Tamil Bayan Points

17) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-17

நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழி

Last Updated on October 24, 2023 by

17) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-17

நபிமொழி-81

சகுணம் பார்ப்பது

சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும். சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அபூதாவுத் (3411)


நபிமொழி-82

நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்கப்படுகிறது?

5090– حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تُنْكَحُ الْمَرْأَةُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

  1. அவளது செல்வத்திற்காக.
  2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  3. அவளது அழகிற்காக.
  4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.

ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-5090


நபிமொழி-83

கடமையான குளிப்பு 

நபி (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் தூங்க நினைத்தால் உளுச் செய்வார்கள். சாப்பிடவோ குடிக்கவோ நினைத்தால் இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி

நூல் : நஸயீ-1257


நபிமொழி-84

அரவணைப்போம் அண்டைவீட்டாரை

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ رواه مسلم 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூதர்ரே! குழம்பு சமைத்தால் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்வீராக. அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள்வீராக” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : முஸ்லிம்-5120


நபிமொழி-85

உணவுப் பொருள் கீழே விழுந்தால் பேண வேண்டிய முறை

عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا وَقَعَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيَأْخُذْهَا، فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى وَلْيَأْكُلْهَا، وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ، وَلَا يَمْسَحْ يَدَهُ بِالْمِنْدِيلِ حَتَّى يَلْعَقَ أَصَابِعَهُ، فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ الْبَرَكَةُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவு கீழே விழுந்து விட்டால் அதை எடுத்து, சுத்தம் செய்து உண்ணுங்கள் ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம். மேலும் தம் விரல்களை சூப்பாமல் கைக் குட்டையால் கையைத் துடைக்க வேண்டாம். ஏனெனில், எந்த உணவில் பரக்கத் உள்ளது என்பதை அறியமாட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்-4137