Tamil Bayan Points

08) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-8

நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழி

Last Updated on October 24, 2023 by

08) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-8

நபிமொழி-36

காலணி அணியும் போது… 

 أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِاليَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، لِيَكُنِ اليُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : காலணி அணியும் போது முதலில் வலது காலில் அணியுங்கள்; கழற்றும் போது இடது காலில் முதலில் கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி-5855


நபிமொழி-37

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான செயல் 

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ العَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى وَقْتِهَا»، قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது எது?” என கேட்டேன். “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்றேன் “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். “பிறகு எது?” என்றேன். “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி-527


நபிமொழி-38 

வலதுக்கே முன்னுரிமை

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بِمَاءٍ، وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ، وَعَنْ يَسَارِهِ أَبُو بَكْرٍ، فَشَرِبَ ثُمَّ أَعْطَى الْأَعْرَابِيَّ، وَقَالَ: «الْأَيْمَنَ فَالْأَيْمَنَ»

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு வலது பக்கம் கிராமவாசி ஒருவரும், இடது பக்கம் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தனர். நபியவர்கள் அருந்திய மீதியை கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்கள் என்று எண்ணிய உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்கு கொடுங்கள், “எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு, “வலதுக்கே முன்னுரிமை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : முஸ்லிம்-4127


நபிமொழி-39

ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்ள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதி வரை அல்லது அதற்குச் சற்று முன்பு பின் வரை உறங்கினார்கள். விழித்து எழுந்ததும் தமது கரத்தால் முகத்தில் தடவித்தூக்கத்தைப் போக்கினார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை (3:190 – 200) ஓதினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி-1400


நபிமொழி-40 

வலது புறமாக ஆரம்பிக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ رواه أبو دود

ஒளு செய்தாலோ, ஆடை அணிந்தாலோ வலது புறத்திலிருந்து ஆரம்பியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத்-3612