இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்
பசிபிக் பெருங்கடலில் 1900 – 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.
1700, ஜனவரி: அமெரிக்காவில் பூகம்பம். ரிக்டர் அளவு 9 புள்ளி. இதனை தெடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730, ஜுலை: சிலியில் பூகம்பம். ரிக்டர் அளவு 8.7 புள்ளி. இதில் 3 ஆயிரம் பேர் மரணம். 1755, நவம்பர்: போர்ச்சுகல் பூகம்பம். ரிக்டர் அளவு 8.7 புள்ளி. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் மரணம்.
1868, ஆகஸ்ட்: சிலியில் பூகம்பம். ரிக்டர் அளவில் 9 புள்ளி. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.8 புள்ளி. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்.
1931, நியூசிலாந்த் பூகம்பம். இதில் 256 பேர் மரணம்
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.1 புள்ளி. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் பூகம்பம். ரிக்டர் அளவில் 9.5 புள்ளி. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் பூகம்பம். ரிக்டர் அளவு 9.5 புள்ளி. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் பூகம்பம். ரிக்டர் அளவு 9.2 புள்ளி. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1976, சீனாவில் பூகம்பம் 8 ரிக்டர் அளவில் வந்தது. மிக மேசமான பேரழிவு, சுமார் 3 லட்சம் பேர் மரணம், காயமடைந்தவர்கள் 2,20,000, வீடு வாசல் பாதிக்கபட்டவர்கள் 3 மில்லியன், வகுப்பறைகள் 6,900 ல் 300 குழந்தைகள் இறந்தன.
1993, ஆண்டு ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் பூகம்பம். ரிக்டர் அளவில் 9 புள்ளி. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
தமிழ்நாட்டில் 7 ஆயிரம் நபர். இந்தியாவில் 10 ஆயிரம் மரணம். 2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.1 புள்ளி. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் பூகம்பம் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள். இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
2010, பிப்ரவரி: தென் அமெரிக்காவான சிலியில் பூகம்பம். இதில் 215 மரணம்
2010, அக்டோபர்: பாகிஸ்தானில் ஒரு வார வெள்ளதால் மரணித்தவர்கள் 1500, காணாமல் போனவர்கள் 1000, வீடு வாசல்கள் இல்லாமல் பாதிக்கபட்டவர்கள் 13 மில்லயன் போர்.
2011, பிப்ரவரி: நியூசிலாந்த் பூகம்பம். ரிக்டர் அளவு 6.3 புள்ளிகள். இதில் சுமார் 100 பேர் மரணம், 300நபர்காணவில்லை.2011, மார்ச்: ஜப்பானில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.9 புள்ளி. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது. சுனாமி பலியானவர்கள் 1.800, 10 ஆயிரம் நபர் காணவில்லை.
ஓரிக் கொள்கை மறுப்பு, விபச்சாரம், அளவு மோசடி, துரோகம், ஓரினச் சேர்க்கை, லஞ்சம், நீதியின்மை, தீவிரவாதம், அமானித மோசடி, கொலை, கொள்ளை, வரதட்சனை, பொய், பித்தலாட்டம் இதுப் போன்ற ஏராளமான செயல்களை மனித நேயத்திற்கும் மனிதனுக்கும் இந்த சமுதாயம் செய்துவருகிறது.
முந்தைய வரலாற்றில் படிப்பினை ஷுஐப் (அலை)
அளவில் மோசடி செய்தவர்கள்
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று அவர் கூறினார்.
உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில்வீழ்ந்து கிடந்தனர். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோர் (அதற்கு முன்) அங்கே வசிக்காதவர்களைப் போலானார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோரே இழப்பை அடைந்தோரானார்கள்.
ஓரினச் சேர்க்கை ஈடுபட்டார்கள்
“நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்”(என்றும் கூறினார்.) இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமானமனிதர்களாக உள்ளனர்” என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.
நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப் பகுதியாக்கினோம் (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் (இந்த) அநீதிஇழைத்தோருக்குத் தொலைவில் இல்லை.
ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?) அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர். அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள். எனவே உமது இறைவன் வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டனர். “எங்களை விட வலிமை மிக்கவர் யார்?” எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர். எனவே இவ்வுலக வாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காக கெட்ட நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றை அனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும் இழிவுபடுத்தக் கூடியது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமையான கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர். அதை ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான். அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப் போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர். அவர்களில் எஞ்சியோரை நீர் காண்கிறீரா?
ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான்.
“பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை” என்று ஃபிர்அவ்ன் கூறினான். “ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்” என்றான்.
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாய மாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட் டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்!
உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
“நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும் போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும் கூட (ஆட்சித் தலைவரின் கட்டளை யை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர் களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர” என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்; தீமை பெருகிவிட்டால்…” என்று பதிலளித்தார்கள்.
Source: http://nallurdawa.blogspot.com/2012/11/blog-post_9976.html#more