழைந்து மூன்று நாட்கள் தங்கலாம்.
3. இரு தரப்பினரும் பத்து ஆண்டுகளுக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மக்கள் பாதுகாப்புப் பெறுவார்கள் வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டும் இந்தச் சமாதான ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டிருந்த போது அபூஜந்தல் (ரலி) அவர்கள் தமது கால் சங்கிலிகளுடன் தத்தித் தத்தி வந்தார்கள் அப்போது சுஹைல் அவரைத் திருப்பியனுப்புமாறு கூறினார். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு மட்டுமாவது அனுமதி தாருங்கள் என்று எவ்வளவு வேண்டியும் அவர்கள் சம்மதிக்கவில்லை.
அபூஜந்தல் (ரலி) அவர்கள் “முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக உங்களிடம் வந்திருக்க என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.அதற்கு நபி (ஸல்) அவர்கள், அபூஜந்தல் அவர்களே! நன்மையை நாடி பொறுத்துக் கொள்ளுங்கள் அல்லாஹு தஆலா உமக்கும் உம்முடன் உள்ள பலவீனமான மக்களுக்கும் மகிழ்ச்சியையும், பாதுகாப்பான தங்குமிடத்தையும் நிச்சயம் தருவான். நிச்சயமாக நாம் நமக்கும் இந்த (குறைஷிக் குலத்திற்கும் மத்தியில் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மீது நாம் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளோம் அல்லாஹ்வுடைய வாக்குறுதியைக் கொடுத்து விட்டால் நாம் அவர்களுக்கு மாறு செய்யக் கூடாது” என்று கூறினார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்கள் அவரை இணை வைப்பவர்களிடமே திருப்பியனுப்பினார்கள்.
உமரின் ஆவேசமும் அல்லாஹ்வின் முன்னறிவிப்பும்

இந்நிகழ்ச்சியைப் பார்த்ததும் உமர்(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று. நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம் அல்லாஹ்வின் தூதர் தான்” என்று பதிலளித்தார்கள்.”நாம் சத்திய மார்க்கத்திலும், நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?” என்று உமர் (ரலி) கேட்டார்கள் அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம்! அவ்வாறு தான் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள் அதற்கு உமர் (ரலி) அப்படியானால் இந்த நிபந்தனைகளை ஏற்று, நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்? என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதராவேன் நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன் என்று பதிலளித்தார்கள் உமர் (ரலி) அவர்கள் விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் தவாஃப் செய்வோம் என்று தாங்கள் எங்களுக்குச் சொல்லி வந்திருக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள். “நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?” எனக் கேட்டார்கள் உமர் (ரலி) “இல்லை” என்று பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள் என்று கூறினார்கள்.
பிறகு உமர்ரலி அபூபக்ர்(ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டவாறே கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே பதிலளித்தார்கள். அபூபக்ர் (ரலி), உமர் ரவியிடம் “நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம் இறைவனுக்கு மாறு மாறு செய்ய முடியாது அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன் அவர்களுடைய சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.
பிறகு உமர் (ரலி) இப்படி அதிருப்தியுடன் நபி (ஸல்) அவர்களிடம் பேசியதற்காகப் பல வணக்கங்களைப் புரிந்தார்கள். அதன் பிறகு அல்லாஹு தஆலா இவ்வுடன்படிக்கையைப் பற்றி நபியோ) நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றியை அளித்துள்ளோம்” (அல்குர்ஆன்: 48:1)➚ என்ற வசனத்தை இறக்கி, இதனை மிகப் பெரிய வெற்றியாகக் கூறிக் காட்டுகிறான்.
அன்னையார் வழங்கிய அற்புத ஆலோசனை

ஒப்பந்தப் பத்திரம் எழுதி முடித்த பின்பு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.
கூட ஆனால் ஒப்பந்த நிபந்தனையால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஸஹாபாக்கள் ஒருவர் எழுந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கட்டளையிட்டும் யாரும் எழுந்திருக்கவில்லை
ஸஹாபாக்களில் யாரும் எழுந்திருக்காத காரணத்தால் தம்முடைய மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியையும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதையும் தெரிவித்தார்கள்.

உடனே உம்மு ஸலமாரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடியைக் களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? முதலில் நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து விட்டு முடியைக் களையப் புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு, உங்கள் நாவிதரை அழைத்து அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்” என்று ஆலோசனை கூறினார்கள்.நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து தலைமுடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவரை ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு சென்றனர். பிறகு மதீனாவை நோக்கித் திரும்பினர்.
ஹூதைபிய்யாவில் நடந்த அற்புதம்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரஸ் அவர்கள் கூறியதாவது ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உளு செய்தார்கள் மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கென்ன ஆயிற்று? என்று கேட் டார்கள். மக்கள், தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் உளு செய்வதற் கும் குடிப்பதற்கும் வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை என்று பதிலளித்தனர். உடனே, நபி (ஸல்) அவர்கள் தம் கையைத் தோல் குவளையினுள் வைத்தார்கள் உடனே. அவர்களுடைய விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத்தொடங்கியது நாங்கள் அதிலிருந்து (தண்ணி!! அருந்தினோம்; மேலும், உளு செய்தோம். அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் ஹ் கூறுகிறார்கள் நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்? என்று கேட்டேன் அவர்கள், நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும் நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர் தாம் இருந்தோம் என்று பதிலளித்தார்கள். (புகாரி: 3576)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது ஹுதைபிய்யா நிகழ்ச்சியின் போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந் தோம். ஹுதைபிய்யா என்பது மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த ஒரு கிணறாகும். நாங்கள் அதிலிருந்து குண்ணீர் இறைத்தோம் எந்த அளவுக் கென்றால் அதில் ஒரு சொட்டுத் தண்ணினரக் கூட நாங்கள் விட்டு வைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு சிறிது தண்ணீரை வரவழைத்து வாய் கொப்பளித்தார்கள் பிறகு தம் வாயிலிருந்த நீரை) கிணற்றுக்குள் உமிழ்ந்தார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுத்திருந்தோம் பிறகு நாங்கள் தாகம் தீரும் வரையிலும், எங்கள் வாகனங்கள் தாகம் தீரும் வரையிலும் அல்லது எங்கள் வாகனங்கள் (தாகம் தீர்ந்து) திரும்பும் வரையிலும் நாங்கள் (அக்கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்தோம். (புகாரி: 3577)
இறை நம்பிக்கை கொண்ட பெண்களின் ஹிஜ்ரத்

சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த கால கட்டத்தில் இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். குறைஷிகள் அப்பெண்களை ஒப்பந்தப் பிரகாரம் திருப்பி அனுப்ப வேண்டும் என வேண்டினர் அப்போது நபி (ஸல்) அவர்கள். “நாம் ஒப்பந்தத்தில் பெண்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என எழுதவில்லை. ஆண்களை மட்டும் குறிக்கும் வாசகத்தைத் தான் பயன்படுத்தியுள்ளோம்) எனவே திருப்பியனுப்ப முடியாது” என மறுத்து விட்டார்கள்.

மேலும் அல்லாஹ், “நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன் அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள் நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும் இதுவே அல்லாஹ்வின் கட்டளை உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான் அல்லாஹ் அறிந்தவன் ஞானமிக்கவன்” என்னும் (60:10) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த முஃமினான பெண்களை காஃபிர்களிடம் திருப்பியனுப்பவில்லை.
குறைஷிகளைக் கலக்கிய புதிய படை

சமாதான ஒப்பந்தம் ஸஹாபாக்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் இறைத்தூதரின் செயல்பாடாக இருப்பதால் அதனை ஏற்றுக் கொண்டார்கள் அதனால் கிடைக்கவிருக்கும் வெற்றியை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள்
அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூபஷீர் என்பவர் முஸ்லிமான நிலையில் மதீனாவிற்கு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை மீண்டும் காஃபிர்களிடம் ஒப்படைத்தார்கள். அவர் மக்காவிற்குச் செல்லும் வழியில் தன்னை அழைத்துச் சென்ற இருவரில் ஒருவரைக் கொன்று விட்டார் மற்றொருவர் தப்பித்து மதீனாவிற்கே வந்தார்.

அபூபஷீர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி விட்டான் தாங்கள் என்னைத் திருப்பியனுப்பி விட்டீர்கள். அல்லாஹ் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டான்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவரது தாய்க்குக் கேடு உண்டாகட்டும்! உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார் என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற அபூபஷீர் அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தம்மை மீண்டும் குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள். சுஹைலின் மகன் அபூஜந்தல் (ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அயூபஷீர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
பிறகு குறைஷிகளில் எவர் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர் தப்பிச் சென்று அபூபஷீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில் சிறிது சிறிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து ஒரு குழுவினராக ஒன்று திரண்டு விட்டனர். குறைஷி வாணிபக் குழுவினர் ஷாம் நாட்டை நோக்கி வருகின்ற செய்தி அவர்களுக்குக் கிடைத்த போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்று அவர்களுடைய செல்வங்களைக் கொள்ளயடிப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர்.
வெற்றி கிடைத்தது

எனவே அபூபஷீரும், அவரது சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று உத்தரவிடுமாறு அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், “குறைஷிகளில் எவர் முஸ்லிமாக நபி (ஸல்) அவர்களிடம் வருகிறாரோ அவர் அச்சமின்றி இருக்கலாம். அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்” என்றும் கூறியனுப்பினர். அப்போது தான் அல்லாஹ் மக்காவின் மையப்பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.

அவர்கள் தாம் (ஏக இறைவனை) மறுத்தார்கள் மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (குடுத்தார்கள்) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான் தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான் அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் நம்மை; மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.
(ஏக இறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை, மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்திய போது அல்லாஹ் தனது நிம்மதியைத் தனது தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். (இறை) அச்சத்திற்கான வார்த்தையை அவர்கள் பற்றிப் பிடிக்குமாறு செய்தான். அவர்கள் அதற்கு உரிமை படைத்து தகுதியுடையோராகவும் இருந்தனர் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 48:24)➚,25,26) ஆகிய வசனங்களை அருளினான்.
(புகாரி: 1694, 1695, 2698, 2700, 2701, 2711, 2731, 2732, 2958, 3184) முஸ்லிம் இப்னு ஹிஷாம், தபகாத் இப்னு ஸஅத் மற்றும் ஹதீஸ் நூற்கள், வரலாற்றுச் சான்றுகளிலிருந்து இச்செய்திகள் தொகுக்கப்பட்டன)
இறைவனுடைய பேரொளியான சத்திய மார்க்கத்தை அழித்து விடலாம் என்றெண்ணி எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் தடைச் சட்டங்கள் கொண்டு வந்தாலும் இறைவன் தன்னுடைய பேரொளியைப் பரிபூரணமாக்கியே தீருவான் என்பதற்கு ஹுதைபிய்யா சம்பவம் மிகப் பெரும் சான்றாகத் திகழ்கிறது.
அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்றான். அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர் (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான் இணை கற்பிப்போர் வெறுத்தாலும் எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பிளான்
(அல்குர்ஆன்: 9:32-33)➚
இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அநீதிகள் இழைக்கப்பட்டாலும், பொறுமை காத்து இறைவழியில் இறைத்தூதரின் வழியில் நிலைத்து நிற்போமென்றால் இறைவன் மிகப் பெரும் வெற்றியைத் தருவாள் என்பதற்கும் இது ஒரு மிகப் பெரும் சான்றாய் விளங்குகிறது.
ரோமாபுரி மன்னருக்கு எழுதிய கடிதம்

நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி ஆம் ஆண்டின் இறுதியில் ரோமாபுரி மன்னருக்கு கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ரோமப்ாேந்திய அரசுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதச் சொன்னார்கள் அல்லது எழுதிட விரும்பினார்கள். அப்போது அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள் என்று நபியவர்களிடம் சொல்லப்பட்டது ஆகவே நபி ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டார்கள் அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது என்று (இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நான் அவர்களுடைய கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது(புகாரி: 65)

ரோமாபுரி மன்னர் ஹெராக்ளியஸிற்கு எழுதிய கடிதம்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.
முஹம்மதிடமிருந்து ரோமா புரியின் அதிபர் இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய ஹெராக்ளியஸுக்கு எழுதப்படும் கடிதம்) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்
இறை வாழ்த்துக்குப் பின் விஷயம் என்னவென்றால், இஸ்லாமை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள் ஏற்றுக் கொண்டால் ருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்.

(நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால்) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான் நீங்கள் புறக்கணித்தால், உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும் உங்களையே சாரும்.வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். அஃது யாதெனில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது அவனுக்கு எதனையும் எவரையும் நாம் இணைவைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி தம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் திண்ணமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதற்கு நீங்கள் சாட்சகளாக இருங்கள் என்று கூறிவிடுங்கள். (புகாரி: 7)

இது தொடர்பாக புகாரியில் இடம் பெற்றுள்ள நீண்ட சம்பவத்தைக் காண்போம்
அபூ சுஃப்யான் கூறுகிறார் என்னிடமும் குறைஷி இறைமறுப்பாளர்களிடமும் அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் (ஹுதைபியா) ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் குறைஷியரின் வணிகக் குழு ஒன்று ஷாம் (சிரியா) நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தது. குறைஷி வணிகக் குழுவினருடன் இருந்த என்னை அழைத்துவரும்படி (ரோம பைஸாந்தியப் பேரரசர் ஹெராக்ளியஸ் ஆளனுப்பினார் நாங்கள் அவரிடம் வந்துசேர்ந்தோம் அவரும் அவருடைய ஆட்களும் லியாவில் (பைத்துல் முகத்தஸில்! இருந்தார்கள் ரோமபுரி அரசுப் பிரதிநிதிகள் தம்மைச் சூழ்ந்திருந்த அரச வைக்கு வரும்படி எங்களை ஹெராக்ளியஸ் அழைத்தார். நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்த பிறகு தமக்கு அருகில் வந்து அமருமாறு எங்களை அழைத்த துடன் தம்முடைய மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார். பிறகு எங்களைப் பார்த்து) தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக் கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்? என்று கேட்டார். நான் நானே இவர்களில் (அவருக்கு நெருங்கிய உறவினன் என்று பதிலளித்தேன் ஹெராக்ளியஸ் தம் அதிகாரிகளிடம்) அவரை என் அருகே அழைத்து வாருங்கள் அவருடன் வந்திருக்கும்! அவருடைய நண்பர்களையும் எனக்கருகில் கொண்டுவந்து அவரது முதுகுக்குப் பின்னால் நிறுத்துங்கள் என்று கூறினார்.பிறகு தம் மொழிபெயர்ப்பாளரிடம் நான் (முஹம்மதைப் பற்றி இவரிடம் கேட்பேன். இவர் பொய் ஏதும் சொன்னால் உடனே அவர் பொய் சொல்கிறார் என்று கூறிவிட வேண்டும் என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று சொன்னார்.
நான் பொய் சொன்னால் என் நண்பர்கள் அதைத் தெரிவித்துவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு அப்போது இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபியவர் களைப் பற்றி பொய்யானத் தகவல்களைச் சொல்லியிருப்பேன்.பிறகு ஹெராக்ளியஸ் என்னிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேட்ட முதல் கேள்வி உங்களிடையே அந்த மனிதரின் குலம் எப்படிப் பட்டது? என்பதேயாகும். அதற்கு அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறினேன் பிறகு அவர், உங்களில் எவரேனும் இதற்கு முன் இப்படித் தம்மை நபி என) எப்போதாவது வாதித்ததுண்டா? என்று கேட்டார். நான் இல்லை’ என்று பதிலளித்தேன். அவருடைய முன் னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா? என்று கேட்டார் நான் இல்லை’ என்றேன்.அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் பின்பற்றுகின்றனரா? என்று கேட்டார் அதற்கு நான், இல்லை, பலவினர்கள்தாம் அவரைப் பின்பற்றுகின்றனர்) என்று சொன்னேன் அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக் கொண்டே செல்கின்றார்களா? அல்லது குறைந்து கொண்டே போகின்றார்களா? என்று கேட்டார்.
நான் இல்லை; அவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர் என்று கூறினேன் அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின்மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா? என்று கேட்டார் நான் இல்லை என்று சொன்னேன் அவர் இவ்வாறு தம்மை இறைத்தூதர் என வாதிப்பதற்கு முன் அவர் மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்! நீங்கள் அவரைச் சந்தேகித்திருக் கின்றீர்களா? என்று கேட்டார் நான் இல்லை என்றேன். அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா? என்று கேட்டார் நான் இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின் இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்னேறாம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்கத் தெரியாது என்று சொன்னேன் இதைத் தவிர நபியவர்களை குறைசொல்வதற்கு வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அவர், அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்ட? என்று கேட்டார். நான் ஆம் என்று சொன்னேன். அவர் அவருடன் நீங்கள் நடத்திய போர்களின் முடிவுகள் எப்படி அமைந்தன? என்று கேட்டார் எங்களுக்கிடையேயான போர் (கிணற்று) வாளிகள்தாம்; (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒருமுறை அவர் எங்களை வெல்வார் மறுமுறை நாங்கள் அவரை வெல்வோம் என்றேன்.
அவர் உங்களுக்கு என்ன (செய்யும்படி கட்டளையிடுகின்றார்? என்று கேட்டார். நான் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனுக்கு எதனையும் எவரையும் இணை யாக்காதீர்கள். உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக்கால கூற்றுகளை யெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார் தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸ்காத் கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும் சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும்படியும் உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடகின்றார் என்று சொன்னேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப் பாளரிடம் (பின்வருமாறு) கூறினார்
(அபூகஃப்யானிடம்) கூறிவிடு நான் உம்மிடம் அவருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன் அதற்கு நீர், அவர் எங்கள் மத்தியில் சிறந்த குலத்தை உடையவர் என்று பதிலளித்தீர் இவ்வாறே இறைத்தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக் கப்படுகின்றனர்.
நான் உம்மிடம் (இவருக்கு முன்னர் உங்களில் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை’ என்று பதிலளித்தீர் இவருக்கு முன்னர் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்ததாக நீர் கூறியிருந்தால், தமக்கு முன்னர் சிலரால்) முன்வைக்கப் பட்ட ஒரு வாதத்தைப் பின்பற்றிச் செல்கின்ற ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர் என்ற நான் சொல்லியிருப்பேன்
நான் உம்மிடம் அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை’ என்று பதிலளித்தீர் அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்ததாக நீர் கூறியிருந்தால், தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தைத் தாமும்! அடையவிரும்பும் ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர் என்று நான் கூறியிருப்பேன்.
நான் உம்மிடம் அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம் பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டா என்று கேட்டேன் அதற்கு நீர் இல்லை என்று பதிலளித்தீர் இதிலிருந்து மக்களிடம் பொய் பேசத் துணியாத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்து கொண்டேன்.நான் உம்மிடம் மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது பலவீனர்களா ஒடுக்கப்பட்டவர்களா? என்று கேட்டேன்.
அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்ற பதிலளித்தீர் (பெரும்பாலும்) அவர்கள்தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்.நான் உம்மிடம் அவரைப் பின்பற்றுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றனரா? அல்லது குறைந்துவருகின்றனரா? என்ற கேட்டேன் அதற்கு நீர் அவர்கள் அதிகரித்தேவருகின்றனர் என்று பதிலளித்தீர் இறைநம்பிக்கை விவகாரம் அவ்வாறுதான் வளர்ந்து கொண்டே! இருக்கும்.நான் உம்மிடம் அவரது மார்க்த்தில் இணைந்தபின் எவரேனும் தமது புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா? என்று கேட்டேன் அதற்கு நீர் இல்லை’ என்று பதிலளித்தீர் இறைநம்பிக்கை இத்தகையதே அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும் போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்).
நான் உம்மிடம் அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா?” என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று பதிலளித்தீர் இறைத்தூதர்கள் இத்தகையோரே அவர்கள் வாக்கு மீற மாட்டார்கள்.
நான் உம்மிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றார்? என்று கேட்டேன் அதற்கு நீர் அல்லாஹ்வையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் எவரையும் இணை கற்பிக்கக் கூடாது என்று அவர் கட்டளையிடுவதாகவும், சிலைகளை வணங்க வேண்டாமென்று உங்களுக்குத் தடைவிதிப்பதாகவும், தொழுகை, உண்மை சுயக் கட்டுப்பாடு ஆகிய வற்றைக் கடைப்பிடிக்கும்படி) அவர் கட்டளையிடு வதாகவும் நீர் பதிலளித்தீர் நீர் சொல்வது உண்மையாயிருப்பின் அவர் என்னுடைய இந்தப் பாதங்கள் உள்ள இடத்திற்கு ஆட்சியாளராவார் இறைத்தூதரான அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியரான உங்களிலிருந்து வருவார் என்று நான் நினத்திருக்கவில்லை நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தாய் அவரைச் சந்திக்க பெரு முயற் எடுப்பேன் அவர் அருகில் சன் இருந்திருத்தாய் அவரது கால்களைக் கழுவியிருப்பேன் என்று கூறினர்.பிறகு அல்லாஹ்வின் தூதர் அகத்தைக் கொண்டுவருமாறு ஹெராக்ளிஉத்தரவிட்டா அக்கடிதத்தை அவ்தூதர் அவர்கள் திஹ்யா அல்கம்பி அவர்களிடம் கொடுத்து ந ஆட்சியர் ஹாரிஸ் பின் பீஷம் வாயிலாக ஹெராக் யாரிடம் ஒப்படைக்கும் கூறியிருந்தார்கள் ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார் (கடித்த்தில் எழுதப்பட்ட வாசகங்கள் முன்னர் கூறப்பட்டுவிட்டது).
ஹெராக்ளியஸ் நாய் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி அந்தக் கடித்த்தை படித்து முடித்த போது அவர் அருகில் அவரைச் சுற்றிலுமிருந்த மதருருமார்கள் மற்றும் ரோ பைஸாந்திய ஆட்சியாளர்களின்ச்சலும் இரைச்சலும் அதியரித்தது குரய்கள் உயர்ந்தன உடனே நாங்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டோம். நாங்கள் வெளியேற்றப்பட்ட போது நான் என் நண்பர்களிடம் இப்னு அஃப்ஷர் முறைம்மதுவின் விவகாரம் வலினம் பெற்றுவிட்டது மஞ்சள் நிற இனத்தாரின் (ரோமரின் மனைரே அவருக்கு முஹம்மதுக்கு அஞ்சுகிறாரே என்று (அன்று தொட்டு அல்லாஹ்வின் தூதர் ளை அவர்களின் அம்மார்க்கம் விரைவில் வெற்றிபெறும் என்று உறுதிபூண்டவனாக நன் இருக்கலாைேன முடிவில் அய்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லனைமப் புகுத்தினான்
எலியா பைத்துல் முகத்த நிர்வாகியும் மன்னர் ஹெராக்ளியானே நண்பருமான இப்னு நாத்தூர் என்பார் வளம் நாட்டுக் கிறிஸ்தவர்களின் தலைமைக் குருவாக இருந்தவர் ஆவார் அவர் அறிவிக்கிறார்
ஹெராக்ளியஸ் பைத்து முகத்தள் வந்த போது மசைஞ்சலத்துடன் காணப்பட்டார் அப்போது அவருடைய அரசவைப் பிரதாளிசிலர் தங்களிலை தோய்ந்த இந்தத் தோற்றம் எங்களுக்கு கவலை அளிக்கிறது என்று கூறினார்கள்.
மன்னர் நெஹராக்ளியஸ் கிரகங்களைப் பார்த்து சோதிடம் சொல்வதில் கைதேர்ந்தவராயிருந்தார்ங்களின் கவலைக்கு காரணம் என்ன வென்று அவர்கள் விற்குஇன்றநட்சத்திரங்கள கூர்ந்து கவனித்துக் கொலிடிருந் போது விருத்தசேதனதோன்றிவிட்டதைப் பார்த்தேன் என் நெஹராக்ளியஸ் கூறிவிட்டு, இந்த தலைமுறையினரில் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையவர்கள் என்று கேட்டார் அதற்கு அவர்கள் நாங்கள் அறிந்தவரையில் களைத்தவிர வேறுயாரும் விருத்தசேதனம் செய்துகொள்வதில்லை அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்க ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்றுவிடுமாறு கட்டளையிடுங்கள் என்றார்கள் இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் அல்லாஹ்வின் தூதர் எஸ் அவர்களைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும் ஒரு மனிதரை கஸ்ன குலத்தின் குறுநில மன்னர் ஹெராக்ளிடம் அனுப்பியிருந்தார்.அம்மனிதர் ஹெராசியாடேம் அழைத்து வரப்பட்டார்.
அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கோடை ஹெராக்ளியஸ் இவரை அழைத்துச் சென்ற இவர் விருத்தசேதனம் செய்திருக்கிறாரா? அல்லவா! என்று சோதியுங்கள் என்று ஆணையிட்டார் அவ்வாறே அவாரம் மர்கயிட்டனர் அவர் விருத்தசேதனம் செய்திருப்பதாக ஹெராக்ளியாடேம் கூறினார்கள் மேலும் அந்த மனிதரிடம் நெஹராளிபழக்க வழக்கங்கள் குறித்து விரித்த போது அவர்கள் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடைய வர்கள்தான் என்று குறிப்பிட்டார் உடனே ஹெராக்ளியஸ் இதோ இந்தத் தலைமுறை யினரின் அரசர் தோன்றிவிட்டார் என்று கூறினார்.
பின்னர் (இதுதொடர்பாக ரோமின் தரைனரூபியாயில் இருந்த தன் நண்பரும் கவ்விகேள்வியில் தமக்கு நிகர வருமான காத்திர் எனும், ஒவருக்குக் கடிதம் எழுதிவிட்டு நெஹராக்ளியஸ் ஹில்ஸ் நகருக்குச் சென்றவர் ஹிக்ஸ் சென்ற குடவதற்குள் நண்பரிடமிருந்து பதில் கடிதம் வந்தது அந்தக் கடிதத்தில் தெராக்சின் நபிவரின் வருகை பற்றியும் அவர் இறைத்தூதர்தாம் என்பது பற்றியும் கூறப்பட்டிருந்தது.
பின்னர் ஹெராக்ளியஸ் ஹில்ஸ் நகரிலிருந்த தமது கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமாபுரியின் பிரமுகர்கள் அனைவருக்கும் ஆணையிட்டார் அவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த கோட்டையின் தவுகளையெல்லாம் பூட்டிவிடும்படி உத்தரவிட்டார் அஅேவை பூட்டப்பட்டனர் அந்த அவையிலிருந்தவர்கள் முன்தோன்றி ரோமானியரே! உங்களுக்கு வெற்றியும் நேர்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும் உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா?இந்த இறைத் தூதரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பேசினார். இதைக் கேட்ட மாத்திரத்தில் காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப் போன்று கோட்டைக் கதவுகளை நோக்கி அவர்கள் வெருண்டோடி கதவுகளை நெருங்கியதும் அவை தாளிடப் பட்டிருக்கக் கண்டனர்.
அவர்கள் வெருண்டோடுவதைப் பார்த்த ஹெராக்ளியஸ் நபி (ஸல்) அவர்கள் மீது இந்த மக்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள் என்று நிராசையான போது அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள் என்று (காவலர்களை நோக்கிச் சொன்னார் (அவர்கள் திரும்பி வந்ததும்) நீங்கள் உங்கள் மதத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பைச் சோதிக்கவே நான் சற்று முன்னர் அவ்வாறு பேசினேன் இப்போது உங்கள் உறுதியை ஐயமற அறிந்து கொண்டேன் என்று கூறினார். உடனே (ரோமர்களின் வழக்கப்படி) அனைவரும் அவருக்கு சிரம்பணிந்தனர். அவரைக் குறித்து திருப்தியும் அடைந்தனர். இதுவே மன்னர் ஹெராக்ளியாஸின் இறுதி நிலைப்பாடாக இருந்தது (புகாரி: 7)
இது போன்று நபி (ஸல்) அவர்கள் பல நாட்டு மன்னர்களுக்கும் கடிதங்கள் எழுதினார்கள்.