Tamil Bayan Points

20) நீங்காத இரண்டு ஆசைகள்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

நீங்காத இரண்டு ஆசைகள்

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُرِ ”

மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு அசைகளும் வளர்கின்றன:

1. பொருளாசை

2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்கள்: புகாரி – 6421 முஸ்லிம் – 1892

விளக்கம் : 

மனிதனின் ஆசைக்கு எல்லை எதுவும் இல்லை. எவ்வளவு பணம் சேர்ந்தாலும் இன்னும் சேர்க்க வேண்டும், இன்னும் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறானே தவிர இவ்வளவு பணம் சேர்த்தது போதும் என்று நிறுத்திக் கொள்வதில்லை.

தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பிற்காலத்தில் வரும் சந்ததிகளுக்கும் என்று எல்லையில்லாமல் சேர்க்க ஆசைப்படுகிற மனிதன் இறைவனை வணங்குவதில் இவ்வாறு ஆசைப்படுவதில்லை. இதைப் போன்று எத்தனை வருடங்கள் அவன் வாழ்ந்திருந்தாலும் இன்னும் வாழவேண்டும் என்றே ஆசைப்படுகின்றான்.

100 வயதை எட்டியவர் கூட இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்றே ஆசைப்படுவார். ஆனால் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் இது போன்று ஆசைப்படுவதில்லை. ஆயிரம் ரூபாய் தர்மம் செய்துவிட்டோம். அடுத்த தடவை பத்தாயிரம் தர்மம் செய்ய வேண்டும். அதற்கு அடுத்த தடவை ஒரு லட்சம் தர்மம் செய்ய வேண்டும் என்று யாருக்கும் ஆசை நீண்டு கொண்டே போவதில்லை.