03) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-3
நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழிLast Updated on October 24, 2023 by
03) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-3
நபிமொழி-11
ஜுமுஆவை வீணடித்தவர்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(ஜுமுஆ உரையின் போது) கல்லை அகற்றக் கூடியவர் (ஜுமுஆவை) வீணடித்துவிட்டார்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : இப்னுமாஜா-1015
நபிமொழி-12
இயற்கை மரபுகள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பத்து செயல்கள் இயற்கையை சார்ந்ததாகும்.
- மீசையைக் கத்தரிப்பது,
- தாடியை வளர்ப்பது,
- பல் துலக்குவது,
- மூக்குக்கு நீர் செலுத்துவது,
- நகங்களை வெட்டுவது,
- விரல் கணுக்களைக் கழுவுவது,
- அக்குள் முடிகளை அகற்றுவது,
- மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது.
- 10, (மல, ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம்-436
நபிமொழி-13
விருந்து அழைப்பு
உணவுகளில் கெட்டது, ஏழைகள் அழைக்கப்படாமல், செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் திருமண விருந்தாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-2819
நபிமொழி-14
இடது கையால் சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம்-4108
நபிமொழி-15
கப்ரு வழிபாடு கூடாது
நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் தங்களது நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடங்களாக அவர்கள் ஆக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி-1330