Category: கொள்கை

b106

பித்அத்கள் (நூதன பழக்கங்கள்)

பித்அத்கள் (நூதன பழக்கங்கள்) மார்க்கச் சட்டத்தின் உரிமையாளன் அல்லாஹ் ஒருவனே! أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنْ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ(21) سورة الشورى அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையேடி முவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. (அல்குர்ஆன்: 42:21)➚ وَلَا تَقُولُوا […]

சத்தியத்தை சொல்லும் முறைகள்

முன்னுரை அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்குதல் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக் கோட்பாடாகும். இந்த சத்தியக் கொள்கையை மக்களிடையே எடுத்துரைப்பதற்காக எண்ணற்ற இறைத்தூதர்களை இறைவன் அனுப்பினான். இறைவனால் அனுப்பபட்ட எல்லா இறைத்தூதர்களும் இந்தக் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ […]

இஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்

அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர். அவைகள்: 1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர். 2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது […]

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அறிவுரைகள்

முன்னுரை ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு பிறந்த, அப்துல் காதிர் ஜீலானி என்ற அறிஞரின் பெயரால் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்களை இறைவன் அளவுக்கு உயர்த்தியும் அவர்களிடம் எதையும் கேட்கலாம் என்றும் அவர்கள் நம் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றும் பல ஆதாரமற்ற கதைகளை முஸ்லிம்களுக்கு மத்தியில் உலாவரச் செய்துள்ளனர். ஆனால் அந்த அறிஞர் இவர்களின் இந்த செயலுக்கு முற்றிலும் மாற்றமாக, ஓரிறைக் கொள்கை போதித்தவராகவும் திருக்குர்ஆனையும் நபிவழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று […]

வஹி என்னும் இறைச் செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும்

முன்னுரை வஹி என்னும் இறைச் செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும். இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்குச் சொந்தமான மார்க்கமாகும். அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (அல்குர்ஆன்: 3:9)➚ وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏ இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (அல்குர்ஆன்: 3:85)➚ இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதின் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை […]

இறந்தோரை அவுலியா (இறைநேசர்) என நாம் தீர்மானிக்க இயலுமா?

முன்னுரை اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ‏ الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ‏ لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ؕ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ‌ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُؕ‏ கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் […]

மீலாதும் மவ்லிதும்

மவ்லித் என்பதின் பொருள் என்ன? மவ்லிது எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8) ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கேடு கெட்ட கவிதைகளுக்கு மவ்லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்? […]

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

முன்னுரை திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று கிடையாது. சில நேரங்களில் நபியவர்கள் இறைவனின் அனுமதியில்லாமல் சில வார்த்தைகளைக் கூறிய காரணத்தினால் அவர்கள் இறைவனால் கடுமையாகப் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். இறைத்தூதராக இருந்தாலும் இறைமார்க்கத்தில் அவர் தன்னுடைய சுயக்கருத்தினை கூற முடியாது என்பதை நாம் தனியாக விளக்கியுள்ளோம். […]

முன்னோர்களை, பெருங் கூட்டத்தை பின்பற்றலாமா?

முன்னுரை இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனையும் நபிவழியையும் விட்டுவிட்டு முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அல்லது பெரும்பான்மை மக்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காகவோ அவற்றை பின்பற்றுபவனுக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவான அறிவுரையை கூறுகிறது. وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـًٔـا وَّلَا يَهْتَدُوْنَ‏ அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் ”எங்கள் முன்னோர்களை எதில் […]

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதின் அவசியம்

முன்னுரை இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்கு பலன்தரக்கூடியது என்று வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான். فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ […]

இவர்கள் தான் காதியானி மதத்தினர்!

முன்னுரை தன்னை ஒரு நபி என வாதிட்ட மிர்சா குலாமையும், காதியானி மதத்தினரைப் பற்றியும் இந்த உரையிலே தோலுரிக்க இருக்கிறோம். مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 33:40) وَإِنَّهُ سَيَكُونُ فِي […]

இணைவைப்பவர்களுக்கு மார்க்கத்தின் மதிப்பு

முன்னுரை இணைவைப்பதின் பேராபத்தையும், தவ்ஹீதின் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணைவைப்பவர்களை மார்க்கம் எவ்வாறு மதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதின் மூலம் உணர்ந்து கொள்ள இயலும். பின்வரும் வசனத்தில் இணைகற்பிப்பவர்கள் அசுத்தமானவர்கள் என்று இறைவன் கூறுகிறான். يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَـرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا‌ ۚ وَ اِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ‌ ؕ اِنَّ اللّٰهَ […]

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இறைவனின் அருள் மழையின் காரணமாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இறைவனுக்கு இணை வைப்பதன் தீமைகளைப் பற்றி இந்த உரையிலே பார்க்க இருக்கிறோம்! இறைவனின் கட்டளை! وَاعْبُدُوا اللّٰهَ […]

தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி

முன்னுரை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் பித்அத்களை ஒழித்து, மார்க்க அடிப்படையில் சுன்னத்தை பேணும் மக்களை உருவாக்கி வருகிற ஒரு அமைப்பு. இதில் உள்ள தலைவர்களுக்கு அரசியல் ஆதாயம், நோக்கம் கிடையாது, பணம் எங்களது நோக்கம் கிடையாது. இறைவன் அருளால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சில மாற்றங்களை மாத்திரம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஸஹர் பாங்கு அறிமுகம் 621- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ : حَدَّثَنَا زُهَيْرٌ […]

ஏகத்துவமும் எதிர்ப்புகளும்

முன்னுரை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை இறைத்தூதரர்கள் செய்தார்கள். இந்த பணியை செய்த காரணத்தினால் ஏராளமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உட்படுத்தப்பட்டனர். நபி மூஸா (அலை) ஏகத்துவக் கொள்கையை மக்களிடம் சொன்ன இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களும் ஒருவர். அவர்கள்தான் இறைத்தூதர் என்பதற்கு பிர்அவ்னிடமும் அக்கால மக்களிடம் இறைவன் கொடுத்த அற்புதத்தை எடுத்துரைத்தார்கள். وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏ اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى […]

மவ்லிதும் ஷஃபாஅத்தும்

முன்னுரை மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் ஷஃபாஅத் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இந்த மவ்லிது ஓதுவதற்காக காசு பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தின் முக்கியக் கடமையான ஜகாத்தை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய பொருளாதாரம் என்ற நீர்வளத்தை மவ்லிது என்ற வயல்களை நோக்கிப் பாய்ச்சுகின்றனர். இதற்கென்று தனி மரியாதைகளையும் மதிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இத்தகைய மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது. கடைந்தெடுக்கப்பட்ட பித்அத் ஆகும். இன்று […]

ஸலவாத்துன்னாரிய்யா நரகத்து ஸலவாத்து

முன்னுரை ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான். இதனை 4444 […]

சாலை ஆக்கிரமிப்பும் ஷரீஅத் ஆக்கிரமிப்பும்

முன்னுரை போக்குவரத்து சாலைகளிலும், பொது இடங்களிலும், அரசுக்குச் சொந்தமான இடங்களிலும் தனியார்களால் நடத்தப்பட்டிருக்கும் ஆக்கிரப்புகளைத் தயவு தாட்சண்யமின்றி அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை சமீபத்தில் ஆணை பிறப்பித்ததை யடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். வானளாவிய வணிகக் கூடங்களாக இருந்தாலும், வழிபாட்டுத் தலங்களாக இருந்தாலும் அவை ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்தால் இராட்சதக் கருவிகள் மூலம் உடைக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பிறகு தான் அந்த இடங்களின் உண்மையான தோற்றம் […]

கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் (தர்ஹா கூட்டம்)

முன்னுரை وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன்: 51:56) அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம். உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஷைத்தானிய அடிச்சுவடுகளைச் சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி மதத்தினரால் சமாதி வழிபாடு, தாயத்து, தகடுகள் போன்ற எண்ணற்ற இணை கற்பிக்கின்ற […]

கட்டுப்படுவோம்! முழுமையாக பின்பற்றுவோம்!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அதிகமான முஸ்லிம்கள், அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டதற்கு மாற்றமாக இருக்கிற அநேகமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். காரணம், அவர்கள் அழகிய மார்க்கத்தின் அடிப்படையை அறியாமல் இருப்பதுதான். அதேசமயம், தவறிழைக்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் மார்க்கத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள்’ என்று பொதுவாக கருத்தைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கி சென்றுவிடமுடியாது. காரணம், கட்டுக்கோப்பான மார்க்கத்தின் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்திருந்தும் அதன் கட்டளைகளுக்குக் கட்டுப்படாமல் வாழ்கின்ற முஸ்லிம்களை கண்கூடாகக் காண்கிறோம். மார்க்கத்திலே மொழியப்பட்டுள்ள முக்கியமான விஷயங்கள் […]

மெஞ்ஞானமும் பொய் ஞானமும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! உலகத்தில் மனிதன், மனிதனைக் கடவுளாக்குவதற்குப் பல அடிப்படை விஷயங்கள் காரணமாக அமைகின்றன. அவற்றில் ஒன்று புரோகிதம், இடைத்தரகு! அல்லாஹ்வை அடைவதற்கு ஓர் இடைத் தரகர் வேண்டும்; புரோகிதர் வேண்டும் என்ற நம்பிக்கை இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து மதங்களிலும் இருக்கின்றது. இதை உலகத்தில் உடைத்தெறிந்தது இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான். 405- حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ أَنَّ […]

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே! நாம் வாழும் இந்தியாவில் பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் இருந்தாலும், சில மக்களை தாழ்ந்த சாதி என்று ஒதுக்கி அவர்களை குறிப்பிட்ட ஒரு சமுதாயம் அடக்கி ஆளுகிறது. அவர்களை கொடுமைப் படுத்துகிறது. அவர்கள் தினம் தினம் தாக்கப்படுகிறார்கள். இது ஏதோ, ஒன்றோ இரண்டோ அல்ல. இந்தியாவில் தலித் மக்கள் தாக்கப் படுவதென்பது தனி நிகழ்வல்ல! இது அன்றாடம் நடைபெறும் அநியாயமும் அக்கிரமும் ஆகும். 1968ம் ஆண்டு கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் […]

ஊதி அணைக்க முடியாத ஜோதி

ஊதி அணைக்க முடியாத ஜோதி எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இறைவனின் அருள் மழையின் காரணமாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப் ஆண்டவர் என்று அழைக்கப் படும் போப் 16ஆம் பெனடிக்ட் தனது சொந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றிருந்த போது பவேரியா […]

இறையில்லங்களும் இணையில்லங்களும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. இஸ்லாமும் பிறமதங்களும் இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப் படுகின்றன. இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு பள்ளிவாசலில் கூட இன்னிசைப் பாட்டுகள் இடம் பெறுவதில்லை. இந்த அடிப்படையில் தான் தொழுகைக்கு அழைக்கப்படும் இஸ்லாமிய அழைப்பு […]

இஸ்லாத்தின் பார்வையில் எழுந்து நிற்பது!

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! சுயமரியாதை மார்க்கம் இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம். காரணம் அது அனைத்துலகையும் படைத்து பரிபாலிக்கும் ரப்புல் ஆலமீனாகிய இறைவன் அல்லாஹ் அருளிய அற்புதமான சுய மரியாதையைப் போதிக்கின்ற மார்க்கம். அது மனிதனுக்குத் தேவையான எல்லாத் துறைகளிலும் வழி காட்டுவதுடன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது […]

கொள்கை மட்டும் போதாது தொழுகையும் வேண்டும்!

கொள்கை மட்டும் போதாது எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! இறைவனுடைய மாபெரும் கருணையால் மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய ஏகத்துவக் கொள்கையை ஏற்கும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இந்த அடிப்படையில் அல்லாஹ் உலகத்தில் வாழும் அனைவரையும் விட நம்மை மேம்படுத்தி இருக்கிறான். அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். ஆனால் “இறைவனுக்கு இணை வைக்காமல் இருந்தால் மட்டும் போதும் மறுஉலக வாழ்வில் வெற்றியடைந்து விடலாம்” என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பெரும்பாலும் நல்லமல்களை […]

முன்னோர்களை பின்பற்றுவது நேர்வழியா?

முன்னோர்களை பின்பற்றுதல் மனிதனை நேர்வழியிலிருந்து அப்புறப்படுத்துவதிலும், மிகப் பெரிய அறிவாளியைக் கூட அறிவீனனாக ஆக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது, முன்னோர்கள் மீது கொள்ளும் குருட்டு பக்தியாகும். நமது வாழ்க்கையில் மிகப் பெரிய விஞ்ஞானிகளை, சட்ட மேதைகளை, நீதிபதிகளை, ஆராய்ச்சியாளர்களைக் காண்கிறோம். அவர்களது திறமையையும், ஆராயும் திறனையும் கண்டு மலைக்கிறோம். மற்றவர்களை பிரமிக்கச் செய்யும் அளவுக்கு அறிவுடைய இந்த மேதைகள் தாங்களே உருவாக்கிய ஒரு கல்லுக்கு முன்னால் கைகட்டி நிற்பதையும், தங்களைப் போன்ற அல்லது தங்களை விடவும் அறிவு […]

ஏகத்துவப் பணியில் இறைத்தூதர்களின் பொறுமை

ஏகத்துவப் பணியில் இறைத்தூதர்களின் பொறுமை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அல்லாஹ் நம்பிக்கை கொண்ட மக்களைப் பார்த்து, தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் தன்னிடம் உதவி தேடச் சொல்கிறான். பொறுமை என்பதற்கு அரபியில் “ஸப்ர்’ என்பதாகும். “ஸப்ர்’ என்பதற்கு தடுத்தல், சிறை வைத்தல் என்ற பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஒருவர் சமூகத்தில் ஒரு கொள்கையை முன்வைக்கின்றார். ஆனால் அந்தச் சமூகமோ அதை ஏற்றுக் கொள்ளாமல் அனைத்து விதமான சோதனைகளையும் அவருக்குக் கொடுக்கத் துவங்குகின்றது. அவரை அடித்து […]

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி ஒரு ஹெர்குலியன் பார்வை

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி ஒரு ஹெர்குலியன் பார்வை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கம் நமக்கு கிடைத்த வரலாற்றின் சுவடுகளை அறியவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நபிகள் நாயகம் காலத்தில், முதல் ஹிஜ்ரத் செய்த சில சஹாபாக்களிடத்தில், ஹெர்குலிஸ் மன்னர் கேட்ட கேள்விகளையும், அவர் இஸ்லாத்தை குறித்து சிந்தித்த விதங்களையும் நாம் ஆய்வு செய்தால், இந்த மார்கத்தின் சிறப்பை தெள்ளத் […]

ஏகத்துவமும் சோதனைகளும்

ஏகத்துவமும் சோதனைகளும் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக, எனது உரையை ஆரம்பம் செய்கிறேன். ஏகத்துவத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டு, மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தால் கண்டிப்பாக அவர் ஏராளமான சோதனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ […]

முஷ்ரிக்களுடன் பழகும் முறை

முஷ்ரிக்களுடன் பழகும் முறை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். ஏகத்துவத்திற்காக தனது தந்தையையே பகைத்துக் கொண்ட இப்ராஹீம் நபியை பின்பற்றச் சொல்லும் இறைவன், முஷ்ரிக்களுடன் பழகும் முறையைப் பற்றியும் நமக்கு கற்றுத் தருகிறான். ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, […]

வஸீலா தேடுவோம்

இன்றைக்கு தேடப்படும் வஸீலா அன்பிற்குரிய சகோதர்களே, அல்லாஹ் தனது திருமறையில், يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ‏ நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு “வஸீலா”வைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன்: 5:35)➚ மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் அவனை நோக்கி ஒரு “வஸீலா”வை தேடிக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறான். ஆனால் இன்றைக்கு வஸீலா என்ற […]

பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும். இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள். மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக […]

« Previous Page