Tamil Bayan Points

49) 59 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

59 வது வசனம்

59. “குற்றவாளிகளே! இன்றைய தினம் பிரிந்து விடுங்கள்!” (என்று கூறப்படும்.)

(அல்குர்ஆன் : 36 : 59.) 

மறுமையில் நல்லோரிலிருந்து தனித்து தெரியும் வகையில் குற்றவாளிகள் பிரிந்து நிற்குமாறு அவர்களுக்கு கூறப்படும். மற்ற சில வசனங்களும் இக்கருத்தை விளக்குகிறது.

அந்த நேரம் நிலை வரும் அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

(அல்குர்ஆன் : 30 : 14.) 

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தோரை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லை” என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்” என்றும் கூறுவார்கள்.

(அல்குர் ஆன் : 10 28,29.) 

மறுமையில் குற்றவாளிகள் நல்லவர்களை விட்டும் பிரிந்து விடுவார்கள். அவர்கள் கடவுள் என்று நினைத்து வணங்கியவர்களும் அவர்களை கைவிட்டுவிடுவார்கள். இறுதியில் தனித்து விடப்படுவார்கள்.