Tamil Bayan Points

21) கடவுள் முன்கோபியா?

நூல்கள்: இயேசு இறை மகனா?

Last Updated on October 30, 2022 by

சாந்த குணம் தான் புத்திசாலித்தனம்; முன்கோபம் மதியீனம் என்று பைபிள் கூறுகிறது.

(பார்க்க: நீதிமொழிகள் 14:29)

இயேசு இந்தப் போதனையை பல தடவைகள் மீறியிருக்கிறார்.

விரியன் பாம்புக் குட்டிகளே! நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்?

(மத்தேயு 12:34)

இதே கருத்து லூக்கா 3:7-லிலும் உள்ளது.

இந்தப் பொல்லாத விபச்சாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்…

(மத்தேயு 12:39)

இதே கருத்து மத்தேயு 16:4-லிலும் உள்ளது.

அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

(மத்தேயு 15:26)

சர்ப்பங்களே – விரியன் பாம்புக் குட்டிகளே

(மத்தேயு 23:33) எனத் திட்டினார்.

இப்படியெல்லாம் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி சாந்த குணத்தை இயேசு இழந்திருப்பதாக பைபிள் கூறுகிறது. இதன் பிறகும் அவரைக் கடவுள் என்று கூறலாமா?