நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகள் – 3

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

குறைவான செயல் நிறைவான கூலி

இறைவன் இந்த சமுதாயத்திற்கு அருள் அதிகமதிகம். அதில் ஒரு தனிச்சிறப்போடு மற்றொரு அருளையும் இந்த சமுதாயத்திற்கு செய்திருக்கிறான். அந்த அருளில் உள்ளதுழ்ôன் இந்த சமுதாயம் எந்த குறைவான செயல்களை செய்தாலும் அதற்கு அதிகன்ôக கூலி வழங்குவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கும் வேதம்வழங்கப்பட்ட இரண்டு சமுதாயத்தாரான (யூத, கிறிஸ்த)வர்களுக்கும் உவமை., ஒரு மனிதரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலியாட்களாவர்! “ ஒரு கீராத் கூலிக்குக் காலையிலிருந்து பகலின் நடுப்பகல் நேரம்வரை எனக்கு வேலை செய்பவர் யார்?” என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள். பிறகு, “நடுப்பகலிலிலிருந்து அஸ்ர் தொழுகை வரை ஒரு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அவர் கேட்டார். கிறிஸ்தவர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள். பிறகு, “அஸரிலிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டு கீராத் கூலிலிக்கு எனக்காக வேலை செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார். (முஸ்லிம்களான) நீங்கள்தாம் அ(ப்படி வேலை செய்த)வர்கள்! யுதர்களும், கிறிஸ்தவர்களும் கோபமுற்று, “அதிக வேலை நாங்கள் செய்திருக்கும்போது எங்களுக்கு ஏன் குறைந்த கூலி?” என்று கேட்டனர். அதற்கு அவர் ‘’உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா?” என்று கேட்டார். அவர்கள். “
இல்லை!” என்றனர். “சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது அருட்கொடையாகும்! நான் விரும்பியவருக்கு நான் அதைக் கொடுப்பேன்!” என்று அவர் கூறினார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 2268)

சுவர்க்கத்தை பெறும் சமுதாயம்

இந்த உம்மத்திற்குள்ள மற்றொரு தனிச்சிறப்பு இந்த சமுதாயம் சுஹ்ர்க்த்தில் மற்ற எல்லா சமுதாயத்தை விட இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் அதிகம் இúப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமை நாüல்) ஆதம் (அலை) அவர்களை நோக்கி, “ஆதமே!” என்பான். அதற்கு அவர்கள், “இதோ! வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்கüல் தான்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், “நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்கü-ருந்து) தனியாகப் பிரித் திடுங்கள். என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள், “எத்தனை நரகவாசிகளை?” என்று கேட்பார்கள். அதற்கு அவன், “ஒவ்வோர் ஆயிரம் பேரி-ருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது பேரை (வெüயே கொண்டு வாருங்கள்)” என்று பதிலüப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதை யுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.” (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நரகத்தி-ருந்து (வெüயே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்கüல் யார்?” என்று கேட்டார் கள். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்கüல் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்தி-ருந்து வெüயேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகüல் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) “அல்லாஹு அக்பர்-(அல்லாஹ் மிகப் பெரியவன்)” என்று கூறினோம். உடனே அவர்கள், “சொர்க்கவாசிகüல் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) “அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அவர்கள், “சொர்க்கவாசிகüல் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (இப் போதும்), “அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அப்போது அவர்கள், “நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்கüல் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போலத் தான் இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போலத் தான் (மொத்த மக்கüல் குறைந்த எண்ணிக் கையில்) இருப்பீர்கள்” என்று கூறினார்கள். இதை அபூசயீத் அல் குத்ரீ (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 3348)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தினுள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் “சொர்க்கவாசிகüல் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்பு கின்றீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்’ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் “சொர்க்கவாசிகüல் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்’ என்று சொன்னோம். அவர்கள் “சொர்க்கவாசிகüல் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர் களா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்’ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் “முஹம்மதின் உயிர் எவனது கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகüல் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்-மானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணை வைப்பவர்களை ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோ-ல் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்; அல்லது சிவப்புக் காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான் இருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள்.

(புகாரி: 6528)

காலத்தால் முந்தியவர்கள், மறுமையில் முந்தியவர்கள்

அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு செய்த அருட்கொடைகளில் காலத்தால் நம்மை பிற்படுத்தி படைதிருக்கின்றான். என்றாலும் இந்த சமுதாயம் மறுமையில் முதலாவதாக கேள்வி கேட்கப்பட்டு சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பப்படுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமையில் (அந்தஸ்தால்) முந்தியவர்களாவோம். எனினும், (யூத, கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும் இந்த நாள்தான் அவர்களுக்கும் (வாரவழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இ(ந்த நாளைத் தம் வாரவழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடுகொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர்களே ஆவர். (எவ்வாறெனில், வெள்üக் கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களும் மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களும் (வார வழிபாடு நடத்தும் தினங்களாகும்).

(புகாரி: 876)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாக வும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத் திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.

(முஸ்லிம்: 1550)

இது வரை நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு என்னென்ன தனிச்சிறப்புகள் இருக்கிறது என்று பார்த்தோம். இனி இந்த உம்மத்தில் மட்டும் மட்டும் நபி (ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்புகள் என்ன என்பதை பார்ப்போம்.

இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்கென தனிச்சிறப்புகளும். தனிச்சட்டங்களும் இருக்கின்றன. உதாரணமாக ஸதகா பொருளை சாப்பிடுவது ஹராம். தொடர்ந்து நோன்பு நோற்பது. நான்குக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தல். அவர்களுடைய கணவில் கண்டவைகள் உன்மையானவையாகும். இது பல தனிச்சிறப்புகளும், தனிச்சட்டங்களும் நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கின்றன. இந்த தனிச்சிறப்புகளில் சிலது மற்ற நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தனிச்சிறப்புகளை பல பிரிவாக பிரிக்கலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஹராமானவை.
அவர்களுக்கு மட்டும் ஆகுமானவை.
அவர்களுக்கு மட்டும் கடமையானவை.
அவர்களுக்கு மட்டும் உள்ள சிறப்புகள்.
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஹராமானவை.

தர்மப் பொருட்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஹராமாவை சிலது இருக்கின்றன. அதில் ஸதகா தாமப் பொருட்களை சாப்பிடுவது ஒன்றாகும்.

அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக் காட்டி) “இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் தர்மப் பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம். (அவ்வாறு இவர்கள் அமர்த்தப் பட்டால்,) மக்கள் வழங்குகின்ற (ஸகாத்)தை அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) மக்களுக்குக் கிடைக்கின்ற (சன்மானப்) பொருள் இவர்களுக்குக் கிடைக்கும்” என்று பேசிக்கொண்டனர்.

இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் அ(வர்களிருவரும் பேசிக்கொண்ட)தைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்று சொன்னார்கள். ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி “அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள்மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மகளை மணமுடித்துக்கொண்டதன் மூலம் அவர்களு)டன் திருமண பந்தத்தை அடைந்துகொண்டுவிட்டீர்கள். அதைக் கண்டு நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே!” என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள், “(சரி) அவர்கள் இரு வரையும் அனுப்பிவையுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலி) அவர்கள் (அங்கேயே) சாய்ந்து படுத்துக்கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை முடித்ததும் அவர்களது அறையை நோக்கி நாங்கள் (இருவரும்) முந்திக்கொண்டு சென்று, அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்து, “நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத் துங்கள்” என்று சொன்னார்கள். பிறகு அறைக் குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந் தார்கள். நாங்கள் இருவரும் (“நீ பேசு, நீ பேசு’ என) ஒருவரையொருவர் பேசச் சொல்லிக் கொண்டிருந்தோம். பிறகு எங்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்களி லேயே மிகவும் ஈகை குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக்கொள் பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவே, இந்தத் தானதர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நீங்கள் நியமிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குச் சன்மானமாக) அவர்கள் பெற்றுக்கொள்வதை நாங்களும் பெற்றுக்கொள்வோம்” என்று கூறினார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்கள். இறுதியில் அவர்களிடம் நாங்களே பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலி) அவர்கள் திரைக்கு அப்பாலிருந்து பேச வேண்டாம் என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்” என்று கூறிவிட்டு, “(பனூ அசத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும் நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலி) அவர்கள் போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.) அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலி) அவர்களிடம், “இந்த இளைஞருக்கு (ஃபள்ல் பின் அப்பாஸுக்கு) உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே மஹ்மியா (ரலி) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம், (என்னைச் சுட்டிக்காட்டி), “இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மண முடித்து வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நவ்ஃபல் (ரலி) அவர்கள் எனக்கு(த் தம் முடைய மகளை) மணமுடித்து வைத்தார்கள். மேலும், மஹ்மியா (ரலி) அவர்களிடம் “இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக் கொடையாக (மஹ்ர்) கொடுங்கள்” என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் (அந்த) மஹ்ர் தொகை (எவ்வளவு என்பது) குறித்து என்னிடம் குறிப்பிடவில்லை” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 1945)

போருக்காக புறப்படுதல்

இந்த உம்மத்தில் இல்லாத தனிச்சிறப்புகளில் நபி (ஸல்) அவர்கள் போரின் ஆடையை தரித்து, போருக்கு போக வேண்டும் என்றால் போருக்கு செல்லாமல் இருக்கக்கூடாது. இந்த தனிச்சிறப்பில் மற்ற நபிமார்களுக்கும் உண்டு.

உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கüடம், “ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகüன் படையை எதிர்) கொள்ளலாமா? அல்லது (பகைவர்கüன் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெüயே புறப்பட்டுப் போகலாமா?” என்று ஆலோசனை கேட்க அவர்கள், “(ஊருக்கு) வெüயே புறப்பட்டுப் போகலாம்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்துகொண்டு (ஊருக்கு வெüயே செல்ல) உறுதிகொண்டு புறப்பட்ட போது, தோழர்கள் “ஊரிலேயே தங்கி விடுங்கள்” என்று (மாற்று யோசனை) சொன்னார்கள். ஆனால், உறுதி கொண்டு விட்ட பின்னால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள், “(போருக்குப் புறப்படத் தயாராகி) தமது கவச ஆடையை அணிந்து கொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும் அல்லாஹ் தீர்மானிக்கும் வரை அதைக் கீழே வைப்பது முறையாகாது” என்று சொன் னார்கள்.

(அஹ்மத்: 14787) , தாரமி-2065,

கண் சாடை செய்வது.

எந்த நபிக்கும் கண்களின் மூலம் துரோகம் செய்வது கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

(நஸாயீ: 4067)

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஆகுமானவை.

தொடர் நோன்பு.

தொடர் நோன்பு என்பது ஒரு நாள் இடை விடாமல் நோன்பு நோற்பதாகும். இந்த நோன்பை பொருத்த வரையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஆகுமாதாகும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள், “நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்!” என்று (மக்களிடம்) கூறியபோது, “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்” என்றோ “உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்” என்றோ கூறினார்கள்.

(புகாரி: 1961)

நான்குக்கும் மேற்பட்ட திருமணங்கள் புரிவது

இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களைத்தவிர வேறு எவருக்கும் நான்குக்கும் மேற்பட்ட திருமணங்களை முடிக்கக்கூடாது.
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

(அல்குர்ஆன்: 4:3)➚

கைலான் என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அருக்கு பத்து மனைவிகள் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் நீ அவர்களில் நான்கு நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள் என்றார்கள்.

(அஹ்மத்: 4609)

இவ்வசனத்தில் (33:50) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடுமின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் இறைவேதம் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் ஏற்றுக் கொள்ள எண்ணற்ற சான்றுகள் குர்ஆனில் இருந்தாலும் இந்த ஒரு விஷயம் மட்டும் முஸ்லி-மல்லாத மக்களுக்கு உறுத்தலாகவே அமைந்துள்ளது.
அதிகமான பெண்களுடன் வாழ்வதற்காக முஹம்மது நபி தமக்கு வசதியான இந்தச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டார் என்று சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிறப்பாக இன்னும் பல சட்டங்கள் உள்ளன. அவை யாவும் அவர்களுக்கு மட்டும் அதிகச் சிரமத்தைச் சுமத்தக் கூடியவையாக உள்ளன.
* ஸகாத் எனும் அரசுக் கருவூலத்திலிலி-ருந்து தாமும் தமது குடும்பத்தினரும் எதையும் பெறுவது ஹராம் என்று அவர்கள் பிரகடனம் செய்தது.
* உலகம் உள்ளளவும் தமது பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும் என்று அவர்கள் அறவித்தது.
* தமக்குச் சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமை கொண்டாடக் கூடாது என்று அறிவித்து அரசாங்கத்தில் சேர்த்து விட்டுச் சென்றது.
* தாமும் தமது பரம்பரையினரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்று சட்டம் போட்டது.
* மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையைக் கடமையாக்கிக் கொண்டது.
* இரவு பகல் 24 மணிநேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்தச் சிரமத்தை தாம் மட்டும் மேற்கொண்டது.
இப்படி பல விஷயங்களில் அவர்கள் தமக்கு மட்டும் சிறப்புக் சட்டமாக அறிவித்தவை சலுகைகளாக இருக்கவில்லை. சிரமத்தைத் தான் தம் மீது சுமத்திக் கொண்டார்கள்.
மேலும் தம்மை இறைவன் கண்டித்ததாக அவர்கள் அறிவித்த பல வசனங்கள் அவர்களின் கௌரவத்தைப் பாதிக்கக் கூடியவை என்றாலும் அதையும் மக்களிடம் சொன்னார்கள்.
திருமணத்திற்குக் கட்டுப்பாடு இல்லை என்ற இந்த ஒரு விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்கள் யாவும் அவர்களுக்கு சிரமம் தருபவையாகவுள்ளதைச் சிந்தித்தால் நபிகள் நாயகம் தாமாக இவ்வாறு உருவாக்கிக் கொண்டார்கள் என்று யாரும் கருத மாட்டார்கள்.
அவர்களின் முதல் திருமணம் 25ஆம் வயதில் நடந்தது. அதிலிலி-ருந்து 25 ஆண்டுகள் ஒரு மனைவியுடன் மட்டுமே வாழ்க்கை நடத்தினார்கள். காமத்திற்காக அவர்கள் திருமணம் செய்வதாக இருந்தால் இந்தப் பருவத்தில் தான் அதிகத் திருமணங்கள் செய்திருக்க வேண்டும். வயதான பிறகு வயதான பெண்களையே (ஆயிஷா(ர-லி) தவிர) அவர்கள் மணந்து கொண்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் இந்த தனிச்சிறப்பு ஏன்? போன்ற கேள்விகளுக்கு சகோதரர் பீ.ஜே அவர்கள் எழுதிய நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற புத்தகத்தை பார்வையிடவும்.

ஹரமில் போர் செய்யும் அதிகாரம்

அல்லாஹ் தஆலா மக்காவுக்கு என்னற்ற சிறப்புகளை வழங்கியிருக்கினறான். இந்த உலகத்தில் நிர்னயிக்கப்பட்ட கட்டடங்களில் இங்குள்ள பள்ளிவாசலும் ஒன்றாகும். இது மட்டுமில்லாமல் வானம் பூமி எப்போது படைக்கப்பட்டதோ அப்போதே இந்த பூமியை கன்னியப்படுத்திவிட்டான். இந்த இடத்தில் இரத்தத்தை ஓட்டுவதோ, போர் செய்வதோ கூடாது. இங்கு போர் செய்வதை யாருக்கும் வழங்கப்படாத நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் வழங்கியிருக்கின்றான்.
சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராகன மக்காவை நோக்கி ஒரு படைப்பிரிவுகளை அனுப்பியபோது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: எனது காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. நபியவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில், ஒருபகல் பொபது மட்டும்) இங்கு போரிட்டதனால் (அதை ஆதாரமாகக்கொண்டு) இதைப் பொதுஅனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்)தான் அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை” என்று சொல்லிவிடுங்கள். “எனக்குக் கூட (நேற்றைய) பகல்பொழுது மட்டுமே (இங்கு போர்புரிய) அனுமதியளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மைக்கு மீண்டு வந்துவிட்டது. (நாம் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குத் சொல்லிவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று கூறினார்.
“அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்?’ என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் ” “அபூஷுரைஹே! உம்மைவிட (இதைப் பற்றி) நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக (புனித நகரமான) மக்கா குற்றவாளிக்கும் மரணதண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடி வந்தவனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடி வந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது” என்று அம்ர் கூறினார்’ என்றேன்.

(புகாரி: 104)

நபி (ஸல்) அவர்களுக்கு கடமையானவை

நபி (ஸல்) அவர்களுக்கு இந்த உம்மத்தவர்களுக்கு இல்லாத தனிச்சிறப்புகளை மட்டும் கொடுக்கவில்லை. மாறாக இந்த உம்மத்துக்கு கடமையாகத சில கடமைகளையும் நபி (ஸல்) அவர்களுக்கு விதித்துள்ளான்.
இதற்கு காரணம் இந்த உம்மத்தை விட நபி (ஸல்) அவர்களுக்கு மறுமையிலும் தனிச்சிறப்புகளை வழங்கவேண்டும். சுவர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான்.
இதற்கு உதாரணமாக நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை சொல்லலாம்.
(முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக் கூடும்.

(அல்குர்ஆன்: 17:79)➚

இரவுத் தொழுகை உபரியானதுதான் என்றாலும் உமக்கு மட்டும் என்று வருவதினால் இது நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கடமை என்று விளங்குகின்றது. இது மட்டுமில்லாமல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வை நாம் பார்த்தால் இந்தக்கருத்தை வலியுறுத்துவதாக கானலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இரவுத்தொழுகை நோயின் காரணமாக விடுபட்டு விட்டால் பகலில் 12 ரக்அத்கள் தொழுவார்கள்.

(முஸ்லிம்: 1358)

இது போன்ற செய்திகள் இரவுத் தொழுகை நபி (ஸல்) அவர்களுக்கு கடமை என்று விளங்க முடிகின்றது.

இது போன்று நபி (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தனிச்சிறப்புகளை அறிஞர்கள் எழுதியுள்ளனர். அவைகளில் பெரும்பாலும் தனிச்சிறப்புகளை அறிவிப்பதாக இல்லை. இன்னும் அறிஞர்களால் கருத்து வேறுபாடு கொண்டவைகளாக இருக்கிறது. ஆகையால் இங்கே அவைகளை இங்கு பதிவு செய்யவில்லை.

நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மைகள்

சொல்லிலும் செயலிலும் பாதுகாப்பு.

இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்கென்று தனித்தன்மைகள் இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் வஹியில் தவறிழைக்கமாட்டார்கள். அதே போன்று செயல் அளவிலும் தவறு செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் உடனே அல்லாஹ் கண்டித்து விடுவான்.

நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
(அல்குர்ஆன்: 53:1-4)➚

இந்த தனித்தன்மையில் மற்ற நபிமார்களும் இனைகிறார்கள்.

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானா லும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர் களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்த வன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.

(அல்குர்ஆன்: 22:52)➚

இவ்வசனத்தில் (அல்குர்ஆன்: 22:52)➚ இறைத்தூதர்கள் ஓதியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது.
ஓதியதில் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் “உம்னிய்யத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் “உள்ளம்’ என்றும் “ஓதுதல்’ என்றும் இரண்டு பொருள் தரும் சொல்லாகும்.

சில மொழிபெயர்ப்பாளர்கள் இச் சொல்லுக்கு உள்ளம் என்று இந்த இடத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களது மொழி பெயர்ப்பின்படி இறைத் தூதர்களின் உள்ளங்களில் ஷைத்தான் தனது தீய கருத்துக்களைப் பதியச் செய்து விடுவான் என்ற கருத்து வரும்.

இவ்வாறு செய்யப்பட்ட மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தான் ஸல்மான் ருஷ்டி என்பவன் “சாத்தானின் வசனங்கள்’ என்ற நூலை எழுதினான். நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் ஷைத்தான் தனது கருத்துக்களைப் போட முடியும் என்று இவ்வசனம் கூறுவதாக அவன் வாதிட்டான்.
இவ்வாறு அவன் வாதிடுவதற்கு இவ்வசனத்திற்குத் தவறான பொருள் செய்த அறிஞர்கள் தாம் முதலிலில் பொறுப்பேற்க வேண்டும்.

இறைவன் தனது தூதுச் செய்தியைப் பாதுகாப்பதாகக் கூறும் பொழுது இறைத் தூதரின் உள்ளத்தில் ஷைத்தான் தான் விரும்புவதைப் போட முடியுமா? என்று சிந்தித்திருந்தால் இவ்வாறு பொருள் கொண்டிருக்க மாட்டார்கள்.
இறைத்தூதர்கள் தமக்கு அறிவிக்கப்படும் செய்திகளை மக்களுக்குக் கூறியவுடன் அது பற்றி பலவிதமான சந்தேகங்களையும், ஆட்சேபனைகளையும் மக்களிடம் ஷைத்தான் தோற்றுவிப்பான் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்.

நூல்: பீ.ஜே அவர்களின் தமிழ் தர்ஜமா விளக்கம் பகுதி எண் (294)

நபியவர்களின் மீது பொய் சொன்னால் நரகம்.

பொய் சொல்வது ஒரு மனிதனை நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் “வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 6094)

இதை விட மிகப்பெரிய பாவம் நபி (ஸல்) அவர்களின் மீது பொய் சொல்லுதலும், இட்டுக்கட்டுதலும் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்: மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார். இதை முஃகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 1291)

தனித்துவம் பெற்ற பார்வைகள்.

இந்த உம்மத்தில் பல சிறப்புகள் நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கின்றது. அதே வேளையில் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதை நிருபிக்க சில அற்புதங்களையும் நிகழ்த்துவான். அந்த அறுபுதங்களில் நாம் பார்க்க முடியாததை நபி (ஸல்) அவர்கள் பார்ப்பார்கள். நாம் கேட்க முடியாததை நபியவர்கள் கேட்பார்கள் என்பதாகும்.

ஆயிஷா (ர-) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கின்றார்” என்று கூறினார்கள். நான், ” “வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவர் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (அல்லாஹ் வின் தூதரே!) நான் பார்க்க முடியாததை யெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன்.
ஆயிஷா (ர-) அவர்கள் “நீங்கள்’ என்று நபி (ஸல்) அவர்களையே குறிப் பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.

(புகாரி: 3217)

நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நீங்கள் கேட்காதவற்றையும் நான் கேட்கிறேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதீ: 2312)

உங்களைப்பேன்று நானில்லை.

உபரியான வணக்கங்களின் மூலம் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அது நம்முடைய நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறது. அதன் மூலம் தொழுகையில் நாம் செய்த தவறுகளை நிவர்த்தி செய்கிறது.
உபரியான தொழுûக்களுக்கு சில ஒழுக்கங்கள் இருக்கின்றது.
உட்கார்ந்து தொழுதால் பாதி நன்மையும் நின்று தொழுதால் முழு நன்மையும் கிடைக்கும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதால் அவர்களுக்கு முழுமையான நன்மை கிடைத்து விடும்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு” என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் உட்கார்ந்து தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, நான் அவர்களது தலைமீது எனது கையை வைத்தேன். அப்போது அவர்கள், “அப்துல்லாஹ் பின் அம்ர்! உமக்கு என்ன (நேர்ந்தது)?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! “உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு’ எனத் தாங்கள் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது; ஆனால் தாங்களே உட்கார்ந்து தொழுதுகொண்டிருக்கிறீர்களே?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; ஆயினும் நான் உங்களில் ஒருவரைப் போன்றவன் அல்லன்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 1338)

நபியவர்களின் சொத்தில் யாரும் வாரிசாக முடியாது.

ஃபாத்திமாவுக்கு அபூபக்ர் (ர-) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவை யெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்’ என்று சொல்-யிருக்கிறார்கள்” என்று பதிலüத்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ர-) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ர-) அவர்களுடன் பேசா மலேயே இருந்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகüன் சொத்துகü-ருந்தும் மதீனாவில் இருந்த, அவர்கள் தருமமாக விட்டுச் சென்ற சொத்தி-ருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ர-) அவர்கüடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூபக்ர் (ர-) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களுடைய செயல்கüல் எதனை யாவது நான் விட்டு விட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சு கிறேன்” என்று சொன்னார்கள். (அபூபக்ர் (ர-) அவர்களுக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தருமமாக விட்டுச் சென்ற சொத்தை உமர் அவர்கள், அலீ அவர்களுக்கும் அப்பாஸ் (ர-) அவர் களுக்கும் (அதன் வருமானத்தி-ருந்து தம் பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும் படி) கொடுத்து விட்டார்கள். கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துகளை உமர் அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, “அவ்விரண் டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தருமமாக விட்டுச் சென்றவை. அவை நபி (ஸல்) அவர்களுடைய உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளாதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்) களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” என்று சொன்னார்கள்.

(புகாரி: 3093)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ü நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்கüன் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூ-யையும் தவிர, நான் விட்டுச் செல்வ தெல்லாம் தருமமேயாகும். இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 2776)

நபி (ஸல்) மனைவிமார்கள் முஃமின்களின் அன்னையர்.

நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக முஃமினான மற்ற பெண்களை விட நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு தனிச்சிறப்புகளையும், தனிச்சட்டங்களையும் வைத்திருக்கிறான்.
அந்த தனிச்சிறப்புகளில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் முஃமின்களுக்கு அன்னையர் என்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.

நம்பிக்கை கொண்டோரையும், ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர்.நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கிறது.

(அல்குர்ஆன்: 33:6)➚

நபி (ஸல்) கணவில் கண்டோர் நேரில் காண்பார்.

நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் நபி (ஸல்) அவர்களை கணவில் காண்பபவர்கள் நபி (ஸல்) அவர்களை நேரிலும் காண்பார்கள். இது நபி (ஸல்) அவர்களைத்தவிர வேறு எவருக்கும் இந்த உம்மத்தில் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதே போன்று நபி (ஸல்) அவர்களைப்போன்று ஷைத்தான் அவர்களின் உருவத்தில் வரவும் முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியüக்கமாட்டான். மேலும், இறை நம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்கüல் ஒன்றாகும்.இதை அனஸ் (ர-) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

(புகாரி: 6994)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முஹம்மத், அஹ்மத் என்ற) எனது இயற்பெயரை நீங்களும் சூட்டிக்கொள் ளுங்கள்; (அபுல்காசிம் என்ற எனது குறிப்புப் பெயரை உங்கள் குறிப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் எவர் என்னைக் கண்டாரோ அவர் என்னையே கண்டவரா வார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும் என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும். இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 110)

இந்தக்காலத்தில் யாரும் நபி (ஸல்) அவர்களை கணவில் காண முடியாது. கண்டாலும் நேரிடியாக பார்க்வும் முடியாது. இதை விளக்கவும் தெளிவாகவும் மாற்றார்களின் வாôத்திற்கு பதில் கொடுத்தும் சகோதரர் பீ.ஜே அவர்கள் கணவின் விளக்கம் என்ற புத்தகம் எழுதியுள்ளார்கள். கூடுதல் விளக்கத்திற்கு அந்த புத்தகத்தை பார்வையிடவும்.

நபி (ஸல்) அவர்கள் திட்டுவதும் நன்மையே.

பொதுவாக நபிமார்களின் பிரார்த்தனைகளும், அவர்களின் சபித்தலும் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடனே அது அங்கரிக்கப்படும். இதனால் பிரார்த்தனை செய்யப்பட்டவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய உம்மத்தில் எவருக்கும் இது ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்து விட்டார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் ஒரு மனிதரே. நான் வல்லமையும் மாண்பும் மிக்க என் இறைவனிடம் ஒரு நிபந் தனையை முன்வைத்துள்ளேன். (அது) நான் முஸ்லிம்களில் ஓர் அடியாரை ஏசியிருந்தால், அல்லது திட்டியிருந்தால், அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் மாற்றி விடுவாயாக (என்பதாகும்)” என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.

(முஸ்லிம்: 5072)

சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களுக்குரிய தனிச்சிறப்புகளை மட்டும் தனியாக தேர்ந்தெடுத்து புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். அவைகளில் பெரும்பான செய்திகள் பலவீனமானதாக இருக்கிறது. சில செய்திகள் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அவைகள் தனிச்சிறப்புகள் என்ற செய்திகளின் கீழ் இடம் பெறவில்லை. ஆகையால் அந்த செய்திகளை தள்ளிவிட்டு ஆதாரப்பூர்வமான, நேரடியான கருத்தை தரக்கூடிய செய்திகளை மட்டும் இங்கே வாசகர்களுக்கு பதிவு செய்கிறோம்.

எனவே இஸ்லாம் மார்க்கம் காட்டி தந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவோமாக! அல்லாஹ் அப்படிப்பட்ட நன்மக்களாய் நம்மை ஆக்கி அருள் புரிவனாக..!