Tamil Bayan Points

25) இறந்தவர்கள் கடவுளர்களா?

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

இறந்தவர்கள் கடவுளர்களா?

மக்கள் இறந்து போன பெரியார்களை, நல்ல மனிதர்களை வணங்குகின்றனர். முஸ்லிம்களும் சமாதி கட்டி, தர்ஹாக்கள் எழுப்பி இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர். மனிதன் உயிருடன் இருக்கும் போதே கடவுள் கிடையாது எனும் போது இறந்த பின்பு எப்படிக் கடவுளாவான் என திருக்குர்ஆன் சிந்திக்கச் சொல்கின்றது.

46:5 وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهٗۤ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَآٮِٕهِمْ غٰفِلُوْنَ‏

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(திருக்குர்ஆன் : 46:5.)