Tamil Bayan Points

63) 76வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

76வது வசனம்

76. (முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம்.

(அல்குர்ஆன் : 36 : 76.) 

நபியவர்கள் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்து கூறிய போது அவர்கள் அதை நம்ப மறுத்தது நபியவர்களுக்கு கவலையளித்தது.

மேலும் நபியவர்களையும் விமர்சனம் செய்ததும் கவலையளித்தது. இதிலிருந்து அவர்களை ஆறுதல் படுத்துவதற்காகதான் “(முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்.” என்று அல்லாஹ் கூறுகிறான்.

மற்ற சில வசனங்களிலும் இவ்வாறு ஆறுதல் கூறுகிறான்.

(முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்! கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவன் கேட்பவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் : 10 : 65.)

மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிலர் மனதளவில் இஸ்லாத்தை ஏற்காமலேயே வெளியில் நடித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு நடிப்பதால் மக்களுக்கு தெரியாவிட்டாலும் அல்லாஹ் அறிவான். இவ்வாறு நடிப்பவர்களை எச்சரிப்பதற்காக “அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம்.” என்று கூறுகிறான்.