16) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-16
நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழிLast Updated on October 24, 2023 by
16) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-16
நபிமொழி-76
இஸ்லாமிய ஒழுங்குகளை கற்றுக் கொடுத்தல்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
அறிவிப்பவர்: உமர் இப்னு அபீஸலமா (ரலி)
நூல்: புகாரி-5376
நபிமொழி-77
சோதிடனிடம் சென்றால்…
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான்.
நூல் : அஹ்மத்-9171
நபிமொழி-78
நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது.
நூல் : முஸ்லிம்-4137
நபிமொழி-79
இறந்தவர் குடும்பத்திற்கு மற்றவர்கள்
சமைத்து கொடுத்தல்
ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு ‘ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)
நூல்கள்: அபூதாவூத்-725
நபிமொழி-80
தீமையை தடுத்தல்
நூல்: முஸ்லிம்-78