Tamil Bayan Points

17) பாவ மன்னிப்பு

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

பாவ மன்னிப்பு

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللهِ، فَإِنِّي أَتُوبُ، فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ، مَرَّةٍ»

மக்களே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறு முறை பாவ மன்னிப்புக் கோருகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் : 5235

விளக்கம்:

இறைவனுக்கு அதிகம் பயந்து நடப்பவர்கள் இறைத்தூதர்கள், சிறப்பு மிக்க இறைத்தூதர்களில் முதலிடம் பெறும் நபி (ஸல்) அவர்கள் இறைவனை அதிகமதிகம் பயந்து, அவனது கட்டளைகளை நிறைவேற்றி வந்தார்கள், இருந்தாலும் அவர்களும் மனிதர் என்ற அடிப்படையில் தவறுகள் ஏற்படலாம். அதற்காக நாள் ஒன்றுக்கு நூறு தடவை இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களே இவ்வாறு செய்துள்ளார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்? பாவங்களிலேயே முழ்கி இருக்கும் நாம் தினமும் நூறுக்கும் மேற்பட்ட தடவை அல்லாஹ்விடம் அழுது பாவமன்னிப்புக் கேட்டு மறுமையில் இறைவனின் கருணைப் பார்வைக்கு உரித்தானவர்களாக ஆக வேண்டும்.