04) கொள்கை உறுதி

நூல்கள்: உம்மு சுலைம் (ரலி) வரலாறு

04) கொள்கை உறுதி 

முதலாவது கணவரான மாலிக் இப்னு நள்ர் அவரின் மரணத்திற்கு பிறகு, கணவனை இழந்து இரு குழந்தைகளுக்குத் தாயாக இருகின்ற சூழ்நிலையில், இஸ்லாத்தை ஏற்காத அபூதல்ஹா அவர்கள் மதீனாவில் மிகுந்த செல்வமும், செல்வாக்கும் பெற்றவராக இருந்தார்.

இப்படிப்பட்ட செல்வமும் அந்தஸ்தும் மிக்க அபூதல்ஹா அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களை விரும்பி பெண் கேட்டு வந்தார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் என்ன பதிலளித்தார்கள் என்பதை கீழ்கண்ட செய்தியில் பாப்போம்.

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ بْنِ مُسَاوِرٍ، قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ
خَطَبَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ، فَقَالَتْ: وَاللَّهِ مَا مِثْلُكَ يَا أَبَا طَلْحَةَ يُرَدُّ، وَلَكِنَّكَ رَجُلٌ كَافِرٌ، وَأَنَا امْرَأَةٌ مُسْلِمَةٌ، وَلَا يَحِلُّ لِي أَنْ أَتَزَوَّجَكَ، فَإِنْ تُسْلِمْ فَذَاكَ مَهْرِي وَمَا أَسْأَلُكَ غَيْرَهُ، فَأَسْلَمَ فَكَانَ ذَلِكَ مَهْرَهَا ” قَالَ ثَابِتٌ: «فَمَا سَمِعْتُ بِامْرَأَةٍ قَطُّ كَانَتْ أَكْرَمَ مَهْرًا مِنْ أُمِّ سُلَيْمٍ الْإِسْلَامَ، فَدَخَلَ بِهَا فَوَلَدَتْ لَهُ»

உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம் அபூ தல்ஹா அவர்கள் (திருமணத்திற்காக) பெண் பேசினார்கள். அதற்கு உம்மு சுலைம்(ரலி) அவர்கள், “அபூதல்ஹாவே! உங்களைப் போன்றவர் (திருமணம் செய்துக் கொள்ள) மறுக்கப்பட மாட்டார். என்றாலும் நீங்கள் இறைநிராகரிப்பாளர். நான் முஸ்லிமான பெண் ஆவேன்.

(அதனால்) எனக்கு உங்களைத் திருமணம் செய்துக் கொள்வது ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே (திருமணத்திற்கான) எனக்குரிய மணக்கொடையாகும். அதைத் தவிர வேறு எதையும் உங்களிடம் நான் கேட்க மாட்டேன்” என்று கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதுவே அவர்களின் மணக்கொடையாக இருந்தது.

நூல்: நஸயீ-3341 

கணவனை இழந்திருந்த உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தன்னுடைய குழந்தைகளுக்கு தாயாக தனியாக இருகின்ற சூழ்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக மதீனாவில் ஒரு செல்வந்தர் பெண் கேட்கிறார். இந்த நேரத்தில் அவர்கள் அளித்த பதில் ‘நீங்கள் இறைநிராகரிப்பாலாராக இருக்கிறீர்கள்’ நான் ஒரு முஸ்லிமான பெண் உங்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், என்று கூறுகிறார்கள் என்றால் அவர்களின் கொள்கை உறுதி எத்தகையது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். 

2:221   وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ‌ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ‏

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 2:221)

உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு இந்த வசனம் ஏற்படுத்திய தாக்கம்தான், என்றாலும் அவர்கள் கொள்கையில் உறுதியாக இருந்த காரணத்தினால், பின்பு அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக மாறுகிறார்கள். அதற்கு பிறகுதான் அவர்களை மனமுடித்துக் கொள்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் நமக்கு பல படிப்பினை இருக்கின்றன. இன்றைக்கு திருமணம் என்று வந்துவிட்டால், ஆழகு ஆடம்பரம், வசதி, இவற்றையெல்லாம் பார்க்கின்ற நாம்? கொள்கையை பார்கின்றோமா? கொள்கைக்கு முகியத்துவம் தருகின்றோமா? உம்மு சுலைம் (ரலி) அவர்கள் இதில் எதுவும் பார்க்கவில்லை, கொள்கையை மட்டும்தான் பார்த்தார்கள்.