60) 72 வது வசனம்.
நூல்கள்: யாஸீன் விளக்கவுரைLast Updated on October 28, 2023 by
72 வது வசனம்
72. அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.
அல்குர்ஆன் : 36 : 72
இவ்வசனத்தின் துவக்கத்தில் “அவற்றை (கால்நடைகளை) அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம்.” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மனிதர்களுக்கு கால்நடைகள் வசப்படுத்துவது மிகப்பெரும் பாக்கியமாகும். இது போன்று மனிதர்களை வசப்படுத்து முடியாது.
மனிதனை விட ஆற்றல் அதிகமாக உள்ள மாடு, யானை போன்ற பல்வேறு உயிரினங்கள் மனிதர்களுக்கு கட்டுப்படுகிறது. இல்லாவிட்டால் மிகப்பெரும் சிரமத்திற்கு மனிதர்கள் ஆளாகிவிடுவார்கள்.
சுமை தூக்கும் மனிதர்கள் கூட நம்முடைய அனைத்து கட்டளைகளுக்கும் கட்டுப்படமாட்டார்கள். ஆனால் கழுதை போன்ற உயிரினங்கள் அனைத்து சுமைகளையும் சுமந்து கொண்டு நமக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. இவை மட்டுமின்றி கால்நடைகளின் இறைச்சிகளை உண்கிறோம். வாகனங்களாக உபயோகிக்கிறோம்.
அவற்றின் தோல்களை பதனிட்டு பயன்படுத்துகிறோம். இன்னும் பல நன்மைகளை அவற்றின் மூலம் அடைகிறோம். மேலும் நம்முடைய நாட்டில் மாடுகளின் மீது வண்டி பூட்டி செல்லும் வழக்கம் உள்ளது. பனிப்பிரதேசங்களில் அதன் மீதே அமர்ந்து செல்கின்றனர். இக்கருத்தை அடுத்த வசனமும் விளக்குகிறது.