06) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-6
நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழிLast Updated on October 24, 2023 by
06) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-6
நபிமொழி-26
அல்லாஹ்வின் திருப்தி மட்டும் நாடி …
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி-56
நபிமொழி-27
மனிதநேய மார்க்கம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி)
நூல் : புகாரி-3046
நபிமொழி-28
சுத்ரா (தடுப்பு)
அபூசயீத் (ரலி) அவர்கள், “யாரும் குறுக்கே செல்லாமலிருக்க தமக்கு முன்னால் தடுப்பாக எதையாவது வைத்துக் கொண்டு தொழும் போது, ஒருவன் குறுக்கே கடந்து சென்றால் அவனைத் தள்ளி விடுங்கள். அவன் (விலகிக் கொள்ள) மறுத்தால்
அவனுடன் சண்டையிடுங்கள். ஏனெனில் அவன் தான் ஷைத்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆசயீத் (ரலி)
நூல் : புகாரி-509
நபிமொழி-29
வீடுகளில் தொழுங்கள்
(சுன்னத்தான தொழுகைகளை தொழாமல்) உங்களுடைய வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள், சூரத்துல் பகரா ஓதப்படுகிற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டு ஓடுகிறாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-1300
நபிமொழி-30
ஏழு குடல்களில் சாப்பிடுவான்
«المُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ»
நபி (ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் சாப்பிடுவான் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி-5393