யாஸீன் விளக்கவுரை-9

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை
33, 34, 35 வது வசனங்கள்

33. இறந்த பூமி அவர்களுக்கு ஓர் சான்று. அதை நாம் உயிர்ப்பிக்கிறோம். அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.

34, 35. அதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக ஏற்படுத்தினோம். அதில் ஊற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம். அதை அவர்களின் கைகள் தயாரிக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

இதில் 33 வது வசனத்தில் உள்ள இறந்த பூமியை உயிர்ப்பித்தல் என்பது பற்றி முந்தைய வசனங்களின் விளக்கத்திலேயே நாம் பார்த்துவிட்டோம்.

அதைத் தொடர்ந்து 34, 35 வது வசனங்களில் பேரீட்சை, திராட்சை போன்றவற்றை வழங்கியதை எடுத்துக் கூறி தனக்கு ஏன் நன்றி செலுத்தாமல் இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்புகிறான். இதை கருத்தை மேலும் சில வசனங்களிலும் பிரதிபலிக்கிறான்.

உணவைப் பற்றி சிந்தித்தல்

நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?

நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். “நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்” என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.

(அல்குர்ஆன்: 56:63),64) ➚,65,66,67.)

இது ஓர் அழகிய நினைவூட்டலாகும்

உண்ணும் உணவை நாம் பயிரிட்டாலும் அதை முளைக்கச் செய்வது அல்லாஹ்வின் விருப்பம்தான். “தான் விரும்பாவிட்டால் அதை முளைக்காமல் செய்து விடலாம் என்றிருந்தும் கூட நான் அதை முளைக்கச் செய்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கு நன்றி செலுத்தமால் இருக்கிறீர்களே?” என சிந்திக்கும் வகையில் அல்லாஹ் கேட்கிறான்.

குடிநீரை பற்றி சிந்தித்தல்

மேலும் குடிநீரை பற்றியும் சிந்திக்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?

நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 56:68),69) ➚,70.)

குடிக்கும் நீரை அல்லாஹ் நினைத்தால் உப்பு நீராக ஆக்கிவிடலாம்.

அவ்வாறு ஆக்கினால் நாம் மிகவும் சிரமத்திற்கு ஆட்படுவோம். பல அன்றாட தேவைகள் நிறைவேறாமல் போய்விடும். அப்படி செய்துவிடாமல் தண்ணீரை சிறந்த முறையில் வழங்கும் தனக்கு ஏன் நன்றி செலுத்தாமல் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறான். எனவே இவற்றை உணர்ந்து அல்லாஹ்வுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தவேண்டும்.

நீரூற்று

மேலும் 34, 35 ஆகிய வசனங்களில் பேரீட்சை பற்றியும் ஊற்றுக்களை பற்றியும் கூறுகிறான்.

உதாரணமாக இன்றைய மக்கா நகரம் எவ்வித விவசாயத்திற்கும் தகுதி இல்லாத பாலைவனமாகும். எனினும் பல கனி வகைகள் அங்கே கிடைக்கிறது. மேலும் தண்ணீர் ஊறுவதற்கு சாத்தியமில்லாத இடத்தில் ஜம்ஜம் எனும் நீருற்றை உருவாக்கி அத்தாட்சியை ஏற்படுத்தியுள்ளான். இத்தகைய அருட்கொடைகளை உரிய முறையில் நினைவு கூறுமாறும் கூறுகிறான்.

நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.

(அல்குர்ஆன்: 14:34) ➚.)

எண்ணமுடியாத அளவிற்கு அருட்கொடைகளை பெற்றுக் கொண்டு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 100:6) ➚.)

எனவே மேற்கண்ட அத்தாட்சிகளை நினைவு கூர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவேண்டும்.

36 வது வசனம்

36. பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும் அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.

மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்களிலும் மனிதர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகளை படைத்திருப்பதாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அறியமுடியாததாக இருந்தாலும் இன்றைய காலத்தில் ஆராய்ச்சி செய்து அறியமுடியும்.

இன்றைய அறிவியல் தாவரங்களிலும் ஜோடி உண்டு என்றும் மின்சாரத்திலும் பாசிடிவ், நெகடிவ். மேலும் அணுக்களில் புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய ஜோடிகள் உண்டு என்றும் கண்டுபிடித்துள்ளனர். அல்லாஹ் கூறுவது போன்று மேலும் பல ஆய்வுகளை செய்து அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகளை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.

மேலும் இந்த வசனத்தின் துவக்கத்தில் “(ஸுப்ஹான) அல்லாஹ் தூயவன்” என்று உள்ளது.

இதில் கூறப்படும் தூய்மை நம்முடைய தூய்மை போன்றதல்ல. அல்லாஹ்வுடைய தூய்மை தவறுகளுக்கு அப்பாற்பட்டது. மனிதனுக்கு இருக்கின்ற எந்த பலவீனங்களும் அல்லாஹ்வுக்கு இருக்காது. தூக்கம், கவலை, பசி, போன்ற எதுவும் இருக்காது.

இது போன்ற அனைத்து பலவீனத்தை விட்டும் தூய்மைப்படுத்துவதற்குதான் “(ஸுப்ஹான) அல்லாஹ் தூயவன்” என்ற வார்த்தை கூறப்படும். எனவேதான் இந்த வார்த்தையை கூறுவதற்கு அதிகமான நன்மைகள் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை: சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.

பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.

(புகாரி: 6406)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1.சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2.சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 7563)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 6405)

இது போன்ற வார்த்தைகள் நன்மைகளை அதிகமாக பெற்றுத் தரக்கூடியதாகும். எனவே நம்முடைய ஓய்வு நேரங்களில் இவற்றை அதிகமாக கூறவேண்டும்.

37 வது வசனம்

37. இரவும் அவர்களுக்கு ஓர் சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

நாளின் ஆரம்பம் இரவா? பகலா?

நாளின் ஆரம்பம் இரவுதான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால் பிறையை கண்ணால் பார்க்காமல் வானியல் ரீதியாக கணித்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்கின்ற சிலர் நாளின் ஆரம்பம் பகல் என்று நம்புகின்றனர். இது தவறாகும். நாளின் ஆரம்பம் இரவு என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

இதை மறைமுகமாக இவ்வசனம் கூறுகிறது. “அதிலிருந்து (இரவிலிருந்து) பகலை உரித்தெடுக்கிறோம்.” என்று அல்லாஹ் கூறுகிறான். இதன் மூலம் இரவுதான் முதலாவது பகல் அதிலிருந்து பிறப்பதுதான் என்று விளங்குகிறது. உதாரணமாக ஒரு பழத்திற்கு மேல் உள்ள தோலை உறிப்பது போன்று. தோல் என்பது வெளிப்புறத்தில் மூடியிருப்பதுதான். பழம்தான் முதலாவதாகும்.

அதே போன்றுதான் இரவு என்ற முதலாவது பொருளிலிருந்து பகல் உரிக்கப்படுகிறது. இதன் மூலம் இரவுதான் ஆரம்பம் என்பதை விளங்கலாம். இதை மேலும் பல சான்றுகள் வலுப்படுத்துகிறது.

நான் பனூ ஸலாமா (கோத்தரித்தின்) குழுவிலே இருந்தேன். அவர்களில் மிகவும் சிறிய வயதுடையவனாவேன். அப்போது அவர்கள் “லைத்துல் கத்ர் (இரவை) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நமக்காக கேட்பவர் யார்?” என்று கேட்டனர். அது ரமளான் மாதத்தின் இருபத்து ஒன்றாம் நாள் காலையாகும்.

பிறகு (அவர்களுக்காக) நான் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அடுத்தற்கடுத்த) மஃரிப் தொழுகையில் இணைந்தேன். பிறகு அவர்களுடைய வீட்டு வாசலில் நின்றேன். என்னை அவர்கள் கடந்து சென்ற போது “(வீட்டுக்குள்) செல்” என்று கூற, நானும் (அவர்களுடன்) செ

ன்றேன். அப்போது இரவு உணவு கொண்டுவரப்பட்டு, அவர்கள் என்னை பார்த்தார்கள். உணவு குறைவாக இருந்ததால் சாப்பிடாமல் இருந்து கொண்டேன். அவர்கள் சாப்பிட்டு முடித்தபோது “என் காலணியை எடுத்துக் கொடு” என்று கூறிவிட்டு எழுந்தார்கள். நானும் அவர்களுடன் எழுந்தேன்.

அப்போது அவர்கள் “உமக்கு ஏதோ தேவை இருப்பது போன்று உள்ளதே?” என்று கேட்க, நான் “ஆம், லைலத்துல் கத்ர் (இரவு) பற்றி கேட்பதற்காக பனூ ஸலமாவை சேர்ந்த வாகன கூட்டத்தினர் என்னை உங்களிடம் அனுப்பினார்கள்” என்றேன். அதற்கவர்கள் “இது எத்தனையாவது இரவு” என்று கேட்க, நான் “இருபத்து இரண்டாவது இரவு” என்றேன். அவர்கள் “இதுதான் அந்த இரவு” என்று கூறிவிட்டு திரும்பி சென்று “(இது) அல்லது நாளைய (இருபத்தி மூன்றாம்) இரவு” என்று கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத்: 1171)

இச்செய்தியை நன்றாக கவனிக்க வேண்டும். அப்துல்லாஹ் பின் உனைஸ் என்ற நபித்தோழர் இருபத்து ஒன்றாம் காலையில் பனூ ஸலமா கூட்டத்தினரிடம் பேசுகிறார். பிறகு நபி (ஸல்) அவர்களுடன் அதைத் தொடர்ந்து வரும் மஃரிப் தொழுகை முடித்து உரையாடும் போது இது இருபத்து ஒன்றாம் இரவு” என்று கூறாமல் இருபத்து இரண்டாம் இரவு” என்று கூறுகிறார்.

நாளின் ஆரம்பம் பகல் என்றிருந்தால் இருபத்து ஒன்றாம் நாள் பகலை தொடர்ந்து வருகின்ற இரவை இருபத்து ஒன்றாம் நாள் இரவு என்றே கூறியிருப்பார். ஆனால் அவ்வாறு கூறாமல் இருபத்து இரண்டாம் நாள் இரவு என்று குறிப்பிட்டு, மஃரிபிலிருந்து மறுநாளாகிய இருபத்து இரண்டாம் நாள் துவங்கி விட்டது என்பதை உறுதிபடுத்துகிறார். இதன் மூலம் இரவிலிருந்துதான் நாள் ஆரம்பமாகிறது என்பதை அறியலாம். இது நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் நடந்ததால் அவர்களுடைய அங்கீகாரத்தை பெறுகின்றது.

மற்றொரு செய்தியில் நபி (ஸல்) அவர்களே இதை தெளிவாக கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதமுடைய மக்களின் (மனிதர்களின்) செயல்கள் ஒவ்வொரு வியாழன் வெள்ளி இரவில் எடுத்துக் காட்டப்படும். அப்போது உறவை முறித்து வாழ்பவனின் செயல் ஏற்கப்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அஹ்மத்: 9883)

இச்செய்தியில் வியாழக்கிழமை பகலை தொடர்ந்து வருகின்ற இரவை வியாழன் இரவு என்று நபியவர்கள் கூறாமல் வெள்ளிக்கிழமை இரவிலான வியாழன் என்று கூறுகிறார்கள். நாளின் ஆரம்பம் பகல் என்றிருந்தால் வியாழன் பகலை தொடர்ந்து வருகின்ற இரவை வியாழன் இரவு என்றுதான் கூறி யிருப்பார்கள். ஆனால் அவ்வாறு கூறாமல் வெள்ளிக்கிழமை இரவு என்று கூறுகிறார்கள். வியாழக்கிழமை மக்ரிபிற்கு பிறகான இரவை வெள்ளிக்கிழமை இரவு என்று குறிப்பிடும் வழக்கம் முஸ்லிம்களிடையேயும் இருப்பதை பார்க்கலாம்.

இதன் மூலம் இரவிலிருந்துதான் மறுநாள் துவங்குகிறது என்பதை அறியலாம்.

38வது வசனம்

38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

சூரியனின் ஓட்டங்கள்

இவ்வசனத்தில் சூரியனின் ஓட்டத்தை பற்றி அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக முந்தைய கால மக்களிடம் இது பற்றி பல கருத்துக்கள் இருந்துள்ளது.

முதலில் பூமி தட்டை என்றார்கள். பிறகு உருண்டையானது என்றார்கள். எனினும் இன்றைய நவீன ஆராய்ச்சிக்கு பிறகு பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளார்கள். அதில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதாகவும் கூறுகின்றனர். மேலும் பூமி தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாளாகும். சூரியனை சுற்றுவதற்கு ஒரு வருடமாகும் என்று கூறுகின்றனர்.

ஒரு காலத்தில் பூமியை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் இயங்குவதாக கூறினார்கள். தற்போது சூரியனை மையமாக வைத்துதான் இயங்குகிறது என்று கூறுகிறார்கள். மேலும் சூரியன் தன் குடும்பத்தை சேர்ந்த கோள்களை இழுத்துக்கொண்டு ஒரு மணிநேரத்திற்கு ஐம்பது கிலோ மீட்டார் தூரத்தில் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

நாம் சாதாரணமாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பது போல் தோன்றினாலும் சூரியனால் இழுத்து செல்லப்படுகிறோம். இந்த உண்மையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே மறைமுகமாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறிவிட்டான். இதை நபி (ஸல்) அவர்களால் கூற இயலாது. ஏனெனில் அறிவியல் சார்ந்த ஞானம் அவர்களுக்கு இல்லை. இறைவனால் மட்டும்தான் இதை கூற முடியும். இதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகிறது.

இந்த வசனத்திற்கு விளக்கமாக புகாரியில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. அது சரியானது தானா? என்பதை அலசுவோம்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், “அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கின்றது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது.

(இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கின்றது. அப்போது அது (வழக்கம் போலக்) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப் படாது. மாறாக, “வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று சொன்னார்கள்.

இதைத் தான், “சூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்’ என்னும் (36:38) இறைவசனம் குறிக்கின்றது” என்று சொன்னார்கள்.

(புகாரி: 3199)

இச்செய்தி சற்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகும்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் எந்த குறையும் இல்லாவிட்டாலும் இதன் கருத்து நபி (ஸல்) அவர்களின் கூற்றா?, இறைவனின் அந்தஸ்திற்கு ஏற்றதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

வானம், பூமி, மரம், செடி, கொடி அனைத்தும் அல்லாஹ்விற்கு பணிகின்றன என்பது போல சூரியனும் அல்லாஹ்விற்கு பணிகிறது என்று சொன்னால் அந்த கருத்தை மறுப்பதில் எவ்வித நியாயமும் இல்லை எனலாம்.

அல்லது இல்முல் கைப் எனும் மறைவான விஷயத்தை பற்றி இச்செய்தி பேசுகிறது என்றால் ஒரு முஸ்லிமிற்கு அதை நம்புவதை தவிர வேறு வழியில்லை என்றாகி விடும். அதில் விளக்கமளிக்க ஏதுமிருக்காது.

அல்லது சூரியன் உதிக்கிறது மறைகிறது என்று சூரியன் குறித்த மனிதர்களின் சாமானிய பார்வையை அது பிரதிபலிக்கிறது என்றால் அப்போதும் அதை ஏற்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இந்த செய்தி இவற்றை பேசாமல் சூரியனின் சுழற்சியை பற்றி பேசுவதாக அமைந்துள்ளது.

சூரியன் மறையும் போது எங்கே செல்கிறது? யாரிடம் செல்கிறது? என்று சூரியனின் இயக்கத்தை பற்றி கூறுகிறது. இது வஹீயிலிருந்து உள்ளதுதான் என்று நம்பினால் இதன் கருத்தில் எந்த பிழையும் இருக்கக் கூடாது.

ஆனால் இச்செய்தியில் பிழைகள் உண்டு. சூரியனின் உண்மை நிலையை சொல்லும் வகையில் இது இல்லை. சூரியன் மறையும் போது அது அர்ஷுக்கு கீழ் செல்வதாக இச்செய்தி கூறுகிறது. இது சூரிய இயக்கத்திற்கு மாற்றமானதாகும்.

உதாரணமாக நம் நாட்டிற்கு சூரியன் மறையும் போது மற்றொரு நாட்டிற்கு அது உதிக்கிறது. மற்ற நாட்டுக்கு மறையும் போது வேறு நாட்டுக்கு உதிக்கிறது. எனவே சூரியன் தொடர்ந்து சுழற்சியிலேயே உள்ளது. நமக்கு மறையும் சூரியன் இன்னொரு நாட்டிற்கு உதிக்கிறது. இதை அர்ஷுக்கு கீழ் செல்கிறது என்று சொல்வது பொருத்தமற்றதாக உள்ளது.

அண்டவெளியில் பூமி தன்னை தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வருகிறது.

சூரியனும் சுற்றிக் கொண்டிருக்கிறது

இரண்டும் மிகவேகமாக அண்டவெளியில் சென்றுக் கொண்டும் உள்ளன. பூமி சூரியனை சுற்றி வரும்போது அது பூமிக்கு முகம் காட்டுவதை வைத்து தான் சூரியனின் உ தயமும் மறைவும் ஏற்படுகிறது.

இந்நிலையில் சூரியன் மறைவதை அது அர்ஷுக்கு கீழ் செல்கிறது என்று சொல்வது எப்படி பொருத்தமானதாக இருக்கும்? அது அல்லாஹ்விற்கு கட்டுப்படுகிறது என்பதையே அர்ஷுக்கு கீழ் செல்கிறது என்று சொல்லப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும் அதுவும் சரியில்லை.

அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும்உள்ளடக்கும்.

(அத்தியாயம்:2 : 255.)

அர்ஷ் பூமியையும் வானத்தையும் உள்ளடக்குகிறது என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த அடிப்படையில் சூரியனுடைய மொத்த இயக்கமும் அர்ஷுக்கு கீழ்தான் உள்ளது என்றாகிறது. ஆனால் மறையும் போது மட்டும் அர்ஷுக்கு கீழ் செல்கிறது. மற்ற நேரங்களில் அர்ஷுக்கு கீழ் செல்லவில்லை என்று கூறும் போது இவ்வசனத்திற்கு மாற்றமாக அமைகிறது.

இப்படி சூரியனின் உண்மையான இயக்கத்திற்கு மாற்றமான சூரியனை படைத்த இறைவன் கூறியிருக்கமாட்டான். ஏனெனில் அல்லாஹ்வுடைய கூற்று உண்மையாதாகும்.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யாரிருக்கமுடியும்?

(அல்குர்ஆன்: 4:87) ➚.)

இந்த செய்தியை ஏற்றால் சூரியனின் இயக்கத்தை பற்றி அதை படைத்த அல்லாஹ்விற்கு தெரியவில்லை என்ற ஆபத்தான கருத்து வரும். எனவே மேற்கண்ட செய்தி அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் உண்மைக்கு மாற்றமானதாகவும் குர்ஆனுடைய வசனத்திற்கு மாற்றமானதாகவும் இருப்பதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே யாசீன் அத்தியாயத்தின் 38 வது வசனத்தின் விளக்கமாக இந்த செய்தியை கருத முடியாது.

39வது வசனம்

39. சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது.

சந்திரனுக்குப் பல நிலைகள் உண்டு

சந்திரனை கண்ணால் பார்க்கும்போது பல நிலைகளில் அது உள்ளது. முதல் நாளில் முதல் பிறை ஒரு நிலையாகவும் இரண்டாம் நாளில் மற்றொரு நிலையாகவும் இது போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையாக உள்ளது. இதைத்தான் பல நிலைகள் என அல்லாஹ் கூறுகிறான்.

இதை மேலும் சில வசனங்களில் விளக்குகிறான்.

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்” எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன்: 2:189) ➚.)

இவ்வசனத்தின் துவக்கத்தில் “பிறை” என்று ஒருமையாக கூறாமல் “பிறைகள்” என்று பன்மையாக கூறுகிறான். பிறைக்கு பல நிலைகள் உள்ளதை உணர்த்தவே அல்லாஹ் இவ்வாறு கூறுவதை அறியலாம்.

மேலும் ஹஜ் மற்றும் மக்களுக்கும் காலம் காட்டியாக இருப்பதாக கூறுகிறான். வருடத்தின் பல காலங்களை சந்திரன் மூலம்தான் அறிகிறோம். உதாரணமாக ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை பிறையை அடிப்படையாக வைத்துதான் நோற்கிறோம். இதை மற்றொரு வசனத்திலும் கூறுகிறான்.

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

(அல்குர் ஆன்:10:5.)

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

(அல்குர்ஆன்: 17:12) ➚.)

சூரிய, சந்திரனை வைத்து நாம் காலத்தை அறிவதைத்தான் இவ்வசனம் கூறுகிறது.

40வது வசனம்

40. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.

(அல்குர்ஆன்: 36:40) ➚.)

காலம் கடந்து நிற்கும் வேதம்

இவ்வசனத்தில் மிகப் பெரும் பேருண்மை உள்ளது. சூரியன் சந்திரனை அடைய முடியாது என்பதை அதன் ஓட்டத்தை அறிந்த விஞ்ஞானியால் மட்டும்தான் சொல்ல சொல்ல முடியும். இதை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் மூலம் காலம் கடந்து பேசும் திறனை குர்ஆன் பெற்றுள்ளது என்பதை அறியலாம்.

சாதாரண மனிதனின் கூற்றாக குர்ஆன் இருந்தால் இத்திறன் கிடைக்காது. ஏனெனில் மனிதர்கள் எழுதிய சட்ட புத்தகங்கள் போன்றவை பல்வேறு மாறுதலுக்கு உட்படுகிறது. பல காலத்திற்கு அது நீடிக்காது.

திருக்குறள் அதன் மொழி நடைக்காக சிறப்பித்து கூறப்பட்டது. எனினும் தற்போதைய நவீன காலத்தில் அதன் கருத்துக்கள் பல இடங்களில் முரண்படுகிறது. சந்திர கிரகணத்தை பற்றி திருக்குறளின் 1146 வது குறளில் ‘கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும் திங்களை பாம்பு கொண்டற்று.” என்று கூறுகிறார்.

காதலன் காதலியை ஒருநாள் சந்திப்பது பாம்பு சந்திரனை விழுங்குவதால் ஏற்படும் சந்திர கிரகணத்தை போன்று மிக நீண்ட நாள் நீடிக்கும்” என்பது இதன் பொருளாகும்.

இதில் சந்திரனை பாம்பு விழுங்குவதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று கூறுகிறார். ஏனெனில் அவருடைய காலத்தில் அவ்வாறுதான் நம்பப் பட்டது. இந்து மக்களின் நம்பிக்கை படி சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு சந்திரனை விழுங்கிவிட்டால் சந்திர கிரகணம் ஏற்படும் என்று நம்பப்பட்டது. ஆனால் இன்றைக்கு அறிவியல் ரீதியாக வேறு காரணம் கூறப்படுகிறது. திருக்குறள் கூறும் காரணம் உண்மையல்ல என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது.

குர்ஆன் இது போன்று இல்லாமல் இல்லாமல் காலம் கடந்து நிற்கிறது. ஒவ்வொரு கோள்களும் தன் பாதையில் நீந்திக் கொண்டிருக்கிறது என்று சரியான கருத்தை கூறி தன்னைத் தானே இறைவேதம் என நிரூபிக்கிறது.

மதரஸாக்களில் தவறான பாடங்கள்

காலம் கடந்து நிற்கின்ற திருக்குர்ஆனை பெற்ற முஸ்லிம் சமுதாயத்தின் சில மதரஸாக்களில் விஞ்ஞானம் பற்றிய தவறான பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன.

உதாரணமாக மத்ஹபுகளில் பல் துலக்கும் குச்சியை கீழே வைப்பதை பற்றி குர்ஆன் ஹதீஸில் இல்லாத, அறிவுக்கு பொருந்ததாத பல வழிமுறைகள் கூறப்படும். குச்சியை நிற்க வைத்தால் அதில் ஷைத்தான் ஏறிக்கொள்வான். எனவே படுக்க வைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இது தவறாகும். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் மனிதனும் ஆடும் உடலுறவு கொண்டு மனிதனை பிள்ளையாக பெற்றெடுத்து, அவர் மார்க்கத்தை கற்று ஹஜ் பெருநாளில் தொழ வைத்தால், தொழுகை முடித்த பிறகு அவரையே குர்பானி கொடுக்கலாம் என்றும் எழுதி வைத்துள்ளனர். இது நடப்பதற்கு சாத்தியமுள்ளதா? என்பதை கூட யோசிக்காமல் மடமைத்தனத்தின் வெளிப்பாடாகத்தான் இவ்வாறு எழுதுகிறார்கள்.

காலம் கடந்த குர்ஆனை இறைவேதமாக பெற்ற ஒரு சமுதாயம் இது போன்ற மடமைத் தனங்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது.

40 வது வசனம்

40. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.

(அல்குர்ஆன்: 36:40) ➚.)

காலம் கடந்து நிற்கும் வேதம்

இவ்வசனத்தில் மிகப் பெரும் பேருண்மை உள்ளது. சூரியன் சந்திரனை அடைய முடியாது என்பதை அதன் ஓட்டத்தை அறிந்த விஞ்ஞானியால் மட்டும்தான் சொல்ல சொல்ல முடியும். இதை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் மூலம் காலம் கடந்து பேசும் திறனை குர்ஆன் பெற்றுள்ளது என்பதை அறியலாம்.

சாதாரண மனிதனின் கூற்றாக குர்ஆன் இருந்தால் இத்திறன் கிடைக்காது. ஏனெனில் மனிதர்கள் எழுதிய சட்ட புத்தகங்கள் போன்றவை பல்வேறு மாறுதலுக்கு உட்படுகிறது. பல காலத்திற்கு அது நீடிக்காது.

திருக்குறள் அதன் மொழி நடைக்காக சிறப்பித்து கூறப்பட்டது. எனினும் தற்போதைய நவீன காலத்தில் அதன் கருத்துக்கள் பல இடங்களில் முரண்படுகிறது. சந்திர கிரகணத்தை பற்றி திருக்குறளின் 1146 வது குறளில் ‘கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும் திங்களை பாம்பு கொண்டற்று.” என்று கூறுகிறார்.

காதலன் காதலியை ஒருநாள் சந்திப்பது பாம்பு சந்திரனை விழுங்குவதால் ஏற்படும் சந்திர கிரகணத்தை போன்று மிக நீண்ட நாள் நீடிக்கும்” என்பது இதன் பொருளாகும்.

இதில் சந்திரனை பாம்பு விழுங்குவதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று கூறுகிறார். ஏனெனில் அவருடைய காலத்தில் அவ்வாறுதான் நம்பப் பட்டது. இந்து மக்களின் நம்பிக்கை படி சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு சந்திரனை விழுங்கிவிட்டால் சந்திர கிரகணம் ஏற்படும் என்று நம்பப்பட்டது. ஆனால் இன்றைக்கு அறிவியல் ரீதியாக வேறு காரணம் கூறப்படுகிறது. திருக்குறள் கூறும் காரணம் உண்மையல்ல என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது.

குர்ஆன் இது போன்று இல்லாமல் இல்லாமல் காலம் கடந்து நிற்கிறது. ஒவ்வொரு கோள்களும் தன் பாதையில் நீந்திக் கொண்டிருக்கிறது என்று சரியான கருத்தை கூறி தன்னைத் தானே இறைவேதம் என நிரூபிக்கிறது.

மதரஸாக்களில் தவறான பாடங்கள்

காலம் கடந்து நிற்கின்ற திருக்குர்ஆனை பெற்ற முஸ்லிம் சமுதாயத்தின் சில மதரஸாக்களில் விஞ்ஞானம் பற்றிய தவறான பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன.

உதாரணமாக மத்ஹபுகளில் பல் துலக்கும் குச்சியை கீழே வைப்பதை பற்றி குர்ஆன் ஹதீஸில் இல்லாத, அறிவுக்கு பொருந்ததாத பல வழிமுறைகள் கூறப்படும். குச்சியை நிற்க வைத்தால் அதில் ஷைத்தான் ஏறிக்கொள்வான். எனவே படுக்க வைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இது தவறாகும். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் மனிதனும் ஆடும் உடலுறவு கொண்டு மனிதனை பிள்ளையாக பெற்றெடுத்து, அவர் மார்க்கத்தை கற்று ஹஜ் பெருநாளில் தொழ வைத்தால், தொழுகை முடித்த பிறகு அவரையே குர்பானி கொடுக்கலாம் என்றும் எழுதி வைத்துள்ளனர். இது நடப்பதற்கு சாத்தியமுள்ளதா? என்பதை கூட யோசிக்காமல் மடமைத்தனத்தின் வெளிப்பாடாகத்தான் இவ்வாறு எழுதுகிறார்கள்.

காலம் கடந்த குர்ஆனை இறைவேதமாக பெற்ற ஒரு சமுதாயம் இது போன்ற மடமைத் தனங்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது.

41 வது வசனம்

41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும் அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.

(அல்குர்ஆன்: 36:41),42) ➚.)

நூஹ் நபியின் கப்பல்

41 வது வசனத்தில் நிரப்பபட்ட கப்பல் என்று கூறப்படுவது நூஹ் நபியின் கப்பல்தான். இதை பின்வரும் வசனங்களிலிருந்து அறியலாம்.

எனவே அவரையும், அவருடன் இருந்தோரையும் நிரப்பப்பட்ட கப்பலில் காப்பாற்றினோம். பின்னர் எஞ்சியோரை மூழ்கடித்தோம்.

(அல்குர்ஆன்: 26:119), 120) ➚.)

நூஹ் நபியோடு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களை கப்பலில் நிரப்பி, பாதுகாத்து மற்றவர்களை மூழ்கடித்துவிட்டான். இதைத்தான் யாசீன் அத்தியாயத்தின் 41 வது வசனம் மறைமுகமாக கூறியது.

மேலும் இத்தகைய சம்பவங்களை சாதாரணமாக கேட்டுவிட்டு சென்று விடாமல் அனைவரும் அதை படிப்பினையாக கருத வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

(நூஹ் நபியின் காலத்தில்) தண்ணீர் எல்லை மீறிய போது உங்களை நாம் கப்பலில் சுமத்தினோம். அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்கும், கேட்கும் காதுகள் கேட்டு பேணிடவும் (இவ்வாறு செய்தோம்)

(அல்குர்ஆன்: 69:11), 12) ➚.)

நூஹ் நபியின் சமுதாயத்திற்கு இறைத்தண்டனையாகு வெள்ளம் வந்த போது நம்பிக்கை கொண்டவர்களை மட்டும் ஏற்றிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொள்ளாமல் அநீதி இழைத்தோருக்கு மன்னிப்பு கேட்கக்கூடாது என்றும் அறிவித்தான்.

“நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப்பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால் ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்” என்று அவருக்கு அறிவித்தோம்.

(அல்குர்ஆன்: 23:27) ➚.)

மேற்கண்ட சம்பவத்தில் இடம் பெற்றுள்ள கப்பலை அல்லாஹ்வின் சான்றாக நாம் கருத வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய தெளிவுகளை அல்லாஹ் வழங்குகிறான். அதனால்தான் யாசின் அத்தியாயத்தின் 40 வது வசனத்தின் துவக்கத்தில் “நிரப்பபட்ட கப்பலில் அவர்களுக்குரிய அத்தாட்சி இருக்கிறது” என்று கூறுகிறான்.

மற்றொரு வசனத்திலும் இதை அத்தாட்சி என குறிப்பிடுகிறான்.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

(அல்குர்ஆன்: 29:14), 15) ➚.)

நூஹ் நபியின் கப்பலும் தற்கால உண்மையும்

தற்காலத்தில் உள்ள மலையேறும் குழுவினர் இநத் கப்பல் தொடர்பாக ஒரு பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர். திருக்குர்ஆன் வரலாற்றை அடிப்படையாக கொண்டு பின்வரும் ஆய்வு முடிவை தெரிவித்துள்ளனர்.

துருக்கி நாட்டில் ஜோர்தான் என்ற மாவட்டத்தில் தரை மட்டத்திலிருந்து பதினான்காயிரம் அடி உயரத்தில் உள்ள ஒரு மலையின் உச்சியில் பனியால் மூடப்பட்ட பாறையில் இருபது அடி ஆழத்தில் ஒரு கப்பலின் மரத்தாலான உதிரி பாகங்கள் கிடந்ததை உறுதி படுத்துகிறார்கள். மேலும் இதை கண்டு ஆச்சரியமடைகிறார்கள். இவ்வளவு உயரத்தில் கப்பலை கொண்டு வருவது சாத்தியமற்றது என்று வியப்படைகிறார்கள். ஆனால் இச்சம்பவத்துடன் பின்வரும் குர்ஆன் வசனம் ஒத்துப்போவதை காணலாம்.

“பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர் எனவும் கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 44:44) ➚.)

அன்றைக்கு நூஹ் நபியின் கப்பல் தண்ணீரில் மிதந்து மலையின் மேல் சென்று நின்றது. பிறகு தண்ணீர் வடிந்தவுடன் கப்பல் அங்கேயே தங்கியது. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இன்றைக்கு அறிவியல் ரீதியாக உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பேருண்மையை கூறியதன் மூலமும் குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகிறது.