12) குதிரைக்கு இறக்கை உண்டு
நூல்கள்: இஸ்லாத்தில் புன்னகைக்கும் தருணம்Last Updated on October 1, 2023 by
12) குதிரைக்கு இறக்கை உண்டு
நபி (ஸல்) தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து (வீட்டிற்கு) முன்னோக்கினார்கள். (ஆயிஷா (ரலி)) அவர்களின் அலமாரியின் மீது ஒரு திரைச் சீலையிருந்தது. (அதில் ஆயிஷாவிற்குரிய பெண் குழந்தைகளின் உருவம் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் இருந்தன.) அப்போது காற்றடித்து ஆயிஷாவின் விளையாட்டுப் பெண் குழந்தை பொம்மைகளை விட்டும் திரைச்சீலையின் ஒரு ஓரத்தை விலக்கியது. அப்போது நபியவர்கள், “”ஆயிஷாவே இது என்ன?” என்று கேட்டார்கள்.
என்னுடைய பெண் (பொம்மை) குழந்தைகள் என்று அவர் கூறினார். அவைகளுக்கு மத்தியில் இலை அல்லது தோலால் ஆன இரு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரையை நபியவர்கள் பார்த்தார்கள். உடனே நபியவர்கள், “அவைகளுக்கு மத்தியில் நான் காண்கின்றேனே, அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கவர், குதிரை என்று கூறினார். “அதன் மீது என்ன?” என்று நபியவர்கள் கேட்டார்கள். “இரண்டு இறக்கைகள்” என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். “குதிரைக்கு இரண்டு இறக்கைகளா?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “”சுலைமான் நபிக்கு குதிரை இருந்ததாகவும், அதற்கு இறக்கைகள் இருந்ததாகவும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டார்கள். உடனே நபியவர்கள் தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள்.
அறி : ஆயிஷா (ரலி),
நூல் : அபூதாவூத்-4932 (4284)