Tamil Bayan Points

10) கணக்கில்லாமல் தர்மம் செய்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

கணக்கில்லாமல் தர்மம் செய்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«أَنْفِقِي، وَلاَ تُحْصِي، فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ، وَلاَ تُوعِي، فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ»

நல்வழியில்) செலவிடு! கணக்கிட்டுக் கொண்டிருக்காதே! (அவ்வாறு நடந்தால்) அல்லாஹ்வும் உனக்கு கணக்கிட்டே (தன் அருளைத்) தருவான் நல்வழியில் செலவழிக்காமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! (அவ்வாறு செய்தால்) அல்லாஹ்வும் (தன் அருளை) உனக்கு (தராமல்) முடிந்து வைத்துக் கொள்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘அறிவிப்பவர்: அஸ்மா (ரலி)

நூல்: புகாரி : 2591

‘விளக்கம்:

அவசியம் ஏற்படும் போது நல்வழியில் செலவழிப்பது கடமையாகும். ஆனால் பலர். குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டுமே நாங்கள் செலவழிப்போம் என்று கூறி குறைந்தளவு செல்வத்தைச் செலவிடுகின்றனர். முக்கியமான தேவைக்காக ஒருவர் உதவி கோரினால் நாங்கள் இதற்கு இவ்வளவு செலவிட்டு விட்டோம். இதற்கு மேல் கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர். வருடத்திற்கு இவ்வளவு தான் செலவழிக்க வேண்டும் என்று வரையறுத்துக் கொள்கிறார்கள்.

தேவைக்கேற்ப முடிந்தளவு உதவிகளை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் இறைத்த கிணறு தான் ஊறும் என்ற பழமொழியைப் போன்று நாம் நல்வழியில் செலவு செய்யும் போதெல்லாம் அதற்கேற்ப இறையருள் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.