Tamil Bayan Points

26) தாவூத் பாஷா

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

26) தாவூத் பாஷா

தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் தாருல் இஸ்லாம் எனும் மாத இதழைத் துவக்கி அதன் ஆசிரியராக இருந்தவர். குத்பா உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதால் முஸ்லிம்களிடம் கலகக்காரராக அறியப்பட்டவர். தஞ்சை மணியாற்றங்கரையில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த பா.தாவூத் பாஷா அவர்கள்.

இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டிய தாவூத் பாஷா அரசியலிலும் அதே அளவிற்கு ஈடுபாடு கொண்டவர். இவர் சென்னை நகர காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோதுதான் மா.பொ.சிவஞானம் பொதுச் செயலாளராக இருந்தார்.

1917 ஆம் ஆண்டு துணை நீதிபதியாகப் பொறுப்பேற்று பணி யாற்றிக் கொண்டிருந்த தாவூத் பாஷா மாவட்டத் துணைக் கலெக்டராக பதவி உயர்வு பெறும் நேரத்தில் விடுதலை உணர்வால் உந்தப்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் நாட்டுப் பணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.((வி.போ.மு) வி.என்.சாமி பக் 591-598

(இ.வி.போ.த.மு) நா.முகம்மது செரீபு பக்.123)