14) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-14
நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழிLast Updated on October 24, 2023 by
14) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-14
நபிமொழி-66
நேர்ச்சையை நிறைவேற்றுதல்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-6696
நபிமொழி-67
ஸலவாத்து சொல்லாதவன் கஞ்சன்
என்னை நினைவூட்டப் பட்டும் ஸலவாத்து சொல்லாதவன் தான் கஞ்சன் என நபி (லல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)
நூல் : திர்மிதி-3469
நபிமொழி-68
தாம் விரும்வுவதையே பிறருக்கும் விரும்புவது
‘உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-13
நபிமொழி-69
உங்களை விட கீழ் நிலையில்
உள்ளவர்களை பாருங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-5671
நபிமொழி-70
காலத்தை ஏசாதீர்கள்
ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-6181