14) கொல்லப்படுவது கடவுளின் தன்மை அன்று
நூல்கள்:
இயேசு இறை மகனா?
கடவுளை ஒருவரும் ஒருக்காலும் கொலை செய்ய முடியாது. கொல்லப்பட்ட யாரும் கடவுளாயிருக்க முடியாது என்றும் பைபிள் கூறுகிறது.
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே!
குத்திப் போடப்பட்டவன் மனுஷனாகத் தான் இருக்க முடியுமே தவிர கடவுளாக இருக்கவே முடியாது என்ற இந்த இலக்கணத்துக்குப் பொருந்த இயேசு கொல்லப்பட்டிருக்கிறார்.
நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி….
கொலை செய்யப்பட்டதன் காரணத்தால் தாம் கடவுள் இல்லை என்று இயேசு தெளிவாகக் காட்டிச் சென்ற பின் அவரைக் கடவுள் என்று கூறலாமா?