Tamil Bayan Points

35) 42 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

42 வது வசனம்

41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும் அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.

(அல்குர்ஆன் : 36 : 41, 42.) 

ஓட்டகமும் ஓர் அத்தாட்சி

42 வது வசனத்தில் அவர்கள் ஏறிச்செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.” என்று உள்ளது. இவ்வசனம் ஒட்டகம் பற்றி குறிப்பிடுகிறது. ஏனெனில் அது கப்பல் போன்றதாகும். ஒட்டகத்தை ஆய்வு செய்யும் போது இதை அறிய முடிகிறது.

கடல் என்பது மிகப்பெரும் பரப்பாகும். அதை நீந்தி கடப்பது சாத்தியமற்றது. எனவேதான் கப்பலின் துணையோடு அதை கடக்கிறோம். பாலைவனமும் கடல் போன்று நீண்ட மண் பரப்பாகும். நடந்து சென்று முழுவதுமாக கடப்பது மிகவும் சிரமமாகும். எனவே தான் ஒட்டகத்தின் துணையோடு அதை கடக்கிறோம். இவ்விரண்டிற்கும் இது போன்ற ஒற்றுமைகள் இருப்பதால்தான் அதை போன்றது” என அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் ஒட்டகத்தை பற்றி சிந்திக்குமாறும் பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?

(அல்குர்ஆன்: 88: 17.) 

பாலைவனம் போன்ற வெப்பம் மிகுந்த பகுதியில் பயணம் செய்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றி உடல் விரைவாக சோர்ந்துவிடும். இதனால் மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாது. ஆனால் ஒட்டகத்திற்கு இந்த நிலையில்லை. ஒரே நேரத்தில் நூறு லிட்டர் தண்ணீரை உடலில் தேக்கி வைக்குமளவிற்கு அதன் உடலில் நீர்ப்பை உள்ளது. அதில் நீரை தேக்கிவைத்து சிறிது சிறிதாக தன் உடலின் தேவைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அல்லாஹ் அதை படைத்துள்ளான்.

ஆனால் இது மனிதர்களுக்கு இயலாது. உதாரணமாக நோன்பு பிடித்திருக்கும் போது மாலை ஐந்து மணியை கடந்து விட்டாலே மிகவும் சோர்வடைகிறோம். அதனால் அதிகமான தண்ணீரை நோன்பு திறக்கும் போது குடிக்க முயற்சிப்போம். எனினும் சிறிதளவைத் தவிர குடிக்க முடியாது. இது ஒட்டகத்திற்கும் நமக்கும் உள்ள வேறுபாடாகும்.

மேலும் கடினமான வேலைகள் செய்யும் போது அதிக நேரம் உடலின் தசைகள் இயங்குவதால் நீர் சத்து விரைவாக குறைந்து விடும். எனவே மீண்டும் தேவையான நீரை குடித்தால் மட்டும்தான் இயங்க முடியும். உதாரணமாக ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக ஒருவர் வேலை பார்த்தால் சோர்வடைந்து தண்ணீரை தேடுவது போன்று. எனினும் ஒட்டகம் நூறு லிட்டர் தண்ணீரை தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு உடலில் இறைப்பை போன்றவற்றிற்கு நீர்ச்சத்து குறையும் போதெல்லாம் தண்ணீரை தசைகளுக்கு எடுத்து கொள்ளும். இதை அறிவியலும் நிரூபித்துள்ளது.

ஒட்டகத்தின் திமில்களில் கொழுப்பு உள்ளது. அந்த கொழுப்பில் ஹைட்ரஜன் உள்ளது. ஒட்டகம் சுவாசிக்கும் போது உள் இழுக்கின்ற ஆக்ஸிஜனும் திமிலில் உள்ள ஹைட்ரஜனும் சேரும் போது அதன் திமிலில் உள்ள கொழுப்பு, நீராக மாறி தசைகளுக்கு செல்கிறது என அறிவியல் ஆய்வு கூறுகிறது.

மேலும் பாலைவனத்தில் நடப்பதற்கு நம்முடைய கால்கள் ஏற்றதாக இல்லை. மணல் பரப்பில் புதைந்து கொள்ளும். ஆனால் ஒட்டகத்திற்கு அதன் கால்கள் ஏற்றதாக உள்ளது. அதன் கால் பாதங்கள் ரப்பர் போன்று உள்ளதால் இலகுவாக காலை எடுத்து வைத்து செல்ல முடியும். பாலைவனத்தில்

உடலின் நீர் சத்தை தக்க வைப்பது, காலை இலகுவாக எடுத்து வைப்பது போன்ற பல சிறப்பம்சங்கள் கொண்ட படைப்பினமாக இருப்பதால்தான் இதை பற்றி சிந்திக்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.

கடலில் செல்வதற்கென்றே கப்பல் உருவாக்கப் பட்டிருப்பது போன்றே ஒட்டகமும் பாலைவனத்தில் செல்வதற்கென்றே படைக்கப் பட்டுள்ளது போன்று உள்ளது. இதனால் “பாலைவன கப்பல்” என்று ஒட்டகத்திற்கு அழைக்கப்படுகிறது. எனவேதான் கப்பலோடு சேர்த்து ஒட்டகத்தை படைத்த்தையும் தனது சான்று என யாசீன் அத்தியாயத்தின் 42வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.