ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம். அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும். இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும்.

நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே நமக்கு ஒன்று திரண்டு நிற்கும்.  ஏராளமான இடங்களில் இவ்வாறு ஏகத்துவத்திற்கு எதிராகக் களமிறங்கி இருக்கிறார்கள்.

இந்த எதிர்ப்புக்கு காரணம் என்ன? இதுபோன்ற நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்வது? இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினை என்ன? என்பது குறித்து சில கருத்துக்களை இக்கட்டுரை மூலம் காண்போம்.

ஊர் எதிர்ப்பும் பின்னணியும்

மார்க்கத்தைத் தூய முறையில் பின்பற்றும் போது, சில ஊர்களில் மக்கள் திரளாக வந்து எதிர்க்கிறார்கள். மார்க்க விளக்கக் கூட்டத்தைக் கூட நடத்தவிடாமல் தடுக்கிறார்கள். இப்படிக் கூட்டமாக திரண்டு வருபவர்களுக்கு பின்னணியில் சில நபர்கள் குள்ள நரிகளாக ஒளிந்து இருக்கிறார்கள். குறிப்பாக, மக்களை வைத்து ஆதாயம் அடைபவர்கள், பேருக்கும், புகழுக்கும் ஏங்குபவர்கள் இதுபோன்ற இடையூறுகளுக்குத் தூபம் போடுகிறார்கள்.

இன்றையச் சூழலில் மட்டுமல்ல, நபிமார்களின் காலம்தொட்டு இதுபோன்ற நபர்கள் இருந்துள் ளார்கள். சத்தியம் வென்றால், “அனைவரும் சமம் எனும் சித்தாந்தம் மேலோங்கும்; சுயநலனுக்காக மக்களை ஏமாற்ற இயலாது” என்பதால், இவர்கள் தான் முதல் எதிர்ப்பைக் கிளப்புகிறார்கள். காசு, பணம் இருப்பதாலும், சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் மக்கள் இருப்பதாலும் அதிகமாக ஆட்டம் போடுகிறார்கள்.

எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் “எதைக் கொடுத்து அனுப்பப் பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்” என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. “நாங்கள் அதிகமான பொருட் செல்வமும்  மக்கட் செல்வமும் பெற்றவர்கள். நாங்கள் தண்டிக்கப்படுவோர் அல்லர்” என்றும் அவர்கள் கூறினர். “என் இறைவன், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்கு கிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர்களில் அதிகமா னோர் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 34:35), 36)

ஊராரின் எதிர்ப்புக்கு காரணம்

தவ்ஹீது பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்த ஊர்மக்கள் ஏன் திரள்கிறார்கள் என்பதற்கும் திருக்குர்ஆன் பதில் தருகிறது. அசத்தியவாதிகள் முன்னோர்களின் பெயரைச் சொல்லிச் சொல்லியே தங்களின் வழிகெட்ட காரியங்கள் சரியென வாதிடுவார்கள்; தங்களின் தப்புகளை நியாயப் படுத்துவார்கள். இன்றும் தவ்ஹீதுக்கு எதிராகக் கோஷமிடும் ஆட்கள், இவ்வாறே வாதிடுவதையும் மற்றவர் களை மூளைச் சலவை செய்வதையும் பார்க்கிறோம்.

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் “எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்” என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர் களை எதில் கண்டீர்களோ அதை விட நேர் வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! “எதனுடன் நீங்கள் அனுப்பப் பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே” என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 43:23)

மூதாதையர்கள் மீது குருட்டுத் தனமான பாசமும் கண்மூடித்தனமான பக்தியும் வைத்திருக்கும் நபர்களை இவர்கள் பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே தான் இவர்களின் பேச்சினை நம்பிக் கொண்டு, “எங்களுடைய முன்னோர் களை மட்டம் தட்டுகிறீகள்; கேவலப் படுத்துகிறீர்கள், அவர்களின் மார்க்க வழிமுறைகளை வழிகேடு என்கிறீர் கள்; அவற்றைப் புறக்கணிக்கிறீர்கள்,” என்று பாமர மக்களும் ஒன்றும் புரியாமல் நம்மிடம் குமுறுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள்.

இவ்வாறே (நம்மை) மறுப் போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் மிகப் பெரிய குற்றவாளி களைச் சூழ்ச்சி செய்வோராக ஆக்கியுள்ளோம். அவர்கள் தமக்கெ திராகவே சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

(அல்குர்ஆன்: 6:123)

”இந்தத் தவ்ஹீத்காரர்களை வளர விட்டால் மற்றவர்கள் முன் நீங்கள் செல்லாக் காசாக ஆகிவிடுவீர்கள். அவர்கள் மேலோங்கி விடுவார்கள். ஊரை இரண்டாக ஆக்கிவிடுவார்கள். கடைசியில், உங்களை ஊரை விட்டும் துரத்தி விடுவார்கள்” என்று ஊளையிட்டும் உளறிக் கொட்டியும் பொது மக்களிடம் ஊர்வெறியைத் தூண்டுகிறார்கள்.

அழைப்புப் பணிக்கு எதிராக அடுத்தவர்களை உசுப்பேற்றி விடும் கயவர்கள் ஃபிர்அவ்னின் அடியாட்களைப் போன்றவர்கள். அன்று அவர்கள் செய்த அதே வேலையை இன்று இவர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள் என்பதைப் பின்வரும் வசனம் விளக்குகிறது.

“இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 7:109), 110)

ஊர் வெறியும் ஊர் நீக்கமும்

நாம் மட்டுமின்றி அனைவரும் மறுமையில் வெற்றி பெற வேண்டும் எனும் சிறந்த நோக்கத்தோடு செயல்படுகிறோம். பல்வேறு சிக்கல்கள் சிரமங்களுக்கு மத்தியில் சிறிதும் தளராமல், தயங்காமல் சத்தியத்தை முன்வைக்கிறோம். இதனை உரிய பதிலோடு எதிர்கொள்ள இயலாமல், பொறுத்துக் கொள்ளாமல், நம்மை ஊரிலிருந்து விரட்டுவதாக வெளியேற்றுவதாக மிரட்டுகிறார்கள். அல்லது ஊரை விட்டும் ஒதுக்கி வைப்பதாகப் பயமுறுத்துகிறார்கள்.

இவ்வாறு தான், காலந்தோறும் அசத்தியவாதிகள் சத்தியவாதிகளிடம் சிறு பிள்ளைத்தனமாக பூச்சாண்டி காட்டி வருகிறார்கள். இந்த ஊர் நீக்க மிரட்டல் என்பது இவர்களிடம் மார்க்கப் பற்று முனை மழுங்கிப் போய் விட்டதின் அடையாளம் என்பதே உண்மை.

“ஷுஐபே! உம்மையும், உம்மோடு நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்று வோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்” என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?” என்று கேட்டார்.

(அல்குர்ஆன்: 7:88)

முஹம்மது நபியவர்களை விடுத்து முன்னோர்களை, இமாம்களை மார்க்க வழிகாட்டியாக ஏற்று வாழ்பவர்கள், தவ்ஹீத்வாதிகளுக்கு வீடோ கடையோ வாடகைக்கு விட வேண்டாம் என்று அறிவிக்கிறார்கள். அவர்களைச் சார்ந்தவர்கள் இறந்தால் மையவாடியில் இடம் கொடுக்காதீர்கள் என்று ஊர் ஜமாஅத் மூலம் எச்சரிக்கிறார்கள்.

இதைக் கேட்டு ஏகத்துவச் சொந்தங்களுக்குச் தடுமாற்றம் வந்தது கிடையாது; இனிமேலும் வந்து விடக் கூடாது. மார்க்க வரம்புகளைக் கண்டு கொள்ளாமல் ஊரோடு ஒத்துப் போனால் மட்டுமே, நாமும் வசதி வாய்ப்போடு இருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது.

(ஏக இறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதிகள். பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் இது கெட்டது.

(அல்குர்ஆன்: 3:196), 197)

ஊரை விடவும் உண்மையே முக்கியம்

சுலைமான் நபி காலத்தில், ஸபா எனும் நாட்டினை ஒரு அரசி ஆட்சி செய்து வந்தாள். அவளும் மக்களும் சூரியனை வணங்குகிறார்கள் எனும் செய்தி “ஹுத் ஹுத்’ எனும் பறவை மூலம் சுலைமான் நபிக்குத் தெரிய வந்தது.

அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழுமாறும் தூதராகிய தமக்குக் கட்டுப்படுமாறும் அரசிக்கு சுலைமான் நபி கடிதம் அனுப்பினார்கள். அந்த அரசி மக்களிடம் ஆலோசனை செய்கிறாள். நம்மிடம் வலிமை இருக்கிறது என்று மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனாலும் அரசிக்குத் தயக்கம். இந்தக் கடிதம் எழுதியது, நம்மிடம் பெரும் செல்வத்தைப் பெறுவதற்காகவா அல்லது வேறு எதற்காக என்று அறிந்து கொள்ள அன்பளிப்பை அனுப்பி வைக்கிறாள். அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சி இதோ…

ஸுலைமானிடம் (தூதுவர்) வந்த போது “செல்வத்தால் எனக்கு உதவுகிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை விட எனக்கு வழங்கியது சிறந்தது. மாறாக உங்கள் அன்பளிப்பில் நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்!” என்றார். “அவர்களிடம் திரும்பிச் செல்வீராக! அவர்கள் எதிர்க்க முடியாத படைகளுடன் அவர்களிடம் வருவோம். சிறுமைப்பட்டு, இழிந்தோராக அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவோம்” (என்றும் கூறினார்).

“பிரமுகர்களே! அவர்கள் கட்டுப் பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று (ஸுலைமான்) கேட்டார். “உங்கள் இடத்திருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வமையுள்ளவன்” என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.

தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார்.

யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன். “அவளது சிம்மாசனத்தை அடை யாளம் தெரியாமல் மாற்றுங்கள்! அவள் கண்டுபிடிக்கிறாளா? கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறாளா எனப் பார்ப்போம்” என்றார். அவள் வந்த போது “உனது சிம்மாசனம் இப்படித் தான் இருக்குமா?” என்று கேட்கப்பட்டது. “அது போல் தான் இருக்கிறது” என்று அவள் கூறினாள். “இவளுக்கு முன்பே நாங்கள் அறிவு வழங்கப்பட்டுள்ளோம். நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம்” (என்று ஸுலைமான் கூறினார்).

அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்தது அவளைத் தடுத்தது. அவள் (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்தாள். “இம்மாளிகையில் நுழைவாயாக!” என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். “அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை” என்று அவள் கூறினாள். “நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப் பட்டு விட்டேன்” என்று அவள் கூறினாள்.

(அல்குர்ஆன்: 27:22-44)

அல்லாஹ்வின் ஆற்றலைப் பற்றி அறிந்ததும் இஸ்லாத்தை தழுவிய அரசியிடம் நமக்குப் படிப்பினை இருக்கிறது. ஊர் மக்களின் கருத்துக்கும் நடைமுறைக்கும் மாற்றமாக சத்தியக் கருத்துகள் இருந்தாலும் அவற்றை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். மார்க்கத்திற்கே முக்கியத்தும் தர வேண்டும். இந்தக் குணம் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, ஆள்பவர்கள், ஜமாஅத் தலைவர்கள், ஊர்ப் பெரியவர்கள் போன்றவர் களுக்கும் அவசியம் வேண்டும்.

மார்க்கத்தை மறக்கடிக்கும் ஊர்ப்பற்று

நாம் வாழும் தெரு, ஊர், நாடு போன்றவற்றின் மீது பற்று வைப்பது குற்றம் இல்லை. அதன் மீது அக்கறை கொண்டு நலப்பணிகள் செய்வதும், அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதும் நல்லதுதான். அதேசமயம், அந்தப் பாசமும் பற்றும் மார்க்க வரம்புகளை மீறும் வகையில் இருந்துவிடக் கூடாது.

ஏகத்துவத்தை எதிர்ப்பவர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருப் பவர்கள் உட்பட அனைவரும் இதனை நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விட எதுவும் முதன்மை நேசமாக இருப்பது கூடாது. இங்கு, எதுவும் என்று குறிப்பிடுவதில் ஊரும் உள்ளடங்கும் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத் திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக் காகவே நேசிப்பது. 3.நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 16)

நம்முடைய ஊர் நிகழ்ச்சியில் நாம் பங்கெடுக்காமல், பங்களிப்பு கொடுக் காமல் இருக்கலாமா? என்று நினைத்துக் கொண்டு, மார்க்கத்திற்கு முரணான காரியங்களை ஆமோதிக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்புத் தருகிறார்கள். இனியாவது, அவற்றை விட்டும் விலகி இருந்து, ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். ஒரு ஊரை வெறுப் பதும் நேசிப்பதும் மார்க்கத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணரட்டும்.

நாம் பிறந்த ஊராக இருப்பினும், முஃமினாக வாழ விடாமல் அடக்கி ஒடுக்கும் நிலை இருக்கலாம். முஸ்லிமாக வாழ முடியாவிட்டாலும் சரி, சொந்த ஊரில் தான் இருப்பேன் என்று வறட்டுப் பிடிவாதம் கொள்வது சரியல்ல. இதனை ஹிஜ்ரத் தொடர்பான செய்திகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது…..

…..நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போன்று அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) “ஸாஉ‘, “முத்‘து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பாக்கியம் புரிவாயாக!

இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை “ஜுஹ்ஃபா‘ எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!” என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய்நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) “புத்ஹான்‘ எனும் ஓடையில்  மாசடைந்த தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 1889)

ஊர் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு

நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்பவரைக் கைது செய்து வந்தார்கள். பள்ளிவாசலின் தூணில் அவரைக் கட்டிப் போட்டார்கள். மூன்று நாளுக்குப் பிறகு அவர் நபிகளாரால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தைப் பாருங்கள்.

ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன்.

மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்’ என்றும் நான் உறுதி கூறுகிறேன்’’ என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை.

ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்

க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்’’ என்று சொல்லிவிட்டு, “மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதி அளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்ற போது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறி விட்டாயா?’’ என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறி விட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி-4372

”நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை எனது நாடான யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட மக்காவாசிகளான உங்களுக்கு வராது” என்ற வார்த்தையை உற்றுக் கவனியுங்கள்.

இந்த உறுதி நம்மிடம் இருக்கிறதா? ஊர் ஜமாஅத்தாக இருந்தாலும் மார்க்கத்திற்குப் புறம்பான செயல்களுக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்ல நிறைய பேருக்கு தைரியம் இல்லை.

என்னதான் இருந்தாலும் ஊர் ஜமாஅத்தை விட்டும் விலகி விடக்கூடாது என்று கெட்டியாக ஒட்டிக் கிடக்கிறார்கள். இணைவைப்பு, பித்அத் குறித்து அறிந்திருந்தும் ஊர்ப் பற்று என்ற பெயரில் கந்தூரி விழா, மவ்லூது, மீலாது போன்றவற்றில் கலந்து கொள்கிறார்கள்.

தடம்புரள வைக்கும் ஊர்ப்பற்று

ஊர்களை மையமாக வைத்துப் பெரும் சண்டைகள் நடக்கின்றன. மூடநம்பிக்கைகள், பெரும்பாவங்கள் குறித்துப் பிரச்சாரம் செய்தால், கருத்துச் சொன்னால் வெளியூர்காரன் பேசக் கூடாது என்கிறார்கள். உள்ளூர்க்காரர்கள் அடித்துக் கொள்வோம், சேர்ந்துக் கொள்வோம்; நீங்கள் தலையிடக் கூடாது என்கிறார்கள்.

எது சரியானது என்பதைக் காட்டிலும், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதையே கவனிக்கிறார்கள். இப்படி மதீனாவாசிகள் கேள்வி கேட்டிருந்தால் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்திருக்குமா? என்று சிந்தித்துப் பாருங்கள். நபிகளாரிடம் பயிற்சி பெற்ற நபித் தோழர்களையே ஊர் நினைப்பு தடுமாற வைத்துள்ளது.

நபியவர்கள் இறந்துபோன தருணம், அவர்கள் இறக்கவே இல்லை எனும் கருத்தில் சிலர் இருந்தனர். அப்போது அங்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆனில் இருக்கும் 39:30 மற்றும் 3:144 ஆகிய இரு வசனங்களை ஓதிக்காட்டி. நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைப் புரிய வைத்தார்கள். அதன் பிறகு நடந்த நிகழ்வைக் காண்போம்.

…உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டை அடைக்க) விம்மி அழுதார்கள். அன்சாரிகள் (தமது) “பனூ சாஇதா’ சமுதாயக் கூடத்தில் ஒன்றுகூடி (தம் தலைவர்) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம், “ “எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்‘ என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)’’ என்று பேசிக்கொண்டார்கள்.

அப்போது அபூபக்ர், உமர் பின் கத்தாப், அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர் (ரலி) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன்.

அபூபக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன்’’ என்று கூறி வந்தார்கள். பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், “(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாக இருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர் களாக இருங்கள்’’ என்று சொன்னார்கள்.

உடனே, (அன்சாரியான) ஹுபாப் பின் முன்திர் (ரலி) அவர்கள், “இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்கள் இடையேயிருந்து ஒரு தலைவரும் உங்கள் இடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்)” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “இல்லை; நாங்களே தலைவர்களாக இருப்போம். நீங்கள் அமைச்சர்களாக இருங்கள்.

ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும் ஆவர். ஆகவே, உமர் பின் கத்தாப், அல்லது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்’’ என்று சொன்னார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “இல்லை; நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்’’ என்று சொல்லிவிட்டு, அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : புஹாரி-3667, 3668

மக்காவைச் சேர்ந்த முஹாஜிர்களுக்கு ஒரு தலைமை, மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளுக்கு வெறொரு தலைமை என்று இந்தச் சமூகம் பிரிந்து சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டது. அவர்கள் சுதாரித்துக் கொண்டதால் நிலைமை சீரானது. யோசித்துப் பாருங்கள்! இதற்குக் காரணம், நம் ஊர்; நம் ஊர்வாசி; நமக்கான அரசு என்று சிலர் யோசித்ததின் விளைவு என்பதை மறுக்க முடியுமா?

நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டுமே தவிர, தவறு செய்தவர் நமது ஊரைச் சார்ந்தவர் என்பதால், அவருக்குத் துணைபோகக் கூடாது. ஊர் மோகம் கொண்டு நிதானத்தையும், நியாயத்தையும் இழந்துவிடக் கூடாது. அது நம்மைத் தடம்புரளச் செய்துவிடும்; வழிகெடுத்து விடும்.

ஊர் வழக்கத்தை ஒழித்த இஸ்லாம்

ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் பல அராஜகங்கள் நடக்கின்றன. இன்றும் பிறமத மக்கள் வாழும் ஊர்களில் தாழ்ந்த சாதி மக்களுக்கென ஊரில் ஒரு பகுதியை ஒதுக்கி இருப்பார்கள். ஊரைப் பிரித்து வைத்திருப்பார்கள். இவர்கள் மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேற முடியாது.

இது போன்ற நடவடிக்கை மக்கத்து முஷ்ரிக்குகளிடம் வேறு வடிவில் இருந்தது. ஹஜ்ஜின் போது மக்கள் அனைவரும் ஒன்பதாம் நாள் அன்று அரஃபா திடலில் தங்குவது வழக்கம். இதற்கு மாறாக, உயந்த குலம் என்று சொல்லப்பட்ட குறைஷிகள் மட்டும் முஸ்தலிபா எனும் இடத்தில் தங்குவார்கள். காரணம், முஸ்தலிபா என்பது கஅபாவின் எல்லைக்கு உள்ளேயும், அரஃபா என்பது அதற்கு வெளியேயும் அமைந்திருக்கும். இது ஒதுக்கப்பட்ட மக்களுக்கான இடமாகக் கருதப்பட்டது.

இந்த ஊர் வழக்கத்தை இஸ்லாம் உடைத்து எறிந்தது. ஹஜ் கிரியைகள் செய்யும் அனைவரும் ஒன்பதாம் நாள் “அரஃபா’ திடலில் இருக்க வேண்டும் என்று 2:199 வசனத்தின் மூலம் இஸ்லாம் பிரகடனம் செய்தது. சமத்துவத்தை நிலைநாட்டியது.

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும், அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் – புனித எல்லையை விட்டு வெஜயேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) “உறுதிமிக்கவர்கள்’ எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கி வந்தார்கள்.

இஸ்லாம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் “மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்’’ எனும் (2:199ஆவது) இறை வசனமாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி-4520

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! ஊர் வழக்கம், ஊர்க் கட்டுப்பாடு என்ற தோற்றத்தில் மார்க்க நெறிமுறைகளைத் தகர்க்கும் வகையில் எந்தவொரு செயல் இருப்பினும் அதற்குக் கட்டுப்படாதீர்கள். அவற்றை உதைத்துத் தள்ளுங்கள். அந்தச் சட்டங்களுக்கு ஒருபோதும் உடந்தையாகி விடாதீர்கள்.

ஊரின் எதிர்ப்பு உறுதியைத் தரட்டும்

சொந்த ஊரிலே மார்க்கப்படி தைரியாமாகச் செயல்படும் சிலர், வெளியூருக்குச் சென்றால் தங்கள் வழிபாட்டு முறையையே மாற்றிக் கொள்கிறார்கள். இதுபோன்று, உள்ளூரில் கொள்கையை மறைத்து கமுக்கமாக இருப்பவர்கள், வெளியூரில் மட்டும் ஏகத்துவவாதியாக அறிவித்துக் கொண்டு வீரியத்துடன் ஈடுபடுகிறார்கள்.

இப்படி நம்முடைய மார்க்க கருத்துக்களை ஊருக்குத் தோதுவாக திரிக்கவோ, வளைக்கவோ கூடாது. ஊருக்கு ஏற்ப வேடம்போடக் கூடாது. ஏகத்துவமே என் வழிமுறை என்று எங்கும் பகிரங்கப்படுத்தத் தயங்கும் நபர்கள் பின்வரும் செய்திகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அபூதர் (அல்கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது, மக்காவிற்கு வந்து நபிகளாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதையடுத்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் உங்கள் “கிஃபார்‘ குலத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்துசேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்” என்று சொன்னார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன் மீது சத்தியமாக! நான் இந்தச் செய்தியை (மக்கா இறைமறுப்பாளர்களான) இவர்களிடையேயும் உரக்கச் சொல்வேன்” என்று சொல்விட்டு, (கஅபா) பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்.

உடனே அங்கிருந்த (குறைஷி) மக்கள், கொதித்தெழுந்து, அவரை அடித்துக் கீழே சாய்த்தனர். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! இவர் “கிஃபார்‘ குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (கிஃபார் குலத்தார் வசிக்கும்) ஷாம் (சிரியா) நாட்டுப் பாதையில்தான் உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்களைக் காப்பாற்றினார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அதே போன்று (உரத்த குரலில் உறுதிமொழி) சொல்ல, அவர் மீது பாய்ந்து (குறைஷியர்) தாக்கினர். (அன்றும்) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்கள் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல்) அவரைக் காப்பாற்றினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்லிம்: 3522, 4879)

அல்லாஹ்வின் அனுமதியோடு நபியவர்கள் தமது தஃவா பணியை இரகசியமாகச் செய்து வந்த போது, நம்பிக்கையை மறைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட போது இந்தச் சம்பவம் நடந்தது. ஆனால், இன்று ஊரிலே சகல உரிமையையும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் நிலையில் இந்த உறுதி நம்மிடம் இருக்கிறதா? மார்க்கப் பாதையை விட்டு சறுகிக் கிடக்கும் ஊர் ஜமாஅத்திற்கு எதிராக வாய் திறப்பதற்கு எத்தனை பேருக்குத் துணிவு இருக்கிறது? இதே கேள்வியும் படிப்பினையும் கீழிருக்கும் செய்தியிலும் இருக்கிறது.

மக்காவில் முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அபிசீனியாவை நோக்கி, நாடு துறந்து சென்றார்கள். யமன் செல்லும் வழியில் “பர்குல் கிமாத்’ என்னும் இடத்தை அடைந்த போது இப்னு தஃகினா என்பவர், ஆபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். அவர்களின் நற்காரியங்களைக் குறிப்பிட்டு ஊர் திரும்புமாறு கேட்டுக் கொண்டார். அபூபக்ர் (ரலி) அவர்களுடன் இப்னு தஃகினாவும் ஊர் திரும்பினார்.

அவர் குறைஷிகளைச் சந்தித்து அபூபக்ர் அவர்களின் பண்புகளை நினைவுடுத்திவிட்டு அவருக்கு அடைக்கலம் அளிப்பதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியைப் படியுங்கள்

(அபூபக்ர் அவர்களுக்கு அளித்த) இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை குறைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, “அபூபக்ர், தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ, இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது.

ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (அவரது வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்” என்று சொன்னார்கள். அ(வர்கள் கூறிய)தை இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். அதன்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வணங்கியும், தமது தொழுகையை பகிரங்கப் படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணை வைப்பவர்களின் மனைவியரும் மக்களும் அபூபக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களை கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள்.

(அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களது இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது. அதனால் அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆளப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார்.

அப்போது அவர்கள், “அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறி விட்டு தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுது கொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார்.

நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் அவரது இறைவனை தமது இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள்.

ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை” என்று கூறினர்.

இப்னு தஃகினா அபூபக்ர் அவர்களிடம் வந்து, “நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும்.

ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்து கொண்ட ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்ப மாட்டேன் ”என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். வல்லவனும் கண்ணிய மிக்கவனுமான அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திப்படுகிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி-3905

ஊரின் அழிவை அஞ்சுவோம்

சில மக்கள், ஊரில் அதிகமான பேர் இருக்கும் அணியிலே தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் கொள்கைக் கோட்பாடு எப்படி இருக்கிறது என கொஞ்சமும் சிந்திப்பது இல்லை. மார்க்கத்தைத் தூக்கியெறியும் விரோதப் போக்கு கொண்டவர்களுடன் சேர்ந்து இயங்குகிறார்கள். ஏகத்துவத்தை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார்கள்.

இவர்கள் எந்த ஊருக்காக உண்மையை உதறித் தள்ளுகிறார்களோ அது அழியக் கூடியது; அற்பமானது என்பதை உணரட்டும். அல்லாஹ் எத்தனையோ ஊர்களை அழித்திருக்கிறான். இது குறித்த நிறைய வசனங்கள் திருமறையில் இருக்கின்றன. அவற்றைப் படித்த பிறகாவது உன்னதமான தீனை விடவும் ஊரே முக்கியமென தப்புக் கணக்குப் போடுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.

உங்களைச் சுற்றி பல ஊர்களை அழித்துள்ளோம். இவர்கள் திருந்துவதற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

(அல்குர்ஆன்: 46:27)

(அழிக்கப்பட்ட) அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

(அல்குர்ஆன்: 7:94-96)

அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா? அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது முற்பகல் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

(அல்குர்ஆன்: 7:97-99)

ஊர் மீதான பாசமோ பயமோ ஒருபோதும் நமது மார்க்கப்பற்றை மிகைத்து விடக் கூடாது. அல்லாஹ்வுக்கு அஞ்சி அழகிய முறையில் மார்க்கத்தைப் பின்பற்றுவோம். ஊருக்கும் உலகத்திற்கும் ஏற்ப கொள்கையில் சமரசம் செய்யாமல், மார்க்க ஆதாரங்களுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்வோம்.

அல்லாஹ்வை மட்டும் வணங்குவோம்; முஹம்மது நபியை மட்டும் பின்பற்றுவோம். மரணிக்கும் வரை தவ்ஹீத் வழியிலே பயணத்தைத் தொடர்வோம். அல்லாஹ்வின் அருளும் உதவியும் நிச்சயம் கிடைக்கும். ஊராரின் சூழ்ச்சிகளும் இடைஞ்சல்களும் தூள்தூளாக உடைந்து போய்விடும். அசத்தியம் அழிந்து சத்தியம் வெல்லும். உலக வாழ்வில் மட்டுமல்ல! மறுமையிலும் வெற்றிபெற இறைவன் நமக்கு உதவிபுரிவானாக!